<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் பேப்பர்</title>
	<atom:link href="http://www.tamilpaper.net/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilpaper.net</link>
	<description>Tamil Paper.net</description>
	<lastBuildDate>Tue, 15 May 2012 09:53:38 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=</generator>
		<item>
		<title>வழக்கு எண் 18/9 படத்தின் உண்மைக் கதை</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5879</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5879#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 09:53:38 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[வழக்கு எண் 18/9]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5879</guid>
		<description><![CDATA[ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது. ஒரு நாள் வேலு நண்பர்களுடன் சிறு குன்றின் மேலே விளையாடிக் கொண்டிருக்கும்போது, கந்து வட்டிக்காரர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக பைக்கில் அவனுடைய வீடு நோக்கிப் போவதைப் பார்க்கிறான். குறுக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: left;" align="center"><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vazhakku-enn-18-9.jpg" rel="lightbox[5879]"><img class="alignleft size-medium wp-image-5880" title="vazhakku-enn-18-9" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vazhakku-enn-18-9-300x214.jpg" alt="" width="300" height="214" /></a>ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது.</p>
<p>ஒரு நாள் வேலு நண்பர்களுடன் சிறு குன்றின் மேலே விளையாடிக் கொண்டிருக்கும்போது, கந்து வட்டிக்காரர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக பைக்கில் அவனுடைய வீடு நோக்கிப் போவதைப் பார்க்கிறான். குறுக்கு வழியில் விழுந்தடித்து ஓடுகிறான். அவனுக்கு முன்பாக வீட்டை அடைந்த வட்டிக்காரர்கள், அவனுடைய அம்மாவைத் தாறுமாறாகக் கேள்வி கேட்கிறார்கள். அம்மா முந்தானையால் வாயைப் பொத்தியபடி அழுகிறார். இதைப் பார்க்கும் வேலு ஆத்திரத்தில் கந்து வட்டிக்காரர்களை அடிக்கப் போகிறான். வாட்ட சாட்டமான அந்த நபர்கள் வேலுவை ஒரு கையால் பிடித்துத் தள்ளுகிறார்கள். வேலு சுவரில் மோதி விழுந்து அடிபடுகிறான். உள்ளே இதுவரை பொறுமையாக இருந்த வேலுவின் அப்பா, ஆத்திரத்தில் அருவாளை எடுத்துக்கொண்டு பாய்ந்து வருகிறார். அவரைப் பார்க்கும் கந்து வட்டிக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்து அவரை அடித்துத் துவைத்தெடுக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் தன் கண் முன்னால் அடிபடுவதைப் பொறுக்க முடியாமல் வேலு கதறுகிறான். பெற்றோருக்கும் தன் மகன் படும் வேதனையைத் தாங்க முடியவில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வட்டிக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்புகிறார்கள்.</p>
<p>நடந்த சம்பவங்கள் வேலுவின் பெற்றோருக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன. விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இரவில் சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து சாப்பிடுகிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதோ சந்தேகம் தோன்றவே வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து பார்க்கிறார்கள். மூவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவருகிறது. உடனே மூவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார்கள். வேலுவின் பெற்றோரை எல்லாரும் கடிந்துகொள்கிறார்கள். பணப் பிரச்னை தீரும்வரை வட இந்தியாவில் இருக்கும் முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலுவைச் சேர்த்துவிட உறவினர் ஒருவர் முன் வருகிறார். அடுத்தவர் நிலத்தில் கூலி வேலை செய்ய மாட்டேன் என்று கவுரவமாக இருந்த வேலுவின் பெற்றோர் எந்த வேலையானாலும் செய்யத் தயாராகிறார்கள்.</p>
<p>வேலு வட இந்தியாவுக்குச் செல்கிறான். அங்கு கொத்தடிமைபோல் வேலை செய்ய வேண்டிவருகிறது. மூன்று வேளை சாப்பாடு என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வசதியும் இல்லாமல் சிரமப்படுகிறான். அப்பா, அம்மா போன் பேசும்போது வேலை எளிதாக இருப்பதாகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் பொய் சொல்லி சமாளிக்கிறான். ஊரில் அப்பா அம்மாவும அதுபோல் தங்கள் வேதனையை மகனிடம் சொல்லாமல் சமாளிக்கிறார்கள்.</p>
<p>சில மாதங்கள் கழிகின்றன. வேலுவுக்கு சம்பளத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஊருக்குப் போகும்பொது கேள். சேர்த்துத் தருகிறேன் என்கிறார் முதலாளி. மாதா மாதம் சம்பளத்தைக் கேட்டு வாங்கிவிடு&#8230; இல்லையென்றால், கடைசியில் கிடைக்காமல் போய்விடும் என்று நண்பர்கள் சொல்லவே, அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை&#8230; மாதா மாதம் பணத்தை அனுப்ப வேண்டியிருக்கிறது என்று சொல்லி சம்பளத்தை வாங்கிக் கொள்கிறான். வீட்டுக்கு அனுப்பிவைக்கவா என்று அம்மாவிடம் கேட்டதற்கு நீயே வைத்துக்கொள் என்று அவர் சொல்லவே, தன் பெட்டிக்குள் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்கிறான்.</p>
<p>சில வருடங்கள் கழிகின்றன. கணிசமான தொகை சேருகிறது. ஆனால், முறுக்கு ஃபேக்டரியில் ஒரு நாள் இருபதாயிரம் ரூபாய் காணாமல் போய்விட்டதாக முதலாளி புகார் செய்கிறார். அனைவருடைய பெட்டிகளையும் சோதித்துப் பார்க்கிறார்கள். வேலு வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி வாங்கியிருந்த சம்பளப் பணம் அவன் பெட்டியில் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவன்தான் பணத்தைத் திருடியிருக்கிறான் என்று கட்டி வைத்து அடிக்கிறார். பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது. எஞ்சிய பணத்துக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய் என்று முதலாளி உத்தரவிடுகிறார். வேலு வேறு வழியில்லாமல் சேமித்த பணமும் போய் புதிதாகப் பணமும் கிடைக்காமல் தவிக்கிறான்.</p>
<p>இதனிடையில், வேலுவின் நண்பன் ஒருவன் அவனுடைய அக்காவின் திருமணத்துக்காக ஊருக்குப் போய்விட்டு வருகிறான். வேலுவின் அப்பாவும் அம்மாவும் மண் சரிந்து இறந்து போன செய்தியைச் சொல்கிறான். வேலு அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைகிறான். முதலாளிக்கு இந்த விஷயம் முன்பே தெரியும் என்பதும் வேலு யாரோ ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. ஆத்திரத்தில் முதலாளியை அடிக்கப் போகிறான். முதலாளியும் அவருடைய ஆட்களும் வேலுவை அடித்து விரட்டிவிடுகிறார்கள். சம்பளப் பணத்தைக் கேட்டபோது அதையும் தராமல் துரத்திவிடுகிறார்கள்.</p>
<p>வேலு அழுதபடியே ரயில்வே ஸ்டேஷனுக்கு போகிறான். ரயிலில் ஏறுவதற்கு முன்பாக, அவனுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவன் வருகிறான். கைவசம் இவ்வளவுதான் இருக்கிறது வைத்துக் கொள் என்று ஆயிரம் ரூபாய் தருகிறான். வேலு அதை வாங்க மறுக்கிறான்.</p>
<p>இல்லை வேலு&#8230; வாங்கிக்கோ&#8230; உன் நிலைமைக்கு நானும் ஒரு வகையில காரணமாகிட்டேன். அக்கா கல்யாணத்துக்குப் பணம் வேண்டியிருந்ததுன்னு நான் தான் முதலாளி கல்லால கை வெச்சிருந்தேன். அதுல நீ மாட்டிக்கிட்ட. குத்தத்தை ஒத்துக்கலாம்னு நெனெச்சேன். ஆனா, வீட்டு நிலமையை நினைச்சுப் பார்த்துட்டு வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன். என்னை மன்னிச்சிரு வேலு. எப்படியாவது உனக்குச் சேர வேண்டிய பணத்தை கொடுத்துடறேன் என்று அழுதபடியே சொல்கிறான்.</p>
<p>பணம் வேணும்னு கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேனே&#8230; ஏன் திருடின என்று சொல்லும் வேலு நண்பன் தரும் பணத்தை வாங்கிக் கொள்கிறான். நண்பன், சென்னையில் அவனுக்குத் தெரிந்த ஒருவருடைய முகவரியும் தொலைபேசி எண்ணும் தந்து அனுப்புகிறான். டிக்கெட் எடுக்காமல் ரயிலில் டாய்லெட்டுக்கு அருகில் உட்கார்ந்து சென்னை வந்து சேருகிறான். வழியில் முகவரி எழுதிய சீட்டைத் தொலைத்துவிடுகிறான். கையில் இருந்த காசும் தீர்ந்துவிடவே பசி மயக்கத்தில் ஃபிளாட்ஃபாரத்தில் மயங்கி விழுந்துவிடுகிறான். லேசாகக் கண் முழித்துப் பார்க்கும்போது அவனைச் சுற்றிலும் காசு விழுந்து கிடப்பது தெரிகிறது. பிச்சைக்காரன் என்று நினைத்து காசு போட்டுச் சென்றிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் வேலுவுக்கு அழுகையும் கோபமும் பொத்துக் கொண்டு வருகிறது. அப்போது பார்த்து ஒருவர் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டுச் செல்கிறார். உடம்பில் எஞ்சியிருக்கும் சக்தியை எல்லாம் திரட்டி, நான் பிச்சைக்காரன் இல்லைடா&#8230; என்று ஆக்ரோஷப்பட்டபடியே சிதறிக்கிடக்கும் சில்லரைகளை வீசி எறிகிறான்.</p>
<p>சற்று தூரத்தில் மர நிழலில் நின்று கொண்டிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளி இதைப் பார்க்கிறாள். அவனுக்கு அருகில் வந்து என்ன விஷயம் என்று கேட்கிறாள். வேலு அழுதபடியே தன் கதையைச் சொல்கிறான். அந்தப் பெண், அவனுக்கு பக்கத்து கடையில் இருந்து உணவு வாங்கித் தருகிறார். அவருக்குத் தெரிந்த கை வண்டி உணவக நபரிடம் வேலை கொடுத்து உதவச் சொல்கிறார். சம்பளம் எல்லாம் தரமுடியாது, சாப்பாடு மட்டும்தான் தருவேன் என்று சொல்லி சேர்த்துக்கொள்கிறார்.  வேலு பழைய சோகங்களில் இருந்து மீண்டு வருகிறான்.</p>
<p>சில மாதங்கள் கழிகின்றன. ஒருநாள் ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு தெரிந்த நபர் ஒருவரைப் பார்க்க முதலாளியுடன் செல்கிறான். அங்கு ஒரு அறையில் ஒரு சிறுவன் பக்த பிரகலாதன் கூத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறான். பிரகலாதனாகவும், ஹிரண்ய கசிபாகவும், நரசிம்ம மூர்த்தியாகவும் ஒருவனே மாறி மாறி நடித்துக் காட்டுகிறான். வேலு பிரமித்தபடி அவனை வேடிக்கை பார்க்கிறான். நடித்துக்காட்டச் சொன்னவர், அப்பறம் வா&#8230; ஏதாவது சான்ஸ் கிடைத்தால் தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். வேலு அவனிடம் பேச்சுக் கொடுக்கிறான். தன் பெயர் சின்னச் சாமி என்றும் கிராமத்தில் கூத்துக்கு மவுசு குறைந்துவிட்டதால், சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்திருப்பதாகச் சொல்கிறான். அவனுடைய நடிப்பு அருமையாக இருந்தது என்று வேலு பாராட்டுகிறான். இருவரும் நடந்து வருகிறார்கள். சற்று தொலைவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நின்று பார்க்கிறார்கள். கலையுலக வாரிசு ஒருவன் நான்கு வரி வசனத்தை ஒழுங்காகப் பேச வராமல் டேக்குக்கு மேல் டேக்காக வாங்கிக் கொண்டிருக்கிறான். சின்னச்சாமிக்கு சிரிப்பு பீறீட்டுக் கொண்டுவருகிறது. வேலுவும் அடக்க முடியாமல் சிரிக்கிறான். ஒரு கட்டத்தில் சின்னச்சாமியின் சிரிப்பு அழுகையாக மாறுகிறது. வேலு அவனுக்கு ஆறுதல் சொல்கிறான்.</p>
<p>சின்னச்சாமி எங்கு வேலை செய்கிறான் என்று கேட்கிறான். நாலு மாசம் ஏதாவது ஹோட்டல்ல வேலை செய்வேன். சேர்ற காசை எடுத்துட்டு ரெண்டு மாசம் சான்ஸ் தேடி அலைவேன். காசு தீர்ந்ததும் மறுபடியும் ஏதாவது ஹோட்டல்ல வேலைல சேர்ந்துப்பேன் என்கிறான். எங்க முதலாளி தண்ணி கேன் எடுத்து சப்ளை செய்யப் போறாரு. அதுக்கு ஒரு ஆள் வேணும் நீ வர்றியா என்று வேலு கேட்கிறான். சின்னச்சாமியும் சம்மதிக்கிறான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள்.</p>
<p>பக்கத்தில் இருக்கும் பெரிய அபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் ஜோதி என்னும் ஒரு பெண்ணை வேலு பார்க்கிறான். மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது. அந்த அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு தண்ணி கேன் கொடுக்கப் போய் வரும்போது ஜோதியை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவளோ படு விறைப்பாக இவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிறாள். இவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. மெள்ள அவன் வாழ்வில் புது தென்றல் வீச ஆரம்பிக்கிறது.</p>
<p>ஜோதியின் மனதில் இடம் பிடிக்க பல முயற்சிகள் செய்கிறான். துரதிஷ்டவசமாக சம்பவங்கள் அவனுக்கு எதிராகவே நடக்கின்றன. ஒருநாள் ஜோதிக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடுகிறது. தண்ணிக் கேன் போடப் போன இவனிடம் ஆட்டோ பிடித்துவரும்படி வீட்டு எஜமானியம்மா சொல்கிறார். இவனும் ஓடிப் போய் ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றிவிடுகிறான். அந்த ஆட்டோகாரனோ வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஜோதியிடம் தவறாக நடந்துகொள்கிறான். ஜோதி அவனிடமிருந்து தப்பித்து வீடு போய்ச் சேருகிறாள். மறுநாள் அந்த ஆட்டோக்காரன் எதுவும் நடக்காததுபோல் வேலுவின் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். வேலுவுக்கும் நடந்தது எதுவும் தெரியாததால் அவனிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்க்கும் ஜோதிக்கு வேலு மேல் சந்தேகம் வருகிறது.</p>
<p>இன்னொருநாள், வேலு தனக்கு உதவி செய்த பாலியல் தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருப்பதை ஜோதி பார்க்கிறாள். இதுபோன்ற சம்பவங்களால் அவளுக்கு அவனை அறவே பிடிக்காமல் போய்விடுகிறது.</p>
<p>இதன் பிறகு ஒருநாள் ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் மோதிரம் ஒன்று காணாமல் போய்விடுகிறது. ஜோதியை சந்தேகப்பட்டு விசாரிக்கிறார்கள். ஜோதி அழுதபடியே தான் எடுக்கவில்லை என்று சொல்கிறாள். தண்ணி கேன் போட வந்த வேலு தன் காதலி பிறர் முன்னால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்து துடிக்கிறான். அவனால், எதுவும் செய்ய முடியவில்லை. கேனைத் தூக்கிக்கொண்டு மேலே போகிறான். யாரையும் வெளிய போகவிடாத. செக் பண்ணனும் என்று செக்யூரிட்டியிடம் அந்த எஜமானியம்மா சொல்வது கேட்கிறது. அப்போது, ஜோதியின் அம்மா பதற்றத்துடன் தன் முந்தானைக்குள் ஒளித்து வைத்திருந்த மோதிரத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரச் செடித் தொட்டியில் வைப்பதை வேலு பார்த்துவிடுகிறான். ஜோதியின் அம்மா யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகிறார். அதை அவன் எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது மேலிருந்து படிகளில் யாரோ வருகிறார். கையில் மோதிரத்துடன் வேலு நிற்பதைப் பார்த்து அனைவரையும் சத்தம்போட்டுக் கூப்பிடுகிறார். ஜோதியின் அம்மாவும் வேறு வழியில்லாமல் அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி திட்ட ஆரம்பிக்கிறார். அனைவரும் சேர்ந்து வேலுவை அடிக்கிறார்கள். வேலு எதுவும் பேசாமல் பழியை ஏற்றுக்கொள்கிறான். ஜோதி மேலும் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.</p>
<p>இப்படியான நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் பணக்கார மாணவன் ஒருவன் அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் அவனுடைய காதலை நிராகரித்துவிடவே, ஆத்திரத்தில் அவள் முகத்தில் ஆசிட் ஊற்ற முடிவு செய்கிறான். மாலையில் வீட்டுக்கு வருபவன் அந்தப் பெண் பள்ளி விட்டு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் வந்ததும் அந்த வீட்டில் வேலை பார்த்துவிட்டு ஜோதி வெளியே செல்கிறாள். வீட்டில் அந்தப் பெண் மட்டும்தான் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திவிட்டு தன் வீட்டுக்குள் போய் ஆசிட் பாட்டிலை எடுத்து வருகிறான் அந்த மாணவன். இதனிடையில் எதையோ மறந்து வைத்துவிட்ட ஜோதி அந்த எடுக்க திரும்புகிறாள். அவள் அந்த வீட்டுக்குள் போனது தெரியாத அந்த மாணவன் காலிங் பெல்லை அழுத்துகிறான். கதவு திறந்ததும் அது தன்னை காதலிக்க மறுத்த பெண்தான் என்று நினைத்து ஆசிட்டை ஊற்றிவிடுகிறான்.</p>
<p>காவல்துறையினர் விசாரிக்கும்போது தன்னை வேலு என்ற பையன் காதலிப்பதாகவும் அவனைப் பிடிக்கவில்லை என்று சொன்னதால் ஒருவேளை அவன் செய்திருக்ககூடும் என்று சொல்கிறாள். காவல்துறை அவனைப் பிடித்து விசாரிக்கிறது. அவன் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான். இதனிடையில் அந்தப் பணக்காரப் பெண் தன் அப்பாவிடம் தயங்கியபடியே தன் சந்தேகத்தைச் சொல்கிறார். ஜோதிக்கு யாராவது விரோதி இருந்து அவங்க இதைச் செய்திருக்கலாம் இல்லையா என்று அவர் கேட்கிறார். பணக்காரப் பெண்ணோ, இல்லை அப்பா&#8230; என்னைக் குறிவைத்து ஊற்றப்பட்ட ஆசிட்தான் அது. அவன், இந்த முறை தப்பிச்சுட்ட&#8230;அடுத்த தடவை தப்பிக்க முடியாது என்று என் காதுபட மிரட்டுகிறான். அவனாகத்தான் இருக்கும் என்று சொல்கிறாள். ஏற்கெனவே அவருக்கு அந்த மாணவனின் அப்பாவுடன் சின்னச் சின்ன சண்டைகள் நடந்திருக்கின்றன. நேராக காவல்துறையில் சென்று விஷயத்தைச் சொல்லிவிடுகிறார். அவர்கள் ஆசிட் ஊற்றியவனை அழைத்து விசாரிக்கிறார்கள். அவன் உண்மையை ஒப்புக்கொண்டுவிடுகிறான்.</p>
<p>ஆனால், அவனுடைய அப்பா சமூகத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பவர். ஒரு பள்ளியை நடத்திவருபவர். ஆரம்ப காலத்தில் திரை மறைவு வேலைகள் செய்தவர் என்றாலும் அரசியல் செல்வாக்கின் மூலம் பேரும் புகழும் அடைந்திருப்பவர். அவர் இந்த வழக்கை திசை திருப்ப முடிவு செய்கிறார். வேலுவைத் தனியாகச் சந்தித்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார். அவன் அதற்கு மறுத்துவிடவே, கடைசியாக, ஜோதியின் சிகிச்சைக்குப் பணம் தருவதாக ஆசை காட்டுகிறார். உங்களை எப்படி நம்புவது என்று கேட்கிறான். உனக்குத் தெரிந்தவர் யாரையாவது வரச் சொல் அவர்களிடம் பணத்தைத் தருகிறேன் என்று சொல்கிறார்.</p>
