முஸ்லிம்களாகிய நாம்…
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது பல்லின மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும் ஒரு நாட்டில்தானே தவிர தனியே முஸ்லீம் நாட்டில் அல்ல. இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களைப்போல மொழியினாலோ வாழும் பிரதேசத்தினாலோ அல்லாமல் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றுகின்ற மதத்தினால் ஒன்றுபட்டவர்கள்.
நமது நாட்டைப் போலவே உலகின் பல்வேறு கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவற்றிலே முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களோடு சேர்ந்து சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்ற அதேவேளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் நாம் பெரும்பான்மை சமூகமாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளிலே வாழும் அரசுகளினாலோ அல்லது அங்குள்ள பெரும்பான்மை மக்களினாலோ தமது உரிமைகள் சிறிதளவேனும் பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனே துடிதுடித்துப்போய் நம்மை ஏதோ உலகமே முற்றாக ஒன்று திரண்டு நசுக்கியழிக்கப்போவதைப் போன்ற பாவனையுடன் ஊடகங்களின் முன்னே நின்று எத்தனை போராட்டங்களை நடாத்துகின்றோம்… பல சந்தர்ப்பங்களிலே அவற்றை மிகைப்படுத்திக்காட்டி உலகத்தின் கவனத்தையெல்லாம் ஈர்த்தெடுக்கின்றோம்.
கொழும்புகளிலும் புது டில்லிகளிலும் லண்டன்களிலும் நியூ யோர்க்களிலும் பாரிஸ்களிலும் நம்மால் பல உரிமைப் போராட்டங்களையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்த முடிகின்றது. அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களிலே அந்தந்த நாட்டுச் சட்டங்களையே பயன்படுத்தி குற்றமிழைத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனையையேனும் பெற்றுக் கொடுக்க முடிகின்றது.
ஆனால் நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது மேற்கூறியவாறு அங்கு ஆட்சியிலிருக்கும் இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடாத்த முடியுமா? குறைந்தபட்சம் அவ்வாறு ஒன்றை நடாத்துவது பற்றி நினைக்கத்தானும் இயலுமா?
இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை நடாத்தினால் அவர்களுக்கு என்ன கதியெற்படும் என்று யோசித்துப் பாருங்கள். ‘மனிதாபிமானமிக்க’ நமது சாம்ராஜ்யங்கள் குறைந்தபட்சம் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?
இது என்ன நியாயம்?
ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன) ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம். இது எந்த ஊர் நியாயம்?
‘தங்க விதி’ என்று ஒரு தமிழ்ப்பதத்தை அறிவீர்களா நீங்கள்?
வேறு ஒன்றுமில்லை…நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.
இதையேதான், ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது’ என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள். இதிலே பெரிதாக என்ன உள்ளது என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை முதல் அரசியல் வரை அணுவுலைகள் முதல் அண்டங்களின் ஆராய்ச்சி வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
சற்று யோசித்துப்பாருங்கள்.. நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் என்னென்ன எதிர்பார்ப்போம்? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?
இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், மதிப்புக்குரிய எதிரிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் பிரயோகித்து வந்தால்தான் அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.
அவ்வாறின்றி, ‘நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது’ என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்?
சரி அப்படி ஒரு எண்ணத்துடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?
இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம். ‘நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது’. இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. ஏன் இப்போதும் கூடமுடிகின்றது.
ஆனால் பிற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப் புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து வெறுப்பை உமிழ்கின்றோம். அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இது நியாயமா?
நண்பர்களே, நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால் அநியாயங்கள் எல்லாம் ஒருபோதும் நியாயங்களாகி விடாது. தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.
இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது நிகழும் அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒடுக்குமுறைகள் யாருக்கு எதிராக எங்கு நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் எதுவிதமான தயவு தாட்சண்யமுமின்றிக் கண்டிக்கப்படவேண்டியதே.
அதேவேளை நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.
நண்பர்களே! மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள் – நான் கூறும் கருத்துகளில் தவறுகள் இருப்பதாக அறிந்தால் அவற்றை மறுக்கும் வகையிலே தர்க்க ரீதியான உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள்!
0
மூதூர் மொகமட் ராபி









July 12th, 2012 at 8:28 am
நடுநிலையான தைரியமான கட்டுரை!
July 12th, 2012 at 8:45 am
மூதூர் முகமட் ராபிட் அவர்களே! அரபிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளென்று தங்களை அறீவித்துக் கொண்டூள்ளன. இந்தியாவை இந்துக்கள் நாடு என்று நம் முன்னோர்கள் அறிவிக்க மறுத்து விட்டார்கள். இதற்கானகாரணம் இரண்டு. பிரிட்டிஷ் காரர்களீன் பிரித்தாளூம் சூட்சிக்கு ஆளாகாமல் இருப்பது ஒன்று. இரண்டாவது மத,மொழி,இன மோதல்களை உருவாக்கி .இந்தியாவை துண்டு துண்டாக சிதறவைக்கும் எகதிபத்தியத்தின் “பின்னடி வேலை”களை தவிர்ப்பது. இந்த ஆபத்துகளிலிருந்து நமது முன்னோர்கள் இளம் இந்தியாவை காப்பாற்றித்தந்தார்கள்.இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்.? உங்கள் வாதம் சரியாக இருந்தாலும், தீவிர இந்து மதவாதிகள் இதனை பயன் படுத்தி இந்தியாவை “இந்து நாடாக” அறிவிக்க தூண்டுவதில்முடியும் ஆபத்தும் உள்ளது—காஸ்யபன்.
July 12th, 2012 at 9:09 am
EXCELLENT ARTICLE!!!
July 12th, 2012 at 10:46 am
சாட்டையால் அடிப்பது போல் கேள்விகள்.
மத நம்பிக்கை அதிகம் உள்ள குழுக்கள் தங்கள் நம்பிக்கையை உயர்வாகவும் மற்றவர் நம்பிக்கையை குறைவாகவும் ,அருவெறுப்பாகவும் பார்ப்பதால் ,போதிக்கப்படுவதால் வரும் நிலை இது
இஸ்லாமியர்கள்/அசைவ உண்ணும் பிற மதத்தவர் தங்கள் இல்ல திருமணங்களில்,கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு சைவ உணவும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்வார்கள்.ஆனால் சைவர்கள் இதே போல செய்வார்களா .தங்கள் வீட்டை கூட வாடகைக்கு தர மாட்டார்களே
அடுத்தவரின் பழக்கங்களை மதிக்கும் பண்பு ,பிறப்பால் இல்லாமல் புரிந்து உணர்தலால் சைவராகவோ,இஸ்லாமியராகவோ,கடவுள் மறுப்பாளர் ஆகவோ ஆகும் நிலை வரும் வரை வெறி பிடித்தவர்களின் ஆட்டம் தான் நடக்கும்.மற்றவர்களை ஓரளவுக்காவது மதிக்கும் நாடுகள் இந்தியா உட்பட அப்படி நடந்து கொள்ள காரணம் அங்குள்ள மத கடவுள் நம்பிக்கையற்ற தலைவர்களும் அவர்களை ஏற்று கொண்ட தொண்டர்களும் தான்.
கடவுள் நம்பிக்கை எதிர்ப்பை என்று இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகள் ஏற்று கொள்கிறதோ அன்று தான் அங்கும் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்
July 12th, 2012 at 11:10 am
கம்யூனிஸ்ட் காஸ்யபா… ரஷ்யாவிலும், சீனத்திலும் வழிபாட்டுத்தலங்களை சூறையாடிய கூட்டத்திலிருந்து வந்துவிட்டு மதச்சார்ப்பின்மையை பத்தி பேசக்கூடாது.
July 12th, 2012 at 12:28 pm
Excellent, atleast you have the guts to say.This articly should presented in Islamic magazines
July 12th, 2012 at 12:32 pm
மூதூர் மொகமட் ராபி, உங்களின் பெண்ணியம் தொடர்பான கட்டுரை எந்த நெருடலும் இன்றி என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்தக் கட்டுரையை அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லிம் நாடான மலேஷியாவில் பத்து மலை முருகன் கோயில் இருக்கிறது. அங்கு தைபூசத்தன்று அரசாங்க விடுமுறை. அகன்ற போக்குவரத்து சாலைகளை மறித்து மக்கள் கரகம், காவடி என்று கொட்டமடிக்கிறார்கள். தைபூசம் முடிந்து 10 நாள்களுக்குப் பிறகு கூட அங்கு போக்குவரத்து ஒழுங்குக்கு வரவில்லை. பெரிய கார்களி வந்து இறங்கி, சாலையிலேயே ஆண்களும் பெண்களும் தண்ணீர் ஊற்றி, உடை மாற்றி… செய்யாத அட்டகாசம் இல்லை.
அங்கும் ஒரு நண்பர் சொன்னார், ‘இதை யாராவது பேப்பரில் எழுதினால், தமிழர்களுக்கு/ இந்துக்களுக்கு அநீதி என்று போராட ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு பயந்துகொண்டே அரசாங்கம் தன் வழக்கமான விதியை இங்கு மாற்றியிருக்கிறது என்றார். சொன்னவரும் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான்.
July 12th, 2012 at 12:55 pm
இந்துத்வா ஆள்கள் பெயரை மாற்றி கட்டுரைகள் எழுதுவதும் பின்னூட்டம் இடுவதும் இணையத்தில் தொடர்ந்து நடந்து வரும் மோசமான விஷயம்தான். அது தமிழ் பேப்பர் வரை வந்துவிட்டது என்பதில்தான் ஆச்சரியம்.
