உண்மையான ஜனசேவை
அறிவில் மூத்தவர் என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் துவேஷ எண்ணங்களின் வெளிப்பாடு, ‘உண்மையான கரசேவை‘ என்ற தலைப்பில் நஞ்சு தடவிய எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கிறது.
இதை இன்னுமொரு பள்ளிவாசல் இடிப்புக்குப் போடும் அடித்தளமாகவே நான் கருதுகிறேன்.
உண்மை அறிய விரும்பும் நடுநிலை சகோதரர்கள் தயவுகூர்ந்து இதையும் படியுங்களேன்….
1949-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்ம ஸ்தானத்தில் அவதரித்துவிட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதிப் பிரச்னை நாட்டில் மிக முக்கியமான பிரச்னையாக நீடித்து வருகிறது.
‘ராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மசூதி’ என்ற புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டார்கள். சூதுவாது அறியாத இந்துக்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையையும் ஏற்படுத்தினார்கள்.
‘ராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்தது. அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால், பாபர் மசூதிக்காக எந்த ஒரு முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால்தான், பாபர் மசூதிக்காக முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சாட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில், ராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்னையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில், அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா, அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்னையே தவிர, ‘ராமர் கற்பனைப் பாத்திரமா, வரலாற்றுப் பாத்திரமா’ என்பது அல்ல.
ராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸ்லிமும் மறுக்கமாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
ராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், சங்பரிவாரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக்கூடாது. இந்துமதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல், மனம் போன போக்கில் யாரேனும் ராமரைப் பற்றி முடிவு செய்தால், அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர, இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
ராமரைப் பற்றி முதன்முதலில் வால்மீகி சமஸ்கிருத மொழியில் ராமாயணத்தை எழுதினார். ராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள்தான் ராமரைப் படம் பிடித்துக்காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதாயுகத்தில் பிறந்தார்’ என்கிறார்.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு.
அவையாவன:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு லட்சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு லட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண்டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள்) கொண்டது.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3,102 வருடங்களுக்கு முன் தொடங்குகிறது. இயேசுவுக்குப்பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் தொடங்கி 5,110 ஆண்டுகள் நடக்கின்றன. இந்த யுகத்தில் ராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் துவாபர யுகம். இந்த யுகத்திலும் ராமர் பிறக்கவில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் ராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால்கூட 8,64,000 + 5,110 = 8,69,110. எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் ராமர் பிறந்தார் என்பது வால்மீகி ராமாயணத்தின் தீர்ப்பு.
ராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி ராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றிக் கூறும்போது, ‘ராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்’ என்கிறார்.
அப்படியானால் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்கவேண்டும்.
உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று அறியப் பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை சார்பில் அயோத்தியை ஆய்வுசெய்து, 1976-1977-ல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700-ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
அதாவது 2,708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தொல்லியல் துறை அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979-1980-ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்லியல் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.
ராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வரவேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2,708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில்தான் அந்த அயோத்தி இருந்திருக்கவேண்டும். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரணமானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும் ராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘ராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு ராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றிப் பேசும் வால்மீகி ராமாயணம், சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜனை தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜனை என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோமீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இல்லை.
அப்படியானால் ராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ. தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்கவேண்டும் என்று நம்பினால்தான் ராமாயணம் கூறுவது மெய்யாகும்.
‘இந்த அயோத்திதான் அந்த அயோத்தி’ என்று கூறுவது ராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூ நதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி, கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? ராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வருணிக்கிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஓர் அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே ராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் ராமாயணத்தை மறுத்தவர்கள் ஆகின்றனர் என்பது மீண்டும் உறுதியாகிறது.
ராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும் தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் ராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டதாகும்.
அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528-ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்’ என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த ராமர் கோவிலை விக்கிரமாதித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவாரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள்தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் ராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றிப் பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். சக் பரிவாரத்தினரின் கூற்று ஒரு பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர்.
கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல்லியல் துறையின் தலைவர் பி.பி. லால், 1975-ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.1990) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சண்டே டைம்ஸ்’ (20.11.1987) ஏட்டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக்காட்டி, “அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையிலான காலகட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
ராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். ராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும், ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரத்தினர் கூறும் கி.பி. 300 முதல் கி.பி. 1100 ஆண்டுகளின் குப்தர் காலத்தில் ராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப்படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்மர் என்பவர் ‘அமர கோசம்’ என்ற பெயரில் சமஸ்திருதக் கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் ராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் ராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11-ம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் ராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் ராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்டடக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் ராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் ராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100-க்குப் பிறகுதான் ராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனச்சாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய ராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமணப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் ராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் ராமாயணத்தை எழுதி வெளியிட்டார். இதன் பின்னர்தான் ராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசிதாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்டபின்புதான் ராமர் கடவுளின் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசிதாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் ராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில்தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். கி.பி. 1500-களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின்கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார்.
ராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் ராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை, இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.
ராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் ராமர் எப்படிக் கடவுளாகக் கருதப்பட்டிருப்பார், எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாய உணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்தியாவின் முதல் இரண்டாவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன். இவரது மகன் சர்வேபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரும் ஆவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில், ‘கி.பி. 1750-க்கு முன்புவரை இந்தியாவில் ராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்குமுன் ராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528-ல் இல்லாத ராமர் கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524-ல் பள்ளிவாசலுக்கான அடிக்கல்லை நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடரவில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றிய பாபர், 1528-ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறுவது முழுப்பொய் என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்ததாக வைத்துக்கொண்டாலும், பாபர் அதை இடித்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதிவைத்து, பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகிறது என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸ்லிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதைவிடப் பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹுமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹுமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
“மகனே! இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்துவிடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக்கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று, சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குரு நானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரைக் கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக, பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குரு நானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்கமாட்டார். அது மட்டுமின்றி, குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை குரு நானக் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்துகொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப்பின் அவரது மகன் ஹுமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தைவிட்டு விலகி, தீன் இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. “உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1947 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்னையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும், “கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒரு காலகட்டத்தில் இந்து-முஸ்லிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்னை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23-ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்துப் பிரச்னையை முதன் முதலாகத் தொடங்கும்வரை ராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. ராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள், பாபர் மசூதியை அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை!
1949-ல் சங் பரிவாரம் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறிவிட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து, ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம். இதுதான் நாம் செய்யவேண்டிய உண்மையான ஜனசேவை.









October 24th, 2010 at 7:47 am
திரு.ஹசன் கமருதீன் அவர்கள் சொல்வது போல் சமஸ்கிருதம் பண்டித பிராமனர்களின் மொழி அல்ல. இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு மொழி.ராமரையும் அயோத்தியையும் பற்றி பேசினாலே ஹிந்து தீவிரவாதி என்று முத்திரை குத்துவது நியாயமா? இதற்கே கோபப்படுகிறீர்களே, தாஜ் மஹால் ஒரு சிவன் கோவில் என்கிற பக்காவான ஆதாரம் உள்ளது என்பது தெரியுமா ?
October 24th, 2010 at 8:30 am
Enna solvadhentre theriyavillai. Aanal idhu oru logical statement enpadhai marukka mudiyathu. Theerpai iruvarum yertrukkondu pala idankalil ulladhu pola kovilum, masoodhiyum arukaruge irukkattume.
October 24th, 2010 at 9:35 am
அன்பு கணேசன், தாஜ்மஹாலை விட இங்கேயே தமிழ்நாட்டில் கர சேவைக்கான சாத்தியக்கூறுகள் ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன.
வேளாங்கண்ணி மாரியம்மன் ஆலயம் லோக்கல் சாமிகளை ஒத்துக்க மாட்டீங்கன்னா சீதாப்பிராட்டி ஆலயம் என்று சொல்லிவிடலாம்
நாகூர் தர்ஹா ஹனுமன் வால் பட்ட இடம் இலங்கைக்கு போகும் முன்பு
அதான் சுனாமி ஓம் என்கிற ஓங்கார சுருதியிடன் நாகூரை தாக்கியது.
உங்கள் சேவை நாட்டுக்கு மிகத்தேவை சீக்கிரமாய் கரசேவைக்கு ஆயுத்தம் செய்யுங்கள்
October 24th, 2010 at 10:46 am
>>அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1947 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்னையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும், “கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை.<<
ஏதோ பிரச்சனை 1949ல் தான் ஆரம்பித்தது போலவும், அதற்கு முன்னால் ஒன்றும் நடக்காதது போலவும் திரித்துள்ளீர்களே.
கதை விடுவதில் அரவிந்தன் நீலகண்டனுக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூப்பித்திருக்கிறீர்கள். கூகுள் இருக்கும் காலத்திலேயே இப்படி கதைவிட்டால் எப்படி?
