தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்
நேற்று, 17.01.2012 அன்று ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. “அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்“ என்கிறது அந்தச் செய்தி. ஃபேஸ்புக்கில் இந்த செய்தி நண்பர்களால் பகிரப்பட்டிருப்பதை கண்டபோது வழக்கமான அவதூறு என்று கடந்துபோக முடியவில்லை.
இந்திய அரசின் சார்பில் இந்தப் போராட்டத்தை கவனித்துவரும் அமைச்சர் நாராயணசாமி இந்த நாளிதழுக்கு (மட்டும்?) அளித்த பேட்டியில் போராட்ட ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான புஷ்பராயன் என்பவர் ஈடுபட்டுள்ள ஒரு சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் இன்னொரு சமூகத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இதுவரை 54ஆயிரம் கோடி பெற்றிருக்கிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “தொண்டு நிறுவனத்துக்கு வந்த பணத்தில்தான் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்குச் செலவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்“ என்று அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் தனது சந்தேகத்தைத் தெரிவித்துள்ளார். இவர் விசாரணை மேற்கொண்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதி அல்ல என்பதை குறிப்பிடவேண்டும்.
இதுபோன்ற சந்தேகம் முதலில் போராட்டக்குழுவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் மீது சுமத்தப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் ஒரு அதிகாரபூர்வமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை, வழக்குகளும் பதியப்படவில்லை. இப்போது புதிய புனைவுகளுடன் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஹாலிவுட் த்ரில்லர் அளவுக்கு இதில் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் ‘இப்படி ஒரு மக்கள் போராட்டம் நிகழ்வதற்கு கோடிக்கணக்கில் பணம் வேண்டும்‘ என்கிற தவறானதொரு நம்பிக்கையைப் பொதுமக்கள் மனதில் உருவாக்க அரசு தொடர்ந்து செய்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை சற்று நுண்ணுணர்வு கொண்டவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
கூடங்குளம் போராட்டம் எப்படி நடைபெறுகிறது, அது எப்படி இத்தனை நாட்கள் தொடர்கிறது என்பனவற்றின் பின்னால் அரசையும் பலம்பொருந்திய அமைப்புகளையும் எதிர்த்து தங்கள் உரிமைக்காகப் போராடும் குழுக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
இடிந்தகரையை மையமாகக் கொண்ட போராட்டம் நடைபெறுவது ஊரின் கத்தோலிக்க தேவாலயத்தின் முன் இருக்கும் ஒரு சிறிய திடலில். இது இடிந்தகரை மக்களுக்குச் சொந்தமான இடம். யாருக்கும் வாடகை தரத் தேவையில்லை. இங்கே முதல்கட்டமாக நடந்த நீண்ட உண்ணாநிலைப் போராட்டத்தின்போது பந்தல் அமைக்கப்பட்டது. இது இந்தக் குழு செய்த முக்கியச் செலவுகளில் ஒன்று. அதை அவர்கள் வாடகைக்கு வாங்கினால் அதிக செலவாகும் என்பதால் விலைக்கு வாங்கிவிட்டார்கள். இதற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் செலவாகியிருக்கலாம். அடுத்தது அங்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கான செலவு. இதையும் அவர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். இதற்கும் லட்சம் ரூபாய்வரை செலவாகியிருக்கலாம். தினமும் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அங்கே குடிநீர் வைக்கப்படுகிறது. இதற்கான செலவு சாதாரண நாள்களில் நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.
இடிந்தகரை போராட்டம் சாதாரணமான நாட்களில், வாரநாட்களில் இடிந்தகரை கோவிலின் முன்பாக நடைபெறுகிறது. இதில் அதிகபட்சம் அறுபது முதல் எழுபது பெண்களும் குறைந்த அளவு ஆண்களும் கலந்துகொள்கிறார்கள். தினமும் வெளியூர்களிலிருந்து ஆட்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். முக்கியமான குழுக்களோ ஆளுமைகளோ வரும்பட்சத்தில் ஊரில் அரிவிப்பு செய்து ஊரைக் கூட்டுகிறார்கள். ஒரு ஊரின் நடுவே போராட்டத் திடல் அமைந்திருப்பது இந்த வசதியை அளிக்கிறது. தினம் கடலுக்குப் போனால்தான் வருமானம் என்கிற நிலையிலுல்ள மீனவர்கள், கடலுக்குப் போய் வந்துவிட்டு ஓய்வெடுப்பதும் வலைகளை அடுத்த நாளுக்காக தயார் செய்வதும் அவசியமாகையால் இந்த ஏற்பாடு. ஆனால் எப்போதும் அங்கே உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக ஏதோ ஒரு வெளியூரிலிருந்து வந்த சிறு கூட்டம்,குறைந்தது ஐந்து ஆறுபேர் இருந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த செலவில் தன்னார்வத்தில் வந்து சேர்பவர்கள்.
இதைத்தவிர அனுமதி கிடைக்கும் நாள்களில் பேரணிகளும் மாநாடும் கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இவற்றுக்கு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரை அல்லாத இந்து மக்கள் வாழும் கிராமங்களிலிருந்தும், கடற்கரை கிராமங்களிலிருந்தும் ஆள்கள் தங்கள் சொந்தச் செலவில் வாகனங்களில் வந்து சேர்கிறார்கள்.
அண்மையில் கூடங்குளம் பகுதியிலிருந்து ஒரு குழு கோயம்புத்தூர் சென்று அணு உலைக்கு ஆதரவளிக்கும் சில தொழிலதிபர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதற்கு ஒரு வண்டிக்கு ரூ. 11,000 வீதம் செலவாகியிருக்கிறது. அது அந்தந்த ஊர்மக்களின் செலவு.
இந்தப் பகுதி மக்கள், குறிப்பாக மீனவர்கள் இன்னும் குடிசைகளில் வாழும் பரம ஏழைகள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அது வருந்தத்தக்க அறியாமை. இன்று குடும்பத்துக்கு ஒரு டூ வீலராவது உள்ளது. இந்தப் போராட்டத்துக்கென தனியாக வீடுகளில் வரி பிரிக்கப்படுகிறது. கடற்கரை கிராமங்களில் உள்ளூர் வரி என்பது பழங்காலந்தொட்டே இருந்து வரும் வழக்கம். ‘கோயில் வரி‘ என்பது உள்ளூர் கத்தோலிக்க கோவிலுக்கு வழங்கப்படும் வரி. இந்த நிதியை பங்கு நிர்வாகம் எனப்படும் உள்ளூர் மக்கள் அமைப்பு நிர்வகிக்கிறது. ஊருக்குத் தேவையான பல நலத்திட்டங்களும் கோவில் பணிகளும் திருவிழாக்களும் பங்கு பாதிரியாருக்கு சாப்பாட்டுக்கு ஆகும் சிறிய செலவும் இந்த கோயில் வரியிலிருந்து செலவிடப்படுகிறது. நான் சிறுவனாயிருக்கும்போது முட்டத்தில் ‘மகிமை‘ பிரிப்பது என்கிற முறை இருந்தது. ஊருக்குள் வந்து மீன் வாங்கிச்செல்லும் வியாபாரிகளிடம் ஒரு சிறிய வரி வசூலிக்கப்பட்டது. (சைக்கிளுக்கு 25 காசுகள், டெம்போவுக்கு 2 ரூபாய் என நினைக்கிறேன்). இதை ஏலம் பிடித்து காசை செலுத்திவிட்டு பின்பு ஏலம் பிடித்தவர் வசூலித்துக்கொள்ளவேண்டும். இது வெளிநாடுகளில் பழக்கத்திலிருக்கும் Toll முறையேயாகும்.
ஆக ஊரின் நலனுக்கு மக்கள் பணம் அளிப்பது ஒரு முறையான அமைப்பாக இவ்விடங்களில் செயல்பட்டு வருகிற ஒன்றாகும். 1550களில் இப்பகுதியில் கத்தோலிக்கத்தை வலுப்படுத்திய புனித பிரான்சிஸ் சேவியர் உருவாக்கிய ஒரு முக்கிய பதவி ‘கணக்குப் பிள்ளை‘ என்பதாகும். அதன் நீட்சியாகவே தற்போதைய உள்ளூர் வரி முறைகள் உள்ளன. பல காலங்களாக அரசை நம்பாமல், அரசின் நிழல்கூடப் படாமல் தன் முனைப்பிலேயே வாழ்ந்துவந்தவர்கள் இந்த மீனவ மக்களும், இந்தப் பகுதி பிற இனத்தவர்களும்.
[அண்மை காலங்களாக உங்கள் ஊர்களைப் போலவே இங்கேயும் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் விஜயங்கள் நிகழ்ந்துகொன்டிருக்கின்றன. சுனாமி வரவில்லையென்றால் இந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதேகூட இந்த அரசுக்குத் தெரிந்திருக்காது என்றே கருதலாம்].
இப்போது கூடங்குளம் போராட்ட நிதிக்கென மக்களிடமிருந்து இத்தகைய பங்களிப்பு பெறப்படுகிறது. அணு உலைக்கு அடுத்து மேற்கே இருக்கும் பெருமணல் என்னும் ஊரில் வீட்டுக்கு ரூ. 700 வரி கேட்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் பிரிக்கப்பட்டுள்ளது. இடிந்தகரைக்குக் கிழக்கேயுள்ள கூத்தங்குழியில் முதலில் வீட்டுக்கு ரூ. 200 பிரிக்கப்பட்டது இப்போது மீண்டும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இடிந்தகரையில் ஏற்கெனவே ஐந்து லட்சத்துக்கும் மேல் பிரிந்துள்ளது. இப்போது அங்கே வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் வருமானத்தில் 10% போராட்ட நிதிக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு கணிசமான தொகையாகும்.