<p>சின்னசாமியை அழைத்து வரச்சொல்லி வேலு நடந்ததைச் சொல்கிறான். குற்றத்தை ஒப்புக்கொள்ளாதே என்று முதலில் சொல்லும் சின்னச்சாமி கடைசியில் வேலுவின் வற்புறுத்தலால் அதற்கு சம்மதிக்கிறான். ஜோதியிடம் உன் காதலையும், அவளுக்காக செய்யாத தவறை ஏற்றுக்கொள்வதையும் சொல்கிறேன் என்று சொல்வான். வேலுவோ வேண்டாம்&#8230; அப்படிச் செய்தால் தப்பு செய்தது யார் என்பது தெரியவந்துவிடும். அப்பறம் அந்தப் பையனின் அப்பா பணம் தரமாட்டார். என் காதல் இப்போது தெரியவரவேண்டாம். முதலில் அவளுடைய உடல் குணமாகட்டும் என்று சொல்கிறான். சின்னச்சாமியும் அதை அரை மனதாக ஒப்புக்கொள்கிறான்.</p>
<p>பணக்காரப் பெண்ணின் அப்பாவுக்கு வேலுவின் செய்கை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தன் மகள்தான் ஏதோ தவறுதலாகச் சொல்வதாக நினைத்து வழக்கில் இருந்து ஒதுங்கிப் போய்விடுகிறார்.</p>
<p>ஆசிட் ஊற்றியவனின் அப்பா ரொம்பவும் நல்லவர்போல் ஜோதியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுகிறார். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய பத்து லட்சம் ஆகும் என்கிறார். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இந்தப் பெண்ணின் முகம் குணமானால் போதும் என்று சொல்கிறார். சின்னச்சாமியும் அதை வேலுவிடம் வந்து சொல்கிறான். வேலு மன நிம்மதியுடன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். ஏழு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.</p>
<p>ஆனால், வேலு ஜெயிலுக்குப் போனதும் அந்தப் பெரிய மனிதர் ஆள் மாறிவிடுகிறார். சின்னச்சாமி போய் அவரைப் பார்க்க முயற்சி செய்யும்போதெல்லாம் தட்டிக் கழிக்கிறார். மருத்துவர் ஊரில் இல்லை என்று பொய் சொல்லி அனுப்புகிறார். அவர் ஏமாற்றுகிறார் என்பது தெரிந்ததும் வேலுவிடம் போய் விஷயத்தைச் சொல்கிறான்.</p>
<p>வேலுவுக்கு கோபம் வருகிறது. சின்னச்சாமி இந்த விஷயத்தை ஜோதியிடம் போய்ச் சொல்கிறான். அவள் முதலில் நம்ப மறுக்கிறாள். அவனுடைய அம்மாவும் மோதிரத்தைத் திருடியது தான் தான் என்பதையும் அந்தப் பழியை வேலு ஏற்றுக் கொண்டதையும் சொல்லி அழுகிறார். ஜோதிக்கு வேலுவின் உண்மைக் காதல் புரியவருகிறது. ஜெயிலில் இருக்கும் அவனைப் போய்ப் பார்க்கிறாள். மற்ற கைதிகளும் அவர்களைப் பார்க்க வந்தவர்களும் பெரும் சப்தத்தில் பேசிக் கொள்ள வேலுவும் ஜோதியும் மவுனமாக ஒருவருக்கு முன் இன்னொருவர் நின்றபடியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போனபிறகு, வேலு தணிந்த குரலில் என்னை ஏமாத்தினவன நான் சும்மா விடமாட்டேன். பெயில்ல வெளியில வர்ற அன்னிக்கு அவனுக்கு இருக்கு வேட்டு என்று கர்ஜிக்கிறான். ஜோதி அவன் கைவிரல்களை மெள்ளத் தொட்டு சாந்தப்படுத்துகிறாள்.</p>
<p>அடுத்த நாள் அந்த பணக்கார பெரிய மனிதரைப் பார்க்க கூடைப் பை ஒன்றை எடுத்துக் கொண்டு போகிறாள். அந்த மனிதர் பள்ளி விழா ஒன்றில் மும்மரமாக இருக்கிறார். அவரைத் தனியாக அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள். உன் பையன் செஞ்ச தப்புக்கு ஒண்ணும் அறியாத ஒருத்தனை பலி ஆக்கிட்ட இல்லை&#8230; ஆசை காட்டி மோசம் பண்ணிட்ட இல்லை&#8230; ஏழைங்க தான என்ன செஞ்சிட முடியுங்கற திமிருதான. என்ன செய்யறேன் பார் என்று பையில் இருக்கும் ஆசிட் பாட்டிலை எடுத்து அவர் முகத்தில் வீசுகிறாள். துடி துடித்து அவர் கீழே விழுகிறார். சுற்றியிருப்பவர்கள் ஜோதியைப் பிடித்து காவல்துறையினரிடம் கொடுக்கிறார்கள்.</p>
<p>ஜோதிக்கும் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. வேலு அடைக்கப்பட்டிருக்கும் அதே ஜெயிலிலேயே ஜோதியையும் அடைக்கிறார்கள். ஜெயில் வரவேற்பறையில் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரையும் மிகப் பெரிய கம்பி வலை பிரிக்கிறது. ஆனால், அதற்கு இடையில் இருக்கும் இடைவெளிகளினூடாக காதலர்கள் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.</p>
<p>எங்க அம்மாவுக்கு பாசமான புள்ளையா இருக்க நினைச்சேன். அது முடியாமப் போச்சு. ஒரு முதலாளிக்கு விசுவாசமான தொழிலாளியா நடந்துக்க நினைச்சேன். அதுவும் முடியாமப் போச்சு. உன்னோட காதலனா இனிமே வாழப்போறேன். இதை யாரும் என் கிட்ட இருந்து பறிக்க முடியாது ஜோதி. என்னை எந்தப் பள்ளத்துக்குள்ள தள்ளிவிட்டாலும் கிடைக்கற பிடிமானத்தைப் பிடிச்சி மேல வந்துருவேன் ஜோதி. நீ மட்டும் கடைசி வரை என் கூடவே இருந்தாபோதும் ஜோதி என்று கண்கலங்குகிறான்.</p>
<p>ஜோதி மெள்ள தன் பையில் இருக்கும் தாலியை எடுத்து வேலுவிடம் கொடுக்கிறாள். வேலு கண்கள் மலர கட்டுகிறான். இருவரும் அழுகை வரும் வரை மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். காவலர்கள் நேரம் முடிந்துவிட்டது என்று இருவரையும் அழைத்துச் செல்கிறார்கள். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே இருவரும் தங்கள் செல்லுக்குச் செல்கிறார்கள்.</p>
<p>0</p>
<p><strong>பாபு</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5879&amp;title=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%2018%2F9%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88" id="wpa2a_2">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5879</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா? &#8211; தொல். திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5861</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5861#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 23:38:11 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஆர். முத்துக்குமார்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[திராவிட இயக்கம்]]></category>
		<category><![CDATA[தொல் திருமாவளவன்]]></category>
		<category><![CDATA[பாமக]]></category>
		<category><![CDATA[ராஜபக்ஷே]]></category>
		<category><![CDATA[விடுதலைச் சிறுத்தைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5861</guid>
		<description><![CDATA[முரண்பாடுகளோடு உறவாடாமல், முரண்பாடுகளோடு உரையாடாமல் இன்றைய தேதியில் அரசியல் களமாடுவது சாத்தியமல்ல என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர், தொல். திருமாவளவன். இலங்கை இறுதிப்போரில் பங்கேற்ற காங்கிரஸ் அரசை ஆதரித்துக்கொண்டே, போர்க்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷேவையும் தீவிரமாக எதிர்த்துவருகிறார். திமுகவோடு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், சங்கரன்கோயிலில் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தலித் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே தன் லட்சியம் என்று அறிவிக்கும் தொல். திருமாவளவன் அதை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>முரண்பாடுகளோடு உறவாடாமல், முரண்பாடுகளோடு உரையாடாமல் இன்றைய தேதியில் அரசியல் களமாடுவது சாத்தியமல்ல என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர், தொல். திருமாவளவன். இலங்கை இறுதிப்போரில் பங்கேற்ற காங்கிரஸ் அரசை ஆதரித்துக்கொண்டே, போர்க்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷேவையும் தீவிரமாக எதிர்த்துவருகிறார். திமுகவோடு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், சங்கரன்கோயிலில் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தலித் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே தன் லட்சியம் என்று அறிவிக்கும் தொல். திருமாவளவன் அதை அடைவதற்கான பாதையில் உள்ள தடைக்கற்களே இந்த முரண்பாடுகள் என்பதை இந்தப் பேட்டியில் தெளிவுபடுத்துகிறார்.</p>
<p>தமிழீழம், தமிழகம், இலங்கை, இந்தியா என்று சமகாலப் பிரச்னைகள் குறித்தும் தன் கட்சியின் எதிர்காலம் குறித்தும் ‘திராவிட இயக்க வரலாறு’ நூலாசிரியர் <strong>ஆர். முத்துக்குமாரிடம்</strong> ஆழம் இதழுக்காக மனம் திறந்து உரையாடுகிறார் <strong>தொல். திருமாவளவன்.</strong> பேட்டியிலிருந்து முக்கியப் பகுதிகள்.</p></blockquote>
<p><strong>அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தந்திருத்தமாக வளர்ந்துவருகிறது விடுதலைச் சிறுத்தைகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் கூறியிருந்தீர்கள். ஆனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் சிறுத்தைகளின் குரல் ஒலிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறதே&#8230;</strong></p>
<p>தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதற்காக கட்சியே வளரவில்லை என்று சொல்லமுடியாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கட்சியை விரிவுபடுத்தவும் வலிமைப்படுத்தவும் திட்டமிட்டோம். மாநிலம் முழுக்கக் கட்சிக் கிளைகளை உருவாக்குவது, உறுப்பினர்கள் சேர்ப்பது, தலைமை அலுவலகம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்கள் உருவாக்குவது, கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்திருக்கிறோம். கட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டோம். அதில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி சுமார் பதினேழு லட்சம் பேர் தீவிர உறுப்பினர்களாகியுள்ளனர். கட்சி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளன. கட்சிக்கென தொலைக்காட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்காகவும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆங்கிலத்தில் Inclusive Growth என்பார்கள். அப்படியான ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாங்கள் அடைந்திருக்கிறோம். எனினும், சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால் கட்சியே காணாமல் போய்விட்டது என்று அர்த்தப்படுத்தக்கூடாது. 1980 மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக படுதோல்வி அடைந்தது. அத்தோடு அதிமுக அழிந்துவிட்டதா என்ன.. தேர்தலில் காமராஜர் தோற்றிருக்கிறார். அண்ணா தோற்றிருக்கிறார். ஆகவே, தேர்தல் வெற்றி &#8211; தோல்வி மட்டுமே ஒரு கட்சியின் வளர்ச்சியைக் கணிக்கும் முதன்மையான அளவுகோல் அல்ல.</p>
<p><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/DSC_52861.jpg" rel="lightbox[5861]"><img class="alignleft size-medium wp-image-5869" title="DSC_5286" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/DSC_52861-300x200.jpg" alt="" width="300" height="200" /></a>தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்ற ஒற்றை இலக்கில் கவனம் குவித்துச் செயல்படாமல் ஈழத் தமிழர்கள், தமிழ்த் தேசியம், சிறுபான்மையினர் நலன் என்று பல தளங்களில் செயல்பட்டதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் தோல்விக்குக் காரணம் என்ற விமரிசனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?</strong></p>
<p>தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காக, தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுவான மக்கள் பிரச்னைகளைக் கண்டும் காணாமலும் ஒரு இயக்கம் ஒதுங்கியிருப்பது சாத்தியம் இல்லை.</p>
<p>அது நியாயமும் இல்லை. ஈழப்பிரச்னை, தமிழ்த் தேசியம் பற்றியெல்லாம் இன்று, நேற்று நான் பேசவில்லை. கால்நூற்றாண்டு காலமாகப் பேசிவருகிறேன்.</p>
<p>ஈழப்பிரச்னை மட்டுமல்ல, பெண்கள் விடுதலை, அரவாணிகள் பிரச்னை, காவிரி &#8211; முல்லை பெரியாறு &#8211; கூடங்குளம், சிறுபான்மையினர் நலன் என்று அனைத்து தரப்பினருக்காகவும் குரல் கொடுக்கிறோம். பொது நீரோட்டத்தில் இருந்து எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அனைத்து தரப்பு மக்களோடும் இணைந்து, கலந்து, செயல்படவே விரும்புகிறோம். இலக்குகள் பரவலாக இருப்பது தோல்விக்குக் காரணமல்ல. அது வளர்ச்சிக்கான அடையாளம்தான்.</p>
<p><strong>காங்கிரஸை கடுமையாக எதிர்த்துக்கொண்டே அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பது உறுத்தலாக இல்லையா?</strong></p>
<p>காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது என்னுடைய விருப்பத்துக்கு மாறாக நடந்த ஒரு விபத்து.</p>
<p>மத்தியில் காங்கிரஸுக்கு யார் மாற்று? இந்துத்துவ சக்தியான பாஜக. அவர்களை நாங்கள் ஆதரிக்கமுடியாது. பாமகவுக்கோ வைகோவுக்கோ பாஜகவுடன் எளிதில் உறவாட முடியும். அவர்களுக்கு சாதியமோ இந்துத்துவமோ ஒரு பிரச்னை அல்ல; ஆனால் எங்கள் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது. அதனால்தான் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற அணியில் இணைந்தோம்.</p>
<p>உண்மையில், என்னுடைய எண்ணம் எல்லாம் ஈழப்பிரச்னையை முன்னிறுத்துகின்ற மதிமுக, பாமகவோடு இணைந்து புதிய அணியைக் கட்டமைப்பதுதான். அதற்கான முன்முயற்சிகளை நான் எடுத்தால், ‘இவன் எதற்காக முயற்சி எடுக்கிறான்? என்று விமரிசிப்பார்கள். அதனால் பழ. நெடுமாறன் அந்தக் கூட்டணியை உருவாக்கித் தருவார் என்று நம்பினேன். ஆனால் அந்த முயற்சியை நெடுமாறனே தோல்வியடையச் செய்துவிட்டார். நான் திமுகவுக்கு ஆதரவாளன் என்று சொல்லி என்னை ஓரங்கட்டினார்கள்.</p>
<p>நெடுமாறன், வைகோ, ராமதாஸ் போன்ற அனைவருமே அதிமுக ஆதரவாளர்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் சேர்ந்து அணி அமைக்க விரும்பியதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? ஒன்று, நான் தேர்தல் அரசியலில் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது இன உணர்வு கொண்டவனாக இருக்கவேண்டும். நான் உண்மையான இன உணர்வாளன். அதனால்தான் அவர்களுடன் அணி அமைக்க விரும்பி, வலியச் சென்று பேசினேன். ஆனால் அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். தனிமைப்படுத்தினார்கள்.</p>
<p>தேர்தல் அரசியலில் தனித்து நிற்பது சாத்தியமில்லை. விடுதலைச் சிறுத்தைகள் எங்கள் அணியில் நீடிப்பார்கள் என்று கலைஞர் அறிவித்தபோது, அதை எங்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். ஆகவே, திமுக கூட்டணியில் தொடர்ந்தோம். அந்த அணியில் காங்கிரஸும் இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கூட்டணியை விபத்து என்கிறேன்.</p>
<p><strong>ஆக, காங்கிரஸைக் கையாளும் விஷயத்தில் குழம்பிப்போயிருக்கிறீர்களா?</strong></p>
<p>ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டங்களில் நான் கலந்துகொள்வதன் காரணம் மிக எளிமையானது. ஈழத்தமிழர் பிரச்னை பற்றி இலங்கை அரசிடம் விவாதிக்க வேண்டும் என்றால் நாம் ராஜபக்ஷேவுடன்தான் பேசவேண்டும். அவர்தான் அங்கே ஆட்சியில் இருப்பவர். அதிகாரம் அவர் கையில்தான் இருக்கிறது. அவர் கையில் ரத்தம் இருக்கிறது என்பதற்காக அவருடன் கைகுலுக்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. அதைப்போலவே நம்முடைய பிரச்னைகளைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் சோனியாவிடமும் மன்மோகன் சிங்கிடமும்தான் பேசவேண்டும். அதற்கு அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். அவர்கள் அழைத்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாம் தலையாட்டுவதில்லை. நம் எண்ணங்களைப் பதிவுசெய்கிறோம். நம்முடைய கோரிக்கைகளை நேரில் கொடுக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், எல்லா முரண்பாடுகளும் ஒற்றுமையை நோக்கியே; எல்லா யுத்தங்களும் பேச்சுவார்த்தையை நோக்கியே!</p>
<p><strong>காங்கிரஸைப் போலவே திமுகவுடனான உறவிலும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றனவே!</strong></p>
<p>திமுகவுடன் எங்களுக்குக் கசப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு கலைஞர் இன்னும் தீவிரமாக இயங்கியிருக்கலாம் என்ற கருத்தை நாங்கள் அவரிடமே வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறோம். முக்கியமான தருணங்களில் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்க திமுக தவறிவிட்டது என்பதிலும் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.</p>
<p>திமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் இயக்கத் தோழர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். பலர் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் பல இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்று இருப்பது போல மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை உருவாக்கித் தரவேண்டும் என்று கோரினோம். ஆனால் அதனை திமுக அரசு கடைசிவரை நிறைவேற்றவில்லை.</p>
<p>அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளின் குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முதன்முதலில் ஒலித்ததற்குப் பங்களிப்பு செய்த திமுகவை நாங்கள் மறந்துவிடவில்லை. சமீபத்திய சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு நாங்கள் ஆதரவளித்தோம். மீண்டும் சொல்கிறேன். எல்லா முரண்பாடுகளும் ஒற்றுமையை நோக்கித்தானே!</p>
<p><strong>திமுகவுடனும் மனமொத்து இயங்கவில்லை; பாமக உள்ளிட்ட ஈழ ஆதரவு இயக்கங்களுடனும் சுமுக உறவு இல்லை; அதிமுகவையும் எதிர்க்கிறீர்கள்; எனில், விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்காலம் கவலைதரக்கூடியதாக இருக்கிறதே?</strong></p>