1853 ல் முதல் மதக்கலவரம் வெடித்து, 1859ல் ஆங்கில ஆட்சியாளர்கள் பாபர் மசூதி வழிபாட்டுத் தலங்களைப் பிரித்தார்கள். 1885ல் இந்துக்களுக்கு பாபரி மசூதியை மீட்டுத்தரும்படி மஹாந்த் ரகுபார் தாஸ் தொடர்ந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழஙப்பட்டது – கோவிலை இடித்தே மசூதியை பாபர் கட்டியிருந்தாலும், முன்னூறு ஆண்டுகளாகி விட்டதால், திருப்பிக் கொடுக்க முடியாதென்று. (என்னைப் பொறுத்த வரை சரியான தீர்ப்பு)
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100930_ayodhyadisputehistory.shtml
http://www.ndtv.com/article/india/the-ayodhya-dispute-a-timeline-55274
http://news.rediff.com/special/2010/sep/21/special-ayodhya-case-explained.htm
http://www.indianexpress.com/news/the-ayodhya-files/686864/0
October 24th, 2010 at 1:01 pm
மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கப்பட்ட அருமையான கட்டுரை.
October 24th, 2010 at 1:21 pm
கணேசன் ,
அதை தான் கமருதீன் சொல்கிறார் .. அரவிந்தனும் மற்றொரு “கத்தி” சேவைக்கு தயாராகி வருவதாக .. புரியவில்லையா?
அரவிந்தனின் கன்னியாகுமரி மாவட்டத்தில் , ஒரு மாதம் முன்பு மேல் மிடாலம் என்ற ஊரில் முதலமைச்சர் வருகை தரும் நாளிலேயே , ஆரிய கடவுள் விநாயகனுக்கான கொண்டாட்டத்தில் , எரிக்கப்பட்ட வீடுகளும் கடைகளும் எத்தனை என்று அவரிடமே கேட்கவும் .
அரசு தலையிட்டு நிவாரணம் கொடுக்கும் அளவுக்கு போன பின்பும் எந்த ஊடகமும் அதை வெளிக்கொணரவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆரிய புத்திக்கு தலை வணங்கும் திராவிடன் என்று தான் உணர்வானோ ? நமக்கு தான் அடுத்த தேர்தல் வர போகிறதே ?
October 24th, 2010 at 2:31 pm
hasan,
i laughed loudly for 5 mins reading this article. some say that this is a different perespective.
this is an article written merely out of assumption and is erroneous in almost all paras.
firstly on the caclulations w.r.t Yugas – your Yuga calculations are wrong and it takes in to account the life of a manvantara not a Yuga
Ayodya did exist before the date you mention – there is substantial literary proof for it
on will babar demolish mosques -Arungazeeb’s grand daugter vouches for it and says yes he did
the issue before quote was not whether rama was born on the same place or not whereas it was whether it is believed so by Hindus or not and it is a big YES
Islamists are known to create havoc to civilizations (Armenian massacares), they have demolished several thousand hindu temples – this continued even till tipu sulthan’s time – several temples in Kerala stil bear the mark of tipu sultan’s crazyness
now let me ask one question
If babar had no intention to demolish a hindu temple, why did he out of so many places in North choose ayodya (Note ayodya was considered a sacred place by hindus then – Shri tulasidas who wrote tulasi ramayana lived at that time).
why did babar chooose a sacred city? will mulims keep quiet if a church is built in mecca and medina
Out of all places in Ayodya,why did babar choose a place where a temples remains existed to build a mosque – any sane person will choose a clean flat ground?
lets say a super islamic structure in mecca or medina falls naturally – will you be ok with a jesuist building a church over it
on whether this is a recent issue – sorry mr – this stated as early as post mosque construction – thousands of hindus have died for this cause from the day of mosque constuction – there is substantial evidenece for this
[Last sentence in the comment edited out - Editor]
October 24th, 2010 at 4:43 pm
படிக்குறது ராமாயணம்!..இடிக்குறது மசூதிய!?…..
ராமாயணம் படித்த எல்லோருக்குமே தெரியும் சூழ்ச்சியால்
தன் மாற்றாந்தாய் சொன்னதற்காக தான் ஆள
வேண்டிய, தனக்கு தார்மீக உரிமையுள்ள நாட்டை துச்சமென
மதித்து காட்டுக்குப் போனவன் ராமன்!
அவன் பெயரை சொல்லி இச் சிறு நிலத்துக்காக சண்டை போட்டுக்
கொள்ளு(ல்லு)ம் இந்த ராம பக்தர்களை என்ன சொல்வது!…….
October 24th, 2010 at 11:22 pm
இலக்கிய நோபல் – கலைஞர் கடிதம் எனும் அருமையான நகைச்சுவைக் கட்டுரைக்குப் பின்னர் மற்றொரு நகைச்சுவை கட்டுரைக்கான முயற்சி.
ஆனால், ஏன் அரசியல் என்ற தொகுப்பில் போட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஹசன் கமருதீன் இதனால் மனம் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து முயலவும்.
October 25th, 2010 at 2:19 am
அற்புதமான, வரலாற்று ரீதியான, தர்க்க ரீதியான கட்டுரை. மனசாட்சியை உலுக்கும் கட்டுரை. அரவிந்த நீலகண்டன்களை தோலுரித்துக் காட்டிய கட்டுரை. மறுமொழிகளில் ஒன்று ரொம்ப ஆச்சரியமூட்டியது. அதென்னப்பா, நாகூர் தர்ஹா அனுமனின் வால் பட்ட இடம்? இது என்ன புதுக்கதை? அனுமனின் வால் அசோக வனத்தில் பட்டதாகவல்லவா நான் கேள்விப்பட்டேன்!
(Edited.)
October 25th, 2010 at 6:51 am
இந்தக் கட்டுரையை எழுதியவர் அடிப்படை வரலாற்றறிவு கூட இல்லாமல் ஏதேதோ பிதற்றியுள்ளார் என்பதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை விரிவாகப் பார்ப்போம்.
“ராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?” என்று அதி மேதாவியைப் போல கேள்வி கேட்டு விட்டு, “கி.பி. 300 முதல் கி.பி. 1100 ஆண்டுகளின் குப்தர் காலத்தில் ராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப்படவில்லை.” என்று எழுதியுள்ளார். இதை மிகவும் எளிதாகத் தவறு என்று காட்ட முடியும்.
அகழ்வாராய்ச்சி: கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அனைத்து அகழ்வாராய்ச்சியாலர்களாலும் ஒப்புக்கொள்ளப்படும் “தியோ கார்” (deogarh) விஷ்ணு தசாவதார ஆலயத்தில் மிகத் தெளிவாக இராம-இலட்சுமண-சீதை சிற்பம் விஷ்ணுவின் மற்ற அவதாரன்களோடு சித்தரிக்கப்படுகிறது.
தமிழ் இலக்கியச் சான்றுகள்
(1) சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் இராமனை திருமால் அவதாரமாகவே அறிவிக்கிறது. இதன் காலம் கி.பி.5-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது.
(2) கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் இராமனைக் கடவுளாகவே அறிவித்துள்ளார்.
(3) கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்த ஆழ்வார்கள் இராமனைக் கடவுளாகவே, திருமால் அவதாரமாகவே வணங்கியுள்ளனர்.
சகச்கிருத சான்றுகள்:
(1) மகாபாரதம், இராமாயணம், விஷ்ணு புராணம், இவை எல்லாம் 8-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது என்பது ஆராய்ச்சியாளர் அனைவரும் இசைந்தது. இந்நூல்களில் இராமன் கடவுளின் அவதாரமாகத் தான் கருதப்படுகிறான்.
(2) சர்வஞாத்ம முனி என்னும் 9-ஆம் நூற்றாண்டு அத்வைதியின் நூலாகிய சங்க்ஷேப சாரீரகம் என்னும் நூலில் இராமனை கடவுளாகிய திருமாலின் அவதாரம் என்று அறிவிக்கப்படுகிறான்.
// கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்மர் என்பவர் ‘அமர கோசம்’ என்ற பெயரில் சமஸ்திருதக் கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் ராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் ராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. //
அமரகோசத்தில் திருமால் (விஷ்ணு) பட்டியலில் இருக்கிறார். இவர் இருக்க, இவருடைய ஒவ்வொரு அவதாரத்தையும் பட்டியலில் சேர்க்க அவசியமில்லை. இதற்குச் சான்றாக, பரிபாடல் முதலிய சங்க இலக்கியங்களில் திருமால் அவதாரங்கலாகப் போற்றப்பட்டுள்ள வராக, நரசிம்ம மூர்த்திகளும் அமரகோசத்தில் இல்லை. ஆகையால், அமரகோசத்தில் இல்லாததனால் இராமன் கடவுளாகக் கருதப்படவில்லை என்று இவர் கூறுவது இவரது கற்பனையே.
ஆகவே, இவர் “இராமன் பதினோராம் நூற்றாண்டு வரை மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை” என்று கூறியிருப்பது மிகப்பெரிய புளுகு. ஏதேதோ அரைகுறை ஆராய்ச்சியாளன் கூறுவதை எல்லாம் வேதவாக்காக எடுத்திருக்கிறார்.
இதைப்போல இன்னும் நிறைய புளுகுகள் விட்டிருக்கிறார். இந்திய அகழ்வாராய்ச்சிக் குழு (ASI) நடத்திய அகழ்வின் முடிவுகளைப் பற்றி ஒன்றுமே இதில் கூறவில்லை. பலாத்காரமாக ஆக்கிரமிப்பு முறையாக ஒருவன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி புரிந்திருக்க, பாபர் ஏதோ மக்கள் ஆதரவை நம்பி ஒட்டு வாங்கி ஆட்சி செய்ததைப் போல இவர் எழுதியது வேடிக்கைக்குரியது. நதிகள் காலடைவில் வழி மாறுகின்றன (rivers change their course over time) என்னும் அடிப்படை geography அறிவு கூட இல்லாமல் ஏதேதோ பிதற்றுகிறார்.