இது தவிர வெளியிடங்களிடமிருந்து பல தரப்புகளிடமிருந்தும் நன்கொடைகள் வந்துகொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் நடந்த தொடர் உண்ணாவிரதத்தின்போதே சில லட்சங்கள் நன்கொடையாக பிரிந்துள்ளன. சில தனிநபர்கள் மட்டுமே ஒரு லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ளனர். இவர்கள் போகும் ஊர்களில் ஆகும் செலவை அந்தந்த ஊர் மக்களே கவனித்துக்கொள்கிறார்கள். உதாரணமாக ராதாபுரத்தில் நடந்த கூட்டமொன்றுக்கு தேநீருக்கான செலவு ரூ.5000 அளித்த தனிநபரை எனக்கு நேரடியாகத் தெரியும். அன்றைய செலவு அவ்வளவுதான். இதுவரை இப்போராட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் செலவு அதிகபட்சம் சில லட்சங்களைத் தாண்டியிருக்க வாய்ப்பேயில்லை. ஏனென்றால் இதுபோல ரூ.5000 செலவாகும் நாள்கள் மிக மிகக் குறைவு.
“ஏழை“ மீனவர்களால் எப்படி இதைச் செய்ய முடியும்? என பலர் நினைக்கிறார்கள். முன்பைப் போல கடற்கரை கிராமங்களில் ஏழைமை இப்போது இல்லை. இன்னும் சில குடும்பங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன என்றாலும் பொதுவாக ஏழைமை நிலை குறைந்தேயுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்தல், கப்பல் வேலைகளுக்குச் செல்லுதல் போன்ற உயர்வருமானமீட்டும் தொழில்களில் பலர் ஈடுபடுகின்றனர். முன்பைவிட தற்போது கல்விக்கான முக்கியத்துவம் இன்னும் சிறப்பாக உணரப்பட்டு, வீட்டுக்கொரு பட்டதாரி உருவாகிவருகிறார். முன்பைப்போலல்லாமல் பணத்தை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் அவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள். இதில் படித்த மீனவ இனப் பெண்களின் பங்கு வியக்கத்தக்க வகையில் உள்ளது.
உள்ளூர் மீன்பிடித்தொழிலும் போதிய பொருள் தருவதாகவே உள்ளது. நான் கிறிஸ்துமசுக்கு சென்றிருந்தபோது என் உறவினர்களுடன் இதுகுறித்துக் கேட்கையில் அவர்கள் சொன்ன முக்கிய கருத்து இது. ‘இந்தப் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து மீன்பிடி சீராக இருந்துவருகிறது. இல்லையென்றால் இந்தப் போராட்டம் தொடக்கத்திலேயே துவண்டிருக்கும்.’
தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளனர்). எனவே தினமலரில் ‘மட்டும்‘ வரும் இத்தகைய செய்திகளை கவனத்துடன் வாசித்து அவற்றின் வரிகளுக்கிடையேயும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவது அவசியம்.
சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் எந்த நிறுவனத்தின் ஆதரவும் இந்த எளிய மக்களுக்குத் தேவையில்லை. அவர்கள் போராடுவதெல்லாம் தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் வாழ்வுரிமையையும் காப்பாற்றுவதற்கே. சட்டம் எந்தெந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதை அவர்கள் எதிர்க்கப்போவதுமில்லை. அமைச்சர் இப்படி அறிக்கைகளை விட்டு சந்தேகங்களை கிளப்பிக்கொண்டிருப்பதற்குப் பதில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற பத்திரிகைகளுக்கும் பிற ஊடகங்களுக்கும் செய்யப்படும் செலவுகளுக்குப் பதில் (அப்படி ஒன்று இருக்குமானால்) இந்திய மின்சக்தி தொடர்பான கருத்தரங்குகளுக்குச் செலவிடலாம்.
மிக இயல்பாகவே இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் அதிகார பலம் பொருந்திய அரசின் பக்கம் நிற்க தலைப்படுகிறோம். ‘நாமே அரசு‘ என்பததைப் போன்றதொரு எண்ணம் நமக்குள்ளது. அதுவே, நம் அரசு தந்திரமாக வெளியிடும் இத்தகைய செய்திகளை நம்பவும் வைக்கிறது. உண்மையில் நாம் பொதுமக்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முயலவேண்டும். இத்தகைய செய்திகளைப் பகிர்வதன் மூலம் ஒரு வீணான சந்தேகம் பரவ நாம் வழிவகுக்கிறோம். அதைவிட மேலாக இவற்றை அப்படியே நம்புவதன் மூலம் இதுபோன்ற சூழ்ச்சிகள் நிலைக்கவும், இன்னொரு தருணத்தில் நம்மையே குறிவத்து தாக்கவும் வழிவகுக்கிறோம். பல வேளைகளில் நமக்கு போதுமான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மையே. அப்படி இருக்குமேயானால் நாம் அமைதி காத்திருப்பதே நன்மை பயக்கும் என்பேன்.
0
சிறில் அலெக்ஸ்








January 18th, 2012 at 1:30 pm
கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்… வெளிநாட்டிலிருந்து ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இந்த 2000 மெகாவாட் மின் உற்பத்தியால் இந்தியா வல்லரசாகி விடும் என்று பயப்படுகிறார்களா என்ன? அல்லது இதை இழுத்து மூடினால் இந்திய-ரஷ்ய உறவு பாதிக்கப்படும் என்று கணக்குப் போடுகிறார்களா..? இப்போது மட்டும் என்ன வாழுகிறது.. என்று அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்கத் தொடங்கினோமோ அன்றே கெட்டுவிட்டது ரஷ்ய உறவு.
இந்த பத்தாயிரம் கோடி நஷ்டம் என்ன செய்து விடும்..? ஜனவரி 1 அன்று மட்டும் டாஸ்மாக் வருமானம் 400 கோடி.
என்ன முகாந்திரம்..? ஒருவேளை அவர்கள் பணம் கொடுத்திருந்தாலும் அதை இப்படி எடுத்துக்கொள்ளலாம்… நம் இந்திய மக்களின் மீது நமக்கு இல்லாத அக்கறை அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று.
January 18th, 2012 at 2:28 pm
Then from where you got money to mobilize tens of hundreds in Tempo Traveller, Sumo etc. on a daily basis? These selfish jokers are unnecessarily scaring poor public and trying to fish in troubled waters.. Iyervaal
January 18th, 2012 at 2:43 pm
தல முன்னல்லாம் போய்ட்டு வரதுக்கு கன்வேயன்ஸ் மட்டும்தான் வாங்கனன்னு நெனச்சேன் ஆனா இப்பல்லாம் ஷேரே வாங்கரபோலிருக்கு ~சூப்பர் தல கன்வேயன்ஸ் மடடும் போதும் நான் ரெடி
January 18th, 2012 at 2:53 pm
ஈழம் போன்ற பிரச்சினைகளிலும் தினமலம் இதை போல் செய்துள்ளது.
நான் சில் தினங்களாக தினமலத்தின் இந்த கேடுகெட்ட செயலை கவனித்து கொண்டு தான் இருக்கிறது.பத்திரிக்கை தர்மம் என்பது நடுநிலையோடு செய்திகாளை வெளியிடுவது.. தினமலத்திற்கு இது பொருந்தாது. ஏனேனில் இது ஒரு மஞ்சள் பத்திரிக்கை…
தினமலம் வெப்சைட்டில் அணூலைக்கு எதிரான கருத்துக்ளை பின்னூட்டம் இட்டால் அவை பிரசுரம் ஆவதில்லை. நான் பல முறை முயற்சி செய்துள்ளேன். அப்ப எதர்கு அந்த பின்னூட்ட வசதி…
துரொகி என்று தெரிந்தும் அவனை நம்மோடு வைத்திருக்கும் தமிழன் உண்மையில் ஒரு முட்டாள் தான்…
January 18th, 2012 at 2:58 pm
வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று புழம்புகிறார்கள்..அது எந்த நாடு???
அமரிக்காவா..
அமெரிக்கா வீணாக மக்களை தூண்டி நேரத்தை விரயம் செய்யவேண்டியதில்லை. நம்ம அரசியல்வாதிகளௌக்கு நாலு எலும்பு துண்டுகளை தூக்கி போட்டால் அவைகள் அமெரிக்காவிற்கு ஆதரவாக குரைக்க தொடங்கிவிடும் என்று நம்ம ஊரு சொரி நாய்க்கு கூட தெரியும்..
January 18th, 2012 at 5:08 pm
This is a very wonderful article which de mystifies the venom spread by Dinamalar in the middle class minds to the people of Tamilnadu
January 18th, 2012 at 9:25 pm
ஈரானோடு எரிவாயு குழாய் ஒப்பந்தம் போடுவதில் மும்முரமாக இருந்த மணி சங்கர் ஐயரிடமிருந்து முதுகெலும்பிலா சிங் கையை முறுக்கி எண்ணெய் எரிவாயு அமைச்சகத்தையே பிடுங்க முடிந்த அமெரிக்கா இப்படி அபத்தமாக கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கும் என்றெல்லாம் தோன்றவில்லை.