<p>ஈழத்தை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் எங்களை ஏனோ அணியில் சேர்த்துக்கொள்ளத் தயங்குகின்றன. பிரபாகரனைப் பிடித்துவந்து தூக்கிலிடவேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் கால் நூற்றாண்டு காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் என்னை அவர்கள் ஏற்பதில்லை. கேட்டால், திமுக ஆதரவாளன்; காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறான் என்று என்னைச் சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் கடைசிவரை அங்கம் வகித்த பாமக, காங்கிரஸுடன் உறவாடிய மதிமுக ஆகியோருடன் அவர்களால் உறவாட முடிந்தது.</p>
<p>இத்தனைச் சிக்கல்களையும் கடந்து, விடுதலைச் சிறுத்தைகள் முக்கியமான இயக்கமாக வளர்ந்தெழும். அதற்கான உணர்வுகளையும் புரிதலையும் கட்சியினருக்கு ஏற்படுத்தி வருகிறோம். எங்களுடைய பயணம் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கை எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.</p>
<p><strong>தனியொரு கட்சிக்காக இருபத்தைந்து ஆண்டுகால உழைப்பைச் செலுத்தியதற்குப் பதிலாக, பலம் பொருந்திய ஒரு கட்சியில் இணைந்திருந்தால், தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்ற இலக்கில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கமுடியுமே!</strong></p>
<p>விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்கு வராத சமயம் அது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமை சென்னையில் சந்தித்தேன். ம. நடராசன்தான் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் கான்ஷிராம். ஆனால் தேர்தல் அரசியலில் எனக்கு நாட்டமில்லை என்று சொல்லிவிட்டேன். எனினும், ‘நீங்கள் எதிர்காலத்தில் தேர்தல் அரசியலுக்கு வருவீர்கள்’ என்றார். எதற்காகச் சொல்கிறேன் என்றால் தொடக்கத்திலிருந்தே எனக்கு பிரபலமான கட்சியில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லை. இப்போதும் அப்படியொரு எண்ணம் இல்லை. இனியும் வராது.</p>
<p>ஒருவேளை பிரபலமான கட்சியில் நான் இணைந்திருந்தால் ஒரு துதிபாடியாக இருந்திருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தனிப்பட்ட அளவில் வளர்ந்திருப்பேன்; பதவி, அந்தஸ்து எல்லாம் கிடைத்திருக்கும். அது எனக்கு ஏற்புடையதல்ல. இங்கே பிரபலமான கட்சியில், தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் முதலமைச்சராகவோ, அல்லது நிதி உள்ளிட்ட முக்கியத்துறைகளுக்கான அமைச்சர்களாகவோ ஆவதில்லை. வெகு சாதாரண துறைகள்தான் அவர்களுக்குத் தரப்படுகின்றன. நான் தனிக்கட்சி தொடங்கியதால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் வட்டச்செயலாளர் தொடங்கி மாநிலத் தலைமை வரையிலான பதவிகளை அடைந்துள்ளனர். அதிகாரத்துக்கான பாதையும் அவர்களுக்கு வகுத்துத் தரப்பட்டுள்ளது.</p>
<p><strong>பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் இன்னமும் முதல்வராக ஆகமுடியவில்லை என்ற கருத்து தொடர்ச்சியாகப் பேசப்படுகிறதே?</strong></p>
<p>சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர் பெரியார். அவர் பேசிய விஷயங்களைத்தான் அண்ணா பேசினார். அவருக்குப் பிறகு கலைஞர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் தொடர்பாக சாதி இந்துக்களின் மன இறுக்கத்தைத்</p>
<p>தளர்த்தும் பணியை பெரியாருக்குப் பின் வந்தவர்களால் அந்த அளவுக்குச் செய்யமுடியவில்லை. அதனால்தான் பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை.</p>
<p>அதேசமயம் சாதிக்கட்டமைப்புகள் நிறைந்த உத்தர பிரதேசத்தில் ஒரு தலித் ஐந்து முறைக்கு மேல் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது. அங்கே இருக்கும் பிராமணர்களும் மாயாவதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இங்கே நிலைமை அப்படியா இருக்கிறது? அரசியல் அங்கீகாரத்தை விடுங்கள். தலித் இயக்கங்களுக்குக் கூட்டணி அங்கீகாரத்தைக்கூட இங்கே ஒழுங்காகத் தருவதில்லையே.</p>
<p><strong>கூட்டணி அங்கீகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?</strong></p>
<p>தமிழகத்தில் இருக்கின்ற பெரிய கட்சிகள் எங்களைப் போன்ற தலித் இயக்கங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கத் தயங்குகின்றனர். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இதுதான் இங்கே நிலைமை. ராமசாமி படையாட்சியாரும் மாணிக்கவேல் நாயக்கரும் முத்துராமலிங்கத் தேவரும் கட்சி தொடங்கியபோது அவர்களுக்குக் கூட்டணி அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆனால் எம்.சி. ராஜா, சிவராஜ், இரட்டை மலை சீனிவாசன், இளையபெருமாள் போன்றோர் கட்சி தொடங்கியபோது அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தரப்படவில்லை.</p>
<p>இன்று ராமதாஸோ, வைகோவோ, விஜயகாந்தோ கட்சி தொடங்கினால் அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்குவார்கள். ஆனால் நானோ, கிருஷ்ணசாமியோ, ஜான் பாண்டியனோ கட்சி தொடங்கினால் எங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தருவதில்லை. நான்கு, ஐந்து, ஆறு என்று ஒற்றை இலக்கத்திலேயே தொகுதி ஒதுக்குகிறார்கள். கூட்டணிக்கு நாங்கள் தேவை.. வாக்குகளைத் திரட்டித்தர நாங்கள் தேவை.. போஸ்டர் ஒட்டுவது தொடங்கி எல்லாவற்றுக்கும் நாங்கள் தேவை&#8230; ஆனால் எங்களுக்கான அங்கீகாரம் மட்டும் கிடையாது. இப்படியான நிலை தொடரும்போது இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா?</p>
<p><strong>தலித் மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டி கூட்டணி அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடலாமே?</strong></p>
<p>ஒருங்கிணைப்பு என்பது வெறுமனே தலைவர்களை ஒன்று சேர்ப்பது அல்ல. நானும் கிருஷ்ணசாமியும் ஜான் பாண்டியனும் ஒரு மேடையில் திரள்வது அல்ல. அடித்தட்டு மக்களை ஒன்றாகத் திரட்டுவது. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது. ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்த புரிதலை உருவாக்குவது. அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தபோது அவர்கள் என்னை அந்நியமாகவே பார்க்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? நான் தலித் பிரச்னைகளை மட்டும் பேசுவதில்லை. ஈழம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் விவாதிக்கிறேன் என்கிறார்கள். குறிப்பாக, சாதிப்பெருமையைப் பற்றி மேடைகளில் பேசுவதில்லை என்கிறார்கள். இப்படியான பிரச்னைகள்தான் எங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்றன.</p>
<p><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/DSC_5320.jpg" rel="lightbox[5861]"><img class="alignright size-medium wp-image-5870" title="DSC_5320" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/DSC_5320-300x200.jpg" alt="" width="300" height="200" /></a>திராவிட இயக்கத்தின் மீது கடுமையான கருத்து யுத்தத்தைத் தொடங்கியுள்ள பாமகவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?</strong></p>
<p>பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் குணா எழுப்பிய வாதம்தான் இது. அதன்காரணமாக, குணா அவர்கள் பலமாக விமரிசிக்கப்பட்டதும் கண்டிக்கப்பட்டதும் தனிமைப்படுத்தப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை, திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பன போன்ற கோஷங்களை ராமதாஸ் அப்போதே எழுப்பியிருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். அதற்கு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கலாம். அந்த வாய்ப்பை அப்போது தவறவிட்டதோடு, திராவிட இயக்கத்தின் முக்கியக் கட்சிகளோடு தேர்தல் உறவுகளை மாற்றிமாற்றி வைத்துவிட்டு, திடீரென அந்தக் கட்சிகளைப் பற்றி விமரிசித்துப் பேசுவது மக்கள் மத்தியில் எடுபடாது.</p>
<p>திமுக, அதிமுக இல்லாமல் இன்றைய தேர்தல் களத்தில் வெற்றிபெறுவது சாத்தியமே இல்லை. இத்தகைய கோஷத்தை இன்று புதிதாகப் பிறக்கும் ஒரு கட்சி எழுப்பினால் ஒருவேளை மக்கள் ஆதரவு கிடைக்குமே தவிர பாமக போன்ற கட்சிகள் எழுப்பினால் அதற்கு எவ்வித ஆதரவும் கிடைக்காது. மேலும், தமிழ்நாட்டில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் என்று பலரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். இனத் தூய்மைவாதம் பேசுவதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.</p>
<p><strong>இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்றக் குழுவில் இருந்து திமுக, அதிமுக விலகியது சரியான செயல்தானா?</strong></p>
<p>இலங்கை செல்லும் குழுவில் பங்கேற்கமாட்டோம் என்று அதிமுக சொன்னது ஒரு அரசியல் நடவடிக்கைதான். இதோ பாருங்கள், நாங்கள் செல்லவில்லை. ஆனால் திமுகவினர் சென்று ராஜபட்சேவுடன் கைகுலுக்கிறார்கள் என்று திமுகவை விமரிசனம் செய்யவே அப்படியொரு நடவடிக்கையை அதிமுக எடுத்தது. அதிமுக விலகியதும் திமுகவும் விலகி, அதிமுகவின் விமரிசனத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொண்டுவிட்டது. உண்மையில், எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இலங்கை சென்றிருக்கவேண்டும். அங்கு நடப்பனவற்றைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பதிவுசெய்வதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.</p>
<p>(<a href="http://www.aazham.in/">ஆழம்</a>, மே மாத இதழில் வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது).</p>
<p>0</p>
<p><strong>ஆர். முத்துக்குமார்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5861&amp;title=%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" id="wpa2a_4">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5861</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>வழக்கு எண் 18/9</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5856</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5856#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 05:10:53 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[விமரிசனம்]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[பாலாஜி சக்திவேல்]]></category>
		<category><![CDATA[வழக்கு எண் 18/9]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5856</guid>
		<description><![CDATA[கல்லூரிக்கு மேலே காதலுக்குக் கீழே பண்ணையார் மகளை பண்ணையாள் காதலிப்பது&#8230; மதம் மாறிக் காதலிப்பது&#8230; காதலி அல்லது காதலனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத நோய் வந்துவிடுவது&#8230; பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், இறந்து போன காதலனின் கண்ணைப் பொருத்திக் கொண்டவன் மேல் காதல், காதலுக்காக வெட்ட முடிந்ததையெல்லாம் வெட்டுதல் என தமிழ் திரையுலகத்தினரிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே&#8230; அனுபவித்தால்தான் புரியும். ஆனால், இந்த காக்கைக் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறு குயிலாக ஒருவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>கல்லூரிக்கு மேலே காதலுக்குக் கீழே</strong></p>
<p>பண்ணையார் மகளை பண்ணையாள் காதலிப்பது&#8230; மதம் மாறிக் காதலிப்பது&#8230; காதலி அல்லது காதலனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத நோய் வந்துவிடுவது&#8230; பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், இறந்து போன காதலனின் கண்ணைப் பொருத்திக் கொண்டவன் மேல் காதல், காதலுக்காக வெட்ட முடிந்ததையெல்லாம் வெட்டுதல் என தமிழ் திரையுலகத்தினரிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே&#8230; அனுபவித்தால்தான் புரியும். ஆனால், இந்த காக்கைக் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறு குயிலாக ஒருவர் உண்டு. அவர்தான் பாலாஜி சக்திவேல்.</p>
<p>காதலை இதுவரை யாருமே சொல்லியிராத கோணத்தில் சொல்லவேண்டும் என்பதுதான் பாலாஜி சக்திவேலின் லட்சியமும் கூட. இந்தப் படத்தில் காதலிக்காமலேயே காதல் அதாவது, காதல் காட்சிகள் இல்லாமலேயே காதல் என்ற புதுமையான பாணியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.</p>
<p style="text-align: center;"><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vazhakku-enn-movie-preview.jpg" rel="lightbox[5856]"><img class="aligncenter size-full wp-image-5857" title="vazhakku-enn-movie-preview" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vazhakku-enn-movie-preview.jpg" alt="" width="300" height="223" /></a></p>
<p>இந்தப் படத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு பணக்கார மாணவன் அதே வயதில் இருக்கும் இன்னொரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதுபோல் நடித்து செல்போனில் அவளை ஆபாசமாக படமெடுக்கிறான். அது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்ததும் சண்டைபோட்டுப் பிரிந்துவிடுகிறாள். கோபப்படும் அந்தப் பையன் அவள் மீது ஆசிட் ஊற்ற முயற்சி செய்கிறான். ஆனால், விதிவசமாக அது அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டில் வேலை பார்க்கும் கதாநாயகி மீது ஊற்றப்பட்டுவிடுகிறது. கதாநாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் நாயகன்தான் இதைச் செய்திருப்பான் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவனை அழைத்து விசாரிக்கிறது. அவன் தன்னுடைய சோகமயமான வாழ்க்கையை விவரிக்கிறான். அதுதான் படத்தின் முதல்பாதி.</p>
<p>இரண்டாம் பாதியில் அந்தப் பணக்காரப் பெண், தன்னிடம் மோசமாக நடந்துகொண்ட பையன்தான் ஆசிட் ஊற்றியிருப்பான் என்று சொல்கிறாள். பணக்கார மாணவன்தான் செய்திருக்கிறான் என்பது ஆசிட் பாட்டிலில் கிடைக்கும் கைரேகையில் இருந்து தெரியவருகிறது. ஆனால், இந்த இடத்தில் காவல்துறை அதிகாரி டபுள் கேம் ஆடுகிறார். பணக்கார மாணவனின் அம்மாவிடமிருந்து பத்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு நாயகனைக் குற்றவாளியாக ஆக்கிவிடுகிறார்.</p>
<p>கதாநாயகியின் முகம் குணமாகவேண்டுமென்றால், பத்து லட்ச ரூபாய் தேவைப்படும்; பழியை ஏற்றுக் கொள். பணக்கார மாணவனின் அம்மாவிடம் அந்தப் பணத்தை வாங்கித் தருகிறேன் என்று காவல்துறை அதிகாரி சொல்கிறார். கதாநாயகனும் தன் காதலியின் முகம் குணமாகவேண்டும் என்று அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறான். ஆனால், காவல்துறை அதிகாரி அவனை ஏமாற்றிவிடுகிறார். இது தெரியவரும் நாயகி என்ன செய்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.</p>
<p>செல்போனை வைத்து மாணவர்கள் ஆபாசப் படங்கள் எடுப்பது உண்மையில் நடக்கக்கூடிய விஷயம்தான். ஆனால், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பதுபோல் அது நடக்க வாய்ப்பில்லை. ஸ்கர்ட் அணிந்த ஒரு பெண்ணுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு பேசியபடியே, தொடைக்கு நேராக செல்போனை வைத்து படமெடுப்பது, கடற்கரையில் குளிக்கும்போது தள்ளி உட்கார்ந்து படமெடுப்பது, ஹோட்டல் அறையில் சார்ஜ் பண்ண கொண்டு வந்து போனை வைத்துவிட்டு உடை மாற்றுவதைப் படமெடுப்பது என செய்வதெல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரியாமல் நடக்க சாத்தியமில்லை. சினிமாத்தனம் வேண்டாம் என்று நினைப்பது சரிதான். ஆனால், தர்க்கபூர்வமாகவும் அந்தக் காட்சிகள் சரியாக இருக்க வேண்டுமல்லவா?</p>
<p>அடுத்ததாக, இப்படி ஆபாசப் படங்களை எடுக்கும் ஒருவன் தன்னுடைய செல்போனை மிகவும் பாதுகாப்பாகவே வைத்துக்கொள்வான். படத்திலோ எந்தப் பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்தானோ அவள் கையில் எளிதில் சிக்கும்படியாக வைத்துவிட்டுப் போகிறான். இத்தனைக்கும் இதற்கு முன் ஒருநாள் காஃபி ஷாப்பில் இருவரும் சந்தித்தபோது போனை அவனுக்குத் தெரியாமல் எடுத்துப் பார்க்கவும் செய்திருக்கிறாள். எனவே, ஆபாசப் படம் எடுத்த பிறகும் அப்படி வைத்துவிட்டுப் போகிறான் என்பது நம்பும்படியாக இல்லை.</p>
<p>அந்தப் பெண் செல்போனை எடுத்துப் பார்க்கும் நேரம் பார்த்து அந்தப் பையனின் நண்பர்கள், ஆபாசப் படம் எடுத்தாகிவிட்டதா என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். சுதாரித்துக் கொள்ளும் அந்தப் பெண் செல்லில் பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கிறாள். அடுத்த விநாடியே அவற்றை அழித்துவிடுவதோடு மெமெரி கார்டையும் எடுத்துக் கொண்டுவிடுகிறாள். அவர்கள் இருவருக்கு இடையில் சண்டை வந்து பிரிந்துவிடுகிறார்கள். இந்தப் பையன் மீண்டும் அவள் பின்னால் சென்று தொந்தரவு செய்கிறான். போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டுகிறாள். அதன் பிறகு பள்ளிக்குப் போகும்போது தன் அம்மாவைத் துணைக்கு அழைத்துச் செல்கிறாள். அதாவது, அவள் பிரச்னையைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஒதுங்கிப் போகிறாள்.</p>
<p>இப்போது, தவறு செய்து மாட்டிக்கொண்ட ஒருவன் என்ன செய்வான்? சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நினைத்து அவளிடமிருந்து ஒதுங்கிவிடலாம். அல்லது அவள் நாளைக்கு யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்து அவளைக் கொல்ல முயற்சி செய்யலாம். கொலை என்பது 12 வகுப்பு மாணவனுக்கு அதிகப்படியானது என்று நாம் இப்போது சொல்ல முடியாது. ஆசிரியரையே குத்திக் கொல்லும் அளவுக்கு மாணவர்கள் சீரழிவின் பாதையில் விரைவாக போக ஆரம்பித்திருக்கும் காலம் இது. எனவே, அது சாத்தியமான ஒன்றுதான்.</p>