பல பொய்களைக் கொண்ட இந்தக் கட்டுரையை எல்லாம் எப்படி பதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
October 25th, 2010 at 8:12 am
//அனுமனின் முன் வால் அசோக வனத்தில் பட்டதாகவல்லவா நான் கேள்விப்பட்டேன்!//
நாகூர் ரூமி, சக மதத்தவரின் மதநம்பிக்கைகளை மதிக்கும் உங்கள் இஸ்லாமிய பண்பாட்டு, இந்திய கலாச்சாரம் குறித்த உங்கள் அறிவும் வியப்படைய வைக்கிறது. வாழ்த்துக்கள்.மற்றப்டி என்னை தோலுரிக்க உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிந்து கொள்ள முடிந்ததே.
October 25th, 2010 at 8:24 am
இக்கட்டுரை அடிப்படையற்ற பொய்களை முன்வைக்கிறது என்பது பல கூறுகளில் தெரிகிறது. மாற்றுக்கருத்து என்பதில் பொய்களும் அடங்குமா என்பதை தமிழ்பேப்பர் தெளிவுபடுத்தவேண்டும்.
October 25th, 2010 at 9:30 am
>>1949-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்ம ஸ்தானத்தில் அவதரித்துவிட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.? >>
1885ல் இராம ஜென்ம பூமி குறித்த முதல் வழக்கு பதிவானது. அன்ன்கிலேய நீதிபதி தன் தீர்ப்பில் பாபரோ அவரது தளபதியோ அந்த இடத்ததில் மசுதி கட்டியிருக்கத் தேவையில்லை, நடந்தது துரதிருஷ்டாவசமான செயல் தான், ஆனால் 356 ஆண்டுகள் கழித்து துயர் துடைப்பது சாத்தியமில்லை என்று கூறியிருப்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு.
நீதிமன்றத்தில் சுன்னி மத்திய வ்ஃபு வாரியம் வாதாடிய போது 1934ல் இருந்து அந்த இடம் முஸ்லிம்களால் சீந்தப்படவேயில்லை என்ற வாதத்தை மறுக்கவில்லை. அதனால் தான் அந்த இடம் மசூதியே அல்ல என்று தீப்பானது. தொழுகை நடந்தால் தான் மசூதி. சும்மா கிடந்தால் வெறும் கட்டிடம் என்பது ஷரியா சட்டமாமே ஜனாப் ஹஸன் கமருதீன்? அதனால் தான் இடிக்கப்பட்டது மசூதியல்ல, பயன்படுத்தப்படாத கட்டிடம் என்றனர் நீதிபதிகள். மசூதியின் கீழே கோவில் இருந்ததற்கு ஆதாரம் ASI அறிக்கையில் உள்ளது.
அது சரி, பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் பாடத்தில் நீங்கள் எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள்? கண்டிப்பாக பெயிலாகி இருப்பீர்கள் என்று உறுதிகூறுகிறேன். “இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனா?” ஹே! ஹெஹ்ஹே!! ஹெஹ்ஹெஹ்ஹே!!! உங்கள் வரலாற்று அறிவு அஞ்சாங்கிளாஸ் பாஸ் பண்ணக்கூடத் தேறாது போலிருக்கே! பொது ஊடகங்களில் எழுதும் போது கொஞ்சமாவது படித்துவிட்டோ, விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோ எழுதுங்கய்யா!
ஏனுங்கண்ணா, தமிழ்பேப்பர் எடிட்டருங்கண்ணா! நீங்க இந்த மாதிரி அடிப்படையே தப்பான கட்டுரையை எல்லாம் எப்ப்டிங்கண்ணா அனுமதிக்கிறீங்கங்கண்ணா? கட்டுரைங்களயெல்லாம் படிச்சு பாத்துட்டு போடுவீங்கன்னு நெனச்சனுங்கண்ணோவ்…..
எட்டாங்கிளாஸ்ல எங்க வாத்தியார் குறுக்க கோடு கிழிச்சு இப்படி வரலாறு தெரியாம இருந்தா நீயெல்லாம் என்னத்த உருப்படப்போறேன்னு திட்டிப்போட்டாருங்கண்ணா… ஆனா இந்தக் கட்டுரைய விட அதுல வரலாறு தெளிவாவே எழுதியிருப்பேனுங்கண்ணோவ். அனுப்பி வெச்சன்னா போடுவீங்களாங்? கேட்டனுங்!
October 25th, 2010 at 9:55 am
நாகூர் ரூமியின் அனுமனின் ‘முன்’ வால் என்ற அநாகரிக கமெண்ட் தமிழ்பேப்பருக்கு தேவையா?
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ தான் என்று அந்த நபரின் தராதரத்துக்கு அப்படி கமெண்ட் அடித்திருந்தாலும் அதை இங்கே எடிட்டிருக்கலாமே!
October 25th, 2010 at 11:08 am
Just a challenge to the author:
[1] // அயோத்தியைப் பற்றிப் பேசும் வால்மீகி ராமாயணம், சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜனை தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது //
[2] // மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வருணிக்கிறது.//
Can you provide the exact verse number and which Khanda the above statements occur? If you can provide me the same, we can investigate together what those verses mean.
Also, a request to those reading this forum. If there are any experts in geography, can you please confirm if the following statement by the author is true?
// ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி, கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. //
October 25th, 2010 at 11:28 am
அனுமனின் முன் வால் அசோக வனத்தில் பட்டதாகவல்லவா நான் கேள்விப்பட்டேன்!//
இந்த வக்கிரத்தை பிரசுரித்து மகிழும் தமிழ்பேப்பர் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் இருவர் மேலும் (அதுவும் வைணவ பாரம்பரியத்தில் வந்தவர்களாம்) காறி உமிழ்கிறேன்.
உங்களைப் போன்றவர்களால்தானடா இந்த நாடு இந்த நிலைக்கு கீழ்ப்பட்டுள்ளது..
(Edited.)
October 25th, 2010 at 11:30 am
//முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1947 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்னையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
//1949 டிசம்பர் 23-ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்துப் பிரச்னையை முதன் முதலாகத் தொடங்கும்வரை ராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை.
//1949-ல் சங் பரிவாரம் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடும்வரை இதுதான் நிலைமை
The first recorded incident of violence over the issue between Hindus and Muslims in modern times took place in 1853 during the reign of Nawab Wajid Ali Shah of Awadh. A Hindu sect called the Nirmohis claimed the structure, contending that the mosque stood on the spot where a temple had been destroyed during Babar’s time.
According to the District Gazetteer Faizabad 1905, “up to this time (1855), both the Hindus and Muslims used to worship in the same building. But since the Mutiny (1857), an outer enclosure has been put up in front of the Masjid and the Hindus forbidden access to the inner yard, make the offerings on a platform (chabootra), which they have raised in the outer one.”
Efforts in 1883 to construct a temple on this chabootra were halted by the Deputy Commissioner who prohibited it on January 19, 1885. Raghubir Das, a mahant, filed a suit before the Faizabad Sub-Judge. Pandit Harikishan was seeking permission to construct a temple on this chabootra measuring 17 ft. x 21 ft., but the suit was dismissed. An appeal was filed before the Faizabad District Judge, Colonel J.E.A. Chambiar who, after an inspection of spot on March 17, 1886, dismissed the appeal. A Second Appeal was filed on May 25, 1886, before the Judicial Commissioner of Awadh, W. Young, who also dismissed the appeal. With this, the first round of legal battles fought by the Hindus came to an end.
http://en.wikipedia.org/wiki/Babri_Masjid
October 25th, 2010 at 12:18 pm
http://wapedia.mobi/en/Ghaghara
this clearly shows the course of river sarayu -It merges with Ganges in current day bihar district
this misinformation about Sarayu is being fed by muslims all over the web now
October 25th, 2010 at 1:23 pm
திரு ஹரி கூறியது போல, இந்த இசுலாமீய பிரச்சாரத்தைப் பதிப்பித்ததும், நாகூர் ரூமி போன்றவர்களை ஆதரிப்பதும் இத்தளத்திற்கு அவமானத்தையே தேடித் தருகிறது.
இத்தளத்தின் உரிமையாளர் உண்மையிலேயே நடுநிலையானவர்கள் ஆனால், “இக்கட்டுரையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதித் தர வேண்டும்.
நாகூர் ரூமியின் மறுமொழியை மட்டுறுத்தாமல் பதிப்பித்தும், சாரங்க் அவர்களுடைய மறுமொழியை மாத்திரம் பூதக்கண்ணாடி போட்டு மட்டுறுத்தியிருப்பதிலிருந்தும், அரவிந்தன் அவர்களுடைய ஒரு கட்டுரையில் பத்ரி சேஷாத்ரி காங்கிரஸ்காரனாட்டம் மறுமொழி இட்டதிலிருந்தும் இத்தளத்தை நடத்துபவர்களின் மகிமை புரிகிறது.