January 18th, 2012 at 9:28 pm
தெளிவுபடுத்தலுக்கு நன்றி சிறில்.
// பல காலங்களாக அரசை நம்பாமல், அரசின் நிழல்கூடப் படாமல் தன் முனைப்பிலேயே வாழ்ந்துவந்தவர்கள் இந்த மீனவ மக்களும், இந்தப் பகுதி பிற இனத்தவர்களும்.//
இதை எப்படி எடுத்துக் கொள்வது? சர்ச்சும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மூழுமையாக ஒரு parallel government இத்தனை நாட்களாக நடத்தி வந்திருக்கிறார்கள். அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். சுனாமியின் போது அரசு அளித்த அனைத்து உதவிகளும் நேரடியாக அல்லாமல் டயசீஸ் வழியாகக் கட்டுப் படுத்தப் பட்டு தான் மக்களை அடைய முடியும் என்று செய்திகள் வந்தது.
இது பெருமைப் பட வேண்டிய விஷயமா அல்லது கவலைப் பட வேண்டிய விஷயமா தெரியவில்லை.
January 18th, 2012 at 9:41 pm
dinamalar தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக எப்பொழுதும் உள்ளது. இந்த பிரச்சினைகளிலும் dinamalar இதை போல் செய்துள்ளது.
January 18th, 2012 at 10:25 pm
என்ன சரவணன்
\\இந்த 2000 மெகாவாட் மின் உற்பத்தியால் இந்தியா வல்லரசாகி விடும் என்று பயப்படுகிறார்களா என்ன\\
என்ன சரவணம் எதற்காக இந்த அணுமின் நிலையம் கட்டபடுகிறது என்று உங்களுக்கு தெரியவே தெரியாதா?
இல்லை தெரியாதது போல் நடிக்கிறீர்களா?
ஹ்ம்ம்….அது சரி அமெரிக்கா எதற்காக ஈரான் என்ற ஒரு சிறிய நாடு ஒரு சிறிய அணு உலை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதற்கு பதில் கிடைத்தால் கண்டிப்பாக உங்கள் முதல் கேள்விக்கும் பதில் கிடைக்கும்
அது சரி யார் சொன்னார்கள் அங்கு வெறும் 2000 மெகாவாட் தான் கிடைக்க போகிறது என்று
ரொம்ப ஓவுட் டேட்டா இருக்கிங்க…
January 19th, 2012 at 7:24 am
anne neenka christina illa induva, illa muslima, illa nalla manithana,manithan valarvatharkku pala visayankal thevai, matham valarvatharkku muttalkal mattum pothum
January 19th, 2012 at 7:48 am
Just for 3 hours of program almost 1 lakh is spent is the statement of Jeyamohan for his meeting arrangements.
May be the poor participants are threatened by church and coerced to participate. So, they need not be funded.
The fishermen community is under the iron control of church. They cannot even brush their teeth without the permission of the parish in their locality. So, they had to comply and they cannot demand money.
The money is for organizers, politicians, journalists, media, etc.
Cyril Alex is questioning why there is no further investigation against Udhaya Kumar ?
If investigations go further, it had to reveal the black money being pumped into India for conversions to christianity.
Is it OK for Cyril Alex to reveal those things ?
Any personnel who reveals the well-known secret would get killed or maimed – physically or psychologically.
And, dear Sir Cyril Alex – thanks for writing this article.
In your earlier article on the same subject you were adamantly denying that this issue has nothing to do with church at all. You were repeatedly saying that this is the natural reaction by non-religious villagers around koodankuLam.
Now, in this article you had to accept the sleight hands of the church.
Please continue writing articles on this problem – every revised version is a revelation !!
.
January 19th, 2012 at 12:42 pm
ஜடாயு,
தெளிவுபடுத்தியதற்கு உங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது இந்துத்துவ இன்டலெக்சுவல் நண்பர்கள் தங்கள் பக்கம் பக்கமான தரவுகளையும், ஆய்வு முடிவுகளையும், தீர்க்கமான கருதுகோள்களையும் எப்படி சென்றடைகிறார்கள் என்று.
January 19th, 2012 at 4:29 pm
Small request to the people opposing the kudankulam project.
Are u ready to use 2 tubes and 2 fans in your house? radio also fine.
antagonists should not use Fridge, TV, AC, PC and also water motor.
January 19th, 2012 at 5:47 pm
ஒரு 100 பேரை வைத்து ஒரு 1 மணி நேர போராட்டத்தை பொது வெளியில் நடத்த வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும்.
பந்தல் – 5000
மைக் – 3000
வாடகை சேர் – 1000
டீ காபி பிஸ்கட் – 1000
வண்டி – 1000
இதர செலவுகள் – 1000
மொத்தம் – 12000
இது ஒரு மணி நேர கூட்டத்திற்கு.. அப்படி என்றால் பல ஆயிரம் மக்கள்… பிரம்மாண்ட பந்தல்.. மீதி படித்த அறிவு ஜீவிகளே புரிந்து கொள்ளட்டும்….
\\ பல காலங்களாக அரசை நம்பாமல், அரசின் நிழல்கூடப் படாமல் தன் முனைப்பிலேயே வாழ்ந்துவந்தவர்கள் இந்த மீனவ மக்களும், இந்தப் பகுதி பிற இனத்தவர்களும்\\
அரசை நம்பாமல் வேறு எப்படி வாழ்ந்தார்கள்.
அரிசி, பருப்பு, மின்சாரம், எரிபொருள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தா?
என்னமோ மற்றவர்களுக்கு எல்லாம் அரசாங்கம் தங்க கோப்பையில் பால் கொடுப்பது போலவும் இவர்களுக்கு மட்டும் அழுக்கு தண்ணீர் கொடுப்பது போலவும் அல்லவா சொல்கிறீர்கள்…
அது சரி சிறுபாண்மை என்ற ஒரு துறையுண்டு. அதில் வழங்கப்படும் சலுகைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாதா?
இது தவிர ஈராக் லிபியா போன்று பல நாடுகளை சுரண்டும் கிறித்துவ நாடுகள் வேறு… மத மாற்றத்திற்காக வளரும் நாடுகளுக்கு பணத்தை கொடுக்கின்றன.
ஹ்ம்ம்.. நீயார்க நகரத்தை சுற்றி மட்டும் ஒன்பது அணு உலைகள் உள்ளன். ஆனால் அவை எல்லாம் கிறித்துவ மிஷினரிகள் கண்ணுக்கு தெரிவது இல்லை. ஆனால் இந்தியாவின் கடை கோடியில் உள்ள இடம் மட்டும் தான் தெரிகிறது….
வெளி நாட்டு கை கூலிகளாக இருக்கும் கிறித்துவ மிஷினரிகளை… கிறித்துவ அன்பர்கள் புறக்கணிக்க வேண்டும்.
January 19th, 2012 at 6:06 pm
இதனால் சில லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இருந்தால் அதற்காக என்னுடைய ஃப்ரிட்ஜ், ஏசியை தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். மனிதம் என்ற பார்வையில் பார்த்தால் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அதற்கு தயாராகவே இருப்பார்கள்.
லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதைக் காட்டிலும், இரண்டு மணி நேரம் அல்ல.. ஐந்து மணி நேர மின் தடை ஏற்பட்டாலும் அதை சகித்துக் கொள்ள முடியும்.
January 19th, 2012 at 6:08 pm
இந்த போராட்டத்தின் பின்னனியில் கிறித்துவ அமைப்புகள் இருப்பதால் தான் அரசு இவ்வளவு நிதானத்தை கடைப்பிடிக்கிறது……ஒரு வேளை ஹிந்து அமைப்புகள் போரடியிருந்தால் இந்த போராட்டம் எப்போதோ ஒடுக்கப்பட்டிருக்கும்……….[ ராம் தேவ் நினைவிருக்கிறாரா?]
தொண்டுன நிறுவனங்கள் என்ற பெயரில் மதமாற்றம் செய்ய ஆள் பிடிப்பவர்களுக்கு அரசின் நடவடிக்கைகள் பீதியை கிளப்பத்தான் செய்யும்…….மடியில் கனம் இல்லையேல் அவிழ்த்து காட்டிவிடுங்களேன்……என்ன பயம்…….
உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்…….தினமலர் தன் கருத்தை சொல்கிறது……எது சரி என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்……..
January 19th, 2012 at 8:44 pm
சிறில் அத்தனை எளிதாக ஜடாயு சொல்வதை நீங்கள் கடந்து செல்லவும் அதை கொண்டு ஒரு முத்திரை குத்தவும் முயல்வது இயற்கையானதுதான். ஆனால் ஜடாயு சொன்ன அந்த ‘இணை அரசாங்கம்’ அரசின் பார்வையின்மையாலா அல்லது சர்ச் அரசை அனுமதிக்காமல் மக்களை தன் பிடியில் வைத்திருப்பதாலா எனும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் //Alexander said that in Kanyakumari, “where the Roman Catholic Church is literally the government for the coastal parishioners”, there were increasing instances of fisher persons trying to break free from the hold of the Church being excommunicated from the village or those converting to other sects being barred from having even drinking water from their native villages. “Free thinking is discouraged. Education is not encouraged. Elected representatives are not allowed to function freely or to mingle with the coastal villagers. Every issue is left to the parish council. What the priest says goes,” he said.