முஸ்லிம்கள் நேற்றோ, இன்றோ வந்தவர்கள் அல்ல. இந்தியாவில் குறிப்பிட்ட சதிவிகிதம் மக்கள் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியா அவர்களுக்கும் தாய்நாடுதான். முஸ்லிம் என்பதாலேயே எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளாமல், எதிர்ப்பு காட்டாமல் சகித்துக்கொள்ள வேண்டுமா? தெருவுக்குத் தெரு நடுச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கோயில்களைக் கட்டி அலப்பறை செய்வது யார்? முஸ்லிம்களா! இந்துவுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது கூப்பாடு போட உரிமை இருப்பது போல முஸ்லிம்களுக்கும் உரிமை வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது?
July 12th, 2012 at 1:21 pm
காஷ்யபன் …..
வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துக்களை இழிவு செய்து மகிழ்கிறீர்கள்……சற்றே உங்கள் முதுகை பார்க்க முயற்சி செய்யுங்கள்…….
ஜென்னி……..
எங்களுக்கு எங்கள் பண்டிகைகளை கொண்டாட மட்டும் தான் தெரியும்….. கிறித்தவரான ஹிட்லரைப்போல் பல லட்சம் மக்களை கொன்று குவிக்கத்தெரியாது….
July 12th, 2012 at 1:30 pm
//மற்றவர்களை ஓரளவுக்காவது மதிக்கும் நாடுகள் இந்தியா உட்பட அப்படி நடந்து கொள்ள காரணம் அங்குள்ள மத கடவுள் நம்பிக்கையற்ற தலைவர்களும் அவர்களை ஏற்று கொண்ட தொண்டர்களும் தான்.//
அப்படீங்களா பூவண்ணன்…..
இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் தோன்றி நூறு வருடம் இருக்குமா? அதுக்கும் முன்னாடி இங்கே இருந்த மத்த மதத்தவர்களை வேட்டையாடி கொன்றுக்கிட்ட இருந்தாங்க?
இப்போதும் கூட நாத்திகர்கள் இந்த தேசத்தில் மிக மிக குறைவு…….சேவல் கூவுவதால் பொழுது விடிவதில்லை…..
சகிப்புத்தன்மை என்பது அந்தந்த மதங்கள் போதிப்பது……இஸ்லாத்தில் சகிப்புத்தன்மை என்பது மிகவும் குறைவு…..அதுதான் விஷயம்?
July 12th, 2012 at 1:41 pm
First the very basic comparisons in this article itself wrong, i.e. it has been compared the Islamic country with the country like India which has a secular as its basic feature. If we want to know the truth, we must compare the differences with the “same conditions”. Only then proper conclusions can be drawn.
Secondly, it has been said if minorities are suppressed they are making huge protest, but no protest are seen in Islamic countries. Brother, since we do not know the happenings around us we can’t comment on any issues. For e.g. recently 20,000 Muslims were killed in Myanmar and as all knows serious of killings are happening in Afghan and Iraq every day. It’s not that minorities are not suppressed rather they are, but the thing is no media highlights that.
The very seriousness of the suppression of Muslims in India itself came to know by all when “The Hindu” published the articles in “The Sunday Stories” dated 8th July 2012 (Sunday) topics “Closing the door on Muslims in our cities” and “Chennai claims stronger secular credentials”( in Chennai city edition). In this it has been said that Muslims were not allowed to stay in rented house. With these issues are present in the world’s largest secularist country (“our” India) it had been said in this articles that minority’s suppression are simply a drama. I strongly disagree with this as the above fact gives the explanation for it.
Thirdly, regarding dry toilets in European countries. In this issue, if government is establishing dry toilets throughout the country it means, it forces its country men to follow it without giving any second choice. We cannot force anybody to use that toilet; the very basic fundamental rights itself they are violated by the government. And if people don’t like to use those toilets and if they have no choice they of course will protest against it.
Fourthly, it has been said that Muslims demanding prayer rooms. Countries like India assures freedom of conscience and free profession, practice and propagation of religion (article 25 of constitution of India). This is a basic fundamental right given by India. So asking for such provisions for prayers is not at all wrong.
Lastly, issues related to building of temples in Islamic country. Brother, the very basic argument given here is of an Islamic country. It has been mention that it’s an Islamic country, then how it will allow to build other religious temples? It’s the law of particular Islamic country and if you act against it you will be put against bars. Again if country like India discriminates people like this then it’s a major issue, which need to be addressed.
People used to think only within the box and they can be easily biased with these kinds of articles which creates communal feelings. May the intension of the author would have been different. But readers should have to ability to think and analyze the issues which most of us don’t do that. To make a study on something, we need to know the common grounds and we need to compare only on common conditions, particularly we are taking some sensitive issues like this. Only if then the proper conclusion can be made, otherwise the result will be of biased on one sided which is likely shown in this article.
July 12th, 2012 at 2:11 pm
ஜென்னி என்ற பெயரைப் பார்த்த உடனே நான் கிறிஸ்த்தவ மதத்தைச் சேர்ந்தவள் என்று கண்டுபிடித்த சான்றோனின் புத்திசாலித்தனம் சிலிர்க்க வைக்கிறது.
ஜென்னி என்பது மதத்தால் வைக்கப்பட்ட பெயர் இல்லை. ஒரு பெரும் தலைவரின் மனைவியின் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள். (உடனே கம்யூனிஸ்ட் என்று வந்துவிடாதீர்கள்!)
இந்து, கிறிஸ்த்தவம், இஸ்லாம், யூதம் என்று எந்த மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பண்டிகையை மட்டும் கொண்டாடும் விதத்தில் அவ்வளவு சாதுவானதா உங்கள் இந்து மதம்? உங்களுக்கே இது ஓவராகத் தெரியவில்லையா? பண்டிகையைக் கொண்டாடினோம், வயிறு முட்ட தின்றோம் என்றிருந்தால் நாட்டில் பிரச்னையே இல்லையே.
சகிப்புத் தன்மை முதலில் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். இதில் கூட, அதில் குறைய என்று சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் நீதிமான் இல்லை!
July 12th, 2012 at 2:26 pm
வழிபாட்டை நிறைவேற்றுதல் / நிலைநிறுத்துதல் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக வளைகுடா நாடுகளை முஸ்லிம் நாடுகள் என்றால் முஸ்லிம்கள் பலரே எற்றுக் கொள்வதில்லை. ஆட்சியாளர்களின் பொருட்டு மக்களை குறை கூற இயலாது. பங்களாதேஸ் மலேசிய போன்ற பெரும்பான்மை இருக்கும் ஜனநாயக நாடுகளில் வழிபாட்டு உரிமை தடை செய்யப்படவில்லை. விநாயகர் சதுர்த்தியின் போது காவல்துறை அனுமதியளித்த பாதைகளை மீறி வரம்பு மீருதலை எப்படி புரிந்து கொள்வது. வழிபாட்டு உரிமை வரம்பு மீறல், சட்டம் ஒழுங்கு பிரச்சனையானால் யார் தவறு. இதே போல் முஸ்லிம்களும் கந்தூரி என்ற பெயரில் வரம்பு மீறுகிறார்கள். ஆனால் உண்மையில் அது இஸ்லாமிய வணக்க வழிபாடு இல்லை, ஓரிறைக் கொள்கைக்கு முற்றிலும் மாறான மூட நம்பிக்கைகளுள் ஒன்று. வழிபாட்டு உரிமையில், பாங்கு சத்தம் வரம்பு மீறல் என்று இன்னுமொரு குற்றச்சாட்டும்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்த ஒலி அளவுக்கு மிகைந்தால் வழக்கு பதிவு செய்யலாமே.
தான் விரும்பவதை தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் எவரும் இறைனம்பிக்கையில் முழுமை பெற இயலாது – நபிமொழி
உலகின் எல்லா மத கொள்கைகளிலும் இந்த கருத்து இருப்பதால் தான் இது தங்க விதி என்றானது.
“உங்களுடைய நம்பிக்கைகள் உங்களது, என் நம்பிக்கைகள் என்னுடையது” என்பதே சகிப்புத்தன்மைக்கு வழி.
July 12th, 2012 at 2:27 pm
Dear article writer,
your asking for the any islamic country who is giving equal rights to minorities, here is the example.. PAKISTAN!!! shocking???
just read out the news articles published by indian and foreign media regarding the minorities (mainly hindus first, shia second ,sikhs third ) of pakistan. They have properation representation in parliment , education, job according to there population (its so called RESERVATION)just read todays newspaper (12.07.12) in pakistan they are going to increase the representation of minotities in the parliment by increasing the reservation quato.
Simpl dont write article by watching the movies where pakistanies are showned as terrioriest.
By writing inspite all this dont think i pakistaniee.
Any secular person can refer good things happining around us.
July 12th, 2012 at 2:31 pm
என் பெயரைப் பார்த்து நீ அது, இது என்று சொல்ல முடியாது!
என் அனுபவம் மட்டும் பகிர்கிறேன்…
என் தோழி இந்து; அவள் கணவர் முஸ்லிம். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். தோழியுடன் அவள் கணவர் கோயிலுக்கு வருவார். பிரசாதம் சாப்பிடுவார். அவளை மட்டுமின்றி, அவள் மதிக்கும் மதத்தையும் அவர் மதிக்கிறார். அன்பு இருக்கும் இடத்தில் எந்த மதத்துக்கும் வேலை இல்லை.
ஒருமுறை நாங்கள் ரயிலில் பயணம் செய்தபோது, எதிரே ஒரு முஸ்லிம் பெரியவர்… மிகப் பெரிய பிரியாணி பொட்டலம். வாசம் பிரமாதம். எல்லோரையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். (ரயிலில் தின்பண்டம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வால் எல்லோரும் வேண்டாம் என்றார்கள்.)