(edited)
October 25th, 2010 at 1:23 pm
Shame on you folks who are spreading mis information about Sarayu -Mr Hasan, as you had indicated in your article as a good muslim will you agree now that what you presented are falsities
the author seems to have cut paste several of his points from web disussions being done by muslim brothers
there is substantial proof to show that Rama indeed existed and was born some 7000 years ago (Mr hasan if you want i can five you correct yuga calculations)
see the complete course (at the end)
Ramayana says Sarayu flows from today’s nepal/china region, it says it joins in Ganga (it does not bother about the geo part of it -)Ramayana says – “Viswamithrar took rama to where the river confluences with Ganga”
Sarayu is a tributary of Gaghra river which means it does not mege in to rapthi as some fundementalists say here – it meges in to Gargha which merges with ganges
Valmiki had no intention to be a geography teacher to talk about tributaries and distributaries. He sees the whole river as Sarayu and the river Gaghra is a recent name, it does not find any mention in Vedas, nor epics-so it must have been a post epics period.
//Cutting southward across the Siwalik Hills, it splits into two branches, first Geruva on the left and Kauralia on the right near downstream Chisapani) to rejoin south of the Indian border and form the Ghaghra proper. Other tributaries originating in Nepal are the Rapti and the little Gandak. Another important tributary of Ghaghara in India is the Sarayu river, famous for the location of Ayodhya (the capital of Dasarath’s Kingdom) on its banks. It flows southeast through Uttar Pradesh and Bihar states to join the Ganga downstream of the town of` Chapra, after a course of 1080 km. It carries more water than the Ganga before its confluence. Sarayu river is stated to be synonymous with the modern Ghaghara river or as a tributary of it.
//
October 25th, 2010 at 2:01 pm
// இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில், ‘கி.பி. 1750-க்கு முன்புவரை இந்தியாவில் ராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்குமுன் ராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் //
ஐயோ ஐயோ ஐயோ!
நம் தமிழகத்திலேயே சோழர் காலத்திய, 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமரின் அழகான வெண்கலச் சிலை உள்ளது – பத்தூர் என்ற ஊரில் கண்டெடுக்கப் பட்டது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த தமிழகத்தின் பல கோயில்களில் ராமாயண சிற்பஙக்ளும், ராமர் சன்னிதிகளும் உள்ளன. ஆழ்வார்கள் திருவயோத்தி என்ற திவ்யதேசத்தைப் பற்றி பாடியிருக்கிறார்கள் – அவர்கள் காலத்திலேயே அயோத்தி சிறந்த புனித தலமாக இருந்திருக்கிறது. இது பழைய தமிழ் இலக்கியம் மூலமே நமக்குக் கிடைக்கும் சான்று.
குறைந்த பட்ச sense கூட இல்லாமல், முழுவதும் வெறுப்புணர்வோடு எழுதப் பட்ட கண்மூடித்தனமான பிரசார pamphlet இது. அனைவருக்கும் தெரிந்த சாதாரண உண்மைகளைக் கூட பொய்யாக மறைத்தும், திரித்தும், படு கேவலமாக எழுதப் பட்டிருக்கும் இந்த கடைந்தெடுத்த இஸ்லாமிய பொய்ப் பிரசாரத்தை ஏன் தமிழ்பேப்பர் வெளியிடுகிறது? விளக்கம் தேவை.
October 25th, 2010 at 2:11 pm
// குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரத்தினர் கூறும் கி.பி. 300 முதல் கி.பி. 1100 ஆண்டுகளின் குப்தர் காலத்தில் ராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப்படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்மர் என்பவர் ‘அமர கோசம்’ என்ற பெயரில் சமஸ்திருதக் கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் ராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் ராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. //
இதை எழுதிய/பதிப்பித்த அறிவு ஜீவிகள் பின்வரும் சுட்டியில் உள்ள ரகுவம்ச காவியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காணவும். அதில் ஐந்தாம் நூற்றாண்டுக் காளிதாசர் மிகத் தெளிவாக “விஷ்ணுவே இராமனாக அவதாரம் எடுத்தார்” என்று பத்தாம் அத்தியாயம் முழுக்க முழங்கியுள்ளார்.
http://www.giirvaani.net/giirvaani/rv/sargas/10_rv.htm
October 25th, 2010 at 2:31 pm
Dear Friends,
Comments published in this ezine are approved only after editing (to delete objectionable portions). One comment was inadvertently allowed – it was an oversight rather than intentional.
In future, we will take more care in letting through comments.
Thanks.
October 25th, 2010 at 2:32 pm
We would also like to inform you that some comments which are totally abusive in nature and do not add much value to the discussion are not allowed and are deleted.
October 25th, 2010 at 2:44 pm
in bagavad geetha 11th Chapter – Krishna in the kurukshetra war field clearly says Among the Archers i am Rama- Kurukshetra war happended around 3067 BC (there is substantial, archeological, astronomical and historical evidence for this – so fundementalists don’t close your eyes and deny this too)
(edited)
October 25th, 2010 at 2:46 pm
badri – though you removed it from the source -ANi’s reply still carries it – it looks as though ANi is throwing mud on a true muslim who did not say anything wrong
October 25th, 2010 at 3:54 pm
இந்த தேவையில்லாத பகை சண்டைக்கு தள நிர்வாகிகளே பொறுப்பு !!!
ஒரு அடிக்குறிப்பு கூட இல்லாத கட்டுரையை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை
சொல்லும்போது நடு நிலையே இல்லை !!!
இதை திரும்ப பெற்று அடிக்குறிப்புகளை இணைக்க சொல்லவும்,
இல்லாவிடில், கட்டுரையை நீக்கவும் !!!, முக்கியமாக திரும்ப பெற்றால் வரிகளை ஒப்பிடவும், கட்டுரை எழுதியவரின் நோக்கம் தெரியவரும்!!
நன்றி,
சஹ்ரிதயன்
October 25th, 2010 at 5:03 pm
Dear Badri Seshadri,
This comment is a sincere request, not a caustic rebuking.
About the article in general…
It seems that in the name of free speech/secularism you have allowed this one to be published in order to give a “balanced view”, since Shri Aravindan wrote one supporting the Ayodhya temple issue (correct me if I am wrong, I will gladly accept). What we have as a result is, we have:
(1) One article that is meticulously well-researched (Aravindan’s) and
(2) This one by Hassan that is blatantly false, and is just a cut-paste from standard Islamic soundbites meant to detract efforts to neutrally assess the Ayodhya issue. Myself and others here have shown substantial evidence that pretty much everything in this article is wrong.
Common folk who are not as knowledgeable (or as fortunate to have access to resources such as myself) would be confused as to which one is correct. After all, they come here for quality information, not a pseudo-secular “balanced” view which is only intended in “keeping both parties happy” and not in knowing the truth. This article and the process of publication here shows the quintessence of what is wrong in today’s “secular media”.
Hence, it is fair that you publish an announcement on your front page, and at the top and the bottom of this article in red/bold saying “though this article was published as per standards of free speech, the editors would like to note that the main thesis of this article is actually factually incorrect”? Just an American-style disclaimer in the “about us” page alone would not help.
Again, it depends what your priority is… is it to give good-quality highly-researched information to readers, or is it playing pseudo secularism like the Congress party.
// One comment was inadvertently allowed – it was an oversight rather than intentional. In future, we will take more care in letting through comments. //
What is amazing though, is that your organization endorses and patronizes the particular entity that wrote the silly comment. It is again up to you, but it is important that the audience here knows that.
October 25th, 2010 at 5:19 pm
// 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமரின் அழகான வெண்கலச் சிலை உள்ளது – பத்தூர் என்ற ஊரில் கண்டெடுக்கப் பட்டது //
அந்த ஊரின் பெயர் பருத்தியூர்; பத்தூர் அல்ல – தவறுக்கு மன்னிக்கவும்.
October 25th, 2010 at 5:22 pm
// ராமரின் அழகான வெண்கலச் சிலை உள்ளது – பத்தூர் என்ற ஊரில் கண்டெடுக்கப் பட்டது//
பருத்தியூர், பத்தூர் அல்ல. தவறுக்கு மன்னிக்கவும்.
October 25th, 2010 at 5:54 pm
Dear Tamilpaper,
I appreciate your guts in publishing a senseless writeup. Do not encourage any such ridiculous article in future. Total scam and just a scam!! Either have a editor with a decent knowledge or declare an open statement on your polical and religious views. I don’t know what you tried to do with this article. If you wish to kindle a flame with a lame article.. it’s a job well done!
All,
It is true that Moghals destroyed many temples in India. Taj Mahal is such one, if anyone doubt it approach supreme court to order the sealed doors open:
http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm
(edited)
October 25th, 2010 at 6:04 pm
தமிழ்பேப்பரின் தரத்திற்குக் கொஞ்சம் கூட தகுதியில்லாத இது போன்ற குப்பைகளை, இழிவான கமெண்ட்களை பிரசுரிக்கும் ஆசிரியருக்கு என் கண்டனங்கள்.
மிகவும் வேதனையுடன்,
பிரகாஷ்.