<p>இந்தப் படத்திலும் அந்தப் பையன் காரில் வேகமாக வந்து அந்தப் பெண்ணைக் கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால், அவள் சிறு காயத்துடன் தப்பித்துவிடுகிறாள். இந்த நிலையில் அவனுடைய அடுத்த முயற்சியும் நிச்சயம் இதுபோல் வன்முறை மிகுந்த ஒன்றாகவேதான் இருக்கும். ஆனால், படத்தில் ஆசிட்டை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்தில் ஊற்ற முயற்சி செய்கிறான். கொலைக்குக் குறைவாக அவன் செய்யும் எந்தவொரு செயலும் அவனுக்கு எந்தவகையிலும் பயன் தரப்போவதில்லை. அது பிரச்னையை மேலும் பெரிதாக்கத்தான் செய்யும்.</p>
<p>காதலித்த பெண் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் ஒருவன் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆபாசப் படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் அப்படிச் செய்ய எந்த காரணமும் இல்லை. இத்தனைக்கு அந்தப் பெண் பிரச்னையில் இருந்து ஒதுங்கிப் போகத்தான் விரும்பி இருக்கிறாள்.</p>
<p>அதுபோல், காவல்துறை அதிகாரி செய்யும் செயலும் நம்பும்படியாக இல்லை. ஆசிட் ஊற்றியது யார் என்பது அவருக்குத் தெரிய வருகிறது. அந்தப் பையனின் அம்மாவிடம் இருந்து பத்து லட்ச ரூபாய் கறக்க முடிவு செய்கிறார். பழியை ஏழை நாயகன் மீது போடத் தீர்மானிக்கிறார். ஆனால், அதற்கு அவர் செய்யும் செயல்களைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p>
<p>செய்யாத தவறைச் செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி ஏழை நாயகனை லாக்கப்பில் போட்டு சாவடி அடிக்க வைக்கிறார். அதற்கு அவன் சிறிதும் மசியாமல் போகவே, அன்பாகப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறார். நீ காதலித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் பட்டதால் ஏற்பட்ட தழும்புகளைக் குணப்படுத்த அந்தத் தவறைச் செய்த பணக்காரப் பையனின் அம்மாவிடம் இருந்து பத்து லட்ச ரூபாய் வாங்கித் தருகிறேன். குற்றத்தை நீதான் செய்ததாக ஒப்புக்கொள் என்று நைச்சியமாகப் பேசுகிறார். இதெல்லாம் அவசியமே இல்லை. குற்றவாளி ஒப்புக்கொண்டால்தான் அவனுக்கு தண்டனை கொடுக்க முடியும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது?</p>
<p>அதுவும்போக ஏழை ஒருவனை வழக்கில் சிக்க வைக்க விரும்பினால், ஒரு காவல் துறை அதிகாரியால் வெகு எளிதில் அதைச் செய்துவிட முடியும். இத்தனைக்கும் இந்தப் படத்தில் அந்த ஏழைப் பெண்ணின் அம்மா, கதாநாயகன்தான் செய்திருப்பான் என்றுதான் சாட்சி சொல்லியிருக்கிறார். ஆசிட் பாட்டிலில் நாயகனின் கை ரேகை இருந்ததாக ஒரு பொய் ரிப்போர்டும் ஓரிரு பொய் சாட்சிகளையும் ஏற்பாடு செய்தால் விஷயம் முடிந்துவிடும். காவல்துறை அதிகாரிக்கு ஏழை நாயகனுடன் டீல் பேச வேண்டிய அவசியமே கிடையாது.<br />
இவையெல்லாம் படத்தின் சாதாரணமான தவறுகள்தான். ஆனால், மிகவும் பெரிய தவறு என்பது பாலாஜி சக்திவேலின் கதை அமைப்பில் இருக்கிறது. இந்தப் படத்தோடு அவருடைய முந்தைய இரண்டு படங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தெரியவருகிறது. காட்சி அமைப்பு, கதை நிகழ்வுகள், வசனம், நடிகர் தேர்வு என பல விஷயங்களில் வழக்கமான சினிமாத்தனங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் படத்தின் க்ளைமாக்ஸை மிகவும் வித்தியாசமானதாக, அதிர்ச்சியானதாக எடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். க்ளைமாக்ஸ் என்பது அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது இயல்பானதாக, தர்க்கபூர்வமானதாக இருக்கவேண்டும். அதுவும் நீங்கள் சினிமாத்தனங்களை அறவே விலக்கும் ஒருவராக இருக்கும்பட்சத்தில் உடலுக்குப் பொருத்தமானதாகத்தானே தலை இருக்க வேண்டும்.</p>
<p>காதல் படத்தில் காதலியின் அப்பாவே காதலனை அடித்து பைத்தியமாக்கிவிடுகிறார். காதலன் எங்கோ யாரையோ திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்து காதலி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். தன் காதலனைப் பைத்தியமாக நடுத்தெருவில் ஒருநாள் பார்க்க நேருகிறது. நிலை குலைந்துபோய்விடுகிறாள். காதலியின் அப்பாவே காதலுக்கு எதிரியாக வந்தார் என்பது மிகவும் நம்பகமான ஒன்று. எனவே, இந்த அதிர்ச்சி க்ளைமாக்ஸ் கதைக்குப் படு பொருத்தமாக அமைந்துவிட்டது.<br />
கல்லுரி படத்தில் நகர்ப்புறத்தில் வசித்து வந்த நாயகி, கிராமப்புற கல்லூரிக்குப் படிக்க வருகிறாள். அதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை படம் முழுக்கக் கொண்டு செல்வார். தருமபுரியில் பேருந்து தீ வைக்கப்பட்டு மூன்று மாணவிகள் இறந்த சம்பவத்தை படத்தின் க்ளைமாக்ஸாக வைத்திருந்தார். ஒரு அரசியல் பின்னணி கொண்ட படத்தில்தான் அரசியல்வாதிகளின் செயலால் ஏற்படும் இழப்பை க்ளைமாக்ஸாக வைக்க முடியும். அந்த வகையில் அந்தப் பொருந்தாத க்ளைமாக்ஸ் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றவிடாமல் செய்துவிட்டது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நடந்த பேருந்து எரிப்பு சம்பவத்தை ஆந்திராவில் நடந்ததாக வேறு காட்டியிருந்தார். எனவே, அது சமூக அக்கறை சார்ந்த நோக்கிலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.</p>
<p>இந்தப் படத்தில் ஓரளவுக்கு நாயகியுடன் தொடர்புடைய ஒருவரை வில்லனாக காட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவதாக இன்னொரு வில்லனைக் காட்டி அதிரடி க்ளைமாக்ஸை அவரோடு முடித்துக்கொண்டுவிட்டார். அப்படியாக இந்த அதிரடி க்ளைமாக்ஸ் யுக்தியானது கல்லூரி படத்தைவிட சற்று மேலானதாகவும் காதல் படத்தைவிடக் கீழானதாகவும் இருக்கிறது. படத்தின் வெற்றியும் நிச்சயம் அதுபோலவே அமையும்.<br />
முதல் பாதிக் கதையானது ஏழைக் காதலனின் கோணத்தில் இடம்பெறுகிறது. இரண்டாவது பாதி கதையானது பணக்காரப் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. இப்படி இரண்டு கதாபாத்திரங்களின் பார்வையாகக் கதையைச் சொல்லும்பாணியானது அதற்குப் பின்னால் இருக்கும் எளிய சூத்திரம் தெரியாதவர்களுக்கு மிகப் பெரிய சாதனையாகவே தோன்றும். அந்த வகையில் சராசரி தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் அது பிரமிப்பை ஊட்டுவதாகவே இருக்கும்.</p>
<p>உண்மையில் இந்தப் படத்தை நிச்சயம் வேறு விதமாக அருமையாக எடுத்திருக்க முடியும். ஒரே ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். ஒருவன் உண்மையாகக் காதலிக்கிறான். இன்னொருவன் ஆபாசப் படங்கள் எடுப்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான் (இதிலும் உண்மைக் காதலன் ஏழை என்றும் ஆபாசப் படம் எடுப்பவன் பணக்காரன் என்றும் தனியாக நான் சொல்லத் தேவையில்லை).</p>
<p>ஏழை நாயகியை பணக்காரன் ஆசை வார்த்தைகள் சொல்லி மயக்குகிறான். புதிய ஆடைகள் வாங்கிக் கொண்டுவந்து தந்து போட்டுக் கொள்ளச் சொல்கிறான். ரகசியமாக செல்போனை அந்த அறையில் வைத்து படம் எடுத்து தன் நண்பர்களுக்குக் காட்டி மகிழ்கிறான். அவன் இப்படிச் செய்வது ஏழை நாயகனுக்குத் தெரியவருகிறது. நாயகியைப் பார்த்து எச்சரிக்கிறான். ஆனால், அவளோ பணக்கார மாணவனை நம்புகிறாள்; ஏழை நாயகனைத் திட்டி அனுப்புகிறாள். இதுபோல் பல சம்பவங்களில் பணக்கார மாணவன் நல்லவனாகவும் ஏழை நாயகன் கெட்டவனாகவும் சிக்கிக் கொள்கிறான்.</p>
<p>அந்த பணக்கார மாணவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. சில நாட்கள் அவனுடன் பழகியதில் அவனுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்றவே அந்தப் பெண் அவனிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறாள். அவள் மீது கோபம் கொள்ளும் அந்த பணக்கார மாணவன் ஆசிட் ஊற்ற முடிவெடுக்கிறான். அது விதிவசமாக ஏழை நாயகியின் மேல் ஊற்றப்பட்டுவிடுகிறது.</p>
<p>ஏழை நாயகன்தான் ஆசிட் ஊற்றியிருப்பான் என்று விசாரணையை முதலில் ஆரம்பிப்பார்கள். அவன் தன்னுடைய சோகக் கதையைச் சொல்லி முடிப்பான். விசாரணை முடியும்வரை தினமும் வந்து காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். வெளியே வந்தவன் முதல் வேலையாக நாயகிக்கு சிகிச்சை செய்து அவளைக் குணப்படுத்த வேண்டும் என்று தவிப்பான். பணத்தைப் புரட்ட முயற்சி செய்வான். பணக்கார மாணவனின் அம்மா தன் மகனைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருப்பார்.</p>
<p>எங்கு தேடியும் பணம் கிடைக்காமல் போகவே, நாயகன் அந்தப் பணக்கார மாணவனை நேராகச் சந்தித்து, நீதான் ஆசிட் ஊற்றினாய் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் அந்தப் பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ என் காதலியின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவு என்று கேட்பான். அவனும் சரி என்று சம்மதிப்பான். ஏழை நாயகியை காதலித்ததாகவும் அவள் வெறுத்ததால் அவள் மேல் ஆசிட் ஊற்றியதாகவும் கதாநாயகன் நீதிமன்றத்தில் பொய்யாகக் குற்றத்தை ஏற்றுக் கொள்வான். அவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுவிடும்.<br />
அதன் பிறகு பணக்கார மாணவன் கேட்ட பணத்தைத் தராமல் ஏமாற்றிவிடுவான். இந்த விஷயங்கள் எல்லாம் நாயகிக்குத் தெரியவரும். தான் இது நாள் வரை வெறுத்து ஒதுக்கியவன்தான் உண்மையாகத் தன்னைக் காதலித்திருக்கிறான். தான் நல்லவன் என்று நினைத்து யாரிடம் பழகினோமோ அவன்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்பது தெரிந்துகொண்டதும் நேராக அவன் வீட்டுக்குப் போவாள். அவனுடைய அரசியல் செல்வாக்கு, பணபலம் எல்லாவற்றையும் சொல்லிக் காட்டிவிட்டு, எங்களைப் போன்ற ஏழைகளால் என்ன செய்ய முடியும் என்ற அகம்பாவத்தில்தானே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாய்&#8230; உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஒரிஜினல் படத்தில் செய்திருக்கும் செயலைச் செய்து பழிவாங்குவாள்.</p>
<p>இந்த வழக்குக்கு மக்களிடையே இன்னும் நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கும்.</p>
<p>0</p>
<p><strong>B.R. மகாதேவன்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5856&amp;title=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%2018%2F9" id="wpa2a_6">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5856</wfw:commentRss>
		<slash:comments>39</slash:comments>
		</item>
		<item>
		<title>அலெக்ஸ் பால் மேனன் : மாவோயிஸ்டுகள் செய்தது சரியா?</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5820</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5820#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 09:26:43 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[அலெக்ஸ் மேனன்]]></category>
		<category><![CDATA[கடத்தல்]]></category>
		<category><![CDATA[கலெக்டர் கடத்தல்]]></category>
		<category><![CDATA[சத்தீஸ்கர்]]></category>
		<category><![CDATA[நக்ஸலைட்]]></category>
		<category><![CDATA[பகத் சிங்]]></category>
		<category><![CDATA[பால் அலெக்ஸ் மேனன்]]></category>
		<category><![CDATA[புரட்சி]]></category>
		<category><![CDATA[மன்மோகன் சிங்]]></category>
		<category><![CDATA[மார்க்சியம்]]></category>
		<category><![CDATA[மாவோயிஸ்டுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5820</guid>
		<description><![CDATA[1 &#8216;நான் நலமாக இருக்கிறேன், ஒரு நாள் கழித்து மேற்கொண்டு பேசுகிறேன்!&#8217; கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பால் அலெக்ஸ் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் விடுவித்துவிட்டாலும், மீடியா அவரை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடாது. வனத்தில் அவர் கழித்த பொழுதுகள் குறித்தும், என்ன உண்டார், எங்கு உறங்கினார், என்ன சிந்தித்தார், எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்தும், கடத்தியவர்கள் அவருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும், அவருடைய எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகள் அடுத்தடுத்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>1</strong></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/paul-alex-menon.jpg" rel="lightbox[5820]"><img class="alignleft size-medium wp-image-5850" title="paul alex menon" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/paul-alex-menon-195x300.jpg" alt="" width="195" height="300" /></a>&#8216;நான் நலமாக இருக்கிறேன், ஒரு நாள் கழித்து மேற்கொண்டு பேசுகிறேன்!&#8217; கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பால் அலெக்ஸ் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் விடுவித்துவிட்டாலும், மீடியா அவரை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடாது. வனத்தில் அவர் கழித்த பொழுதுகள் குறித்தும், என்ன உண்டார், எங்கு உறங்கினார், என்ன சிந்தித்தார், எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்தும், கடத்தியவர்கள் அவருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும், அவருடைய எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகள் அடுத்தடுத்து வீசப்படும். குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு மேனன் மீடியாவால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்படுவது உறுதி.</p>
<p>இந்தியாவின் முதன்மையான அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் நக்ஸலைட்டுகளை வர்ணித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாவோயிஸ்ட் இயக்கம் குறித்த விவாதங்கள் அதிகம் நடைபெற்றதில்லை.  முன்னதாக, ஒடிசா எம்எல்ஏ ஜினா ஹிகாகா கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் இங்கே செய்திகளாக மட்டுமே வலம் வந்தன. விவாதப்பொருளாக உருபெறவில்லை. காரணம், மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் மத்திய இந்தியாவில் மட்டுமே குவிந்திருக்கின்றன. அலெக்ஸ் மேனன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறை மாவோயிஸ்டுகள் இங்கே அதிக கவன ஈர்ப்பைச் சம்பாதித்துள்ளனர்.</p>
<p><strong>2</strong></p>
<p>மும்பையைச் சேர்ந்த அருண் ஃபெரைராவுக்கு வயது 38. மே 2007ல் நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அவர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு, கொலை வழக்குகள். அத்தனை வழக்குகளையும் உயர் நீதிமன்றம் செப்டெம்பர் 2001ல் தள்ளுபடி செய்தது. நாக்பூர் மத்திய சிறையில் இருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை மேலும் இரு வழக்குகள். ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொன்றில் இப்போது பெயில் கிடைத்துள்ளது.</p>
<p>38 வயதான அருண், கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோத, அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் சமூக சேவையில் ஈடுபடுபவராகவும் இருந்தார். பஸ்திக்கள் என்று அழைக்கப்படும் சேரிக்களை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம் பகுதி மக்களுடன் இணைந்து எதிர்த்திருக்கிறார். சேரிக்களைச் சீரமைக்கவேண்டும் என்பது இவர் ஆசை. இளைஞர்கள், ஆதிவாசிகள், தலித் மக்கள் ஆகியோருடன் இணைந்து மகாராஷ்டிராவில் பணியாற்றினார். கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடி வருகிறார்.</p>
<p>மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் மிகுந்திருக்கும் கிழக்கு மகாராஷ்டிராவில்தான் அருணும் இயங்கிவந்தார் என்னும் ஒரு காரணம் போதாதா, அவரையும் ஒரு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதற்கு?</p>
<p>தன் சிறை அனுபவங்களை அருண் ஃபெரைரா ஃபவுண்டன் இங்க் இதழுடன் பகிர்ந்துகொண்டார்.</p>
<blockquote><p>சிறையில் முதல் சில நாள்களுக்கு உங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். உடைகளைக் களையச் சொல்வார்கள். கைகளில், கால்களில், வயிற்றில் எட்டி உதைப்பார்கள், அடிப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு முற்றிலும் அடிபணிந்துபோகும்படி செய்வார்கள். எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். அடிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கும்.</p>
<p>நக்ஸல் இயக்கத்துடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னபிறகும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் சித்திரவதைகள் தொடர்ந்தன.</p>
<p>முதலில் பத்து நாள்கள் போலிஸ் கஸ்டடியில் வைத்திருப்பதற்கான அனுமதியை மட்டுமே நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். பிறகு நார்கோ-அனலிஸ் (உண்மை அறிவதற்கான மருத்துவ, மனோதத்துவ முறை) செய்வதற்கான அனுமதி பெற்று மும்மை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த உண்மைகள் என்னிடம் இருந்து கிடைக்காததால், மேலும் பல வழக்குகள் பதிவு செய்து, சிறைத் தண்டனையை நீட்டித்தார்கள்&#8230; மீண்டும் மீண்டும் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்&#8230; என்னுடன் இருந்தவர்கள் மேலும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் சிறையில் இருந்த ஒவ்வொரு மணித் துளியையும் போலிஸ் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவர்களை வரவழைத்து, பரிசோதித்து வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தும்போது சித்திரவதை தழும்புகள் தெரியக்கூடாது அல்லவா?</p>
<p>மிகவும் அடிப்படையான சித்திரவதை, தூங்க விடாமல் செய்வது. பிறகு, உங்களுடைய பலவீனத்தைக் கண்டறிந்து தாக்குவது. உதாரணத்துக்கு, நான் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டு, நீ இப்போது எப்படி இருக்கிறாய் பார்த்தாயா என்று சொல்லிச் சொல்லி என்னை மனம் தளரச் செய்ய முயற்சி செய்தார்கள்&#8230; உன் மனைவியைப் பலாத்காரம் செய்வேன், உன் குடும்பத்தைச் சீரழிப்பேன் என்றெல்லாம் மிரட்டுவார்கள்.</p>