‘நாங்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு சாப்பிடுவதுதான் வழக்கம். அதனால் என் மனைவி நிறைய கொடுத்திருக்கிறாள். கொடுக்காமல் சாப்பிட என்னால் முடியாது என்றார். நானும் என் அப்பாவும் கொஞ்சம் எடுத்து சுவைத்தோம். தனக்குத் தேவையானவற்றை வைத்துக்கொண்டு, மீதியை சுத்தம் செய்ய வருபவரிடம் கொடுத்துவிட்டார்.
எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். மதங்களில் மட்டுமே மனிதம் இல்லை!
July 12th, 2012 at 2:39 pm
“சிருபான்மையினாரக இருப்பதாலேயே அவர்கள் பெருன்பான்மையினருக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும்” பாசிசக் கொள்கை – கட்டுரையின் போக்கும் அவ்வாரே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லார் மனத்திலும் பாசிசம் இருக்கிறது. வடமாநில தொழிலாளர்களை நாம் எப்படி நடத்துகிறோம், அல்லது பார்க்கிறோம். ஏன்?
எளியாரை வதைத்தலுக்கு நியாயம் கற்பித்தலும் எளிதாக இருக்கிறது.
ரோமிலிருக்கும் போது ரோமனாக என்ற சொல்லாடல் கூட அடக்குமுறையின் அல்லது அடங்கிப் போவதின் வெளிப்பாடு தான்.
July 12th, 2012 at 2:54 pm
எனக்கு தொழுவதற்கு ஒரு அடி இடம் போதும், அதை பல முறை என் மாற்று மத நண்பர்கள் அவர்கள் வீடுகளிலேயே தந்திருக்கிறார்கள். புரிந்துணர்வு தான் முக்கியம். ஒரு பிராமணருக்கு அசைவம் சாப்பிடக் கோருவது எப்படியோ அது போல் தான் ஒரு முஸ்லிம்கு பிரசாதம் சாப்பிடக் கொடுப்பதும். நம்பிக்கைகளை பாழ்படுத்தப்படக் கூடாது. பலர் இதனை சகிப்புத்தன்மை இல்லாத செயலாக கருதுகிறார்கள். அதைத் தவிர மாற்றுமத நண்பர்களோடு ஒரு தட்டில் சாப்பிடவும் எமக்கு தயக்கம் ஏதும் ஒருபோதும் இருந்ததில்லை. ஓரிறைக் கொள்கை உள்ளவனான நான் நண்பரின் கடவுளை வணங்கினால் அது போலித்தனமான நடிப்பே தவிர எம்மதமும் சம்மதம் என்றாகாது. வெவ்வேறு கொள்கைகள் எப்படி சமமாகும். நம்மை நாமே ஏமாற்றி, நண்பரையும் ஏமாற்றிக் கொள்வதா? நண்பர் தன் வழிப்பாட்டை முடித்து விட்டு வரும் வரை காத்திருப்பதே அவர் நம்பிக்கைக்கு நான் தரும் மரியாதையாக இருக்கும். நீ இந்துவாக இரு, நான் முஸ்லிமாக இருக்கிறேன். நாமிருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்பது எழுதப்படாத உடன்படிக்கையாக இருக்கிறது! மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, நமது நம்பிக்கைகளை பிறரிடம் திணிக்காமல் இருந்தாலே போதும் எல்லாம் சுமூகமே.
July 12th, 2012 at 2:55 pm
//என் பெயரைப் பார்த்து நீ அது, இது என்று சொல்ல முடியாது! // ஆமாம் அத்திப்பூ. பெரும்பாலான விவாதங்கள் விவாதிப்போரையே அலசுகின்றன அன்றி விவாதப்போருளை அல்ல.
July 12th, 2012 at 3:08 pm
தாடி வைத்தவரெல்லாம் தலிபானாக தெரிந்தாலும், பொட்டு வைத்தவரெல்லாம் இந்துத்வாவாக தெரிந்தாலும் மனநிலை மருத்துவரிடம் செல்வது நல்லது. எங்கோ எவரோ செய்யும் செயலைக் கண்டு இந்து இப்படி, முஸ்லிம் இப்படி, கிறித்துவர் இப்படி, கம்யுனிஸ்ட் இப்படி என்று கற்பிதம் செய்து கொள்ளும் மக்களை என்னவென்பது. ஊடகங்களினால் அதிக பீதிக்குள்ளாகிப் போயிருக்கிறார்கள். மக்களின் செயலால் அவர் சார்ந்த மதத்தை புரிந்து கொள்வதும்.. ஒரு தீயோனின் செயலைக் கொண்டு அவன் சார்ந்த கொள்கையில் உள்ள அத்துணை பேரையும் அவன் போல் கருதுவதும் பொதுப்புத்தி மாறப்போவதில்லை. குறைந்தபட்சம் இங்கே கருத்து தெரிவித்த நாமேனும் அத்தவறை செய்யாதிருப்போம்.
July 12th, 2012 at 3:17 pm
மக்களின் செயலால் அவர் சார்ந்த மதத்தை புரிந்து கொள்வதும்.. ஒரு தீயோனின் செயலைக் கொண்டு அவன் சார்ந்த கொள்கையில் உள்ள அத்துணை பேரையும் அவன் போல் கருதுவதும் பொதுப்புத்தி மாறப்போவதில்லை. குறைந்தபட்சம் இங்கே கருத்து தெரிவித்த நாமேனும் அத்தவறை செய்யாதிருப்போம்.
மீரான் அவர்களே பிரமாதம்!
July 12th, 2012 at 3:49 pm
ஐய்யா சான்றோன்
பக்கத்துல நேபாளம்னு ஒரு நாடு இருக்குது. உலகின் ஒரே இந்து நாடா இருந்துச்சு.மகாவிஷ்ணுவோட அவதாரங்களே ராஜாவா ஆண்ட நாடு அது.
அத பத்தி படிச்சுட்டு இந்துக்கள் மத சார்பின்மை என்று பேசுங்கள்.ராஜாவை பத்தியோ அவர் வழிப்பாடுகளை குறை கூறினால் மரணம் தான்
சாதி வெறியின் உச்சம் நேபாளம்.சிறுபான்மையோ,பெரும்பான்மையோ உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தேசமாக உலகின் ஒரே இந்து தேசம் இருந்தது
July 12th, 2012 at 3:55 pm
ஐயா மீரான்
தூள் கெளப்புறீங்க
நீ இந்துவாக இரு, நான் முஸ்லிமாக இருக்கிறேன். நாமிருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்பது எழுதப்படாத உடன்படிக்கையாக இருக்கிறது
ஆனா உம்ம பிள்ளையும் என் பொண்ணும் ஒன்ன படிக்கும் போதா,வேலை செய்யும் போதா காதலித்து திருமணம் செய்து கொள்ள விருப்பபட்டால்,இஸ்லாமை விட இந்து மதம் பிடித்திருக்கிறது என்று உம்ம மகனோ,மகளோ விருப்பபட்டால் என்ன செய்வீர்கள்.
குழந்தைகளின் விருப்பம் என்று ஒதுங்குவீர்களா
அப்படி ஒதுங்குதல் ஏன் இஸ்லாமியரிடம் வெகு குறைவாக இருக்கிறது என்பதை தான் கட்டுரையாளர் கேட்கிறார்
உன் உறவினர் ரஸ்ஸல் போல WHY I AM NOT A MUSLIM எழுதினால் அவர் விருப்பம் என்று விடுவீர்களா
July 12th, 2012 at 4:02 pm
Dear zubair
பாகிஸ்தானில் குழாயடி சண்டையில் கிருத்துவ பெண் நபியை தவறாக பேசி விட்டார் என்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அதை தவறு என்று கூறிய ஆளுநர் படுகொலை.கொன்றவனுக்கு வக்கீல்கள் பூ தூவி வரவேற்ப்பு.இந்த அழகுல பாக்சிதானில் சிறுபான்மையினர் உரிமைகள் அதிகம் என்று கூச்சப்படமால் எழுத முடியுதே
July 12th, 2012 at 5:48 pm
@ஜென்னி……
மலேசியா மிக சமீபத்தில்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது…….அது வரை அது மத சார்பற்ற நாடுதான்….இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டபின் அங்கு வாழும் சிறுபான்மை ஹிந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டதும் , அதனால் அங்கு இன்ட்ராஃப் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு ஹிந்துக்களின் உரிமைக்காக போராடியதையும் ,அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டதையும் வசதியாக மறைத்து விட்டீர்கள்…..
மலேசியாவில் அரபு நாடுகளைப்போல் எண்ணை வளம் இல்லை… …சுற்றுலாவே பிரதான வருமானம்….. நீண்ட காலமாக நடந்து வரும் தைப்பூச விழாவுக்கு தடை விதித்தால் பிறகு சுற்றுலா பயணிகளின் வருமானம் குறைந்து விடும்…. சோற்றுக்கே சிங்கி அடிக்க வேண்டும்…..அல்லது ஆஃப்கானிஸ்தானைப்போல் கஞ்சா தான் விற்க வேண்டும்….
July 12th, 2012 at 5:57 pm
//உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தேசமாக உலகின் ஒரே இந்து தேசம் இருந்தது//
@பூவண்ணன்……
ஆமாம் சார்…சீனாவின் புண்ணியத்தில் அங்கு கம்யூனிச அரசு பிரசாந்தா தலைமையில் நடந்த போது அங்கு பாலும் தேனும் ஓடியதை பார்த்தோமே……
ஆட்சிமுறைகளையும் மதத்தையும் ஏன் போட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்? எல்லா சர்வாதிகார ஆட்சிகளிலும் உரிமைகள் மீறப்படும்……கலிகூலா, இடி அமீன் என அது மிக நீண்ட பட்டியல்…..
July 12th, 2012 at 6:08 pm
@ ஜென்னி…….