October 25th, 2010 at 6:13 pm
அன்பு நண்பர்களுக்கு,
நான் எழுதிய ஒரு சொல் உங்களில் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாரபட்சமான அநீ-யின் கட்டுரைகள் முஸ்லிம்களை எந்த அளவு புண் படுத்துகிறது என்று ஏன் உங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ராமர் உண்மையில் இருந்தாரா, பாபர் மசூதி வளாகத்தில்தான் பிறந்தாரா என்பதெல்லாம் ’இஷூ’ அல்ல. 1947 ஆகஸ்ட் 15-ல் வணக்கஸ்தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அப்படியே வைப்பதுதான் உண்மையான ஜனநாயகம், மதச்சார்பின்மை, மற்றும் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். ஆனால் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லிபர்ஹான் கமிஷனால் தெளிவாகக் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 68 பேரில் ஒருவரைக்கூட இதுவரைக் கைது செய்து உள்ளே வைக்க முடியாத கையாலாகாத மத்திய அரசைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்.
”அது மசூதிதான் என்றார்கள்”, ”பாபர் மசூதி, பாபர் மசூதி என மீண்டும் மீண்டும் ஏதோ தினசரி தொழுகை நடக்கும் ஒரு மசூதியை ஹிந்து வெறியர்கள் உடைத்தெறிந்துவிட்டது போலக் கூக்குரலிட்டார்கள்” என்றெல்லால் அநீ எழுதுவார், அதையும் ஏதோ பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸல் கட்டுரை எழுதிவிட்ட மாதிரி பாராட்டுவீர்கள். அக்காகி ஆப்பு என்பவர் போகிற போக்கில் நாகூர் தர்கா அனுமன் இலங்கைக்குப் போகும் வழியில் வால் பட்ட இடம் என்று விஷம் கக்குவார் — எல்லாவற்றையும் படித்துக் கொண்டு முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும், அப்படித்தானே?
ஹஸன் கமருதீன் என்பவர் ரொம்ப நாகரீகமான முறையில், தர்க்க ரீதியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரைப் பாரட்டி ஒருவரி எழுதும் மனம் உங்களுக்கு இல்லை. ஆனால் அதில் அடிக்குறிப்பு இல்லையாம், அதனால் அதை நீக்கிவிடவேண்டுமாம். கொடுத்தால் மட்டும் ஹஸனுடைய எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? தன் கருத்துக்குச் சாதகமான மேலதி விபரங்களையும் அடிக்குறிப்புகளையும் இணையத்தில் பழக்கம் உள்ள யாரும் இன்று தரமுடியும்.
பாபர் மசூதி இருந்தது வரலாறு. அதை இடித்தபோதும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். அதுவும் வரலாறு. தொழுகை நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் ராம் லல்லா-வை அங்கு கொண்டுபோய் வைத்தது, அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள். சரி, தொழுகை நடக்கவில்லை என்றால் ஒரு மசூதியை இடித்துவிடுவீர்களா?
நீங்கள் மிதித்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் நாங்கள் மட்டும் உங்கள் மத நம்பிக்கைகளை மதித்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்படித்தானே? ஹிந்துத்துவம் என்றால் என்ன என்று இந்த நாட்டில் உள்ள எல்லா மத அறிவு ஜீவிகளும் நன்கு அறிவார்கள். அநீ போன்றவர்களுக்கெல்லாம் தொடர்ந்து எழுத இடம் கொடுக்கும் தமிழ் பேப்பரைச் சொல்ல வேண்டும்.
யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அக்காகி ஆப்பு என்பவர் எழுதிய கமண்ட்-டுக்காக அப்படி எழுதினேன். உணர்ச்சி வசப்பட்டு பாபர் மசூதியை மதவெறியர்கள் இடித்த மாதிரி.
நாகூர் ரூமி
October 25th, 2010 at 7:48 pm
Rumi,
what makes you say this article is based on Tarka
Tarka means logic – logic comes from realistic experience or systematic deduction.
nonsense cannot be called logic. Every para of the author has gross factual errors
1 – Yuga calculations
2 – Info on Sarayu river
3 – About Rama temple before 18th century
4 – On when Rama was made a God
none of these are backed by data – it is merely a false propaganda full of animosity towards the noblest and oldest civilization
All of us have replied to every falsity with proof and have shown that what the author wrote is Crap
If you are truthful, why don’t you condemn the author for propogating false data. You can verify all the information give by us – Will you do it? I challenge you?
(edited)
October 25th, 2010 at 8:00 pm
>>அக்காகி ஆப்பு என்பவர் போகிற போக்கில் நாகூர் தர்கா அனுமன் இலங்கைக்குப் போகும் வழியில் வால் பட்ட இடம் என்று விஷம் கக்குவார்
அவர் கரசேவைக்கான காரணங்களை நக்கலடித்திருக்கிறார். நீங்கள் தான் சரியாகப் படிக்கவில்லை. மீண்டுமொரு முறை அதைப் படித்துப் பாருங்கள்.
இன்னும் புரியலையா? கணேசன் தாஜ் மஹாலை சிவன் கோயிலுன்னு சொல்றார். அக்காகி, அவ்ளோ தூரம் ஏன் போறீங்க தமிழ் நாட்டிலேயே, வேளாங்கன்னிய சீதாபிராட்டியோட கோவில்னு சொல்லுங்க, நாகூர் தர்காவ அனுமன் வால் பட்ட இடம்னு சொல்லுங்கன்னு நக்கல் பண்றார். நீங்க இதைப்படிச்சுட்டு கோவப்பட்டு பேசறீங்க. ஐயோ! ஐயோ!
(edited)
October 25th, 2010 at 11:11 pm
Dear Mr Saran,
I agree with you on the point that factual errors must be pointed out. But I don’t agree with the view that Hasan’s article is out and out a cut-and-paste material. If that is so, the same is applicable to Aravindan’s ‘scholarly’ articles also. What is sauce for the goose is sauce for the gander. I was only trying to say that no one expressed a word of appreciation to the objective, detached and soothing manner in which Hasan has written the article, whereas Aravindan’s writings are blatantly one-sided and prejudiced, in my view.
Let me refrain from further arguments because this should not become an issue for Tamil Paper.
As for Bala, I thank you for throwing light on the passage in question.
October 26th, 2010 at 12:41 am
அக்காகி அப்பு என்பவர் இந்துக்களைப் பார்த்து நக்கலடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து இவரும் ஒத்து ஊதிவிட்டு பிறகு ”கோபம்” என்று டபாய்க்கிறார் பேராசிரியர் நாகூர் ரூமி.
நாகூர் ரூமி அவர்களே “கப்பலுக்கு போன மச்சான்” எழுதும் போது இருந்த உங்களின் நகைச்சுவ உணர்வு “இஸ்லாம் ஒர் எளிய அறிமுகம்” எழுதிய போது மறைந்த மாயம் என்ன?
October 26th, 2010 at 12:46 am
கொஞ்ச நாள் கழித்து காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலையோ, தஞ்சை பெரிய கோயிலையோக் கூட அது ஒரு பௌத்த ஆலயமாக இருந்தது எனக் கூறி இடிக்கும் நிலை வரலாம். அப்போதும் இந்த நீதிமன்றம் இதனைத் தான் சொல்லுமா????
October 26th, 2010 at 1:19 am
அரவிந்தன் நீலகண்டன் மீதும் இந்து மதத்தின் மீதும் அவதூறு வீசுவதைத் தவிற கட்டுரைக்கு பதில் சொல்லுவது கூட உங்கள் நோக்கம் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது.
October 26th, 2010 at 2:45 am
// 1947 ஆகஸ்ட் 15-ல் வணக்கஸ்தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அப்படியே வைப்பதுதான் உண்மையான ஜனநாயகம், மதச்சார்பின்மை, மற்றும் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். //
It has been clearly mentioned that the above rule DOES NOT apply to this mosque, as it was already under dispute.
//ஹஸன் கமருதீன் என்பவர் ரொம்ப நாகரீகமான முறையில், தர்க்க ரீதியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். //
Shows your utter blindness and reliance on lies.
October 26th, 2010 at 3:05 am
Nagore Rumi, look at what this Economic Times columnist (a Muslim scholar, btw) says:
http://economictimes.indiatimes.com/articleshow/6736059.cms
//
In 1991, during the prime ministership of Narasimha Rao , the Indian Parliament passed a legislation called the Places of Worship Act, 1991. According to this Act, the government of India was bound to maintain the status quo of all places of worship on the Indian soil as it stood in 1947. But there was an exception – that of the Babri masjid of Ayodhya. The Act maintained that the Babri masjid issue was in court, so the government would wait and it would be its duty to implement the verdict of the court when it was given.
//
and more…
//
This Act was a most reasonable one and Muslims should have accepted it as such. But they rejected it outright and resorted to street demonstrations. The demolition of the Babri masjid on December 6, 1992, was nothing but the culmination of this negative course of action adopted by the Muslims. At that time i said: “Babri Masjid ko Hinduon ne toda aur Musalmano ne usko tudwaya.” (The Hindus demolished the Babri masjid but Muslims provoked them to do so.)
//
October 26th, 2010 at 6:50 am
இப்படிக் கேள்வி கேட்கும் அறிவு ஜீவிக்கு பதில்:
// கொஞ்ச நாள் கழித்து காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலையோ, தஞ்சை பெரிய கோயிலையோக் கூட அது ஒரு பௌத்த ஆலயமாக இருந்தது எனக் கூறி இடிக்கும் நிலை வரலாம். //
இதற்கு வாய்ப்பே இல்லை. கச்சி வரதன் கோயில் சங்க இலக்கியத்திலேயே உள்ளது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்தில் பௌத்த-சமண மதங்கள் வேரூன்றியது.