<p>அவர்களுக்குத் தேவைப்படும் உண்மைகளை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்னும் நோக்கத்துடன்தான் ஒவ்வொருமுறையும் அவர்கள் கைதிகளைச் சந்திக்கிறார்கள். கேட்டது கிடைக்காதபோது, வெறுப்பும் கோபமும் அதிகமாகிறது. சித்திரவதையின் தீவிரமும் அதிகரிக்கிறது.</p></blockquote>
<p>அருண் ஃபெரைராவின் <a href="http://fountainink.in/?p=1759">சிறை அனுபவங்கள் முழுவதுமாக இங்கே</a> கிடைக்கின்றன.</p>
<p><strong>3</strong></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/maoist-rebel.jpg" rel="lightbox[5820]"><img class="alignright size-medium wp-image-5851" title="India Maoist Strike" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/maoist-rebel-300x194.jpg" alt="" width="300" height="194" /></a></p>
<p>பஸ்தாரில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றிய B.D. ஷர்மா என்பவரின் கருத்து இது. &#8216;மாவோயிஸ்டுகள் பொதுவாக தங்கள் கைதிகளை நன்றாகவே நடத்துவார்கள்.&#8217; (அவுட்லுக், மே 7, 2012). இது உண்மைதானா என்பதை கூடிய விரைவில் பால் மேனனே உறுதி செய்துவிடுவார். மேற்படி அவுட்லுக் இதழில் காணப்படும் ஒரு தகவலின்படி கிட்டத்தட்ட 20,000 &#8216;மாவோயிஸ்டுகள்&#8217; 9 மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் மட்டும் கிட்டத்தட்ட 1,700 பேர் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் அருண் ஃபெரைராவைப் போன்றவர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. &#8216;தங்கள் இருப்பிடத்தை விட்டு அகல மறுக்கும் அல்லது தங்கள் வளம் கொள்ளை போவதைத் தடுக்க முயலும் ஒவ்வொருவரும் மாவோயிஸ்டுகளாகவே பார்க்கப்படுகிறார்கள்&#8217; என்கிறார் B.D. ஷர்மா. இதனால்தான் அலெக்ஸ் மேனன் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டதையும், அருண் ஃபெரைரா அரசு காவல் துறையால் சிறை வைக்கப்பட்டதையும் ஒப்பிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.</p>
<p>மேற்கொண்டு விவாதத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மாவோயிஸ்டுகளின் ஆள்கடத்தல்களையும் தனிநபர் படுகொலைகளையும் சாகசவாதமாகவே நான் பார்க்கிறேன். சாகசவாதம் புரட்சி ஆகாது என்பதாலேயே அவற்றை நான் எதிர்க்கவும் செய்கிறேன். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மாவோயிஸ்டுகளுக்குக் குறுகிய லாபங்களை மட்டுமே அளிக்கும். மக்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தவும் செய்யும். அரசியல் ரீதியில் மக்களை அணி திரட்டாமல், அரசியல் ரீதியில் அவர்களைத் தயார்படுத்தாமல், அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுத்து போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாமல், வெறும் சாகசங்களை மட்டுமே நம்பி ஒரு குழு எந்தவொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் அவ்வாறு நிகழவில்லை. அந்த வகையில், அலெக்ஸ் மேனனைச் சிறைபடுத்திய மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.</p>
<p>நம்மில் பெரும்பாலானோர் இந்தக் கருத்தை ஏற்பார்கள். ஆனால், மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கும் எத்தனை பேரால்,  ஆயிரக்கணக்கான அருண் ஃபெரைராக்களைச் சிறைபிடித்து சென்று சித்திரவதை செய்யும் அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கமுடியும்? மாவோயிஸ்டுகள் புரிவது தீவிரவாதம் என்றால் அரசின் செயல்பாடுகளை எப்படி அழைப்பது?  வன்முறை பாதையை மாவோயிஸ்டுகள் கைவிடவேண்டும் என்று நீட்டி முழக்கும் எத்தனை பேரால் அரசு வன்முறை குறித்து உரையாடமுடியும்?</p>
<p>காந்தியின் அகிம்சை தோற்ற இடம் மிகச் சரியாக இதுவே. காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் அனைத்துமே இந்தியர்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான். பிரிட்டனை அவர் தீவிரமாக எந்தவோரிடத்திலும் எதிர்த்ததில்லை. அகிம்சை, மனித உரிமை, அமைதி பற்றி அக்கறை கொண்டுள்ள பலரும் இன்று அவர் வழியில் ஒருதலைபட்சமாக மாவோயிஸ்டுகளின் வன்முறையை மட்டுமே எதிர்க்கிறார்கள். இந்த மனநிலையை எப்படி அழைப்பது? சந்தர்ப்பவாதம் என்றா அல்லது அறியாமை என்றா?</p>
<p><strong>4</strong></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/bhagat-singh.jpg" rel="lightbox[5820]"><img class="alignleft size-full wp-image-5852" title="bhagat-singh" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/bhagat-singh.jpg" alt="" width="196" height="258" /></a>ஒரே செயலை ஓர் அரசாங்கம் செய்தால் ஒரு மாதிரியாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் செய்தால் இன்னொரு மாதிரியாகவும் அணுகும் போக்கு உலகம் தழுவியது. இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது, இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன.</p>
<p>உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? ரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா?  பகத் சிங் பதிலளிக்கிறார். &#8216;மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். &#8216;</p>
<p>பாராளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத்சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது. இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று இந்த இருவர் சார்பாக அசாப் அலி என்பவரால் படிக்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத்சிங், தொகுப்பு : சிவவர்மா, பாரதி புத்தகாலயம்).</p>
<p>ஏப்ரல் 8, 1929 அன்று பாராளுமன்றத்தில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் இரு வெடிகுண்டுகளை வீசியபோது, பிரதான எதிரியான சர் ஜான் சைமன் அங்குதான் இருந்தார். அவர்மீதே அந்தக் குண்டுகளை அவர்கள் வீசியிருக்கலாம். செய்யவில்லை. ஏன்? &#8216;எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்கமுடியாது. நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துகளைக் கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்கள் அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன்மூலம் அத்தேசத்தையே நசுக்கிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான்.&#8217;</p>
<p>புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.</p>
<blockquote><p>புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.&#8217;</p>
<p>சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில், இந்த நாகரிகத்தின் முழுக் கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியதே ஆகும்.</p>
<p>புரட்சி என்பதன் மூலம், இவ்விதம் நிலைகுலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான ஒரு சமூக அமைப்பை முதலாளித்துவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம்.</p>
<p>புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்தரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.</p>
<p>இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகிறோம். எங்களது மகத்தான லட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.</p></blockquote>
<p>1931 மார்ச் 22 அன்று பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில் காணப்படும் வரிகள் கீழே.</p>
<p>&#8216;வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை&#8230; துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தஙுகளது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.&#8217;</p>
<p>நம்மோடு சேர்ந்து மாவோயிஸ்டுகளும் பகத் சிங்கிடம் இருந்து சில பாடங்களைப் படித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.</p>
<p>0</p>
<p><strong>மருதன்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5820&amp;title=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%3A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F" id="wpa2a_8">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5820</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆஷ் கொலை வழக்கு – 2</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5836</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5836#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 09:08:49 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கொலை வழக்குகள்]]></category>
		<category><![CDATA[சட்டம்]]></category>
		<category><![CDATA[ஆங்கிலேயர்கள்]]></category>
		<category><![CDATA[ஆஷ் துரை]]></category>
		<category><![CDATA[இந்திய சுதந்தரப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[நீலகண்ட பிரம்மச்சாரி]]></category>
		<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[மணியாச்சி]]></category>
		<category><![CDATA[வ.உ.சி.]]></category>
		<category><![CDATA[வாஞ்சிநாதன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5836</guid>
		<description><![CDATA[பகுதி 1 அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, அப்போதைய பப்ளிக் பிராஸிக்யூட்டராக இருந்த நேப்பியர், அவருக்கு துணையாக ரிச்மண்ட், சுந்தர சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களுக்காக வாதாட நிறைய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ஜே.சி. ஆடம் என்ற பிரபல பாரிஸ்டர், ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் தங்குதூரி பிரகாசம் (1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்), எம்.டி.தேவதாஸ் (பின்னாளில் நீதிபதியாக ஆனார்), [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vaanchi-maniyaachi.jpg" rel="lightbox[5836]"><img class="aligncenter  wp-image-5837" title="vaanchi maniyaachi" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/vaanchi-maniyaachi.jpg" alt="" width="421" height="312" /></a></p>
<p><a href="http://www.tamilpaper.net/?p=5830">பகுதி 1</a></p>
<p>அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, அப்போதைய பப்ளிக் பிராஸிக்யூட்டராக இருந்த நேப்பியர், அவருக்கு துணையாக ரிச்மண்ட், சுந்தர சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டனர்.</p>
<p>குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களுக்காக வாதாட நிறைய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ஜே.சி. ஆடம் என்ற பிரபல பாரிஸ்டர், ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் தங்குதூரி பிரகாசம் (1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்), எம்.டி.தேவதாஸ் (பின்னாளில் நீதிபதியாக ஆனார்), ஜெ. எல். ரொஸாரியோ, பி. நரஸிம்ம ராவு, டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பின்னாளில் திருவாங்கூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்), எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், எஸ்.டி.ஸ்ரீனிவாச கோபாலாச்சாரி மற்றும் வி.ரையுரு நம்பியார்.</p>
<p>அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள், அப்ரூவர்களாக மாறிய ஆறுமுகப்பிள்ளை மற்றும் சோமசுந்தரப்பிள்ளை. இவர்கள் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எதிர் தரப்பு, இவர்களை குறுக்கு விசாரணை செய்தது. இரு தரப்பிலிருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது கடிதங்கள், டயரிகள் (நாட்குறிப்புகள்), பத்திரிக்கை வெளியீடுகள், அரசு ஆய்வறிக்கைகள் என நிறைய ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.</p>
<p>நீதிமன்ற விசாரணையின் போது சாட்சிகள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்தும் திரட்டப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :</p>
<p>வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஊழியராக இருந்து ஒய்வு பெற்றவர். வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வனத்துறையில், புனலூர் என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி பொன்னம்மாள் என்ற மனைவி இருந்தாள். வாஞ்சிநாதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அவர் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மூன்று மாத காலம் எங்கோ சென்றுவிட்டுத் திரும்பினார். வாஞ்சிநாதனுடைய தந்தைக்கு மகனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. வாஞ்சிநாதன் இறந்த பிறகு கூட ஈம காரியங்கள் செய்ய அவருடைய தந்தை வரவில்லை.</p>
<p>வாஞ்சிநாதனுக்கு வ.உ.சியின் (வ.உ.சிதம்பரம் பிள்ளை) மீது பக்தியும் பற்றுதலும் இருந்தது.</p>
<p>வ.உ.சிக்கு கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற வேறு பெயர்களும் உள்ளன. வ.உ.சி, அவர் தந்தையைப் போல சட்டம் பயின்று விட்டு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் (1903 -1905) காங்கிரஸ்காரர்களான பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய் ஆகியோர் சுதேசி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். ஆங்கிலேயர்களின் பொருள்களை வாங்காமல் புறக்கணித்தால், அவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று சுதேசி இயக்கம் நம்பியது. பலவீனமடைந்த நிலையில் ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.</p>
<p>சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிப்பும் விற்பனையும் அதிகரித்தன. யாரும் எதிர்பாராத வகையில் வ.உ.சி, ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.  தமிழகத்தில், தூத்துக்குடி- கொழும்பு வழித்தடத்துக்கு, ஆங்கிலேயக் கப்பல் British Steam Navigation Company  ஏகபோக உரிமை கொண்டாடியது. கப்பல் வர்த்தகம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அதை முறியடிக்கும் பொருட்டு, வ.உ.சி ஏகப்பட்ட செலவில் S.S.Geneli, S.S.Lawoe ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கினார். Swadeshi Steam Navigation Company என்ற நிறுவனத்தைத் தொடங்கி தூத்துக்குடி &#8211; கொழும்பு மார்க்கத்தில் கப்பல்களை இயக்கினார்.</p>
<p>வ.உ.சியின் போட்டியைத் தாங்கமுடியாத ஆங்கிலேய கம்பெனி நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வதற்கான பயணக் கட்டணத்தைத் தடாலடியாக 16 அனா (ஒரு ரூபாய்)  குறைத்தது. போட்டியைச் சமாளிக்க, வ.உ.சியும் தன்னுடைய கப்பல் கட்டணத்தை 8 அனாவாகக் (50 காசு) குறைத்தார். ஆங்கிலேய கம்பெனி இன்னும் ஒரு அடி மேலே போய், கப்பல் பயணத்துக்கான தன்னுடைய கட்டணத்தை மொத்தமாக ரத்து செய்தது. போதாக்குறைக்கு, தன் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இலவசக் குடை எல்லாம் கொடுத்தது. கேட்கவா வேண்டும் நம் மக்களை? பயணிகள் அனைவரும் ஆங்கிலேய கப்பலிலேயே பயணம் செய்தனர். மேலும், அப்பொழுது தூத்துக்குடி சப்-கலெக்டராக இருந்த ஆஷ், அவ்வப்போது தன் பங்குக்கு வ.உ.சியின் கப்பல் கம்பெனியின் அலுவலகத்துக்குச் சென்று, கணக்கு வழக்கு சரியில்லை என்று சொல்லி, சோதனை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் வ.உ.சியின் கப்பல்கள் காலியாகத்தான் இலங்கைக்கு சென்றுவந்தன. விளைவு வ.உ.சியின் கப்பல் கம்பெனி விரைவிலேயே திவாலானது. இதனால் வ.உ.சிக்கு பெருத்த நஷ்டம். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஆங்கிலேய கம்பெனியே வ.உ.சியின் இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் எடுத்தது.</p>
<p>வ.உ.சி தன்னுடைய முயற்சியில் மனம் தளரவில்லை. தன்னுடைய போராட்டத்தின் ஒரு கட்டமாக, தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் கம்பெனியில் (ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஏ அண்ட் எஃப் கம்பெனிதான் இந்த நூற்பாலையையும் நிர்வகித்து வந்தது) வேலை பார்த்த ஊழியர்களை ஒன்று திரட்டி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தீமைகளை விளக்கினார். வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவாவும் போராட்டத்தில் தோள் கொடுத்தார்.</p>
<p>(சுப்ரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் பிறந்தவர். சிறந்த எழுத்தாளர். பேச்சளாரும் கூட. இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தியதற்காக, பல முறை சிறை சென்றிருக்கிறார். தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறைக்குச் சென்ற முதல் தமிழர் இவர்தான். சிறையில் இவருக்கு தொழுநோய் தொற்றிக்கொண்டது. தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் இவர் ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். மனம் தளராத சிவா, பல ஆயிரம் மைல்கள் கால் நடையாகவே சென்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி மிகவும் வேதனைப்பட்டார்).</p>