In some villages even the auctioning of fish at the landing centres is entrusted to certain people by the parish council, which is then entitled to a 2-3 per cent share of the bounty from the sea, according to Selvaraj. He said: “Some parishes have a system of informal tax for the maintenance of the church to be paid yearly by the auctioneers, who are then allowed a free rein in the buying and selling of fish in the village. No tax is paid to the panchayat though. All this happens at the expense of the labour of the poor fishermen.”
Celestine believes that efforts to form trade unions of fishworkers are almost always scuttled by the parish councils. “One such effort in some villages to form a catamaran fishermen’s union resulted in clashes and intervention by the Church with incentives to discourage people from forming the union. The Church then went on to establish a coastal peace and development committee for the district, a maverick instrument under it that effectively ensured that no union emerged from among the ordinary fishermen. The system almost always makes sure that laymen leaders also do not emerge from among the fishworkers,” he said.// என்று சொல்வது இந்துத்துவவாதிகள் அல்ல ப்ரன்ட்லைன். (http://www.frontlineonnet.com/fl2203/stories/20050211006000900.htm)
January 20th, 2012 at 12:35 am
Udayakumar showed his true face during his debate with Congress guys in Pudhiya Thalaimurai. He made an open threat to central govt if it continues to target christian NGO’s. He said they can bring the country to a standstill as most of the “schools, hospitals, orphanages, old age homes etc..” are run by christian organisations in the country.
January 20th, 2012 at 1:31 am
karvind79,
One can only laugh at your pitiable ignorance of the other side of the arguments.
January 20th, 2012 at 2:51 am
அன்னிய நேரடி முதலீடு என்று வரும் போது மட்டும் இந்த இந்துத்துவா பி.ஜே.பி, காங்கிரஸ் கும்பல்கள் அன்னிய கிருஸ்தவர்களின் காசை வாங்க நாக்கை தொங்க போட்டு அலைவது ஏனோ….. எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று ‘மோடி’ மஸ்தான் பிச்சை எடுப்பது வெளிநாட்டு காசு இல்லையாமா?….. வெளிநாட்டு நிறுவனங்காளின் விளம்பரங்களை போட்டு கோடி கோடியாக கொள்ளையடிக்கும் தினமலர் போன்ற நாளேடுகளும் காங்கிரஸ் களவாணிகளும் இந்துத்துவ பொறுக்கிகளும் எந்த முகத்தை வைத்து கொண்டு மக்களை நோக்கி வெளிநாட்டு நிதி பற்றி பேசுகிறார்கள்?
January 20th, 2012 at 7:55 am
சிறில்,
ஜடாயு கேட்டதற்கு நீங்கள் சொன்னதுதான் பதிலா ?
January 20th, 2012 at 11:34 am
//இதனால் சில லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இருந்தால் அதற்காக என்னுடைய ஃப்ரிட்ஜ், ஏசியை தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.//
First do it.
Please walk the talk.
.
January 20th, 2012 at 11:35 am
//அன்னிய நேரடி முதலீடு என்று வரும் போது மட்டும் இந்த இந்துத்துவா பி.ஜே.பி, காங்கிரஸ் கும்பல்கள் அன்னிய கிருஸ்தவர்களின் காசை வாங்க நாக்கை தொங்க போட்டு அலைவது ஏனோ//
Dear Sunder,
If you do not know the difference between a business and beggary, please try to learn.
May your Jesus help you !
January 20th, 2012 at 11:48 am
//சிறில்,
ஜடாயு கேட்டதற்கு நீங்கள் சொன்னதுதான் பதிலா ?//
Isn’t that enough
January 20th, 2012 at 12:29 pm
\\எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று ‘மோடி’ மஸ்தான் பிச்சை எடுப்பது வெளிநாட்டு காசு இல்லையாமா?\\
@ சுந்தர்,
ஏன் அமெரிக்க கூட தான் இந்தியாவிற்கு வந்து எங்கள் நாட்டில் முதலிடு செய்யுங்கள் என்று கேட்டார். வியாபாரத்திற்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு?
எல்லா வெளி நாட்டு கும்பெநிகளும் எதற்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு இந்தியாவில் தனது பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
\\அன்னிய கிருஸ்தவர்களின் காசை வாங்க நாக்கை தொங்க போட்டு அலைவது ஏனோ\\
இதை பார்த்து என்னக்கு sirippatha அல்லது அழுவாத என்று தெரியவில்லை. ஆமாம் அவர்கள் என்ன உழைத்து சம்பாதித்து மாதிரி பேசுகிறீர்கள். ஆப்பிரிக்காவில் தொடங்கி தென் அமெரிக்க வரை எத்தனையோ மக்களின் சொத்தை கொள்ளை அடித்த திருடர்கள் தானே அவர்கள்?
January 20th, 2012 at 12:40 pm
உலகம் முழுவதும் ஊழல் ஆட்சியாளர்கள் (இந்திய – காங்கிரஸ், பாகிஸ்தான் – சர்தாரி அரசு,இராக் , லிபிய , எகிப்து… சொல்லி கொண்டே போகலாம்) ஆட்சியில் உட்காரவைத்து அதன் மூலம் அங்கு கொள்ளை அடிக்கும் கேவலமான மேற்கத்திய நாடுகளை அதாவது உங்கள் பார்வையில் கிறித்துவ நாடுகளை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளே வேண்டும். எந்த ஹிந்துவும் ஏசுவுக்கு எதிரி இல்லை. ஆனால் வெளிநாட்டு கையில் இருக்கும் எல்லா கிறித்துவ மிசினரிகளுக்கும் ஒரு ஹிந்து மட்டும் அல்ல ஒரு இந்தியனும் எதிரி தான்.
January 20th, 2012 at 1:03 pm
neovasant கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். நேற்று புதிய தலைமுறை டிவியில் உதயகுமார் சற்று காட்டமாகவே பேசினார். அவருடைய சிறுபான்மை முகம் அவ்வப்போது தலை காட்டியது.
ஆனால் நாம் இதையெல்லாம் கடந்து இந்தப் போராட்டம் எதற்காக? இந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும். அதை விடுத்து இதை நடத்துபவர்கள் யார்? அவர்களின் உள்நோக்கம் என்ன என்றெல்லாம் ஆராய்வது ஆரோக்கியமானதல்ல.
கிட்டத்தட்ட இது.. அன்னா ஹசாரே குழுவில் இருக்கும் ஒவ்வொருவரின் நேர்மையையும் ஆய்வுக்குட்படுத்தி, ஜன்லோக்பால் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் காங்கிரஸின் ராஜதந்திர நடவடிக்கை போன்றதுதான்.
January 20th, 2012 at 1:56 pm
There are few questions to be answered by the people who are against Nuclear Power to be stated in Koodankulam.
1. Why there is no strong protest not held by the people who are living near to the running power plant (Kaiga 880MW, Kalpakkam- 440MW, Karakpur -440MW,Tarapur -1400MW,Rawatbhata -1180MW & Etc.,).
2. Sure, Idinthakarai Communities are trying to run a parallel government…
3. Iam 100% sure that, the people of idinthakarai shall not be able to run such kind of protest, paying tax from their pocket. I would agree that it may be technically convinced by Udaykumar and team to the people to partcipate in the protest. The expenses which is incurred for this protest from NGO’s. Those NGO’s collected the money from Foreign machineries/companies.
I too agree that the government must satisfy the people needs if they have to move from the location and fundamental rights has to be given by central and state government.
January 20th, 2012 at 3:16 pm
Aravinthan even your comment (and frontline’s claim of an independant govt being run by the Church ) relies ona weak statement from a single person. That is fine with me… but what is not fine is that in an article of this nature all someone could (wrongly) infer is this. Sorry to say that it is not only ‘facist’ Christians and ‘extreme’ muslims who apply religion to all issues around. If you carefully see the comments made by some people, srticle after article you would know that they have applied no other thought than the religious angle to this. In spite of the fact that there are many Hindu’s and Hindu organizations supporting the people. And in spite of the fact that elsewhere in this same country Hindutva activists are fighting nuclear plants and Idinthakarai people are supporting that struggle openly.
I have not said that the Parish council handling the money collected for the struggle. The Parish priest is just the convener of a Parish Council and not the un questioned leader. You know how many times Parish priests have been beaten and chased away from several parishes along the coast.
Most Indian villages organize themselves around the temple organization. In Catholic villages it is the church. This is an age old system. We had such organizations even before the conversions by the Protugese.
I am not going to respond to the comments from the religious angle. Please go ahead and annoint yourself as ‘the most patriotic Indian’ at the expense of the fisherfolks… after all they are not Indians… they are Christians..and they have no rights in this country.
And I should add… Jai Hindh.
January 20th, 2012 at 3:16 pm
சென்னை மட்டும் தான் தமிழகமா ??
சென்னையில் பதினைந்தாயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் கட்டப்படுகிறது. ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் பதினாறாயிரம் கோடிக்கு திட்டம் இடப்படுகிறது.
விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு போதிய நிதி கிடைக்குமா ?
போதிய நிதி வசதி இல்லாமல், நாடு முழுவதும் ஏறத்தாழ 300 ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாகவே ரயில் கட்டணத்தை உயர்த்தாததும், ரயில்வேயில் நிலவும் நிதிப் பற்றாக்குறைக்கு காரணம். இந்த ஆண்டு கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஒரு புதிய கட்டண விகித முறையை ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தயாரித்தார். ஆனால், கட்டணத்தை உயர்த்த, அவரது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, கட்டண உயர்வும் இருக்காது என்றே கூறப்படுகிறது.தற்போதுள்ள நிலையில், 1 லட்சம் கோடி ரூபாய் வரை ரயில்வே துறைக்கு நிதி தேவைப்படுகிறது. இதில், விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டத்திற்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் வரை வேண்டும். 800 கோடியாவது அளித்தால் தான் இந்த திட்டத்தை ஓரளவு முடிவுக்கு கொண்டு வர முடியும்.