மேலும், ஆகம விதிப்படி புத்த விஹாரமோ, வேறு கட்டிடங்களோ இருந்த இடத்தில் புதிதாகக் கோயில் எழுப்பக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு aRindhavar யாரேனும் இருந்தால் விளக்கலாம். ஆகையால், இக்கேள்வி வெறும் விதண்டாவதத்திற்கும் ஹிந்துக்கள் மீது சாணி அடிக்கவும் கேட்கப்படும் ஒன்று.
இந்துக் கோயில்கள் புத்த விஹாரங்களை இடித்துக் கட்டப்பட்டவை என்பது சில இந்து வெறுப்பாளர்களால் கற்பிக்கப்பட்ட நவீன மாயை.
October 26th, 2010 at 7:11 am
//ஹஸன் கமருதீன் என்பவர் ரொம்ப நாகரீகமான முறையில், தர்க்க ரீதியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரைப் பாரட்டி ஒருவரி எழுதும் மனம் உங்களுக்கு இல்லை. ஆனால் அதில் அடிக்குறிப்பு இல்லையாம், அதனால் அதை நீக்கிவிடவேண்டுமாம். கொடுத்தால் மட்டும் ஹஸனுடைய எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? தன் கருத்துக்குச் சாதகமான மேலதி விபரங்களையும் அடிக்குறிப்புகளையும் இணையத்தில் பழக்கம் உள்ள யாரும் இன்று தரமுடியும்//
நாகரீகமான முறையில் அவர் எழுதியிருக்கிறார் அது மட்டுமே சரி,
// தன் கருத்துக்குச் சாதகமான மேலதி விபரங்களையும்//
அதைத்தான் கேட்கிறொம் ஏனெனில் எழுதியவர் ராமயணத்தை பயின்றதாக கருதுவதிற்கு இட மில்லை..
மேலும் மற்ற மார்க்கத்தை பற்றி பேசும் எழுதியவருக்கு அதை குறிப்பாக கொடுக்கவேண்டியது அவசியமாகிறது.
அதை உபயொகிப்பவரும் நடு நிலையாளரும் இருக்கலாம் அல்லவா?
இல்லாவிடில் இந்த கட்டுரை இங்கெ அனுமதிக்கபட்டிருக்காது.
சஹ்ரிதயன்
October 26th, 2010 at 7:42 am
நான் கூட முதலில் அந்த ஆசாமி தெரியாத்தனமாக தான் எழுதியிருக்கிறார் போல என்று நினைத்தேன். பிறகு தான் தெரிகிறது வழக்கமான விதண்டாவாதத்திற்காகத் தான் பிதற்றியிருப்பது.
முதலில் எழுதிய கருத்தை விட அதற்கு விளக்கம் கொடுத்திருப்பது இன்னமும் அசிங்கமாக இருக்கிறது.
அதான் சொல்லிவிட்டேனே.. ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’!
தமிழ்பேப்பருக்கு தேவையில்லை. இதற்கு மேல் இப்படிப்பட்ட அரைகுறைகளின் கருத்துகளை அனுமதிக்காதீர்கள்.
October 26th, 2010 at 8:27 am
அய்யா திரு. நாகூர் ரூமி, உங்கள் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், அடுத்த விநாடி போன்ற புத்தகங்களைப் படித்தும் கிழக்கு பாட்கேஸ்ட்டில் உங்கள் விளக்கங்களைக் கேட்டும் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், அமிலமாக உங்கள் பிறமதத்தூற்றல் கண்டு அதிர்ந்தேன். உங்கள் உண்மை உள்ளுணர்வைக் கண்டு ச்சீய் நீர் இவ்வளவுதானா என்று எண்ணுகிறேன். எல்லாம் வல்ல எல்லையற்ற கருணையாளனான இறைவன் உமக்கும் கருணை காட்டித் திருத்தட்டும். “இன்டெக்ரிட்டி” என்பது உண்மையாக எழுதுவது மட்டும் அல்ல … வாக்கு-மனம்- செயல்பாடு அனைத்திலும் உண்மையான கன்சிஸ்டென்சியுடன் இருப்பதே. அதில் நீங்கள் சரிந்துவிட்டீர்கள்.
October 26th, 2010 at 1:07 pm
Dear Rumi,
You still do not want to say openly that there are blatant errors- so you say “they must be pointed out” as if i needed some favor.
the entire logic of the aruguments by the author has been on rounds in the internet for the past few days in the internet – it has been a planned propaganda to spread mis information
- i do not want to go behind the intentions of this author for i cannot verify the intentions.
every point the author makes is erroneous and is adapted from comments spread by passer bys
Shri Aravindan on the other hand has picked information from reliable sources for making his points – he has given the references
where are the references for this article. what courage does the author have to come to Hindus and try to teach them Yuga calculations,course of Sarayu river etc
-do you think the judges were fools,even Justice Khan has agreed on the facts about AYodya – he only says that Babar need not
have deolished the temple to build a mosque -that is the only place he differs.
- you say that we have to appreciate such article?What for i ask? Who will appreciate lies and falsities?
October 26th, 2010 at 3:59 pm
//ஹஸன் கமருதீன் என்பவர் ரொம்ப நாகரீகமான முறையில், தர்க்க ரீதியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரைப் பாரட்டி ஒருவரி எழுதும் மனம் உங்களுக்கு இல்லை.//
இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்று சொல்கிறார். 1949 வரை ராம் ஜென்ம பூமி பிரச்சினையே இல்லை என்கிறார். குருநானக் பாபரைப் பாராட்டி சீராட்டி போற்றி வணங்கினார் என்கிறார். இதுவல்லவா தர்க்கம்! இதுவல்லவா ஆணித்தரமான வாதம்!! இதை நான் வலிக்க வலிக்கக் கைதட்டிப் பாராட்டுகிறேன்.
நாகரீகமும் தர்க்கமும் இந்தக் கட்டுரையில் ததும்பி வழிந்து ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது தண்ணீராக மட்டும் அது இருந்திருந்தால் கர்நாடகத்திடம் காவிரிக்குக் கெஞ்ச வேண்டிய அவசியமேயில்லை தெரியுமா? அப்பேர்ப்பட்ட நாகரீகம்; அப்பேர்ப்பட்ட தர்க்கம்.
அடிக்குறிப்பு அடிக்குறிப்பு என்று அடித்துக் கொள்கிறீர்களே! ஹஸன் கமருதீன் வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்? இருந்தால் கொடுத்துவிடப் போகிறார். இல்லாததைக் கேட்டு ஏனய்யா நாகரீகமில்லாமல் நடந்துகொள்கிறீர்கள்?
அப்பாடி! கட்டுரையாளரைப் பாராட்டியாயிற்று. குற்றம் சொல்பவரை நல்ல கேள்வியாக ஒன்று கேட்டாயிற்று.
திருப்தி தானே நாகூர் ரூமியாரே? இல்லையென்றால் சொல்லுங்கள் இன்னும் பாராட்டுகிறேன். காசா பணமா? பாராட்டுத்தானே!
(edited)
October 26th, 2010 at 6:23 pm
ராமன் பிறந்த பூமி எனக் கூறப்படும் அயோத்தி நகரை அகழ்வாய்வு செய்த அறிஞர்கள் இந்நகரில் மனித வாழ்க்கை என்பதே கி.மு. 7ம் நூற்றாண்டுகளில் தான் என்று முடிவு செய்துள்ளனர்.
வைணவ தத்துவத்தைப் பரப்பவே வால்மீகி ஆனவர் ராமாயணத்தை எழுதினார் என்கிற வலுவான கருத்தையும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்தனர். அதுமட்டு மில்லாது மிகப் பழமையான புத்த இலக்கியங்களான “பாலி திரிபிடகங்கள்” ராமன் வாழ்ந்த இடங்களைப்பற்றி ஒரு குறிப்பும் தரவில்லை. கி.மு. 5ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த புத்த சமய எழுச்சி களுக்குப் பின்னால்தான் இன்றுள்ள வடிவத்தில் ராமாயணம் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது இக்காலம் என்பது கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையாகும் என்கிற முடிவிற்கு வந்துள்ளனர்.
இவற்றையெல்லாம் அடுக்கடுக்காக முன்வைக்கும்போது இந்துத்துவா சக்திகள் ஆவேசம் கொள்கின்றன. இந்துக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தாதீர்கள் என்கிறார்கள். இந்துக்கள் எல்லோரும் பிற்போக்கான இந்துத்துவா சிந்தனைகளைக் கொண்ட ஒற்றைச் சிந்தனை உடையவர்கள்தான் என்கிற மோசடி இதில் அடங்கி யிருக்கிறது. இவர்களைப் போன்ற வாதங்களைப் பிறமதங்களிலுள்ள வலதுசாரி பிற்போக்குச் சக்திகளிடமும் காணமுடியும். கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து மெய்யான வரலாற்றை முன்வைக்கும் போது திணறிப்போகிற பிற்போக்குச் சக்திகள் “மதநம்பிக்கைகளை” கேள்வி கேட்காதே என்கிற இடத்தில் தஞ்சம் புகுகிறார்கள்.