<p>மில் ஊழியர்களும் ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராகப் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். ஆஷ் துரை தொழிலாளிகளையும் முதலாளிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு முதலாளிகள் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் அடைந்த வெற்றி, ஆஷ் துரையை உறுத்திக்கொண்டே இருந்தது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த வ.உ.சி மீது கடும் கோபத்தில் இருந்தான்.  தகுந்த சமயத்துக்காக காத்திருந்தான். சமயமும் வந்தது. பிபின் சந்திர பால் சுதந்திர போராட்ட வீரர், சுதேசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட முடிவெடுத்தது தூத்துக்குடி சுதேசி இயக்கம். ஆஷ் துரை வ.உ.சி யையும், சுப்பரமணிய சிவாவையும் கைது செய்தான். இதனால் திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கினான் ஆஷ் துரை. மற்ற மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.</p>
<p>வ.உ.சி மீதும், சுப்பரமணிய சிவா மீதும் தேச துரோகம் செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவை அனைத்திற்கும் பின்புலத்திலிருந்து ஆஷ் துரை செயல்பட்டான். வழக்கு விசாரிக்கப்பட்டு, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.</p>
<p>வாஞ்சிநாதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் வாஞ்சிநாதனுக்கு, தன்னுடைய மைத்துனன் சங்கரகிருஷ்ணன் மூலமாக நீலகண்ட பிரம்மச்சாரியின் அறிமுகம் கிடைத்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில், நீலகண்ட பிரம்மச்சாரி தென்தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்தார். வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். போராளி குழுக்களைத் தயார்படுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரியால் உந்தப்பட்டு, தன்னையும் போராட்டக் குழுவில் இணைத்துக்கொண்டார் வாஞ்சிநாதன். குழுவில் இடம்பெற்றவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர்.</p>
<p>நீலகண்ட பிரம்மச்சாரியின் போராட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுமுகப்பிள்ளை நீதிமன்றத்தில் பின்வருமாறு சாட்சி சொன்னார். &#8216;போராட்டக்காரர்கள் சந்தித்து கொள்ளும் இடத்தில் காளியின் படம் மாட்டப்பட்டிருக்கும். விபூதி, குங்குமம், பூ ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். குழுவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்போம். நீலகண்ட பிரம்மச்சாரி சற்று தொலைவில் உட்கார்ந்து காகிதங்களில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். காகிதத்தின் தலைப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் குங்குமத்தைத் தண்ணீரில் கரைப்போம். பின்னர் நீலகண்ட பிரம்மச்சாரி எழுதி வைத்திருந்த காகிதத்தில் நாங்கள் ஒவ்வொருவராக குங்குமத் தண்ணீரை தெளிப்போம். காகிதத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர்தான் ஆங்கிலேயர்களின் ரத்தம். குங்குமம் கலந்த தண்ணீரைப் பருகுவோம். வெள்ளைக்காரர்களின் ரத்தத்தை குடித்ததாக அர்ததம்&#8230; அனைத்து வெள்ளைக்காரர்களையும் கொல்வோம் என்று உறுதி எடுப்போம். இந்த காரியத்துக்காக எங்களுடைய உயிர், உடைமை அனைத்தையும் தியாகம் செய்வோம் என்று சத்தியப் பிரமானம் செய்வோம். குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர்கள் உண்டு. புனைப்பெயர்களை வைத்துதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம். வந்தே மாதரம் என்று எழுதப்பட்ட காகிதத்தில் நாங்கள் எங்களுடைய கைவிரல்களைக் கீரி, அதிலிருந்து வெளிப்படும் ரத்தத்தைக் கொண்டு எங்களுடைய புனைப்பெயருக்கு எதிராக கையொப்பம் இடுவோம்.&#8217;</p>
<p>வாஞ்சிநாதன் மூன்று மாதம் அலுவலகத்தில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு புதுச்சேரியில் வி.வி.எஸ்.ஐயரைச் சந்தித்தார். புதுச்சேரியில் பாரத மாதா என்ற அமைப்பைத் திறந்திருந்தார் வி.வி.எஸ் ஐயர். இந்த அமைப்பு சாவர்கர் ஆரம்பித்த அபினவ் பாரத் என்ற அமைப்பின் கிளையாகச் செயல்பட்டது. வாஞ்சிநாதன் பாரத மாதா அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புதுச்சேரியிலும் பரோடாவிலும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார். பின்னர் ஊருக்குத் திரும்பினார்.</p>
<p>திருநெல்வேலிக்கு வந்த வாஞ்சிநாதன், தன்னுடைய நண்பரான சோமசுந்ததரப்பிள்ளையிடம் ஆஷ் துரையைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்கும் பொருட்டு, சோமசுந்தரப்பிள்ளையின் சாட்சியம் நீதிமன்றத்தில் பின்வருமாறு பதிவாகியது.</p>
<p>&#8216;ஆங்கிலேய ஆட்சி இந்திய நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியை நீக்கவேண்டுமென்றால், இந்தியாவிலிருக்கும் அனைத்து ஆங்கிலேயர்களும் கொல்லப்படவேண்டும். அதற்கு முன்மாதிரியாக ஆஷ் கொல்லப்படவேண்டும். ஏனென்றால் அவன் தான் ஜில்லா கலெக்டராக இருந்து, சுதந்தரப் போராட்ட வீரரான வ.உ.சி தோற்றுவித்த சுதேசி கப்பல் கம்பெனியை மூடச்செய்தவன் என்று வாஞ்சிநாதன் என்னிடம் தெரிவித்தான்.&#8217;</p>
<p>நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நீலகண்ட பிரம்மச்சாரி சார்பாக அலிபி (Alibi) &#8212; வேறிட வாதத்தை முன்வைத்தனர். அதாவது வாஞ்சிநாதனை நீலகண்ட பிரம்மச்சாரி செங்கோட்டையில் சந்தித்தாக சொல்வது தவறு, நீலகண்ட பிரம்மச்சாரி அந்த சமயத்தில் அங்கு இல்லை, வேறு ஒரு ஊரில் இருந்தார் என்று சாட்சியம் அளிக்கப்பட்டது. மேலும் ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சி சொல்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்தனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களை வைத்து மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பது தவறு. குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களைத் தவிர, அந்த சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனிப்பட்ட சாட்சியங்கள் இருந்தால் ஒழிய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் இழைத்தவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114 ஐ காட்டி குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அதாவது ஆறுமுகப் பிள்ளையும் சோமசுந்தரப் பிள்ளையும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் தூண்டுதலாலும், கட்டாயத்தினாலுமே ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் அப்ரூவராக மாறியிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. எனவே அவர்களது சாட்சியங்களை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.</p>
<p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் அரசு தரப்பில், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 133 மேற்கோள் காட்டப்பட்டது. இந்தப் பிரிவின் படி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியின் பேரில் மட்டுமே (அந்தச் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்த வேறு சாட்சியங்கள் இல்லாத சமயத்தில்கூட) ஏனைய குற்றவாளிகளைத் தண்டித்தால், அந்தத் தண்டனை செல்லாது என்று சொல்லமுடியாது என்று வாதாடினார்கள். மேலும், அப்ரூவர் சாட்சியங்கள் இல்லாமலே மற்ற சாட்சியங்கள் மூலமாகவே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதிடப்பட்டது.</p>
<p>வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. நீதிபதி சர் அர்னால்ட் வைட்டும் நீதிபதி அய்லிங்கும் சேர்ந்து ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி சங்கரன் நாயர் தனியே தன் தீர்ப்பை வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயரின் தீர்ப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் தன்னுடைய தீர்ப்பில், இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றை பற்றி அலசி ஆராய்ந்திருந்தார். இவருடைய இந்த தீர்ப்பு, பின்னர் Role of Students in Freedom Movement with a Special Reference to Madras Presidency என்ற தலைப்பில் புத்தகமாகக்கூட வெளி வந்தது. மேலும் நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில், பாரதியாரின் ‘என்று தனியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயர் தன்னுடைய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலைக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக நீலகண்ட பிரம்மச்சாரி மட்டும் செயல்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.</p>
<p>நீதிபதிகளின் பெரும்பான்மையான தீர்ப்பின் படி, நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டது.</p>
<p>இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் தரப்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் விசாரணை மூன்று நீதிபதிகள் முன்னர் நடைபெற்றதால், மறு ஆய்வு மனு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் பின்வருமாறு : 1) சர் ரால்ப் பென்சன், 2) ஜான் வாலஸ், 3) மில்லர், 4) அப்துல் ரஹிம் 5) பி.ஆர்.சுந்தர ஐயர். மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகளில் சர் ரால்ஃப் பென்சன், ஜான் வாலஸ் மற்றும் மில்லர் ஆகிய மூவரும், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சரியான தீர்ப்பைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள், அதனால் அதில் மறு ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். நீதிபதி அப்துல் ரஹிம் தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார். நீதிபதி சுந்தர ஐயரோ தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தை தெரிவித்தார். பெரும்பான்மையான தீர்ப்பின்படி, குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.</p>
<p>தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதல் மற்றும் கடைசி அரசியல் கொலை இதுவே. கொலை நடந்து சுமார் 100 வருடங்கள் ஓடிவிட்டன. கால ஓட்டத்தில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் கரைந்து போய்விட்டனர்.</p>
<p><strong>வ.உ.சி</strong> :</p>
<p>கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சியை செக்கு இழுக்க வைத்தனர் ஆங்கிலேயர்கள். கீழ் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம், வ.உ.சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை குறைத்தது. வ.உ.சி 1912 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கப்பல் கம்பெனியால் ஏற்பட்ட நஷ்டம் போக, அவர் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை நடத்துவதற்காக தன்னுடைய அனைத்து சொத்துகளையும் இழந்து மிகுந்த கடனுக்கு ஆட்பட்டார். தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டதால், அவருடைய வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, திருநெல்வேலியில் வ.உ.சியின் வழக்கை விசாரித்த நீதிபதி வாலஸ், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன பிறகு, வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமத்தை, அவர் திரும்பப் பெறும்படி செய்தார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வ.உ.சி தன்னுடைய மகன்களில் ஒருவருக்கு வல்லேஸ்வரன் என்று பெயரிட்டார். இறுதி காலத்தை கோவில்பட்டியில் மிகவும் கஷ்டத்தில் கழித்தார். வ.உ.சி ஆசைபட்டபடி, அவருடைய உயிர் தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் 1936 ஆம் ஆண்டு பிரிந்தது. வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதினார், தொல்காப்பியர் இயற்றிய தமிழ் இலக்கணத்தை தொகுத்து பதிப்பித்தார். தன்னுடைய சுய சரிதையை எழுதினார். ஜேம்ஸ் ஆலனின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். மெய்யறிவு, மெய்யாரம் என்று இவர் எழுதிய புத்தகங்கள் மிகவும் பிரசித்தம். பல நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.</p>
<p><strong>சுப்பிரமணிய சிவா</strong></p>
<p>தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவாவுக்கு உதவ பலர் மறுத்தனர். காரணம் அவர் ஆங்கிலேய அரசை பகைத்துக் கொண்டதுதான். தொழு நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1925ம் ஆண்டு தன்னுடைய 40வது வயதில் உயிரிழந்தார்.</p>
<p><strong>சுப்ரமணிய பாரதி</strong></p>
<p>புதுச்சேரியில் 10 ஆண்டுகள் இருந்த பிறகு, 1918 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட கடலூரில் நுழையும் போது கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஆங்கிலேய அரசு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் சென்னைக்கு வந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானைக்கு பாரதி உணவு வழங்கும் போது, அந்த யானை அவரைத் தாக்கியது. இதனால் காயம் அடைந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, 1921 ஆம் ஆண்டு தன்னுடைய 38வது வயதில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் வெறும் பதினான்கு பேர்தான் கலந்து கொண்டனர். பாரதியார் காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதி மக்கள் மனதில் இன்றளவும் மகாகவியாக வாழ்ந்து வருகிறார்.</p>
<p><strong>வி.வி.எஸ் ஐயர்</strong></p>
<p>உலக யுத்தமெல்லாம் முடிந்த பிறகு 1921 ஆம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பினார் வி.வி.எஸ் ஐயர். தேசபக்தன் என்ற பத்திரிக்கையில் பதிப்பாசிரியராக பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டு பாபநாச அருவியில் குளிக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 44. அவர் கம்பராமாயணத்தைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார்.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.</p>
<p><strong>நீலகண்ட பிரம்மச்சாரி </strong></p>
<p>ஆஷ் கொலை வழக்கில், நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயருக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார்.  சத்குரு ஒம்கார் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.  தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.</p>
<p><strong>ஆஷ் துரையின் மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன்</strong></p>
<p>கணவன் இறந்த பிறகு, தன்னுடைய தாய்நாடான அயர்லாந்துக்கு சென்றுவிட்டார். மறுமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அரசாங்கம் கொடுத்த ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். 1954 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆஷின் மூத்த மகன், இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து 1947 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றான். இரண்டாவது மகன், இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு கொண்டு அதில் உயிரிழந்தான். மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.</p>
<p><strong>ஆஷ் துரைக்கு நினைவுச்சின்னங்கள்</strong></p>
<p>இந்தியாவில் ஆஷ் துரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்ட மிதவாதிகள் மற்றும் அரசாங்கத்துக்கு பயந்தவர்கள், நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறோம் என்று வெளிக்காட்டிக்கொள்ளும்விதமாக இரண்டு ஞாபகச் சின்னங்களை எழுப்பினர். பாளையங்கோட்டையில் ஆஷ் துரை எங்கு அடக்கம் செய்யப்பட்டாரோ அங்கு ஒரு கல்லறைச் சிலையையும், தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தில், எண்கோண வடிவம் கொண்ட ஒரு மணிமண்டபத்தையும் நிறுவினர். மணிமண்டபம் எழுப்ப அந்த காலத்திலேயே ரூபாய் 3,002 செலவாகியது. இந்தச் செலவை 38 இந்தியர்கள் ஏற்றுக்கொண்டனர். அதில் சில பேர் வ.உ.சிக்கு சாதகமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்கள்!</p>
<p>சரி வாஞ்சிநாதனுக்குச் சிலை? மணியாச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று அமைக்கப்பட்ட பெயர் பலகை ஒன்று இருக்கிறது. அவ்வளவுதான். வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் 1967 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக ஒரு தகவல் உண்டு.</p>
<p>இன்று வாஞ்சிநாதனின் பெயர் பலருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களுக்கும் மறந்து போயிருக்கும். 100 வருடங்களுக்கு முன்னர் வாஞ்சிநாதன் செய்த செயலின் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியாது. வாஞ்சிநாதன் நிகழ்த்திக் காட்டிய அந்தச் செயலை, மேடம் காமா தன்னுடைய பத்திரிக்கையான வந்தே மாதிரத்தில் பின்வருமாறு நெகிழ்ச்சியூட்டும்படி தெரிவிக்கிறார். &#8216;அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில், சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிபடுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்தியிருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது.&#8217;</p>
<p>0</p>
<p><strong>S.P. சொக்கலிங்கம்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5836&amp;title=%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E2%80%93%202" id="wpa2a_10">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5836</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆஷ் கொலை வழக்கு &#8211; 1</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5830</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5830#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 06:28:51 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொலை வழக்குகள்]]></category>
		<category><![CDATA[சட்டம்]]></category>
		<category><![CDATA[ஆங்கிலேயர்கள்]]></category>
		<category><![CDATA[ஆஷ் துரை]]></category>
		<category><![CDATA[இந்திய சுதந்தரப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[நீலகண்ட பிரம்மச்சாரி]]></category>