January 20th, 2012 at 3:42 pm
//இது தவிர வெளியிடங்களிடமிருந்து பல தரப்புகளிடமிருந்தும் நன்கொடைகள் வந்துகொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் நடந்த தொடர் உண்ணாவிரதத்தின்போதே சில லட்சங்கள் நன்கொடையாக பிரிந்துள்ளன. சில தனிநபர்கள் மட்டுமே ஒரு லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ளனர்//
இந்தப் பொதுப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு சற்று விவரங்கள் கொடுப்பது நல்லது. பல தரப்புகள் பணம் கொடுத்தார்கள் என்றால் அவர்கள் யார் யார்? சில தனிநபர்கள் மட்டுமே லட்சங்கள் வழங்கியுள்ளனர் என்றால் source of income என்ன? வாரத்தில் ஒருநாள் வருமானத்தில் 10% என்பதற்கு ஒரு பணமதிப்பு எவ்வளவு? அதைச் சொல்ல ஏன் தயக்கம்? நிஜ வருமானத்தைச் சொன்னால் பல சலுகைகள் போய்விடும் என்பதற்காக மறைக்கிறார்களா? அப்படியானால் அங்கே புழங்கும் கணக்கில் வராத (கருப்புப்)பணம் எவ்வளவு?
இவ்வளவும் போக அணு உலையின் வரைபடம் போராட்டத்தின் முன்னிலை வகிப்போர்க்கு எதற்காகத் தேவை? விஞ்ஞானிகள் வரும் போது அழைத்துப் பேசி கேள்விகள் கேட்டு பதிலகளைப் பெறுவதும் அதில் தங்கள் கூற்றை நிறுவுவதுமல்லவா அறிவுடைமை? அதை விடுத்து யாருடனும் பேசமாட்டேன், யார் பேசுவதையும் கேட்கமாட்டேன். நான் பேசிக் கொண்டே இருப்பேன், கேள்வியே கேட்காமல் மற்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது கற்றறிந்தோர் நாடும் வழியல்ல.
January 20th, 2012 at 5:20 pm
அருண்பிரபு,
மீன்பிடித்தொழில் சீசனுக்கேற்ப வருமானம் வரும். நல்ல சீசனில் ஒரு படகுக்கு ஒருநாளைக்கு ரூ.5000 சராசரியாக எதிர்பார்க்கலாம். இதை மூன்று முதல் ஐந்துபேர்வரை பங்கிட்டு எடுக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு படகுக்கு ரூ50000 வரைக்கும்கூட கிடைக்கும். அதே நேரம் ஒரு வருடத்தில் ஒன்றுமே கிடைக்காத நாட்களும் பல உண்டு. மேலும் கடலுக்கே போக முடியாத நாட்களும் உண்டு. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஒரு சராசரி மீனவரின் உள்நாட்டு மீன்பிடிப்பு வருமானம் அரசு வரிவிதிக்கும் அளவுக்கு வருவதில்லை. மேலும் விவசாய வருமானத்தைப்போலவே இதுவும். அதற்கேற்ற வரி விலக்குகள் எல்லாம் இங்கேயும் தரவேண்டும்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீன்பிடித்துறைகள் வருடாந்திரம் ரூ 2000கோடி அளவு மீன் ஏற்றுமதிக்கு காரணமாயிருக்கின்றன. அதற்கேற்ப இத்தனை வருடங்களில் அவர்களுக்கு அரசிடமிருந்து என்ன சென்றிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.
சர்ச் குறித்து குறை சொல்லாமல் இருப்பதற்கில்லை. ஆனால் மக்கள் கூடி போராடும் ஒரு போராட்டத்தை முன்வைத்து அதை விவாதிப்பது அவசியமா… குறிப்பாக அதை மட்டுமே விவாதிப்பது வேண்டுமா என்பதுவே என் கவலை.
என் கட்டுரை எழுதப்பட்டதன் முதன்மையான நோக்கம் இந்தப் போராட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு ஆகவில்லை என்பதைச் சொல்லவே. நம் ஊடகங்களில் ஏதேனும் ஒன்று போராட்டக் குழுவினரிடம் சரியான கணக்குகளை வாங்கி வெளியிடலாம். நான் போராட்டக் குழுவின் பிரதிநிதியல்ல. இந்தப் போராட்டத்தை பொறுத்தமட்டில் நான் வெளியிலிருந்து ஆதரவு தரும் ஒரு பார்வையாளன் மட்டுமே. ஒரே ஒருநாள் அங்கு சென்று நேரடியாக அங்கே கலந்துகொண்டேன். இந்த முறை ஊருக்குச் செல்கையில் (இடிந்தகரைக்கு அடுத்துள்ள பெருமணல்) என் மீனவ உறவினர்கள் சொன்ன தகவல்களின் பேரில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
January 20th, 2012 at 5:55 pm
Is the issue related only to the poor fisher-folk in the area? If there is an accident will others (wealthier lot) be affected or not? The largest contributing group is the fishermen in the area and majority of them happened to be Christians. When others are quite and these people are protesting with the Parish Priests organizing and leading these protests one cannot avoid a religious angle and the motives added to it. Let the organizers come clean.
January 20th, 2012 at 7:19 pm
கூடம்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பால் மற்ற இடங்களிலும் எதிர்ப்பு வரும்
அப்புறம் அமெரிக்க தன் காலவதியான மின் நிலையங்களை இந்தியாவின் தலையில் கட்ட முடியாது
அரசியல் வியாதிகளுக்கு கமிசன் கிடைக்காது
அதனால்தான் அரசியல் வியாதிகளும் தின மலம் போன்ற பத்திரிகைகளும் இது போன்ற பொய் பிரசாரத்தில் இறங்கியுள்ளன
அப்பாவி அப்துல் கலாம் கூட இதில் இறங்கியுள்ளதுதான் வேடிக்கை
அப்துல் கலாம் ஏற்கனவே மூலிகை ராமர் பிள்ளையை ஆதரித்து மூக்குடை பட்டு கொண்டார்
January 20th, 2012 at 8:44 pm
சிறில், இவையெல்லாம் தேவையற்ற விரும்பதகாத முத்திரை குத்தல்கள். நான் கூறியதெல்லாம் சர்ச் கடற்புரங்களில் இணை அரசாங்கம் நடத்துகிறது என்பது ஏதோ இந்துத்துவ குற்றச்சாட்டு அல்ல என்பது மட்டுமே. கூடங்குளம் குறித்து நான் எதையும் பேசவில்லை என்பதை கவனிக்கவும்.
January 20th, 2012 at 10:13 pm
//I am not going to respond to the comments from the religious angle. Please go ahead and annoint yourself as ‘the most patriotic Indian’ at the expense of the fisherfolks… after all they are not Indians… they are Christians..and they have no rights in this country.
And I should add… Jai Hindh.//
Aravinthan .. this paragraph was not addressed to you ..
January 21st, 2012 at 1:09 pm
தூத்துக்குடியில் உள்ள கிறித்தவ தொண்டு நிறுவனங்களை பற்றி பேசும் நண்பர்களே இங்கு அவர்கள் நடத்தும் தொழுநோய் இல்லங்களை பார்த்து இருக்கிறீர்களா ? முதியோர் இல்லங்கள் , பார்வையற்றோர் இல்லங்கள் வந்து என்றவாது பார்த்து இருகிறீர்களா ? சும்மா ! வட தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு கிறித்தவம் தென் தமிழகத்தை அழிக்கிறது என்று பேச கூடாது ! அரசாங்கம் செய்ய தவிர்த்த சமூக பணிகளை அவர்களே இங்கு செய்தனர் ! போய் ! பாருங்கள் ! தெரு தெருவாக சேசு சபை நிறுவனங்களை ! RC நடுநிலைப்பள்ளி , RC உயர்நிலை பள்ளி என்று ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் ! கல்வி இவ்வளவு வியாபாரம் ஆக்க பட்டும் கூட இன்று முறையான கல்வியை அவர்கள் அளிக்கிறார்கள் ! அதுவும் குறைந்த செலவில் ! கொஞ்சம் வரலாற்றை படியுங்கள் ! தென் தமிழகம் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்டது ? அதற்கு வளர்ச்சி பணிகளை யார் செய்தார்கள் என்று ! மத மாற்றம் மத மாற்றம் என்று புலம்புவோரே ! பணத்திற்காக மத மாற்றம் செய்பவன் மத வாதி அல்ல ! அவன் ஒரு சுய நல வாதி ! ஒருவன் கஷ்டத்தை போக்க எந்த மதம் உதவினாலும் அவன் அதை பின் பற்றுவதில் என்ன தவறு ? ஏன் உங்கள் கொள்கையை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று எல்லார் தலையிலும் எழுதி உள்ளதா என்ன ? ஆரியர்கள் இங்கு வருவதருக்கு முன் இங்கு என்ன மத கொள்கைகள் பின் பற்ற பட்டன ? RSS தலைமையில் நடந்த போராட்டம் ஒடுக்க பட்டது போல் தோன்ற வில்லையே ? இன்றும் அரசாங்கத்தை மிரட்டி கொண்டு தானே இருகிறார்கள் ? நல்லது செய்பவன் எந்த மதமாக இருந்தால் என்ன ? தென் தமிழகத்தில் மத நல்லினக்கதொடு மக்கள் இருக்கிறார்கள் ! அதை கெடுத்து விடாதீர்கள் ! ஒருவன் கஷ்டத்தில் இருந்தால் அவனுக்கு கிருத்தவன் உதவுவான் ! கிருத்தவன் மட்டும் அல்ல ! இஸ்லாமியன் உதவினால் அவன் இஸ்லாமியன் ஆகட்டும் ! பௌத்தம் உதவினால் அவன் அந்த கொள்கைகளை பின் பற்றட்டும் ! இந்து உதவினால் அவன் இந்து கொள்கைகளை பின்பற்றட்டும் ? நல் வழயில் நடக்க எந்த மதம் உதவினால் என்ன? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? சரி ! தென் தமிழகத்தில் அரசாங்கமோ , இல்லை வேறு நிறுவனங்களோ எதாவது தொழுநோய் இல்லங்களையும், முதியோர் இல்லங்களையும் , பார்வையற்றோர் , அநாதை இல்லங்களையோ நடத்தி வருகிறதா என்ன ? விட்டால் அவற்றையும் குறை கூறுவீர்கள் போல ? மதம் என்பது மனிதனின் அன்பை ஊக்குவிப்பதற்கு தான் ! கஷ்டத்தில் இருக்கும் மனிதனை எந்த கொள்கைகளின் மூலமும் அவனுக்கு ஆறுதல் கொடுக்க எவனுக்கும் உரிமை உள்ளது ! எவனும் எந்த மதங்களையும் பின்பற்றவும் உரிமை உள்ளது ! இந்தியாவில் பின்பற்ற கூடாது என்று சட்டம் உள்ளதா ? இல்லை அப்படி மதங்கள் தான் கூறுகிறதா ? மதத்தின் மூலம் அன்பை வளர்ப்போம் ! கலவரங்களை அல்ல !