//பண்டிகையைக் கொண்டாடினோம், வயிறு முட்ட தின்றோம் என்றிருந்தால் நாட்டில் பிரச்னையே இல்லையே.//
பண்டிகை என்றாலே வயிறு முட்ட தின்பதுதான் என்ற உங்கள் புரிதல் புல்லரிக்க வைக்கிறது……
//சகிப்புத் தன்மை முதலில் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். இதில் கூட, அதில் குறைய என்று சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் நீதிமான் இல்லை!//
சகிப்புத்தன்மை ஹிந்து மதத்தில் அதிகமா ,இஸ்லாத்தில் அதிகமா என்று தெரிந்துகொள்ள ஒருவர் நீதிமானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…….கண்களை திறந்து வைத்திருந்தால் போதும்…….
July 12th, 2012 at 8:04 pm
Dear Poovanam,
Any country cannot to a good country in every aspects. Some defects will be there, and people of that country will have to come forward and have to rectify it (this is applicable even to India). Since the topic is related to minorities here, Zubair has taken that particular empowerment measures taken by a government for minorities. We need to have the maturity of accepting the facts and welfare measures taken by any country despite how it is having relationship with India. So, what Zubair has quoted here as an example is correct.
July 13th, 2012 at 7:01 am
ஒரு நாள் தாமதமாகப் படித்திருக்கிறேன் இந்தக் கட்டுரையினை..
மூதூர் மொகமட் ராபி என்பவரை பேட்டி கண்டு, வலையில் எழுத விழைகின்றேன்..
அவரே முன் வந்து, விலாசம் சொன்னாலும் சரி,, அல்லது தமிழ் பேப்பர் ஏற்பாடு செய்தாலும் சரி
July 13th, 2012 at 11:21 am
ஐயா சான்றோன்
நீங்க தானே நூறு வருடத்திற்கு முன்னாடி பாலும் தேனும் ஓடியது மத சார்பின்மை,சாதிசார்பின்மை,கடவுள்களை திட்டுவதை ஹிந்து ராஜாக்கள் கை தட்டி வரவேற்றனர்,மதமாற்றங்களை தனி மனித விருப்பம் என்று அனுமதித்த மாதிரி எழுதினீர் .
எல்லா மதகுருக்களும் பழமைவாதிகள் தான்.
அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த அரசும் மாற்று மதத்தை மதிக்காது.
மதகுருக்களை மதிக்காத மக்கள்,தலைவர்கள் உருவாகும் போது அங்கு மத அடிப்படையில் சிறுபான்மையினரை கட்டுப்படுத்துவது குறைகிறது
July 13th, 2012 at 12:11 pm
ஐயா சான்றோன் அவர்களே!பகவத் கீதையையும்,உபநிஷத்துகளையும் கரைத்துகுடித்தவன் இல்லையெனினும் அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பவன்.சின்மயானந்தாவின் பெருரைகளை கேட்டு மகிழ்ந்தவன்.சங்கரரின் கருத்துக்களை மதிப்பவன் நான்.சங்கரமடத்தை மதிக்காதவன் விவேகானந்தரையும்,ராமகிருஷ்ணரயும் விரும்புபவன்.விவேகானந்த கேந்திரத்தயும்,,ராமகிருஷ்ணமடத்தையும் வெறுப்பவன்.இந்துமத தத்துவத்தில் மூன்று போக்குகள் உண்டு.கடவுள் இல்லை,வேதம் உண்டு என்பவர்கள் ஒன்று.கடவுளுண்டு,வேதம் இல்லை என்பவர்கள் இரண்டு.கடவுளும் இல்லை,வேதமும் இல்லை என்பவர்கள்மூன்று.மூன்று schoolof thought லும் முனிபுங்கவர்கள்(அறிவியல்) உண்டு.அவர்களையும் தனதாக்கிக் கொண்டு வளர்க்கப்பட்டது தான் இந்து மதம்.சமஸ்கிருத பல்கலையில் Relevence of sankara in twenteeth century என்ற தலைப்பில் பேச அந்த “புத்தி ராக்ஷசன்” இ.எம்.எஸ் நம்புதிரி பாடு அவர்களைத்தான் அழைத்தார்கள்.சங்கராச்சாரியார்களை அல்ல!ஐயா! குறைந்த பட்சம் இந்திய தத்துவங்களையாவது கற்க முயலுங்கள்!வாழ்த்துக்களுடன்—காஸ்யபன்.
July 13th, 2012 at 8:29 pm
\\தெருவுக்குத் தெரு நடுச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கோயில்களைக் கட்டி அலப்பறை செய்வது யார்? முஸ்லிம்களா! \\
இது அதிபுத்திசாலிதனமான கேள்வி. கோயில்களை சுற்றி ரோடு போட்டு கோயில் சொத்தை திருடி கொண்டு பிறகு அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று மாற்றுவிடுகிறார்கள்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கிண்டி இரயில் நிலையத்தின் முன் புறம் உள்ள சிவன் கோயில்.
அந்த இடமே ஒரு காலத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன்பு அந்த கோயிலுக்கு சொந்தமாக இருந்தது. இப்பொழுது அது தெருவோர கோயிலாக மாறி போகிறது.
பல ஆயிரக்கணக்கான கிராமங்களையும் கோயில்களையும் விழுங்கிதான் இந்த அசுர நகர வளர்ச்சி ஏற்படுகிறது.
இதற்கு ஆயிரகணக்கான உதாரணங்கள் தர முடியும். இப்படி அரைகுறையாக ஏதாவது உளறி கொட்ட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
நிலைமை இப்படி இருக்க…. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்த கதையாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அதற்கு சொந்தமான வளங்களை ஜீரணித்து கடைசியில் அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று சொல்கிறார்கள்.. ஹ்ம்ம்..
July 13th, 2012 at 8:36 pm
//இந்துத்வா ஆள்கள் பெயரை மாற்றி கட்டுரைகள் எழுதுவதும் பின்னூட்டம் இடுவதும் இணையத்தில் தொடர்ந்து நடந்து வரும் மோசமான விஷயம்தான். அது தமிழ் பேப்பர் வரை வந்துவிட்டது என்பதில்தான் ஆச்சரியம்.//
ஹிந்து மத சார்புள்ளவர்கள் இப்படி பெயர் மாற்றி எழுதுகின்றார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டாம் என ஆசைப்படுகின்றேன்..
ஆனால் அது ஒருவேளை உண்மையாக இருக்குமேயாயின், இப்படி பெயர் மாற்றி ஒளிந்து கொண்டு எழுதும் தைரியம் மட்டுமே இருக்கின்றவர்கள் என்றும், அவர்களுக்கே தங்கள் கருத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தான் பெயர் மாற்றி எழுதுகின்றார்கள் என்றும் அர்த்தம் செய்து கொள்ள வேண்டியதாகிறது
ரெப்யூட்டேஷன், இன்டகெரட்டி தொடர்பான இது மாதிரி பெயர் மாற்றி எழுதும் சங்கதிகளை நியூ ஹொரைசான் மீடியாவின் அங்கமான தமிழ் பேப்பர் செய்யாது என நினைக்கிறேன்
இணையத்தில் அதிகம் பேசப்பட்ட ஒருவரைக் குறித்து இன்னுமொரு நண்பர் என்னிடம் மின்னஞ்சலில் சொன்னார்..
அந்தப் பயல் தான் செய்றான்னு தெரியும்.. என் வீட்டு பெண்களைப் பற்றியெல்லாம் அசிங்க அசிங்கமா மெயில் அனுப்புவான்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்
அப்படி பிற வீட்டுப் பெண்களை அசிங்கமாகப் பேச ஒளிந்து வேறு பெயரில் எழுதுகிறவனின் பிறப்பொழுக்கத்திற்கும்.. பிற மதத்தினரை பற்றி அவர்கள் மதத்தினர் போலவே போலியாக பெயர் வைத்துக் கொண்டு எழுதுபவரின் பிறப்பொழுக்கத்திற்கும் வேறுபாடு இல்லை..
ஆனால் பத்ரி போன்றவர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ் பேப்பர் இது மாதிரி செய்யாது என திட்டவட்டமாக ந்மபுகிறேன்
July 13th, 2012 at 8:37 pm
\\தங்கள் இல்ல திருமணங்களில்,கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு சைவ உணவும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்வார்கள்\\
தல என்னமா யோசிக்கிறீங்க… எதாவது தெரிஞ்சுதான் எழுதுறீங்களா.. இல்ல சும்ம எதாவது எழுதனும்னு எழுதுறீங்களான்னு தெரியல…
சைவ உணவை சாப்பிடுபவர்களால் எப்படி அசைவ உணவின் வாசனையை சகித்து கொள்ள முடியும்…
ஏன் சைனாவில் பாம்பு பல்லி பூராண் என எல்லாவற்றையும் வைத்து கொண்டு யாராவது பச்சையாக சாப்பிட்டால் அவர்களுடன் உட்கார்ந்து நீங்கள் கோழி கறி சாப்பிடுவீர்களா என்ன?
மொட்டை தலைக்கும் முழங்காளுக்கு முடிச்சி போடுவது உங்களை போன்ற அதிபுத்திசாலிகளால் மட்டுமே முடியும்.
July 13th, 2012 at 8:43 pm
\\ராஜாவை பத்தியோ அவர் வழிப்பாடுகளை குறை கூறினால் மரணம் தான்
சாதி வெறியின் உச்சம் நேபாளம்.சிறுபான்மையோ,பெரும்பான்மையோ உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தேசமாக உலகின் ஒரே இந்து தேசம் இருந்தது\\
ஹ்ம்ம்.. அங்கு நடப்பது கம்யூனிஸ ஆட்சி என்பது கூட தெரியாமல் இப்படி உளறி கொட்டி கொண்டு இருப்பதை பார்த்தால் சிரிப்பதா இல்லை அழுபதா என்று எனக்கு தெரியவில்லை…
இன்றவும் சுதந்திரமாக கிறித்துவ மிஷினரிகள் தங்கள் மதமாற்ற வியாபாரத்தை சுதந்திரமாக செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அது மட்டுமா பாக்கிஸ்தான் பயங்கராவதிகள் இன்றவும் மிக சுதந்திரமாக செயல்படுவதும் கள்ள் நோட்டு வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதும் அங்கு so called சிறுபான்மையினருக்கு உள்ள அரசியல் வலிமையை காட்டுகிறது,.