October 26th, 2010 at 6:57 pm
சீதையை மீட்டபின் ராமன் சீதையிடம் கேட்கும் கேள்விகளைப் பார்த்தால் எந்த பெண்ணும் ராமனை வெறுக்க வேண்டும். ஆனால் நடப்பதோ ராமனைப் போல ஒரு புருஷன் வேண்டுமென்று வேண்டுதல்கள் ! திருமணம் செய்து கொண்டபின் புருஷன் சந்தேகப் படுகிறான், திட்டுகிறான், கோழையாய் இருக்கிறான், எரிக்கிறான், ஜாதி வெறியில் அலைகிறான் என்றெல்லாம் சொன்னால் – இதெல்லாம் தானே ராமனின் குணாதிசயங்கள். அதைத்தானே நீ கேட்டாய் பெண்ணே என்று விளக்கம் சொல்ல பகுத்தறிவுப் பாசறையில் வந்த சிலரைத் தவிர யாரும் இல்லை இங்கே.
October 26th, 2010 at 6:57 pm
தடாகை மகனை இலட்சுமணன் கொல்ல, ராமன் சொல்கிறான் “சூத்திரனைத் தானே கொன்றாய். அதனால் பாவமில்லை” !!. தவம் செய்யும் சம்புகன் ஒரு சூத்திரன் என்பதற்காய் அவனை கண்ட துண்டமாய் வெட்டி விடுகிறான். சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமை இல்லையாம்.
October 26th, 2010 at 7:03 pm
வாலியை எதிர்கொண்ட இராமனோ வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்றதாகவும் சொல்கிறது இந்த பிராடுபுராணம். இவ்வாறு தனது பின்புறமாக, கோழைத்தானமாக தன்மீது அம்பெய்த மாவீரன் ராமன் அவர்களை வாலி, அவன் முகத்திற்கு முன்னாலேயே திட்டித்தீர்ப்பான். இதற்குத்தான் வாலி வதைப்படலம் என்று இராமாயணம் கூறுகிறது. வாலி என்ற வீரனை வெல்லமுடியாத பலகீனமான ஒருவனா கடவுளாக இருக்க முடியும்? இதற்கு வாலியை வணங்கிவிட்டு போய்விடலாம். வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்ற கோழையாக அல்லவா இராமனை சித்தரிக்கிறது. மேலும் ராமனை கொலைகாரன் என்றல்லவா இராமாயணம் கூறுகிறது. இப்போது சொல்லுங்கள் இராமாயணம் இராமனைப் புகழ்கிறதா இகழ்கிறதா?
வாழ்மீகி என்பவர்தான் இராமாயணம் என்ற கற்பனை கதையை வடித்தவர். அதை தமிழுக்கு தந்தவர் கம்பர். இராமர் என்ற கற்பனை கதாபாத்திரம் உண்மை என்றால் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வாழ்மீகி மேற்கண்ட விஷயங்களை எழுதினார். வாழ்மீகிக்கும் இராமருக்கும் இருந்த தொடர்புக்கு என்ன ஆதாரம்? இராமாயணம் அறிவுப்பூவமானதா? சங்பரிவார்கள் பதில் சொல்வார்களா?
October 27th, 2010 at 1:44 am
யாரோ ஒருவர் இருவர் தவறுதலாக பேசுவதால், எழுதுவதால் அனைத்து முஸ்லிம்களும், தீயவர்கள் முட்டாள்கள் எனக் கொள்ளக் கூடாது, அறிவாளிகளோ, முட்டாள்களோ, அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள். நல்லவரும் கெட்டவரும் அப்படியே ! யாரும் யாருடைய மத நம்பிக்கைகளை புண்படுத்த வேண்டாம். இந்தியாவில் இந்துக்கள் பெருன்பானமையானவர்கள் ஆனால், இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்பதை அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும், மற்றபடி, குரான் வேதங்களை ஒத்த philosphy மற்றும் கருத்துக்களை கொண்டது தான். இந்துக்கள் குரானையும், இஸ்லாமியர் வேதங்களையும் படித்துப் பார்ப்பது ஒரு புரிந்துணார்வை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். கடவுள் கோயில்களில் வசிப்பதில்லை, மனதில் வசிக்கிறார் உயிராக இருக்கிறார் இதைத் தான் இந்து மதம் சொல்லுகிறது, இதை விளங்கி கொண்டால், நமக்கு கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் அன்பு போதும், அமைதி போதும் என்று நினைப்போம். ஆனால் அந்தளவுக்கு நமக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதையே இங்கு இருக்கும் கருத்துக்களும், கட்டுரைகளும் காட்டுகின்றன, தவறில்லை, அந்தப் பக்குவத்தை வளார்த்துக் கொள்வோம். அதுவரை துவேசப் பேச்சுக்கள் வேண்டாமே.. மூளையாலும் கொஞ்சம் சிந்திப்போமே////
October 27th, 2010 at 2:18 pm
இதுல காமெடி என்னன்னா முஸ்லிம் வந்து கோவில் இடிச்சிட்டு மசூதி கட்டுவது பாவம் /தப்பு அப்படின்னு டயலாக் விடுவது .அதுக்கு ஹிந்த்துவ ஆதரவாளர்கள் ஹிந்து எப்படி உலகத்துலேயே நல்லவன்/வல்லவன் 1000 வருடம் முன்னாடியே பிளேன் விட்டவன் /மறு கன்னத்தை காட்டுறவன்/கொலை செய்யாதவன் என்று டுமீல் விடுவது
பத்ரிநாத் சபரிமலை திருப்பதி எல்லாம் புத்த கோவில்கள இருந்து மாறியவை http://www.telegraphindia.com/1101009/jsp/nation/story_13037587.jsp
விளையாட்டு ஆரம்பம் ஆயிடுச்சி டோய்
October 27th, 2010 at 3:02 pm
ankita varma
i can understand you hold a bachelor’s degree in kalagism and hold a master’s in pasarai-ism and have done your p.h.d in ravana kaaviyam.
Congratulations!!!
you got animated when someone unknowingly said varma is your caste – what to speak of you who is talking rubbish without knowing Ramayana and Valmiki
October 27th, 2010 at 3:27 pm
ganapathy,
you have to atleast some bit of data gathering – don’t throw junk info from dinakaran and telegraph.
all these things you say have been already proven that they were not buddhist structures….
at least try to google for other side opinions before you type junk.
October 27th, 2010 at 4:07 pm
//The group is planning to meet BSP chief Mayavati. “We hope that Mayavati, whose vote bank is largely made up of Dalits and neo-Buddhists, will be receptive to the idea. The issue is both political and religious — a deadly concoction which no politician can afford to neglect,” said one activist.//
This is the last paragraph of the news item in Telegraph you’ve referred to. It is evident from their own statements that the ‘activists’ hoist their claim based only on vote bank politics. Comedy time
October 27th, 2010 at 4:43 pm
dear sarang
where it has been proved that badrinath was not a buddhist shrine. (the statue in badrinath is neither a lingam nor lord shiva and unlike kedarnath where the story of lord shiva trying to hide from bhim digs his head in the sand to escape and bheem catches the legs and thus the lingam is of different shape and there r folklore of adisankara got the place from the buddhists)the statue of sabarimala is an open proof of who the god is.
let the courts decide.with the advancement in scientific technology of carbon dating and comparing the buddha statues of those period we can easily trace the origins. along with this we should do a genetic study (recently hitler has been traced of jewsih origin)as most of the ramjhanmbhoomi supporters may have babur genes and the all india babri action committee may be descendants of ram dynasty. this will help people from playing for wrong teams
October 27th, 2010 at 5:31 pm
ganapathy,
Your reply to Sarang shows your utter ignorance. Badrinath is a Vishnu temple, not a Shiva temple. It shows that you have not even bothered to check any information. Badrinath is clearly mentioned in the Mahabharata Aranya (Vana) Parva.
Also, Tirupati is clearly seen in Silappadikaram to be a Vishnu shrine only. If the temple(s) that the telegraph article mentions were indeed Buddhist shrines, there must be some mention of them somewhere in Buddhist Pali literature.
Hindu Smritis clearly prohibit devout Hindus, especially Brahmanas, to keep away from Buddhist vihAras. Hence, it is not even remotely possible that a horde of Brahmins invaded Buddhist shrines.
I do not know about Sabarimala as I have not visited there. But given that every other instance of your alleged “Hindu occupation of former Buddhist Viharas” is wrong, this one is also very likely false.
Cheers.
October 27th, 2010 at 6:09 pm
ganapathy,
firstly badrinath is a Vishnu sthalam not a shivasthalam.
just because the temple structure resembles buddist architecture, it can’t be called a buddist arch
several temples in TN have Jain stamp – it is only adoptation of arch not the vigraham.
there are scores of literary,historical evidences to show that badarikasramam was indeed a hindu place of worship.
even tirumangai azhvaar’s pasuram is available.
thats all fine – which weapon do you think Adi Sankara would have used to threaten the buddist and get back the temple?
on namboodri maintaining this temple-
There are several vaishnava temples in Assam that follow the south indian tradition – does that mean south indians overpowered them? sri vaisnavism spread there too thats all
please think a little – Sankara and his sishyas would not have been able to overpower buddhists physically that too in a place foreign to them
October 27th, 2010 at 8:04 pm
திருப்பதி கோயில் புத்த விகாரையின் மேல் கட்டப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவல். சரி ! அரவிந்தனின் ஊருக்கு அருகே இருக்கும் நாகர்கோவில் நாகராஜா கோவில் ஒரு சமண சமய கோயில் ஆகும், அதனை இந்து மதக் கோயிலாக மாற்றி உள்ளது தெள்ளத்தெளிவான விஷயம், இந்திய முழுதும் இந்து சமய எழுச்சியின் போது பல்வேறு புத்த, சமண ஆலயங்கள், விகாரங்கள், இந்து சமய கோயிலாக மாற்றப் பட்டுள்ளது.