		<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[மணியாச்சி]]></category>
		<category><![CDATA[வ.உ.சி.]]></category>
		<category><![CDATA[வாஞ்சிநாதன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5830</guid>
		<description><![CDATA[மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும். ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/Vanjinathan-FF.jpg" rel="lightbox[5830]"><img class="aligncenter size-full wp-image-5831" title="Vanjinathan FF" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/05/Vanjinathan-FF.jpg" alt="" width="439" height="486" /></a></p>
<p>மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.</p>
<p>ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.</p>
<p>போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.</p>
<p>துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.</p>
<p>கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.</p>
<p>ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1910. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.</p>
<p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், &#8216;ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!&#8217; என்று குறிப்பிட்டிருந்தது.</p>
<p>காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.</p>
<p>வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.</p>
<p>ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு.</p>
<ol>
<li>நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) &#8211; தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர். (அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)</li>
<li>சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) &#8211; விவசாயம் செய்துவந்தார்.</li>
<li>மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை &#8211; காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.</li>
<li>முத்துகுமாரசாமி பிள்ளை &#8211; பானை வியாபாரம் செய்துவந்தார்.</li>
<li>சுப்பையா பிள்ளை &#8211; வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.</li>
<li>ஜகனாதா அய்யங்கார் &#8211; சமையல் செய்யும் உத்தியோகம்</li>
<li>ஹரிஹர ஐயர் &#8211; வியாபாரி</li>
<li>பாபு பிள்ளை &#8211; விவசாயி</li>
<li>தேசிகாச்சாரி &#8211; வியாபாரி</li>
<li> வேம்பு ஐயர் &#8211; சமையல் செய்யும் உத்தியோகம்</li>
<li>சாவடி அருணாச்சல பிள்ளை &#8211; விவசாயம்</li>
<li>அழகப்பா பிள்ளை &#8211; விவசாயம்</li>
<li>வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் &#8211; பள்ளிக்கூட வாத்தியார்</li>
<li>பிச்சுமணி ஐயர் &#8211; சமையல் செய்யும் உத்தியோகம்</li>
</ol>
<p>கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர்.  தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.</p>
<p>ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :</p>
<p><strong>1) வி.வி.எஸ். ஐயர்</strong></p>
<p>திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.<br />
<strong>2) சுப்பரமணிய பாரதி</strong></p>
<p>பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார்.  வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.</p>
<p>மற்ற மூவர்,  3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.</p>
<p>மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.</p>
<p>அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.</p>
<p>ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா,  வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம். பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.</p>
<p>ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.</p>
<p>புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p>
<p>பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர்.</p>
<p>சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர்.</p>
<p>பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை. ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.</p>
<p>(தொடரும்)</p>
<p>0</p>
<p><strong>S.P. சொக்கலிங்கம்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5830&amp;title=%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E2%80%93%201" id="wpa2a_12">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5830</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜோதிடம் பொய்ப்பதில்லை!</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5822</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5822#comments</comments>
		<pubDate>Fri, 27 Apr 2012 06:47:49 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[விவாதம்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[ஜோதியர்கள்]]></category>
		<category><![CDATA[ராசிப் பலன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5822</guid>
		<description><![CDATA[நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும். உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/rasipalan.gif" rel="lightbox[5822]"><img class="alignleft  wp-image-5823" title="rasipalan" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/rasipalan.gif" alt="" width="220" height="220" /></a>நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.</p>
<p>உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை 99% மிகச் சரியாக கூறும் அளவுக்கு, நடக்கப் போவதை துல்லியமாக கூறுவதில்லை. அது மிகவும் கடினம். ஏனென்றால், படைத்த பிரம்மாவை தவிர, வேறு யாராலும் நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல், குறைந்தது ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் அலசி ஆராய்ந்தவரை நாம் ஜோதிடராகக் கொள்ளலாம்.</p>
<p>ஜோதிடம் என்பது ஒரு கரைகாண முடியாத கடல். அதை முழுமையாக பயிலாமல், ஒடிப் போனவனக்கு ஒன்பதில குரு, பத்தில் குரு வந்தால் பதவி பறிப் போகும், குருப் பார்க்க கோடி நன்மை, சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை; கெடுப்பவனும் இல்லை என்று சில பழமொழிகளை ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அள்ளி விட்டு, தன் வசம் திருப்பி, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு வாழும் ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தையே குறைச் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. வயிற்று பிழைப்பிற்காக, பொய்களை கலந்து ஏடாகூடாமாகப் பலன்களை கூறி, மக்களை ஏமாற்றி வரும் அரைகுறை ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது.</p>
<p>ஜோதிடத்தில் 9 கிரகங்களுக்கு 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த 27 நட்சத்திரங்களின் குணாதிசயங்களை, பழமொழி என்ற பெயரில், இந்த அரைகுறை ஜோதிடர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.</p>
<p><strong>ஆனிமூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் : </strong></p>
<p>அதாவது ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பர். மூலம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள், எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள். இதுவே பழமொழியின் பொருள். ஆனால், இதை மூல நட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாள்வார்கள் பெண் பிறந்தால் அனைவருமே நிர்முலம் என்றும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்முலம் என்றும் பழமொழியைத் திரித்துக் கூறுகிறார்கள்.</p>
<p><strong>சித்திரை அப்பன் தெருவிலே :</strong></p>
<p>ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அவதிப்படும் என்றும், குழந்தைகளைக் காப்பாற்ற தந்தைமார்கள் தெருத் தெருவாக அலைய வேண்டிருக்கும் என்பதையும் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், அப்பன் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்பான் என்று மாற்றி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை அவதிப்படும் என்ற காரணத்துக்காகவே, ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைக்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p>
<p><strong>ரோகிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது :</strong></p>
<p>ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணனால், மாமன் கம்சன் கொல்லப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு, ரோகிணி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது என்று முடிவு செய்து விட்டார்கள்.</p>
<p>மேலும், மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம், உத்திரத்து தாலி உறியிலே, பூராடம் கழுத்தில் நூலாடாது போன்ற பழமொழிகள், எதுகை மோனைக்காக சொல்லப்பட்டிருக்கலாமே தவிர, உண்மையாக இருக்கும் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. இப்படிப்பட்ட திரிக்கப்பட்ட பழமொழிகளால், பயந்துபோன மக்களிடம், பரிகாரம் என்ற பெயரில், இவர்கள் அடிக்கும் கொள்ளைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகள் நல்லபடியாக பிறப்பதைவிட நல்ல நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்பதே இப்போது அனைவரின் குறிக்கோளாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன், மருத்துவர்களைப் பார்ப்பதை விட ஜோதிடரை பார்ப்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால், ஜோதிடம் நம்மை காப்பாற்றினாலும், ஜோதிடர்கள் நம்மை கரை சேர விடமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.</p>
<p>எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும்.</p>
<p>ஜோதிடர்கள் பொய்க்கலாம், ஜோதிடம் பொய்ப்பதில்லை. ஆனால், இத்தகைய அரைகுறை ஜோதிடர்களால், ஜோதிடமும் பொய்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.</p>
<p>0</p>
<p><strong>இந்திரஜித்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5822&amp;title=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21" id="wpa2a_14">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5822</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5812</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5812#comments</comments>
		<pubDate>Mon, 23 Apr 2012 01:50:41 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[விமரிசனம்]]></category>
		<category><![CDATA[விவாதம்]]></category>
		<category><![CDATA[கமல்]]></category>
		<category><![CDATA[கமல் ஹாசன்]]></category>
		<category><![CDATA[திரைக்கதை]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[விருமாண்டி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5812</guid>
		<description><![CDATA[மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்&#8230; தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி. பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/virumandi-76.jpg" rel="lightbox[5812]"><img class="aligncenter" title="virumandi-76" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/virumandi-76.jpg" alt="" width="350" height="350" /></a></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/virumandi-76.jpg" rel="lightbox[5812]"><br />
</a>மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்&#8230; தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி.</p>
<p>பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக இன்றும் சாதியே இருந்துவருவதனால் அந்த உணர்வுகள் சார்ந்து உண்மை நிலையைச் சித்திரிக்க யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. திரையுலகப் படைப்பாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் இந்தச் சுய தணிக்கையானது, என்னதான் வணிக மற்றும் சமூகக் காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தப்பட்டாலும், கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.</p>
<p>உண்மையைச் சொல்வதனால் நெருக்கடிகள் வரும் என்றால் அதை உரத்த குரலில் சொல்பவனே கலைஞன். நாங்கள் வெறும் கோமாளிகள்தான்&#8230; கலைஞர்கள் அல்ல என்று தமிழ் திரையுலகப் படைப்பாளிகள் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் கையில் இருப்பது கலை ஊடகமே. அதுவும்போக, சார்லி சாப்ளினும் கோமாளி நடிகர்தான். ஆனால், அதிகாரமையத்தை அவரும் கேள்விக்குட்படுத்தவே செய்திருக்கிறார். நாஜி கொடூரம் பற்றி வெளியான படங்களிலேயே மிகவும் முக்கியமான படமான லைஃப் ஈஸ் பியுட்டிஃபுல் சிரிக்க வைத்தபடியே சோகத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திய ஒன்றுதான். நமது பாரம்பரிய நாடகங்களில் கூட கட்டியங்காரன், விதூஷகன் என்ற வேடங்களில் வரும் நடிகர்கள் அதிகார மதிப்பீடுகளை எவ்வளவோ எள்ளி நகையாடவே செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நகைச்சுவை என்பது மிகவும் பாதுகாப்பான, அதே நேரம் வலிமையான ஓர் ஆயுதமே. விஷயம் என்னவென்றால், அதிகாரமையத்தைக் கேள்விக்குட்படுத்த நீங்கள் தயாரா இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அந்த அற உணர்ச்சி உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் கலைப் படைப்புகள் உங்கள் காலத்துக்கு முன்பாகவே செத்து மடிந்துவிடும்.</p>
<p>அந்தவகையில் கமலின் அடுத்த பலவீனமான படைப்பு விருமாண்டி. ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது. என்றாலும் தன்னளவுக்குப் போதிய ஓட்டை உடைசல்களுடனே இதுவும் மிளிர்கிறது.</p>
<p>தென் மாவட்டங்கள் சாதி மோதல்களால் உருவான ஒரு போர்க்களம்.  நாயக்கர்கள் அங்கு செல்வந்தர்களாக இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் தேவர்களுடன் மோதுவதை அவர்கள் நினைத்தே பார்க்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது. தேவர்-தலித் மோதலைப் படமாக்கினால் பெரும் பிரச்னைகள் வரும் என்பதால், உண்மை நிலையை அப்படியே விட்டுவிட்டு குறைவாக நடக்கும் நாயக்க-தேவர் மோதலை படத்தின் கருவாக ஆக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் அதையே இரண்டு தேவர்களுக்கு இடையிலான சண்டையாக்க் குறுக்கியிருப்பார். புலிகளுக்குள்ளும் சண்டை உண்டென்றாலும் மானின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்தானே புலியின் அசல் உலகம். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது உலகம் பொய்யைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்போது உண்மையைத் துணிந்து சொல்வதில் இருக்கிறது. அதாவது, எதைச் சொல்ல வேண்டுமே அதைச் சொல்வதில் இருக்கிறது. எதைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்வதில் அல்ல. எனவே, தென் மாவட்டத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் எப்போதும் சண்டை ஏற்படும் என்று கமல் சொல்லும்போது அவர் மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே ஆகிறார்.</p>
<p>மரண தண்டனைக்கு எதிரான படம் என்கிற பம்மாத்து வேறு படத்தில் படு செயற்கையாக, எந்தவிதப் புரிதலும் இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மரண தண்டனை என்பது ஓர் அரசால் தரப்படும் தீர்ப்பு. நீதித்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொது மக்கள் என இன்றைய அரசின்/சமூகத்தின் அனைத்து முக்கிய துறைகளும் ஊழலில் திளைத்திருக்கின்றன. அப்படியான ஓர் அமைப்புக்கு ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கவேகூடாது. இது முதலாவது பார்வை.</p>
<p>இரண்டாவதாக, ஒருவேளை ஓர் அரசு எல்லா தளங்களிலும் நியாயமாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், மிகப் பெரிய தவறுக்குக்கூட உயிர் பறிப்பு என்பதை தண்டனையாக வைக்கவேகூடாது. குற்றவாளியின் வயதுக்கு ஏற்ப ஒற்றை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை என்று வேண்டுமானால் வழங்கிக் கொள்ளலாம். அதுவே ஒருவகையில் ஒருவரை இல்லாமல் ஆக்குவதுதான். ஒரு நவீன அரசுக்கு அந்த அளவுக்காவது தார்மிக அக்கறையும் பொறுப்பும் இருந்தாக வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தாலும் மரண தண்டனை கூடவே கூடாது. அதுவும்போக மரண தண்டனை கூடாது என்று சொல்வதற்கு இணையாக அது தேவை என்ற குரலும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தரப்புகளின் மோதல் என்ற கோணத்தில்தான் மரண தண்டனை பற்றிய விவாதங்கள் எழவேண்டும்.</p>
<p>இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் மரண தண்டனை என்ற விஷயத்தின் கொடூரத்தையும் அபத்தத்தையும் புரியவைக்க வேண்டுமென்றால் அந்தப் படம் அரசின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக இருந்தாகவேண்டும்.</p>