நிலைமை இப்படி இருக்க நேபாளத்தை வைத்து இப்படி அரைவேக்காட்டு தனமாக எழுதுவது நகைப்புக்கு உரியது.
July 13th, 2012 at 8:48 pm
\\.சமஸ்கிருத பல்கலையில் Relevence of sankara in twenteeth century என்ற தலைப்பில் பேச அந்த “புத்தி ராக்ஷசன்” இ.எம்.எஸ் நம்புதிரி பாடு அவர்களைத்தான் அழைத்தார்கள்.சங்கராச்சாரியார்களை அல்ல!ஐயா! குறைந்த பட்சம் இந்திய தத்துவங்களையாவது கற்க முயலுங்கள்!வாழ்த்துக்களுடன்—காஸ்யபன்.\\
சங்கராட்சாரியார்கள் மொழியியல் வல்லுனர்கள் கிடையாது. இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அறிவு திறனைகாட்டும் வேலை அவர்களது கிடையாது.
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான ஒரு LOGIC.
July 13th, 2012 at 8:54 pm
@ zubair,
I couldn’t stop laughing after reading your comments.
July 14th, 2012 at 7:17 am
இந்துக்கள் தாக்கப்பட்ட எந்த சமயத்திலும் பங்களாதேஷில் அவர்களால் எந்த விதமான எதிர்ப்பையும் பதிவு செய்ய முடியவில்லை; மாறாக அவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டியதாக இருந்தது-என்று நான் சொல்லவில்லை; தஸ்லிமா நஸ்ரின் தன் புத்தகத்தில் சொல்கிறார்!
http://kgjawarlal.wordpress.com
July 14th, 2012 at 10:27 am
இது புனைப்பெயரில் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. மூதூர் மொகமட் ராபி
ஓர் இலங்கை எழுத்தாளர். விரைவில் அவருடைய ஒரு தொடர் தமிழ்பேப்பரில் வெளியாகும்.
July 14th, 2012 at 11:58 am
thanks to Tamil Paper.. for clarifying things on the author of this write-up
July 14th, 2012 at 12:00 pm
பத்ரி போன்றவர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ் பேப்பர் இது மாதிரி செய்யாது என திட்டவட்டமாக ந்மபுகிறேன்
என்பதாக எழுதினேன்.. அதனை உறுதி செய்து தமிழ்பேப்பர் எடிட்டோரியல் பதிலுரைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி
July 14th, 2012 at 12:00 pm
//\.சமஸ்கிருத பல்கலையில் Relevence of sankara in twenteeth century என்ற தலைப்பில் பேச அந்த “புத்தி ராக்ஷசன்” இ.எம்.எஸ் நம்புதிரி பாடு அவர்களைத்தான் அழைத்தார்கள்.சங்கராச்சாரியார்களை அல்ல!ஐயா! குறைந்த பட்சம் இந்திய தத்துவங்களையாவது கற்க முயலுங்கள்!வாழ்த்துக்களுடன்—காஸ்யபன்.\\
Comrade Kashyapan,
There is a lot similarities between communists and christianity. Those people whom the christianity killed in the name of witch hunting were made as saints after a few hundred years, because of the continuing popularity of the persons who are killed.
Your liking for Vivekananda and Ramakrishna Paramahamsa are no different.
You say great things about EMS Namboothripad and also say you respect Vivekananda.
When Vivekananda memorial is built, every politician every human being in this India gave money. The only person who did not give a single pie is your EMS Namboodripad.
You are feeling proud that your EMS Namboodrifraud is invited to talk on Sankaracharya. What is there to wonder about?
In India only marxists are allowed to misinterpret the great philosophers of India. How can they invite anybody else?
You commies have built a big university named after one of the worst leaders of India- Jawaharlal Nehru University.
You commies also ensure that only people from that University must decide what people should know and should not know.
When there is an interview about chinese problem is dicussed in an Indian television channels, representatives from different countries, are invitied. Do you know whom represented china?
Professors from JNU !
Commies always sell their motherland for the opium given by the politbeuro.
.
You say you respect Vivekananda and Ramakrishna Paramahamsa.
July 14th, 2012 at 12:04 pm
\\ராஜாவை பத்தியோ அவர் வழிப்பாடுகளை குறை கூறினால் மரணம் தான்
சாதி வெறியின் உச்சம் நேபாளம்.சிறுபான்மையோ,பெரும்பான்மையோ உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தேசமாக உலகின் ஒரே இந்து தேசம் இருந்தது\\
Do you know why?
Because, the kingdom is controlled by your Nehruvian-Indian government.
Your Nehruvian govmnt ensured that Nepal does not walk in the right path.
When a king of Nepal started to take his country, your Nehruvian secret service killed the entire royal family.
.
July 14th, 2012 at 12:06 pm
When a king of Nepal started to take his country ‘in the right path’, your Nehruvian secret service killed the entire royal family.
July 14th, 2012 at 12:17 pm
//அப்படி பிற வீட்டுப் பெண்களை அசிங்கமாகப் பேச ஒளிந்து வேறு பெயரில் எழுதுகிறவனின் பிறப்பொழுக்கத்திற்கும்.. பிற மதத்தினரை பற்றி அவர்கள் மதத்தினர் போலவே போலியாக பெயர் வைத்துக் கொண்டு எழுதுபவரின் பிறப்பொழுக்கத்திற்கும் வேறுபாடு இல்லை..//
This type of extreme hatred showered towards any writer who might have wanted security for his life is condemnable.
H.G. Rasool, although a marxist, wrote strongly against the jihadi interpretation of Islam, and being banished from his community and suffering untold miseries. Nobody talked about his courage or provided support for him until now. He is a Tamilian who surviving among us.
Taslima Nazreen wrote about the condition of Hindus in Bangladesh, and she was kicked out from both India and Bangladesh. For saying truth in her own name she also is suffering like that.
However, nobody bothered about her safety or the pain she is undergoing for the truth she talked about. She is also suffering because of being open about her identity.
People who kowtow to Islam have no moral rights to talk about others who criticise jihadis.
Marie Antoinette said “Let them eat cake”. People like Marie Antoinette are there in all the countries at all the time.
.
July 14th, 2012 at 1:01 pm
ஐயா செட்டி
நேபாளத்தில் நூற்றாண்டுகளாக மன்னர் ஆட்சி தான்.கடந்த சில ஆண்டுகளாக தான் ,மக்கள் போராட்டத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு சில உரிமைகள் வர துவங்கி உள்ளன.நேபாளம் இந்து நாடாக இருந்த காலத்தில் இருந்த காலத்தில் எவ்வளவு மத சார்பின்மை இருந்தது,எப்படி பிற மதத்தவரை நடத்தியது என்று பேச்சு.மக்கள் போராடி இந்து நாடு என்று இருந்ததை தூக்கி எரிந்து விட்டார்கள்.பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக ஆனது போல் இந்தியா இந்து நாடாக ஆகி இருந்தால் நேபாளத்தின் நிலையில் தான் இந்தியாவும் இருந்திருக்கும்.இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் துண்டானது போல ஆகி இருக்கும்.மத அடிப்படையில் இயங்கும் எந்த நாடும் சிறுபான்மை,பெரும்பான்மை யாருக்கும் எந்த நன்மையையும் செய்யாது.
July 14th, 2012 at 2:23 pm
புனைப் பெயர் என்கிற எண்ணத்தில் அவசரமாக தப்பும் தவறுமான ரியாக்ஷன்களைக் கொடுத்திருந்த ஒருவருக்கு ‘அப்படி இருந்தாலும் தவறில்லை. எழுத்துலகில் பல்வேறு சங்கடங்களைத் தவிர்க்க புனைப் பெயரில் எழுதுபவர்கள் உண்டு’ என்று சொல்லியிருந்தேன். Balanced thinking இருக்கும் முஸ்லிம் நண்பர்கள் பலர் எனக்குண்டு. கட்டுரையாசிரியர் அப்படிப்பட்ட ஒரு மனிதராக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com
July 14th, 2012 at 6:56 pm
ஐயா இசா நபி
நேபாள ராஜ குடும்பம் கொல்லப்பட்டது ஜூன் 2001 .அப்போ இந்தியாவில் ஆட்சியில் இருந்தது யார் என்பதை மறந்து விட்டீர்களா
இல்லை நேருவின் ஆவி தான் இன்னும் நாட்டை ஆள்கிறதா.
பிரதமர்களாக இருந்த ராணாக்களின் பிடியில் இருந்து நேரு தான் ராஜ குடும்பத்தை காப்பாற்றினார்.
http://nepalwatch.com/news/view/title/Nepal_still_sees_Red
In post-Independence India and post-Rana Nepal, New Delhi played a crucial role in permanently clipping the Ranas’ wings. The first blow to the Ranas was when India played host to King Tribhuvan, who had been forced to flee Kathmandu by them.
It was Jawaharlal Nehru who had eventually sent the King back, hoping democracy would flourish in Nepal.
July 14th, 2012 at 8:36 pm
ஈசா நபி அவர்களே! உங்களையும் நான் மதிக்கிறெண். பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்தபோது விவெகானந்த கேந்திராவுக்கு நிலஆர்ஜிதம் நடந்ததாக நினைவு.அதன் தலைவராக ரானடே இருந்தார். கன்யாகுமரி மாவட்டத்தில் திவிர இந்துமத குழுக்களை உருவாக்கியதில் கேந்திரத்திற்கு பங்கு உண்டு! உங்கள் கம்யூனிச எதிர்ப்பு தனிப்பட்ட எதிப்பாக கூடாது .கிருஸ்துவத்தையும் அதன் தத்துவங்களையும் ஆழ்ந்து படியுங்கள்!வாழ்த்துக்களூடன்—காஸ்யபன்.