மூளையை பயன்படுத்தாது, ஆய்வுகளை மேற்கொள்ளது, தம் சார் சமயம் சார்ந்த பழம் நூல்களை மட்டும் படித்து விட்டு, பெரிய புத்திசாலிகள் மாதிரி பேசுவது என்ன கொடுமை …
October 27th, 2010 at 8:18 pm
“…One of the centres founded by Samkara was located in Puri in Orissa. According to Swami Vivekananda, a leading modern teacher of Samkara’s school, ‘the temple of Jagannath is an old Buddhistic temple. We took this and others over and re-Hinduised them. We shall have to do many things like that yet.’ …” [Joshi L. M.: 1977: 351]
October 27th, 2010 at 8:24 pm
Hye Hindus (Brahmins) and their Slaves ( Caste-Hindus and Sudras) are good, they never do any harm, they never known to kill anything, they build great temples, even Buddhas and Mahaveera are incarnation of Vishnu and Shiva, so why you quarreling. There is explanation for all scientific inventions in Advaitha and if you master in Advaitha you can be a scientist and invent all things. So please buy Advaitha and Viveka choodamani and read it and become Superpower in 2020.
October 27th, 2010 at 8:37 pm
Hi all,
In any forum there would always be flame baiters like the ones we see in this thread. Just ignore them & move ahead…
Pagan Hindus have enough common sense to go beyond their mischivous inventions & underlying m. intentions..
October 27th, 2010 at 8:54 pm
Sanjay Menon,
continue Continue
again you rely purely on junk discussions from the web.
You go to puri and get a dasavathara photo – you will find budhdha in dasavathara
instead of balarama
the puri jagannath temple in archeology,history,scriptural perspective is a complete hindu temple. It also housed a Buddha vigraha which is in Kandy today
please understand one basic funda – Hindu Agama’s are very strict in nature and they have no need to build a temple over another one, which does not follow the Agama.
Learn about agama a little bit. You will know why you cannot interchange things just like that.
October 28th, 2010 at 3:14 pm
திரு ,ஹஸன் கமருதீன் அவர்களே,
விஷயம் ரொம்ப சிம்பிள்.
பாபர் கும்மட்டத்திர்க்குக் கீழ் இடிந்த நிலையில் ஒரு புராதன வழிபாட்டுக்கட்டிடம் இருந்துள்ளது என்பதை அகழ்வாராய்ச்சி தெளிவாக புகைப்பட, வீடியோ, ஆதாரத்துடன் நிருபித்துள்ளது.
நான் கேட்பது என்னவென்றால் அந்த காலத்தில் பாபருக்கு, மசூதி கட்ட வேறு இடமே கிடைக்கவில்லையா??? பாபர், ராமர் கோவிலை இடிக்காத பட்சத்தில், ஏன் ஒரு இடிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுக் கட்டிடத்தின் மேல் மசூதியைக் கட்ட வேண்டும் ??? வேறு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து கட்டியிருக்கலாமே??? ஏன் செய்யவில்லை.
February 3rd, 2011 at 3:28 am
Ankitha verma says:
1) கி.மு. 5ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த புத்த சமய எழுச்சி – you at least know when budhdha was born?
2) இராமாயணம் தமிழுக்கு தந்தவர் கம்பர் – wow.. I didnt know that before… LOL!
February 24th, 2011 at 12:41 pm
யாரோ ஒருவர் இருவர் தவறுதலாக பேசுவதால், எழுதுவதால் அனைத்து முஸ்லிம்களும், தீயவர்கள் முட்டாள்கள் எனக் கொள்ளக் கூடாது, அறிவாளிகளோ, முட்டாள்களோ, அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள். நல்லவரும் கெட்டவரும் அப்படியே ! யாரும் யாருடைய மத நம்பிக்கைகளை புண்படுத்த வேண்டாம். இந்தியாவில் இந்துக்கள் பெருன்பானமையானவர்கள் ஆனால், இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்பதை அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும், மற்றபடி, குரான் வேதங்களை ஒத்த philosphy மற்றும் கருத்துக்களை கொண்டது தான். இந்துக்கள் குரானையும், இஸ்லாமியர் வேதங்களையும் படித்துப் பார்ப்பது ஒரு புரிந்துணார்வை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். கடவுள் கோயில்களில் வசிப்பதில்லை, மனதில் வசிக்கிறார் உயிராக இருக்கிறார் இதைத் தான் இந்து மதம் சொல்லுகிறது, இதை விளங்கி கொண்டால், நமக்கு கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் அன்பு போதும், அமைதி போதும் என்று நினைப்போம். ஆனால் அந்தளவுக்கு நமக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதையே இங்கு இருக்கும் கருத்துக்களும், கட்டுரைகளும் காட்டுகின்றன, தவறில்லை, அந்தப் பக்குவத்தை வளார்த்துக் கொள்வோம். அதுவரை துவேசப் பேச்சுக்கள் வேண்டாமே.. மூளையாலும் கொஞ்சம் சிந்திப்போமே////
I agree இக்பால் செல்வன் I am also repeat Thanks இக்பால்
V.Ramachandran.
Singapore
May 21st, 2011 at 1:34 pm
எடுதுகொண்டவன் தசரதனை போலவோ பரதனை போலவோ இருந்தால் விட்டுகொடுத்துவிடலாம்!
May 21st, 2011 at 2:08 pm
Nagoor Rumi,
We can forgive most of the mistakes like Yuga calculations, info about Sarayu river etc. as most of today’s people may not know about these, unless they have taken special interest in these.
But mentioning Radhakrishnan as the first president of India is way too much. This itself is enough to show that the author has absolutely no knowledge about history or India.
Ram
May 21st, 2011 at 2:44 pm
சரி, ராமன் கடவுள் இல்லை. அவனை ௧௧௦௦ ஆம் ஆண்டு வரை யாரும் கடவுளாக கருதவில்லை. அப்படியே எடுத்துகொள்வோம்.. அனால் அதற்கு பிறகு சிலர் அப்படி சிலர் கருத ஆரம்பித்து இருக்கிறார்கள். அவருக்கு கோவிலும் கட்டியுள்ளார்கள்… அந்த இடத்தில தான் பாபர் மசூதியை கட்ட வேண்டுமா? வேறு இடமே கிடைக்கவில்லையா?
350 ஆண்டுக்கு மேல் மசூதியை இடித்தது தவறு தான்! பாபர் செய்தது தவறு என்று எந்த இஸ்லாமிய நண்பர்களாவது ஒப்பு கொள்வீர்கள?
- ராம்
July 1st, 2011 at 2:12 pm
//‘ராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்தது. அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால், பாபர் மசூதிக்காக எந்த ஒரு முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.//
BUT AURANGZEP DESTROYED VARANASI KASI VISHVANATH TEMPLE AND BUILD THE MOSQUE.IF HINDUS NOW DESTROYED THE MOSQUE. WHAT THEY ARE DO? TELL ME HASSAN.
October 28th, 2011 at 9:47 pm
இந்த பிரச்னை காலம்காலமாக நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான கோவில்களை இடித்து , கொள்ளையிட்டு, கொலை செய்து “வந்தவர்கள்” நடத்திய வெறியாட்டம் யாருக்கும் மறந்துவிடவில்லை. சீக்கிய மதமே இவர்களால் எப்படி நசுக்கப்பட்டது என்பது ஊரறிந்த உண்மை. கண்முன்னே சாட்சியாய் ஹம்பி நிற்கிறது.இன்னும் எத்தனை சொல்லவேண்டும்? ராமன் கங்கையைப்போல் ஆயிரமாயிரம் வருடங்களாக மக்கள் மனதி ஓடிக்கொண்டிருப்பவன். இன்னும் வைணவர் அல்லாத எம்போன்ற பிறரையும் உங்கள் ராம விரோதம் தான் அவனை நோக்கி ஈர்க்கிறது. அவனுக்காக ஒன்று சேர சொல்கிறது. துவேச கருத்துக்களை தவிர்க்கவும்., இல்லாவிட்டால் அவை நடுநிலையாளர்களையும் நீங்கள் எதிர் அணியில் செர்ப்பதர்க்கே உதவும்.
எப்படி உ.பி மசூதிக்காக சம்பந்தமேயில்லாமல் கோவை இந்துவை வெறுக்கிறீர்கள், அதை மீட்பது உயிர் போகிற பிரச்சினையாக நினைக்கிறீர்களோ, அதுபோல ராமன் பிறந்த இடத்திலே இடிக்கப்பட்ட கோவிலை மீட்க அவனை தெய்வமாக வணங்கும் மக்கள் துடிக்கிறார்கள்.
July 12th, 2012 at 4:32 pm
எப்போதோ பல யுகங்களுக்கு முன் வாழ்ந்த ராமர் பற்றி அவர் சம காலத்தில் வாழாத வால்மீகி எழுதியது எப்படி? தெரிஞ்சுக்க கேக்குறேன்.
March 25th, 2013 at 10:49 pm
How our ancestors knew about the planets without going to space?
Just like that.
They are not only our ancestors they were seers.