January 21st, 2012 at 2:19 pm
Cyril Alex,
//Aravinthan even your comment (and frontline’s claim of an independant govt being run by the Church ) relies ona weak statement from a single person.//
You are a far more sensible and intelligent fellow Alex. Therefore, I assume that your limited time has made you miss that the statements are from three persons and not one person. Within the two paragraphs Alexandar, Celestine, and Selvaraj have given their statements. Not one single person.
.
January 21st, 2012 at 4:21 pm
சிறில், உலகின் எல்லா பகுதிகளிலும் கடற்கரைக்கு ஒட்டிய பகுதிகளில் தான் அணு உலைகள் அமைந்துள்ளன.
அவ்வளவு ஏன்? கங்கை கரையிலேயே ஒரு அணு உலை உள்ளதே…
http://en.wikipedia.org/wiki/Narora_Atomic_Power_Station
இத்தனைக்கும் அணு உலைக்கு அருகிலேயே விவசாயம் காலம் காலமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏன் அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?
சும்மா சீன் போடாதீங்க….
January 21st, 2012 at 4:27 pm
கீழே உள்ள லிங்கில் கங்கை கரையில் உள்ள அணு உலைகளை காணலாம்.
http://maps.google.com/maps/place?q=Narora+Atomic+Power+Station&cid=6430391142183072267
ஒரு லூசு… அதாங்க… திககாரன் சொல்றான்…
அணு உலையை எடுத்து விட்டு அந்த இடத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கலாமாம்.
முடியல
January 21st, 2012 at 5:04 pm
First my apologies for putting things english but from public web center. no tamil writer here
It is very disheartening to see that people like cyril alex who is a part of elite group of Jeyamohan is against this project. Are we so much biased? Is our atomic energy knowledge better than shri.Abdul kalam. We hailed when he got bharat ratna.. we jumped when he became President… we were so happy when he wrote india 2020. What we must do is to respect that person wisdom. Where is our so called “Tamizh gene” when a tamizh scientist is in favour of the plant? Yes if the plant going to spoil people’s lively hood, people can fight for better condition under “project affected people” like NBA. { It is different issue that we have governments which do not care for people}. We know people loose their land when a road get expanded / railway lines come up. Does that mean we should not have road & railway lines? Does these people know how many deforestation we do to get coal? But ….Where we will get power? It is easy to say to I stop using TV/AC etc., But Nuclear is one among the power. Till such time we become very good in using solar power/ stop using coal.. we require nuclear. Yes The koodamkulam people have a right to defend their livelyhoods. Fight with the government for alternate source of livelyhood. But they have no right to stop the nation from becoming a powerful nation. Instead of blaming dinamalar, please look forward. The magazine the publishing of expenses are incidental.
) Changes are inevitable. And “change” is the only constant.
{ I am equally concerned for the country and will be very happy, if we use only organic farming across paddy fields.. .. like shri.Naaser’s pongal video
Jai Hind
January 21st, 2012 at 5:42 pm
Koodankulam the problem for only near peoples life….not hindu and christian….. In case of any accident nuclear dont know hindu and christian and other it swap all…. try to understand that actual problems…. If you want to koodankulam plant you do one thing first you get one coroportion dust bin and serve for your street people in front of your house or in campus…. pls try
January 21st, 2012 at 6:33 pm
நல்ல சப்பைக்கட்டு கட்டுகிறார் சிறில். கிறிஸ்தவர் உதயகுமார் நடத்தும் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஏதோ அவரால் ஆன உதவி. சிறிலின் சாயம் அடிக்கடி வெளுப்பதுண்டு. இப்போது மீண்டும் வெளுத்திருக்கிறது.
- சேக்கிழான்
January 21st, 2012 at 6:35 pm
நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் என் நாட்டு மக்களையும், மக்களால் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தையும் நம்புகிறேன். என் நாட்டின் வளர்ச்சியை விரும்பும் விஞ்ஞானிகளையும் நம்புகிறேன்.
என்மீதும், எனது வருங்கலத்தின் மீதும், எனது நாட்டு தலைவர்களுக்கும், ஆராய்ச்சியாலர்களுக்கும் இல்லாத உண்மையான அக்கறை, மதம் மாற்ற வந்துள்ள கைக்கூலி பாதிரிகளுக்கும், உதயகுமார் போன்றவர்களுக்கும் எப்படி இருந்திட முடியும்?
யோசிக்கும் திறன் உள்ளவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்தியாவின் சாபக்கேடு இதுதான். ” நல்லவன் பின்னால் நாலு பேரு. நாரப்பயலுக பின்னாலும் நாலு பேரு”
நல்ல யோசிச்சு பாருங்கப்பா…….!
January 21st, 2012 at 6:50 pm
// but what is not fine is that in an article of this nature all someone could (wrongly) infer is this. //
சிறில், பிரசினையின் முக்கியமான கண்ணி அங்கு உள்ளது என்றே நினைக்கிறேன்.. இந்தக் கட்டுரையில் “உங்கள் ஊர்களில் எல்லாம்.. ” என்று எழுதியது நீங்கள் தானே.
அதாவது, மற்ற ஊர்களில் எல்லாம் அரசு, அரசு இயந்திரங்கள், அரசியல் கட்சிகள் இவையெல்லாம் சேர்ந்து தான் (அவை எவ்வளவு மோசமானவையாக இருந்தாலும்) எல்லா செயல்பாடுகளும் நடக்கும். ஆனால் எங்கள் ஊரில் அப்படி இல்லை என்று ஒரு இயல்பான பெருமிதத்துடன் நீங்கள் தான் எழுதினீர்கள்.
அதை இந்தப் போராட்டத்திற்கும் பொருத்திப் பார்க்கத் தோன்றாதா என்ன? இதில் என்ன தவறு கண்டீர்கள்?
January 21st, 2012 at 10:01 pm
What is the use of writing and counter writing like this?. You people visit idinthakarai and you yourself see the truth. Both Hindus and Christians are living in Idinthakarai.Both are against KKNPP.we are fighting for not only our survival and also for southern Tamilnadu.No body can dictate us, what we supposed to do.We have even revolted against the church on 1969 itself.If any body wanted to know the history of Idinthakarai, please read sahitya academy award winner Mrs.Rajam krishnan’s Novel “Alaivaikaraiyil”.Thank you Mr.Cyril Alex
January 22nd, 2012 at 5:18 am
சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி .நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் உண்மை.
இந்தியாவில் இந்த அணுவுலை போராட்டம் வெற்றியடையும் .இது உண்மையாக நடக்கக்கூடிய ,
மக்களால் ஒரு தலைவரை கொண்டு நடக்கின்ற உண்மைபோரட்டம்.
இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திர போராட்டத்திற்கு பிறகு நீண்டகாலமாக நடக்கின்ற
மக்கள் போராட்டம்தான் அணுவுலை போராட்டம் .உண்மையான ,சமூக அக்கறை உள்ள ,நன்கு படித்த
உயர்ந்த எண்ணம் கொண்ட ,இயற்கையை நேசிக்கின்ற ஒரு மனிதர்தான் ,மரியாதைக்குரிய அண்ணன் உதயகுமார் அவர்கள் .
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை தவறாக பேசவேண்டாம் என்று மென்மையாகவும் ,வன்மையாகவும் கண்டிக்கின்றேன் .
அணுவுலையை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு கேட்கின்ற கேள்வி
எதற்காக அணுவுலை வேண்டும்?