July 14th, 2012 at 10:57 pm
\\நேபாளத்தில் நூற்றாண்டுகளாக மன்னர் ஆட்சி தான்.கடந்த சில ஆண்டுகளாக தான் ,மக்கள் போராட்டத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு சில உரிமைகள் வர துவங்கி உள்ளன.\\
ஹிஹி,… நல்ல கற்பனை. விட்டால் திபெத்தில் கூட மக்கள் தலாய்லாமாவை விடுத்து கம்யூனிஸத்தை ஏற்றார்கள் என்று சொல்வீர் போல் உள்ளதே!!
அது சரி இதை எல்லாம் கேட்டு கை தட்ட தான் ஒரு ஏமாந்த சிகப்பு சட்டைகள் இருக்க தானே செய்கின்றன.
எனினும் இது போன்ற காமெடி விசயங்களை தைரியமாக கற்றோர் இடத்திலும் கொஞ்சமும் பயப்படாமல் எழுதுகிறீர்களே!!
அதற்காகவே உங்களை நான் பாராட்டுகிறேன்.
\\இந்தியா இந்து நாடாக ஆகி இருந்தால் நேபாளத்தின் நிலையில் தான் இந்தியாவும் இருந்திருக்கும்\\
உங்கள் புரிதல் முற்றிலும் தவறு. உங்களை பாசையில் சொல்ல போனால் தற்பொழுது உங்களால் மதவாதி என்று அழைக்கப்படும் மோதியின் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்ன என்பதை நான் சொல்ல தேவையில்லை.
July 15th, 2012 at 9:27 am
/”முஸ்லிம்கள் நேற்றோ, இன்றோ வந்தவர்கள் அல்ல. இந்தியாவில் குறிப்பிட்ட சதிவிகிதம் மக்கள் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்”/உண்மை தான் மன்னர்மன்னன் முஸ்லீம்கள் கி.மு.15 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவில் இருந்து வருகிறார்கள்/
July 15th, 2012 at 9:28 am
/”இந்துத்வா ஆள்கள் பெயரை மாற்றி கட்டுரைகள் எழுதுவதும் பின்னூட்டம் இடுவதும் இணையத்தில் தொடர்ந்து நடந்து வரும் மோசமான விஷயம்தான். அது தமிழ் பேப்பர் வரை வந்துவிட்டது என்பதில்தான் ஆச்சரியம்.”/தான் திருடி அசல் ஆளை நம்ப மாட்டாள் என்கிற பழ மொழியும்,துரியோதனனும்,தர்மனும் ஊர் முழுக்க நல்லவர்களை தேடிய மகாபாரதக்கதையும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை.
July 15th, 2012 at 9:33 am
/”சகிப்புத்தன்மை என்பது அந்தந்த மதங்கள் போதிப்பது……இஸ்லாத்தில் சகிப்புத்தன்மை என்பது மிகவும் குறைவு…..அதுதான் விஷயம்?”/
இஸ்லாமில் மட்டுமல்ல,கிறிஸ்த்தவத்திலும்,கம்யூனிஸ்த்திலும் சித்தாந்தத்தின் அடிப்படையே வன்முறையை போதிக்கும் ஒற்றை தனமை வாய்ந்தவை.
July 15th, 2012 at 3:42 pm
ஐயா செட்டி
இப்போது நேபாளத்தில் இருப்பது பல கட்சி ஆட்சிமுறை.யாருக்கும் முழு மஜோரிட்டி இல்லாத ஒரு பாராளுமன்றம்.கூட்டணிகள் சேர்ந்து தான் ஆட்சி நடத்த முடியும்,புதிய அரசியல் சட்டம் எழுத முடியும்.மதேசி என்று அழைக்கபடும் இந்திய வம்சாவழியினர் போராட்டங்கள் என்று பலரின் உரிமைகளும் ஒன்றோடொன்று மோதுவதால் அரசியல் சட்டம் வரைவு பெற முடியாத நிலை நீடிக்கிறது.மகாவிஷ்ணுவின் அவதாரங்களின் ஆட்சியில் பாலும்,தேனும் ஓடியது,மக்கள் எல்லா வளத்தோடும் வாழ்ந்தார்கள் என்று நீங்கள் நம்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.,ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த எல்லாரும் அவதாரங்களுக்கு எதிராக தான் (நம்ம சங்க பரிவாரம் மட்டும் தான் நேபாள முடியாட்சி,மன்னர்,பரம்பரைக்கு ஆதரவு)இருப்பதை கவனியுங்கள்
நேபாளம் இந்து நாடாக இருந்ததா இல்லையா.அப்படி இருந்த போது அங்கே என்ன உரிமைகள் இருந்தன.அதை பார்த்தால் இந்திய இந்து நாடாக ஆகாததால் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தோம் எனபது புரியும்
July 15th, 2012 at 9:58 pm
When any issue arises it should not be taken to international set up then the game changes completely. My another observation is unlike Hindus when there is wrong doing by Muslims leaders ( both political and opinion makers) from the community is not rising there voice in public. Common man only wants only peace and progress.
July 16th, 2012 at 8:05 am
அய்யா சான்றோன்,
மலேசியாவில் எண்ணைவளம் இல்லை என்ற உங்கள் பொது அறிவு(?) புல்லரிக்க வைக்கிறது. கிழக்கு மலேசியாவின் எண்ணை ஏற்றுமதி செய்யபடுகிறர்து என்பதும்,புகழ்பெற்ற இரட்டைகோபுரம் எண்ணெய் பணத்தில்தான் அமைக்கபட்டது என்பதும் அறிவீகளா?
ஆண்டவனின் ஆசியில் அற்புதமான இயற்கைவள நாடு, சுற்றுலா அவர்களின் வருமானம் எனினும் “பத்துமலை” ஆட்டத்தினை வைத்துதான் வாழவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. சிங்கபூருக்கு மின்சாரம் விற்கும் அளவிற்கு அவர்களுக்கு உற்பத்தி திறன் உள்ளது. பிரச்சினை என்று வந்தபொழுது இரத்தம் சிந்தாமல் பிரிவினை கண்டு, இன்று சிங்கபூரின் வளர்ச்சிக்கு பக்கதுணையாக இருப்பவர்கள், இவர்களிடம் படிக்கவேண்டியவை உண்டு.
கஞ்சா விற்கும் நிலை எல்லாம், கடின உழைபாளிகள் இருக்கும் அந்த நாட்டில் வரவாய்பே இல்லை, அங்கு பெய்யும் மழைக்கு குடிநீர் விற்றால் கூட அவர்கள் கோடீஸ்வரர்கள். பிணக்குகள் எல்லா நாட்டிலும் உண்டு ஆனால் அங்கு குறைவேதான்..”இந்துராஃப் என்று சொல்லிகொண்டு இந்தியாவில் மசூதியை இடித்தவர்களிடம் ஆதரவு கேட்டால் என்ன நடக்கும்??”..சட்டம் கடமையை செய்தது
July 16th, 2012 at 1:53 pm
நேபாளத்தில் மட்டமான ஆட்சிமுறைக்கு காரணம் அங்கே மன்னராட்சி இருந்தது என்பதால் தான். அது ஹிந்து நாடாக இருந்ததால் ப்ரச்சினை என்பது இடதுசாரிகள் வைக்கும் தவறான வாதம். இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத காரணிகள் இவை. சம்பந்தமில்லாத இந்த இரண்டு காரணிகளையும் முடிச்சு போடுவது தவறு.
July 17th, 2012 at 7:20 am
1954 ல் தொடங்கி பலவருடங்கள் மும்பையில் பிரபல Nissim Ezekiel தலைமையில் இயங்கி Quest எனும் பெயரில் ஒரு மாகசீன் வந்து கொண்டிருந்தது.. அதன் சிறப்பான கட்டுரைகளைத் தொகுத்து The Best of Quest என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள் .. அதிலே செப்டம்பர் .. அக்டோபர் 1971 ம் வருஷத்திய இதழில் இடம்பெற்ற
Am I a Muslim – Islam and Bangladesh எனும் தலைப்பில் மாஹுபுல் ஹோக் எனும் இஸ்லாமியர் எழுதிய கட்டுரை
யும் இடம் பெற்றுள்ளது
அந்தக் கட்டுரையில் முகமது நபி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்
குரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது..
மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் குரான் மனித குலத்துக்கு நாசம் தரும் எழுத்து என்றே மிகத் துணிச்சலுடன் சொல்லப்பட்டிருக்கிறது
July 17th, 2012 at 11:21 pm
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப்படுத்திக் //கொண்டிருக்கின்றோம்//
Survival .. Survaival . rest are religion and politics ..
thanks for good post /comments
July 18th, 2012 at 3:28 pm
\\மகாவிஷ்ணுவின் அவதாரங்களின் ஆட்சியில் பாலும்,தேனும் ஓடியது,மக்கள் எல்லா வளத்தோடும் வாழ்ந்தார்கள் என்று நீங்கள் நம்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.,\\
நான் மன்னராட்சியில் பாலும் தேனும் ஓடியது என்று எங்கு எழுதியிறுக்கிறேன். அடுத்து
மெக்காலே கல்வி படித்து மேற்கத்திய கல்வியில் ஊறி போய் பாரமரியத்தையும் ஹிந்துவத்தையும் காற்றில் பறக்கவிட்ட மன்னர் வம்சத்தின் ஆட்சிக்கு நான் ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை. அதே சமயத்தில் கிறித்துவத்தில் கள்ள பிள்ளையான கம்யூனிஸத்தின் ஆட்சியை காணும் பொழுது அவர்கள் ஆட்சி எவ்வளவோ தேவல..
அதாவது திமுக ஆட்சியை விட ஆதிமுக பரவாயில்லை என்ற் அளவில் எடுத்து கொள்ளலாம்…
July 18th, 2012 at 4:23 pm
//உம்ம பிள்ளையும் என் பொண்ணும் ஒன்ன படிக்கும் போதா,வேலை செய்யும் போதா காதலித்து திருமணம் செய்து கொள்ள விருப்பபட்டால்,இஸ்லாமை விட இந்து மதம் பிடித்திருக்கிறது என்று உம்ம மகனோ,மகளோ விருப்பபட்டால் என்ன செய்வீர்கள்.
குழந்தைகளின் விருப்பம் என்று ஒதுங்குவீர்களா
அப்படி ஒதுங்குதல் ஏன் இஸ்லாமியரிடம் வெகு குறைவாக இருக்கிறது என்பதை தான் கட்டுரையாளர் கேட்கிறார்//
திரு பூவண்ணன்,
“உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு” என்ற குரான் வசனத்தை சொன்ன நான் மற்றொன்றை சொல்லத் தவறி விட்டேன் மன்னிக்க.
” மார்கத்தில் நிர்பந்தம் இல்லை” நன்மையையும் தீமையும் தெளிவாக பிரித்தரியப்பட்டு விட்டது.
தீவிரவாத முஸ்லிம்கள் மற்றும் தீவிர முஸ்லிம் எதிர்பாளர்கள் இரண்டு பேருமே இஸ்லாத்தின் இந்தக் கொள்கையை புரிந்து கொள்வதில்லை. இஸ்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறை. உங்கள் பாணியில் சொல்வதானால் கட்டுப்பாடான.. அதில் கட்டுக்குள் இருப்பதும் இல்லாததும் நிர்பந்தம் இல்லை. சுவர்க்கம் நரகம் நன்மை தீமை ஒவ்வொன்றும் விளக்கப்பட்ட பின் பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவரவர் கடவுள் நம்பிக்கைக்கு உட்பட்டது. உதாரணத்திற்கு சொல்வதானால் முகமது நபியவர்களின் சித்தப்பா சிலை வணக்கத்திலேயே மரணிக்கிறார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படை இது தான் “மார்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை.” அதை விளங்கிக் கொள்ளாதோர் செய்யும் தவறுக்கு அவர் தான் பொறுப்பாளி! இஸ்லாம் பொறுப்பாகாது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை! நிர்பந்திப்பவனாக இருக்க மாட்டேன் என நம்புகிறேன். சுதந்திரமான சிந்தனைகளை இஸ்லாம் ஒரு போதும் தடை செய்யவில்லை! குரானின் ஒவ்வொரு அத்தியாத்திலும் சிந்திப்பீராக என்ற கட்டளை கட்டாயம் இருக்கும். ஆகவே,அதை தடுக்கும் உரிமை எனக்கில்லை. என் குழந்தைகளும் தம சுயஅறிவுடன் பரிசோதித்து ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். தங்கள் கேள்விக்கு பதிலளித்து விட்டேன் என நம்புகிறேன். – மீரான்
எனது வேண்டுகோள், முஸ்லிம்களின் செயல்களைக் கொண்டு இஸ்லாமை விமர்சனம் செய்யாதிர்கள். ( அதை குரானிலேயே நீங்கள் காண முடியும். இறைனம்பிக்கையற்றவர்களையும், பல கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் இஸ்லாம் பழிப்பது இல்லை. உங்களைப் படைத்த இறைவன் யாரென கேள்விகணக்கு நாளில் அறிவீர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறது. [இறந்த பின் உயிர்பிப்பதை,நியாயத் தீர்ப்பை நீங்கள் நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம்] ஆனால், முஸ்லிம் என்ற பெயரால் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களை செய்யும் நயவஞ்சகர்களைத் தான் மிக அதிகமாக பழிக்கிறது.கடுமையாக எச்சரிக்கிறது. ["ஒரு உயிரை வாழ வைத்தவர் மனித சமுதாயம் முழுதையும் வாழ வைத்தவர். ஒரு உயிரை கொலை செய்தவர் மனித சமுதாயம் முழுதையும் கொலை செய்தவர் போன்றவராவார்- 5:32" "போரில் முதியோர், பெண்கள், குழந்தைகள், நிராயுதபாணிகள், தப்பியோடியோர், சரணடைந்தோரை கொல்லாதிர்கள். வரம்பு மீரியோரை இறைவன் நேசிப்பதில்லை" - இத்தகைய வரம்புகளை மீறும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல. அவர்கள் இறைவனால் கடுமையாக வெறுக்கப்படும் நயவஞ்சகர்கள்.] இவர்களைக் கொண்டா இஸ்லாமை அறிவது?) . முஸ்லிம்களின் வேதபுத்தகமான குரானை வாசியுங்கள். நபியவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு “ரஹீக்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்துள்ளது. நபியவர்கள் கூறியதாகவும், அவர்களைப்பற்றியும் நிறைய போய்புரட்டுக் கதைகள் முஸ்லிம்களிடம் உண்டு. அவை நீங்கிய ஆதாரப்பூர்வ வரலாறு ரஹீக். இவ்வாறு ஓரளவு அறிந்த பின் வைக்கும் விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கும். அல்லது கரையில் இருந்து கடலை வியாக்கியானம் செய்தால் நிச்சயம் நியாயமாகாது. அப்படியே செய்தாலும் அதில் எமக்கு வியப்பேதும் இல்லை. காலம் காலமாக நடப்பது தான். குரான் கூறுவது போல், “உண்மையை வாயால் ஊதி அணைத்து விட முடியாது”.
“அவர்கள் இந்தக் குரானை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?” அழைப்பு அனைவருக்குமானதே!
அன்பு நண்பர்களுக்கு நான் கொண்டுள்ள இறை நம்பிக்கை சிறந்தது என்றோ, அதன் பக்கம் வாருங்கள் என்றோ அழைப்பு விடுக்கவில்லை. அது என் வேலையும் அல்ல. என் நம்பிக்கையை விமர்சிக்கும் முன் கொஞ்சம் அது பற்றி அறிந்து கொண்ட பின் விமர்சிக்க மட்டுமே வேண்டுகிறேன். அறியாமையின் பொருட்டு, தங்கள் உணர்வுகளைக் எவ்வகையிலேனும் காயப்படுத்தி இருந்தாலோ, நம்பிக்கைகளை அவமதித்து இருந்தாலோ மன்னிக்க. அது போன்று நீங்களும் செய்யாதிருக்க.
இறைவன் அறிந்தவன். நம் சிந்தனை விரிவானதாகவும் தெளிவானதாகவும் ஆக்கி வைக்க (இறைநம்பிக்கை உள்ளவன் ஆதலால்) வேண்டிக் கொள்கிறேன்.
July 18th, 2012 at 4:54 pm
// Am I a Muslim – Islam and Bangladesh எனும் தலைப்பில் மாஹுபுல் ஹோக் எனும் இஸ்லாமியர் எழுதிய கட்டுரை
யும் இடம் பெற்றுள்ளது
அந்தக் கட்டுரையில் முகமது நபி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்
குரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.. //
திரு Chandramowleeswaran,
தகவலுக்கு நன்றி. ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற அடிப்படையில் அதன் மீதான விமர்சனங்களுக்கும் செவி கொடுத்து என் நம்பிக்கை சரிதானா என உரசிப்பார்த்துக் கொள்வதும் அவசியம். நம் நம்பிக்கை தவறாக இருப்பின் திருத்திக் கொள்வதற்கும், சரியாக இருப்பின் உறுதியை வலிமையாக்குவதற்கும் உதவும். ஆதலால் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். இணையத்தில் கிடைத்தால் வாசித்துப் பார்க்கிறேன். ஆனால் விமர்சனங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் அல்லாது,புரிதலின் அடிப்படையில் இருக்க கூடாது. அது தான் நல்ல விமர்சனம். உதாரணமாக சல்மான் ருஷ்டி , தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் விமரிசனங்கள் போல. முஸ்லிம்கள் அவற்றை சீண்டுவது கூட இல்லை. குப்பை என தூக்கி வீசி விட்டார்கள். அவை தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்பது தான். முஸ்லிம்களுடன் அவர்களுக்கு உண்டான புரிதலின் அடிப்படையில் அணுகி இருக்கிறார்கள். அவையெல்லாம் இஸ்லாத்தை வெறுப்போருக்கு வெள்ளக்கட்டியாகத் தான் பயன்படும். அதைக் கொண்டு நல்ல மாற்றங்கள் ஏதானும் நடந்துள்ளதா? மக்களின் மனதில் துவேசத்தை அதிகரித்ததை தவிர வேறு ஏதும் இல்லை. முஸ்லிம்கள் தவறான நம்பிக்கையில் இருப்பதாக தான் சொல்ல முடிந்ததே தவிர அதைக்கொண்டு அவர்களை சிந்திக்க தூண்ட முடியவில்லை. மாற்று உதாரனமாக டாக்டர்.வில்லியம் காம்பல் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். குரானிலிருந்து ஆதாரங்களை எடுத்து, அதைக் கொண்டே விமரிசனம் செய்கிறார். முஸ்லிம்கள் அதை செவி கொடுத்துக் கேட்கிறார்கள், சரி பார்க்கிறார்கள். பின் டாக்டர். சாகிர் நாயக் அதற்கு விளக்கம் தருகிறார். இது தான் சரியான விவாத விமரிசனமாக இருக்க கூடும். எதிர்தரப்புக்கு விளக்குவதற்கு வாய்ப்பும் செவிமடுத்தலும் ஆதாரமும் வழங்கப்பட வேண்டும். பின் இரு பக்கமும் சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் விடயத்தை மக்களிடமே விட்டு விட வேண்டும். கட்டற்ற சிந்தனைக்கு வழிவகுக்கும். இவையன்றி வெறுப்பினால் விளையும் விமர்சனங்கள் வெறுப்பைத்தான் விளைவிக்கும்.