மின்சாரம் வேண்டும் ,அதனால் எனக்கு அணுவுலை வேண்டும் என்கின்றாய் ,
அனல் ,புனல் ,காத்தாடி இதன்மூலமாக கிடைக்கும் மின்சாரம் ,அணுமின்சாரத்தை தயாரிக்கும் செலவைவிட மிக மிக குறைவு .
ஆனால் உங்களுக்கு தேவை அணுமின்சாரம் ,அப்படிஎன்றால் நீங்கள் எல்லோரும் ஒரேமதிப்பு கொண்ட ஒருபொருளை ,
அதிகவிலைக்கு வாங்கக்கூடிய அதிபுத்திசாலிகளோ,என்னவோ தெரியவில்லை .
அணுவுலை அணுகுண்டிற்கு என்பது தெள்ளந்தெளிவாக தெரிகின்ற நிலையில்,அரசாங்கம் உனக்கு 100 கிராம் அளவுடைய
மிகச்சிறிய அளவில் ஒரு அணுகுண்டை தந்து உன்னுடயவீட்டில் பத்திரமாக வைத்து பாதுகாத்துக்கொள் என்றால் பாதுகாத்துக்கொள்வாயா?
அணுவுலையை எதிர்த்து போராடும் எம்மக்களை இழிவு படுத்த நினைக்கின்ற இயலாதவர்களை ,இழிந்தவர்களிடம் ஒரு கேள்வி ?
உனது வாழ்வில் என்றாவது ஒருநாள் மக்களுக்காக போராடி,போராட்டத்தின் வலியை உணர்ந்து இருக்கின்றாயா?நாம் வெற்றியடைவோம்
என்ற ஆனந்தத்தை அனுபவித்து இருக்கின்டாயா?
எங்கோ இருந்து கொண்டு ஏதேதோ பேசுபவர்களுக்கு ,போரட்டத்தை நேரில் பார்த்ததுண்டா? ,இடிந்தகரை மண்ணை மிதித்தது உண்டா?
அப்புறம் பேசிக்கொண்டே இருக்கிரிர்களே எப்படி ???
முடிந்தால் ஒருமுறை சென்று பார் ,இல்லை என்றால் அமைதியாக இரு .
அணுவுலையை பற்றி பேச உனக்கு உரிமை உண்டு ,ஆனால் ,ஆனால் , ஆனால் எமது போராட்டத்தை பற்றி தவறாக பேச எவனுக்கும் உரிமை
கிடையாது . இந்தியநாட்டில் கோடிகணக்கில் கொள்ளை அடிக்கின்ற கோடிக்கணக்கான கொள்ளையர்கள் உள்ளார்கள் .அவனைப்பார்த்து பேசு .
அந்த ஊழல் ,இந்த ஊழல் ,நடந்த ஊழல் ,நடக்கப்போற ஊழல் ,எவ்வளவு ஊழல் இருக்கு அதபேசுங்க ,
அமைதியா நடக்கின்ற , 100 நாட்களையும் தாண்டி வன்முறை அற்ற போராட்டத்தை இழிவுபடுத்த வேண்டாம்.
பதவியும் ,பணமும் {எங்கள் வரிப்பணம்} உன்னிடம் உள்ளது என்று ஆடவேண்டாம் .
மீண்டும் ,மீண்டும் சொல்கின்றோம் ஆதரவு தரவில்லை என்றால் ,அமைதியாக இருங்கள்,
உண்மை தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.
வீணான,விசக்கருத்துக்களை பரப்பவேண்டாம் .
எமது அறப்போராட்டம் வெற்றியடையும் .இசைநகர் கரிகாலன்.
January 22nd, 2012 at 11:35 am
http://siragu.com/?p=1498
கூடங்குளத்தில் கூடுவோம்:
இதே போன்ற ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வெற்றிகரமாக ஒரு அணு உலை திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள் ஜெர்மனியில் ஒரு கிராமத்தினர். அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி.
நாட்டிற்காக உழைப்பதற்கு முன் வரவேண்டும். நாட்டிற்கு உழைப்பது என்றால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்தில் நின்று சண்டையிடுவது மட்டுமில்லை. மக்களுக்கு ஆதரவாக எந்த களத்தில் நின்றாலும் அது நாட்டிற்கான உழைப்பே, போராட்டமே. ஊழலுக்கு எதிராக நிற்பவர்களும், சாதியக்கொடுமைகளுக்கு எதிராய் நிற்பவர்களும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக நிற்பவர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும் அனைவருமே நாட்டிற்காக உழைப்பவர்களே. இவர்களைப் போன்ற சமூக போராளிகள் இராணுவத்தில் சம்பளத்திற்காக போராடும் பெரும்பாலான வீரர்களை விட மிகச் சிறந்த வீரர்கள்.
January 22nd, 2012 at 11:41 am
மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்.
http://siragu.com/?p=386
கச்சத்தீவை மீட்பதன் மூலமாக தமிழக மீனவர்கள் படுகொலையை தடுக்க முடியுமா?
http://siragu.com/?p=434
January 22nd, 2012 at 11:44 am
அணுக்கழிவாலை:
உண்மையைச் சொன்னா …அந்நிய அமெரிக்கச் சதி என்று, அரைவேக்காட்டு அப்பாடக்கர் மத்திய அமைச்சர்கள் முதல், வியாபாரிகள், தொழிலதிபர்கள், போர்வையில், பல பெருந்தனக்காரர்கள், சுயலாபம் தேடிக் கொண்டிருக்கின்றனர் ? அவர்கள், முதலில் இதனை படிக்க வேண்டும்.
http://siragu.com/?p=1346
தினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.
January 22nd, 2012 at 1:04 pm
“I am not going to respond to the comments from the religious angle. Please go ahead and annoint yourself as ‘the most patriotic Indian’ at the expense of the fisher folks… after all they are not Indians… they are Christians..and they have no rights in this country.”
Leave alone the agitation; let us take your words that it is not religion controlled, but how can we explain that an Indian Bishop writing a letter – by passing our govt.- to a foreign govt. asking them to stop supply of uranium to India? Is it not a treachery committed by an Indian? Should we confer him Bharath Rathna?
January 22nd, 2012 at 1:45 pm
எனக்கு என்ன தோணுதுன்னா, உதயகுமாருக்கு இந்த திட்டம் தான் படிச்ச கேரளாவுக்கு கிடைக்கலேன்ற வயிதெரிச்சலா இருக்கும்னு நினைகிறேன்..
January 22nd, 2012 at 1:52 pm
அணு ஆக்கபூரவமான முன்னேற்றத்திற்கா பயன்படுத்துதலும் அழிவிற்கான ஆயுதங்கள் செய்ய பயன் படுத்துவதும் இரண்டுமே தவறு. இதை வலியுறுத்தி ராஜாஜி தன் தள்ளாவயதில் அமெரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு உபயோகத்தை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். அது இன்று காற்றோடு நீர்த்துபோன கதை. இவ்வளவு செலவு செய்த இந்த உலயை செயல் இழக்கசெய்தாலும் பெரும் விபத்த நேரிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோமா ? எனவே இவ்வளவு தூரம் செலவு செய்தபின் இப்பொழுது தடுப்பது முற்றிலும் தவறான அணுகுமுறையே. அபாயம் என்பது இந்த அணுஉலைக்கு மாத்திரம் அல்ல இந்தியாவில் உள்ள எல்லா அணுஉலையிலும் விபத்து நேரிட்டால் அருகில் உள்ள மக்கள் பாதிக்கபோவது திண்ணம். இதில் கிருஸ்துவர்களும் கிருஸ்துவ பாதரிகளும் தனி அக்கரை எடுத்து போராடுவது அன்னிய கைகூலி அரசியல் என்பது அப்பட்டமான உண்மை.
தமிழகத்தில் இயற்கைசீற்றங்கள் என்பது காலங்காலமாக சிறுதளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தி வந்தது சமீப சில வருடங்களாக அதுவும் அப்பாவி மினவ மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து மதம்மாற்றிய பின் இந்த இயற்கை சீற்றத்தின் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. காரணம் இயற்கையை வணங்கும் இந்த ஏழை மக்களை தொன்றுதொட்டு கொண்டாடிய எல்லை அம்மன் கடல் அம்மன் போன்றவற்றிற்கு விழாகள் எடுத்து பலிதானம் செய்து இயற்கை சீற்றத்தை குறைக்க வேண்டி வழிபாடு நடத்திவந்தனர். நடு கடலுக்கு சென்று படையல் செய்யும் வழக்கமும் உண்டு. இதனால் இவர்கள் வழிபாடு பல இயற்கை சீற்றங்க்ளை குறைத்ததோடு மற்ற பொதுஜனங்களுக்கும் காப்பாற்றப்பட்டார்கள். எனவே இந்த மதம் பிடித்த கிருஸ்துவத்திற்கு ஏழைமக்கள் மாறாமல் இருப்பதுதான் அவர்களுக்கும் அவர்களது சக சகோதரர்களான ஹிந்துக்களுக்கும் நல்லது.