பெரியார் கூறியது போல “மதம் என்பது அபின்” அந்த போதையையும் தாண்டி சிந்திக்க வைப்பதே சிறந்த விமர்சனமாக இருக்கும்.
July 19th, 2012 at 8:33 am
மீரான்,
க்வெஸ்ட் பத்திரிக்கை இப்போது வருவதில்லை.. நான் குறிப்பிட்ட அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பில் அந்தக் கட்டுரை இருக்கிறது..
அந்த தொகுப்பு ஃப்ளிப் கார்ட் தளத்தில் ஆன் லைன் ஆர்டர் செய்யக் கிடைக்கும்
July 22nd, 2012 at 12:08 am
r. Meeran,
நீங்கள் கூறியிருப்பது சரியே. எதையும் தர்க்க ரீதியான ஆதாரங்களின் அடிப்படையிலேதான் ஆராய்ந்து பாரத்து அறிவிக்க வேண்டும். தனிப்பட்ட அனுபவங்களின் புரிதலின் அடிப்படையிலே தீர்மானிக்கவும் அவற்றை பிறரிலே திணிக்கவும் முயற்சிக்கக்கூடாது.
அதேவேளை வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையிலே ஏற்றுக்கொண்டிருக்கும் விடயத்தை நிறுவுவதற்கும் சரிபார்ப்பதற்கும் அந்த நம்பிக்கைகளின் பெறுதிகளையே பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்பதுதான் எனது கேள்வி.
உதாரணமாக பைபிள் என்பது கடவுளின் வாசகம் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும்படி கேட்கப்பட்டால், உடனே பைபிளில் இத்தனையாம் அத்தியாயத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது என்று ஆரம்பிப்பது சரியா?
ஒரு குழந்தை இன்னாருடையதுதான் என்பதை நாம் வாழும் உறவுச்சூழலிலே ஒன்றும் DNA(மரபியல்கூற்றுப்) பரிசோதனை செய்துபார்த்துத்தான் ஏற்றுக்கொண்டிருப்பதில்லை. ஆனால், ஒரு சர்ச்சை சட்டப்பிரச்சினை என்று வரும்போது பெற்ற தாயே கூட குழந்தை என்னுடையதுதான் என்று அடித்துக் கூறினாலும் DNA மரபியல்கூற்றுப் பரிசோதனையின் முடிவுக்குத்தானே விடப்படும்?
அதுபோலத்தான் ஆதாரங்கள் வெளியிலிருந்துதான் பெறப்படவேண்டியவையே தவிர, வேலிக்கு ஓணாண்கள் சாட்சியாக முடியாது.
இதுபற்றி உங்கள் கருத்தை இடுங்கள் மீரான்.
July 29th, 2012 at 9:52 pm
திரு jessly ,
தன் நம்பிக்கைகளை நிறுவ கிறித்துவர்கள் அதிசயங்களைக் காட்டுகிறார்கள். முஸ்லிம்கள் அறிவியலை எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக ஹாருன் யஹ்யா, ஜாகிர் நாயக் போன்றோர். அதிசயங்களை நம்புவதும், எடுகோள்களை ஆராய்வதும் அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது. என்ன சொல்ல! இவை கடவுளின் இருப்பை நிறுவும் வழிகளாகத் தான் பயன்படுத்துகிறார்கள். நான் சொல்ல வந்தது, கடவுளின் இருப்பை பற்றியது அல்ல. மக்களின் செயல்களுக்கும், அவர்களின் கொள்கை ஏடுகளுக்குமான தூரம் பற்றியதே. முஸ்லிம்களிடம் ஏட்டளவில் இருப்பது நியாயமானதாக இருக்கிறது, செயலளவில் அநீதியாக இருக்கிறது. அதைத் தான் கட்டுரை ஆசிரியரும் தொட்டுச் செல்கிறார். ஒரு முஸ்லிமாக, பகுதியளவில் அதை ஒப்புக் கொள்கிறேன். கொள்கை/செயல் தூரம் மிக அதிகம். அதை எல்லா முஸ்லீமும் ஒத்துக் கொள்வான்.
- முற்றும்.
August 14th, 2012 at 12:26 pm
முஸ்லிம்களின் மீதுள்ள இன்னதென்றே சொல்லமுடியாத அலாதியான வெறுப்பு,அவர்கள் அவர்கள் சார்ந்த மார்கத்தில் (இஸ்லாம் )வைத்திருக்கும் பற்று, முஸ்லிம்களின் சுத்தம். அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்தியகிழக்கு நாடுகளை செல்வவளம் இவைழலின் மீது காரணமில்லாத அசூசை கொண்டு ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி எழுதிய அசட்டுத்தனமான கட்டுரை.
முஸ்லிம்களுக்கு எவரும் அறிவுரை சொல்லக்கூடாது என்பதல்ல. தாராளமாக சொல்லலாம். ஆனால் அதற்க்கான தகுதி சொல்பவர்களுக்கு இருக்கிறதா ?என்பதை முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்துக்களும்,முஸ்லிம்களும் பெருபான்மை சிங்கள அரசால் ஒடுக்கப்படும் ஒரு தேசத்தில் இருந்து கொண்டுதான் நண்பர் இதை எழுதுகிறார்.
சில முஸ்லிம் நாடுகளில் உள்ள அணுகுமுறையை எல்லா முஸ்லிம்களுக்குமான கேள்வியாக இங்கு முன்வைக்கிறார். எனக்கு தெரிந்து சவூதி அரேபியாவில் மட்டும்தான் நண்பர் சொன்ன நிலை நிலவுகிறது. வேறு எந்த முஸ்லிம் நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை. துபாயில் கோவில் சர்ச் எல்லாமும் உண்டு.
சமீபத்தில் புரட்சி நடந்த எகிப்து ஒரு முஸ்லிம் தேசம்தான். அங்கு முஸ்லிம்களுக்கு சமமாக “காப்டிக் “கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அங்குள்ள துணை பிரதமரே ஒரு கிறிஸ்தவர்தான். இது போன்றே துனீசியா, மொரோக்கோ ,சுடான் ,நைஜீரியா எல்லா நாடுகளிலும் உண்டு.
நண்பரே….ஒரு நாட்டின் அரசியல் சட்டப்படி பிற மதத்தவர்களுக்கு வழிபாடும் உரிமையை அவர்கள் மறுப்பதையாவது என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அது தவறுதான் எனினும் அங்குள்ள சூழல் வேறு பல நிர்பந்தங்கள் இவைழலின் உள்ளுடாக இவைகளை ஒருவன் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு ஒரு சாரார் வழிபாடும் இடத்தை உங்களால் கடப்பாரை கொண்டு தகர்க்க முடிகிறதே…அதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
November 19th, 2012 at 8:03 pm
ஆம்,ஒன்றை மறந்துவிட்டீர்கள்.இந்தியாவில் நடப்பதுபோல் “அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத(தேச விரோதி)” முத்திரைகுத்தி அல்லது போலி என்கௌன்டரில் (முஸ்லிம் என்ற காரணத்தினால்) கொள்ளப்படுவதில்லை.ஈரான்,சிரியா போன்ற நாடுகளில் யூத,கிறிஸ்தவ மக்களுக்கு முழு வழிபாடு சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளதை மறந்துவிட்டீர்கள்.உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை மலேசியாவில் இருப்பதை மறந்துவிட்டீர்கள்.பழங்குடி இனத்தை விட கீழ்மட்டத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் இருப்பதைவிட வேறு எங்கும் இல்லை.
April 20th, 2013 at 2:43 pm
Aboo Hindhஆம்,ஒன்றை மறந்துவிட்டீர்கள்.இந்தியாவில் நடப்பதுபோல் “அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத(தேச விரோதி)” முத்திரைகுத்தி அல்லது போலி என்கௌன்டரில் (முஸ்லிம் என்ற காரணத்தினால்) ொள்ளப்படுவதில்லை…….. அப்படியானால் கோவையிலும் பம்பாயிலும் குண்டுவைத்து நாசவேலைகள் செய்தது ……. ????????
நவகாளி என்றொரு இடம் உண்டு. இந்திய வரலற்றிலஅதற்கு ஒரு இடம் உண்டு. பாக்கிஸ்தான் தரவில்லைனெல் நடப்பதைப்பார் என சவால் விட்டு இந்துக்குடும்பங்களை இந்துப்பெண்களை முஸ்லீம் லீக்கர்கள் நாசம் செய்ததன் தொடர்ச்சியாக கிழக்கு பாக்கிஸ்தான் பிறந்தது – பின் முஜிபுர் தலைமையில் பங்களாதேஷ் பிறந்தது. பிறந்ததன் வரலாறை கொஞ்சம் நேயர்கள் அறிய எழுதுவீர்களா ஐயா ! இன்றும் அந்த நாட்டில் இந்துக்களுக்கு நிம்மதியான வாழ்வு உண்டு என உங்களால் எழுத முடியுமா ? படுபாதகம் செய்தவனுக்கு துதூக்கு தண்டனை நீதிமன்றம் விதிக்கின்றது. ஆனால் 82 இந்துக்கள் கொலை செய்யப்படுகீன்றார்கள். 1000 க்கு மேல் இந்து வீடுகள் தீக்கிறையானது. இந்துக்களின் பொருட்கள் சேதம் …..அளவு தெரியாது. கயவனை தூக்கில்போடக்கூடாது என்று தமிழநாட்டில் முஸ்லீம்கள் அறைகூவல் விடுகின்றனார். கொடுமை கொடுமை