கூடங்குளத்தில் முற்றுகைசெய்யும் மினவ கிருஸ்துவர்கக்கும் இங்கே இந்த கட்டுரையை எழுதிய கிருஸ்துவர் அவருக்கு ஒத்துஊதும் கிருஸ்துவர் எல்லோரும் சற்று நேரம் சிந்தித்து உங்கள் முன்னோர்கள் மதமான ஹிந்து மதத்திற்கு மாறுங்கள். உங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. இன்று கிடைக்கும் பணம் பதவி பட்டம் எல்லாம் தற்காலிகமானது. கிருஸ்துவம் என்பது ஒரு மிருக பண்ணை. இந்த பண்ணயில் வளரும் மிருகங்களுக்கு இடத்தை விட்டு நகராமல் வேளா வேளை சத்தான உணவு படைத்து கொழுக்க செய்வார்கள். இது ஏதொ ஒரு சில மாதங்களோ வருடங்களோதான். நன்கு கொழுத்தபின் அவைகளை காசாபூகடைக்குதான் அனுப்புவார்கள். அப்படிபட்ட கிருஸ்துவம் இந்தியர்களுக்கு தேவையா ?
January 22nd, 2012 at 2:37 pm
தென் மாவட்ட மக்களை ஏமாற்றி கேரளாவுக்கு சாதகமாக செயல்படும் ரயில்வேதுறை.
http://kkdrua.blogspot.com/2011/07/blog-post.html?showComment=1327221006495#c386608172987358885
தமிழக ரயில் நிலையங்களைக் கேரள பயணிகளின் வசதிக்கான ரயில்களை நிறுத்தி வைக்கும் இடங்களாக (Rail Parking Stand) இந்திய ரயில்வேத் துறை மாற்றியுள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.
January 22nd, 2012 at 8:02 pm
இந்து முன்னணியினர் 20.1.2012 அன்று கூடங்குளத்தில் அணு உலை எதிர்த்து மக்களுடன் போராட்டம் நடத்தினர் . இது ஏதோ கிறிஸ்தவ மக்களின் போராட்டம் என்று பொய்களை பரப்பும் ஊடகங்கள் எது என்று நமக்கு தெரியாதா?
January 22nd, 2012 at 9:10 pm
//அண்மை காலங்களாக உங்கள் ஊர்களைப் போலவே இங்கேயும் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் விஜயங்கள் நிகழ்ந்துகொன்டிருக்கின்றன.//
இதுதான் நான் சொன்னது. பிற ஊர்களில் எப்படி ஜனநாயகம் ஒரு தேர்தல் கால பரபரப்போடு முடிந்துபோகிறதோ அப்ப்டியே எங்கள் ஊரிலும் நடந்துகொண்டிருக்கிறது என்றுதானே சொல்கிறேன்.. இதில்லென்ன குறை கண்டீர்?
இந்தப் போராட்டத்தில் யாருக்கும் எந்த பெருமிதமும் இல்லை ஜடாயு. இது இல்லாதிருந்தால் மீனவர்கள் வாரத்துக்கு ஓரிருநாட்கள் அதிகமாக கடலுக்குப் போய் வருமானம் ஈட்டுவார்கள். இங்கே செலவிடுவதை தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் செலவிடுவார்கள்.
January 24th, 2012 at 2:06 pm
பார்ப்பன தினத்தந்தி ஒழிக!
கூடங்குள எதிர்ப்பாளர்களுக்கு வந்த கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் வட்டிக்கு விற்று பிழைக்கிறார்களாம்!
செய்தி வெளியிட்டது தினமலர் அல்ல. தினத்தந்தி! பார்ப்பன தினத்தந்தி ஒழிக!
January 24th, 2012 at 8:38 pm
இந்த தளத்தில் எழுதுபவர்களில் சிலர் பொய்யான தகவல்களை தருகிறார்கள். ஆழி ஆழி என்பவர், 20.1.2012 அன்று இந்து முன்னணியினர் கூடங்குளத்தில் அணு உலை எதிர்த்து மக்களுடன் போராட்டம் நடத்தினர் என்கிறார். இது தவறான செய்தியாகும்.
இந்து முன்னணி என்றைக்கும் இந்நாட்டு தலைவர்களையும் அரசாங்கத்தையும் நம்பும் அமைப்பாகும்.
தமிழினியன் என்பவர், ”பார்ப்பன தினத்தந்தி” என்கிறார்.
நடுநிலையான பத்திரிகைகளை மத ரீதியில் பிரித்து பார்க்க தெரிந்த தமிழினியன் போன்றவர்களுக்கு, மக்களுக்காக போராடுகிறோம் என கூறிக்கொண்டு சர்ச் காம்பௌண்டில், பாதிரியார் தலைமையில் கூட்டம் நடத்துபவர்களை ஏன் மத ரீதியில் பார்க்க முடிவதில்லை.
அவர்கள் கொடுக்கும் பணமா? அந்நிய மதத்தின் மீதுள்ள விசுவாசமா..?
January 24th, 2012 at 8:51 pm
மக்கள் தங்கள் வால்வாதரங்களுகாக போராடும் இந்த விசயத்தில் ஏன் மதங்களை கொண்டு வறிருகிர்கள். உண்மை தெறியாமல் பேச கூடாது., உதய குமார் ஒரு சிறுபான்மையினர் இல்லை,இந்து நாடார் வகுப்பை சார்ந்தவர்.
January 25th, 2012 at 6:12 pm
தமிழினியன் என்ற அறிவுக்கொழுந்தே………
தினத்தந்தி உரிமையாளர்கள் [ ஹிந்து ] நாடார்கள்………கொஞ்சமாவது பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்…..பிறகு துவேஷம் பரப்பும் வேலையில் ஈடுபடலாம்……..
January 25th, 2012 at 8:15 pm
அய்யா ராமசாமி, அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாடாராகதான்.
ஆனால் இடையில் அல்லவா மதம் மாறி போய் விட்டார். எந்த “பாவத்தால்” அந்த வலையில் விழுந்தாரோ..?
January 27th, 2012 at 2:07 pm
சீனு கிறித்துவராக மதம் மாறுவது பாவமா ?
இந்தியாவை ஆள்வதே கிறித்துவ அந்தோனியோ மைநோதனே
அதே மைநோதான் கூடங்குளம் உலைக்கும் ஆதரவு தருகிறாள்
January 28th, 2012 at 10:42 am
மிஸ்டர் ஜாக், மத மாற்றம் என்பது வழிபாட்டு முறையை மட்டும் மாற்றி கொள்வது என்று நம்மவர்கள் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அது ஒரு உலகளாவிய நாடு பிடிக்கும் தந்திரம் என்பது ஏனோ பலருக்கு புரிவதில்லை.
கூடங்குளம் விசயத்தில் நீங்கள் புரிந்து கொண்டது என்ன? “அன்று பிரித்தாளும் சூழ்ச்சியினால் நம்மை அடிமையாக்கிய, அந்நியர்கள் இன்றும் நம்மை அதே வழியில் பிரித்தாழ முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு அம்சம்தான் கூடங்குளம்.
இப்பவாவது புரிகிறதா உங்களுக்கு…?
May 5th, 2012 at 6:22 pm
“அணு ஆக்கபூரவமான முன்னேற்றத்திற்கா பயன்படுத்துதலும் அழிவிற்கான ஆயுதங்கள் செய்ய பயன் படுத்துவதும் இரண்டுமே தவறு. இதை வலியுறுத்தி ராஜாஜி தன் தள்ளாவயதில் அமெரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு உபயோகத்தை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்”
ராஜாஜி உண்மையிலேயே நல்ல மனிதர். மக்கள் மீது கருணை கொண்டவர்.
May 5th, 2012 at 6:27 pm
கருணாநிதியை ஒப்பிட்டால், நம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், எவ்வளவோ மேல். இதுவரை, தமிழ்நாட்டில், ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி பேசுவதை ஏதோ பாவம் போல் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், சிங்களவருக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்தார்,வைகோவுக்குப் பின், முதல்வரின் குரல்தான் உரத்து ஒலித்தது.
May 5th, 2012 at 6:29 pm
உண்மையைச் சொன்னால், நானும் ஒரு பிராமணப் பெண்தான், ஆனால் என் குலத்தவரின் மேட்டிமைக் குணத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் திருமணம் முடித்திருப்பவர், இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்.
May 5th, 2012 at 6:34 pm
இங்கு எழுதும், கோமதி செட்டி ஒரு வட இந்திய பிராமணன். இவனது தளத்தை சென்று பார்த்தால், மற்ற சாதியினர் மேல் முக்கியமாக தமிழர்கள் மேல் எவ்வளவு வெறுப்பைக் க்க்கியிருக்கிறான் என்பதைப் படித்து திடுக்கிட்டேன். இவனைப் போன்றோர், முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத, ஜாதிக் கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவார்கள். இந்த கோமதிசெட்டியின் கருத்துகளை தமிழர்களாகிய நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
August 23rd, 2012 at 12:39 pm
oru nal minister kadalukku fish pidikka vantha kastam therium avanga kastam powerplant namaku vendam
December 11th, 2012 at 12:01 pm
மத மாற்றம் என்பது வழிபாட்டு முறையை மட்டும் மாற்றி கொள்வது என்று நம்மவர்கள் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அது ஒரு உலகளாவிய நாடு பிடிக்கும் தந்திரம் என்பது ஏனோ பலருக்கு புரிவதில்லை.
கூடங்குளம் விசயத்தில் நீங்கள் புரிந்து கொண்டது என்ன? “அன்று பிரித்தாளும் சூழ்ச்சியினால் நம்மை அடிமையாக்கிய, அந்நியர்கள் இன்றும் நம்மை அதே வழியில் பிரித்தாழ முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு அம்சம்தான் கூடங்குளம்.
இப்பவாவது புரிகிறதா உங்களுக்கு