<p>ஓர் உதாரணம் சொல்வதானால், இன்று கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவரை அரசு நக்சலைட் என்றும் தேச விரோதி என்றும் சித்திரிக்கிறது. இதுபோன்ற ஒரு போராளியை அரசாங்கம் தூக்கு தண்டனை வரை கொண்டு செல்வதாகக் காட்டினால் அப்போது அந்த அரசின் கொடூரமும் அந்த தண்டனையை ஒழித்தே ஆக வேண்டியதன் அவசியமும் ஒருவருக்குப் புரியவரும். கறுமையின் அடர்த்தியை அதி வெண்மை ஒன்றைப் பக்கத்தில் வைப்பதன் மூலம் நன்கு புலப்படவைக்கும் யுக்தி இது.</p>
<p>இந்தப் படத்தில் கூட பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை யதேச்சையாக அடிக்க அவன் இறந்துவிடுவதால் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை என்பது மரண தண்டனையைக் கேள்விக்குட்படுத்தும் அபாரமான கதையாக ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. பரிதாபத்தின் மூலம் கதாநாயக பிம்பத்தை விஸ்வரூபம் பெற வைப்பதும் வணிக வெற்றிகளைக் குவிக்கவே செய்யும்.</p>
<p>ஆட்டோ சங்கர் போன்ற ஒருவரின் கதையை மையமாக வைத்து, அவனுக்கு உடந்தையாக இருந்த எத்தனையோ காவல் துறையினரும் அரசியல்வாதிகளும் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் வெளியில் உலவிக் கொண்டிருக்க பிடிபட்ட அவன் மட்டுமே தூக்கில் தொங்கவிடப்பட்டதன் அபத்தத்தை அநியாயத்தை படமாகக் காட்டியிருக்க முடியும். இவையெல்லாம் ஒரு எளிய ஃபார்முலா கதையாக ஆகிவிடும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் குற்றவாளியின் பின்னணிக்கு இணையாக அரசின் அநியாயமான செயல்பாடுகளையும் விவரித்திருக்க வேண்டும்.</p>
<p>ஆனால், இந்தப் படத்தில் காவல்துறையைச் சேர்ந்த பேய்க்காமன் என்ற ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே அரசின் அங்கமாக இடம்பெறுகிறது. அந்தக் கதாபாத்திரமும்கூடத் தெளிவான வில்லன் பிம்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதால் அரசமைப்பின் மீதான விமர்சனமாக அது கூர்மை பெறவில்லை. அதுபோல் பொய் சாட்சி சொல்லும் நபர்கள் அனைவருமே மக்களின் துல்லியமான பிரதிநிதிகளாக முழுவடிவம் பெறவில்லை. சமீபத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மன நிலை குன்றிய ஒருவரை வங்கிக் கொள்ளையன் என்று நினைத்து மக்கள் கூட்டம் அடித்து உதைத்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தூக்கு தண்டனைகளின் போது மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அதை வரவேற்று ஆர்ப்பரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையே மக்கள் திரளின் தெளிவான சித்திரிப்பாக ஆக முடியும். அப்படி இல்லையென்றால் தனிப்பட்ட நபரின் குணாம்சமாக அது சுருங்கிவிட வாய்ப்பு உண்டு.</p>
<p>அந்தவகையில் மரண தண்டனை எதிர்ப்பு என்பது இந்தத் திரைக்கதையில் பலவீனமான ஒட்டு போலவே இருக்கிறது. எஸ்.வி.சேகர் தன்னுடைய துணுக்கு டிராமாக்களில் சமூகத்துக்கு செய்தி எதுவும் சொல்லப்படுவதில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்வகையில் காபியில சர்க்கரை குறைவா போட்டுக்கணும், குழந்தைகள் ஸ்கூல ஒழுங்கா படிக்கணும், அப்பா அம்மாவை மதிக்கணும் என்பதுபோன்ற நற்செய்திகளை ஒரு கதாபாத்திரத்தை விட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச வைத்திருப்பார். கமல்ஹாசனும் தனது படத்தின் கனத்தைக் கூட்ட மரண தண்டனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரை விட கொஞ்சம் மேலான கலைநயத்துடன் அது இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.</p>
<p>அதற்காக ரொம்பவே மெனக்கெட்டு டாக்குமெண்டரி, அதை எடுக்க வரும் பெண்மணிக்கு கீழ்வெண்மணி பின்னணி என்றெல்லாம் ஜல்லி அடித்திருக்கிறார். இந்தக் கீழ்வெண்மணி பின்னணி என்பது அதைவிட அபத்தம். காத்தமுத்துவின் மகளான அந்த டாக்குமெண்டரி இயக்குநர் ஜேம்ஸ் என்பவரைக் கல்யாணம் செய்துகொள்கிறாராம். ஜேம்ஸ் அவளைத் துன்புறுத்தவே அப்பாவே மருமகனைக் கொன்றுவிடுகிறாராம். அவருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுவிடுகிறதாம். மகள் அந்த வேதனையால் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாராம்.</p>
<p>மருமகனைக் கொன்றதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை என்பது இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று. அதுதான் படத்தின் முக்கியமான துணைக் கதாபாத்திரத்தை மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தூண்டிய விஷயமாம். அந்த அடிப்படையே மடத்தனமாக இருக்கிறதே. அது சரி&#8230; அந்தப் பெண்ணுக்கு எதற்காக கீழ்வெண்மணி என்ற பின்னணி. அது வேறு விஷயங்களை நினைவுபடுத்தும் ஒன்றல்லவா? தலித் ஒருவர் தன் மகளை நன்கு படிக்க வைத்து கடன் பட்டு கிறிஸ்தவருக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகும் (அதிக வரதட்சணை?) அந்தப் பெண்ணுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவர் தானாக தன் வழியைத் தேடிக் கொள்கிறார் என்பதைச் சொல்ல வருகிறாரா? உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.</p>
<p>மாபெரும் கலைப்படைப்பில் செய்யப்படும் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் வலுவான காரணத்தைக் கொண்டதாக இருக்கும். போலிகளில் இது நேரெதிராக புலியைப் பார்த்து போட்டுக்கொள்ளும் சூடுபோல் கேலிக்கூத்தாகவே முடியும்.</p>
<p>அதுபோல் படத்தின் க்ளைமாக்ஸ் என்பதும் சற்றும் பொருந்தாக ஒன்றாகவே இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஜெயிலில் கலவரம் செய்யும் கைதிகள் ஏதோ நேர்த்திக்கடன் போல ஜெயிலைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்துகொண்டே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அங்கு நடக்கும் கஞ்சா கடத்தல் விவகாரம் தலைமை காவலருக்குத் தெரிந்துவிடுகிறது. ஒரு கலவரம் போல் செட்டப் செய்து அவரைப் போட்டுத் தள்ள துணைக் காவலர் பேய்க்காமனுடன் கைதிகள் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். அதன்படியே செய்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றுகிறார்கள். அதை வெளியேயிருக்கும் அவர்களுடைய ஆள் வசம் தூக்கி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது ஜெயிலை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ பழங்குடி, மத்திய கால மேற்கத்திய படங்களில் வரும் போரைப்போல் மரத்தைக் கவண் போல் ஆக்கி அதில் டாய்லெட் பீங்கானில் ஆரம்பித்து சோபா செட்கள் வரை மாட்டி பீரங்கிபோல் எறிந்து என்னவெல்லாமோ செய்கிறார்கள். கிரில் கம்பிகளைப் பெயர்த்து எடுத்து சர் சர் என்று எறிகிறார்கள். கமல் சார் உலகப் படங்கள் நிறைய பார்த்திருக்கக்கூடும். ஜெயில் கைதிகளும் கூடவா? அதுவும்போக அவர்களுடைய நோக்கம் என்ன க்ளைமாக்ஸை விறுவிறுப்பாக ஆக்குவதா!?</p>
<p>மரண தண்டனை எதிர்ப்பில் ஆரம்பித்து, ஜல்லிக் கட்டுக்குப் போய், தமிழ் விவசாயம் என்று திரும்பி, நிலச் சண்டையாக மாறி, நாயக்கர்-தேவர் சண்டை என்று ஆகி, எஜமானன் பணியாள் சண்டையாகத் திரும்பி, ஜெயில் சண்டையாகி கடைசியில் மரண தண்டனை எதிர்ப்பில் வந்து முடிகிறது. நடு நடுவுல மானே தேனே என்று காதல் டிராக்கும் ஓடுகிறது. இரவு நேர யாசகரின் தூக்குப் பாத்திரத்தில் ஊசிப் போன சாம்பாரில் ஆரம்பித்து உளுத்துப் போன வடைவரை இருப்பதுபோல் ஒரு அசட்டுக் கலவை இது. கோடுகள் தேவையான வளைவு நெளிவுகளுடன் இருந்தால் அதற்குப் பெயர் ஓவியம். கண்டதையெல்லாம் தீட்டி வைத்தால் அதற்குப் பெயர் கிறுக்கல்.</p>
<p>படமானது கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரின் பார்வையில் சொல்லப்படும் கதையாக விரிகிறது. இந்த ரொஷோமான் யுக்தி படத்தில் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரொஷோமானில் உண்மை என்ன என்பது கடைசிவரை நமக்குப் புரியாமலேயே இருக்கும். அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது. ரொஷோமானைப் போல் எடுத்ததாக நான் சொல்லவில்லையே என்று கமல் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பாணியைப் பலவீனமாகப் பயன்படுத்தியிருப்பதால் அந்த விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.</p>
<p>கமல் ஹாசனின் அறிமுகக் காட்சியே அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும்போது கரண்ட் கம்பியின் மேல் நின்று கொண்டிருக்கிறார். ஏன் என்று கேட்டால், அவருடைய பாட்டி காளையை எல்லாம் அடக்கப் போகக்கூடாது. வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். பேரன் காளையை அடக்கக் களம் இறங்கினால் அடிபட்டுவிடுமே என்ற பயம் இருந்தால் கிழவி அதே கூட்டத்தில் நின்று அவனை இறங்கவிடாமல் தடுக்க வேண்டியதுதானே. அந்த ஊரில் அதிகபட்சம் ஆறேழு தெருக்கள் இருக்கக்கூடும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது ஊரே அந்த மைதானத்தில்தான் கூடியிருக்கும். கிழவி மட்டும் தன்னந்தனியாக வீட்டில் என்னதான் செய்துகொண்டிருந்தாள். நாயகன் காளையை அடக்கி முடித்ததும் கரெக்டாக வந்து அவனைத் திட்ட வேறு செய்கிறாள். பேரனின் மீது அக்கறை இருந்தால் முன்னாலேயே வந்திருக்க வேண்டியதுதானே.</p>
<p>அதுவும்போக அந்தக் காளையோ கமல் சார் மீது அவருடைய ஜால்ரா கூட்டத்தைவிட விசுவாசமானதாக இருக்கிறது. ஈட்டி போல் கூர் தீட்டப்பட்ட கொம்பு இருந்த பிறகும் அது கமல் சாரை செல்லமாகவே முட்டுகிறது. காளையை அடக்கிவிட்டு வெற்றிப் பெருமிதத்தில் நின்று கொண்டிருப்பவரை பின்னால் இருந்து தூக்கி எறிகிறது. கமல் சாரோ லேசான கொம்பு சிராய்ப்புடன் பேக் சம்மர் சால்ட் அடித்து எழுந்துவருகிறார். கொம்பு படாமல் குத்த அந்தக் காளை எங்குதான் படித்ததோ?</p>
<p>அதுவும்போக, சின்ன கோளாறுபட்டிக்காரன் காளையை அடக்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. ஏனென்றால், காளை அந்த ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு முன்பே அதனுடன் பழக்கம் இருக்கும் என்பதாலோ என்னவோ அப்படி ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. அப்படியானால், அசலூரான் அடக்கலாமா என்று கூட்டம் கேட்கிறது. சரி என்று சொல்கிறார்கள். கேமரா நேராக தரையில் இருந்து மேலே எழுந்து கரண்ட் கம்பியை ஃபோகஸ் செய்கிறது. சிங்கப்பூர் மச்சான் அறிமுகப்படுத்தப்படும் கமல் காளையை அடக்க அங்கிருந்து குதிக்கிறார்.</p>
<p>ஆனால், உண்மை என்னவென்றால், அவர் அந்த சின்னக் கோளாறுபட்டியைச் சேர்ந்தவர்தான். அப்பாவுடன் சிங்கப்பூரில் சில காலம் வசித்தவர் அவ்வளவுதான். ஒருவர் எவ்வளவு காலம்தான் வெளியூரில் வசித்தாலும் சொந்த ஊர்க்காரராகத்தான் அடையாளப்படுத்தப்படுவார். இதுதான் கிராமப்புற யதார்த்தம். இங்கோ சில காலம் சிங்கப்பூரில் வசித்தவர் அசலூரான் ஆகிவிடுகிறார். அதோடு, அப்பா செத்த பிறகு பாட்டிதான் கிராமத்தில் வைத்துத் தன்னை வளர்த்ததாகச் சொல்கிறார். குபீர் ஜாலி பிரதர்ஸ் என்ற சங்கத்தை அமைத்து ஊரில் சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்படுகிறது. காளையை அடக்க மட்டும் அசலூரானாக அரிதாரம் பூசிக் கொள்வதேன்? கரண்ட் கம்பி மேல இருந்து குதிக்கற மாதிரி சீன் யோசிச்சாச்சு. அப்ப எடுத்துத்தான ஆகணும்.</p>
<p style="text-align: center;"><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/விருமாண்டி.jpg" rel="lightbox[5812]"><img class="aligncenter" title="விருமாண்டி" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/விருமாண்டி.jpg" alt="" width="277" height="336" /></a></p>
<p>அப்பறம் காட்சிகள் எல்லாம் எந்தவொரு தர்க்கத்துக்கும் சிக்காமலே போய்க்கொண்டிருக்கின்றன.</p>
<p>சிறுநீர் கழிக்கப்போன விருமாண்டியை பின்னால் இருந்து ஒருவர் அருவாளால் வெட்டுகிறார். வெட்டுப்பட்டவர் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவராமல், ஆளரவமற்ற தெருக்களினூடாக ஓடிப் போய் நேராகத் தன் காதலி அன்னலட்சுமியின் வீட்டுத் தொழுவத்தில் போய்விழுகிறார். அந்த அருவாளோ ஃபெவிகால் போட்டு ஒட்டியதுபோல் விருமாண்டியின் உடம்புடன் ஒட்டியே இருக்கிறது. ரஜினிகாந்த் என்றால்கூட இதை நம்பலாம். ஏனென்றால், அவர் பெயரிலேயே காந்தம் இருக்கிறது. கமல் சாரின் பெயரில் மென்மையான கமலப் பூ மட்டும்தானே இருக்கிறது. அந்த அருவாளில் கொ என்ற கொத்தாளத் தேவனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை அன்னலட்சுமி பார்க்கிறாள் என்றொரு காட்சி பின்னால் வருகிறது. அதனால் அருவாள் கீழே விழவே இல்லை என்று காட்டப்பட்டிருக்கிறது. அதோடு விருமாண்டிக்கு அடுத்த இரண்டு மாதம் சிகிச்சை தர வேண்டிய அளவுக்கு அந்தக் காயம் பலமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விருமாண்டியைத் தூக்கிச் செல்லும்போது, மல்லாந்து படுத்தபடியே இருக்கிறார். முதுகில் காயம்பட்டால் குப்புறப் படுக்க வைக்கவேண்டும் என்ற எளிய விஷயம்கூடப் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.</p>
<p>தேன் கூடு கலைக்கப்பட்டு மாடு மிரண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அன்னலட்சுமி தன் நவீன குதிரையான மொபெட்டை எடுத்துக்கொண்டு தலையில் சாக்கு ஒன்றைப் பின்பக்கமாகப் போத்திக்கொண்டு மாட்டைப் பிடித்துக் கொண்டுவர சர்ரென்று வெளியே கிளம்புகிறார். போகும் வழியில் ஒரு மரத்துண்டு ஒன்றில் அருவாள் சொருகி வைக்கப்பட்டிருக்கிறது. மொபெட்டில் விரைந்து செல்பவர் அந்த அருவாளை டக்கென்று எடுத்துச் செல்கிறார். இந்தக் காட்சி பார்க்க அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், காளையை வீட்டுக்குக் கொண்டுவர விரும்புபவர் எதற்காக அருவாளை எடுத்துச் செல்கிறார். அந்தக் காளையோ செல்லப் பூனைக்குட்டி மாதிரி அவரைப் பார்த்தால் பம்மக்கூடியது. சாட்டையை எடுத்துச் சென்றாலாவது ஏதோ பயமுறுத்தப் போகிறார் என்று நினைக்கலாம். அதெல்லாம் தெரியாது&#8230; மொபெட்டில் வேகமாகப் போகும்போது இறங்காமலேயே சட்டென்று அருவாளை எடுத்துச் செல்லும் காட்சி பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் அது படத்தில் இடம்பெற்றுவிட்டது. இதன் ஒரிஜினல் எது என்று எனக்குத் தெரியாது. ஆனால், கமல் சாருக்குத் தெரிந்திருக்கும். நைஸாகச் சொருகிவிட்டார். பின்னே நம்ம படம் எப்பத்தான் சர்வ தேசத் தரத்தை எட்டறது?</p>
<p>ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதே பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல், விருமாண்டி தன் சொத்தில் ஒரு பங்கை ஊருக்கு எழுதுவதாக சவால் விடுகிறான். கொண்ட ராசு நாயக்கன் என்ற ஒருவர் தானும் எழுதி வைப்பதாக பந்தயம் கட்டுகிறார். கொத்தாளத் தேவனை வம்புக்கு இழுக்கிறார். கை கலப்பில் அந்தப் பஞ்சாயத்து முடிகிறது.</p>
<p>அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.</p>
<p>பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே. ஆனால், 24 உயிர்களின் பலி என்ற ஒரு கதை முடிச்சு அடுத்ததாக விழ வேண்டும் என்பதற்காக விருமாண்டி தனியாக கொண்ட ராசு நாயக்கரைப் பார்க்கப் போகிறான். திரைக்கதையின் குழப்பமான இடம் இது.</p>
<p>அதோடு மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற படத்தின் பஞ்ச் டயலாக் மிகவும் அசட்டுத்தனமானது. தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அது மிகவும் சாதாரண ஒரு செயல்தான். அந்தத் தவறினால் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கும் ஒருவர் தப்புச் செய்தவரை மன்னிக்கிறார் என்றால் அதுதான் பெரிய விஷயம். விருமாண்டி பலரைக் கொன்றுவிட்டு மன்னிப்புக் கேட்பதில் எந்தச் சிறப்பும் கிடையாது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் வேதனையை மறந்துவிட்டு அல்லது விருமாண்டியைத் தூக்கில் போடுவதால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் வரவா போகிறார்கள், அவனாவது திருந்தி வாழட்டும் என்று சொல்லி மன்னித்தால் அதுதான் பெரிய விஷயம். கொல்லப்பட்டவர்கள் துணை நடிகர்கள்தான் என்பதாலும் கொலைகளைச் செய்தது கமல் சார் என்பதாலும், மன்னிப்பதைவிட மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது.</p>
<p>அடுத்ததாக, விருமாண்டிக்கும் நல்லம்ம நாயக்கருக்கும் இடையிலான சிறிய பகையைக் காரணமாக வைத்து கொத்தாளத் தேவன் கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் தன் ஆட்களுடன் போய்க் கொன்று குவிக்கிறான். தேவர்களில் ஒருவர் மீது ஒரு சிறு கீறல் கூட விழாதபடித்தான் அந்தச் சண்டை காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னே தென் மாவட்டத்தில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் தேவர் சாதியினர்தானே. அவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.</p>
<p>அதில் ஒரு மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், சம்பவம் நடந்த நேரத்தில் கொத்தாளத் தேவருடன் இருந்ததாக விருமாண்டி சாட்சி சொல்கிறான். கோர்ட் அதைக் கேட்டு இருவரையும் விடுவித்துவிடுகிறது. உண்மையில் அந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே அவர்கள் இருவர்தான். ஒருவருக்கு ஒருவர் நல்லவர் என்ற சான்றிதழ் வழங்கியதும் நீதிமன்றம் அதைக் கேட்டு அவர்களை விடுவித்துவிடுகிறதாம். ஜெயா அக்கா நல்லவர் என்று சசி அக்காவும், சசி அக்கா அப்பாவி என்று ஜெயா அக்காவும் சொல்வதுபோல் கொத்தாளத் தேவரும் விருமாண்டியும் உடன் பிறவா சகோதர பாசத்தைக் காட்டியதும் நீதிமன்றம் நம்பி விடுதலை செய்துவிடுகிறது.</p>
<p>இது போதாதென்று அன்னலட்சுமி தூக்கில் தொங்கி இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் வழக்கறிஞர் இந்த 24 கொலைகளைச் செய்தது விருமாண்டிதான் என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்வார். ஆனால், அப்படி எதுவும் செய்யாமலேயே நீதிமன்றம் 24 பேரைக் கொன்றதற்காகவும் காதலியை கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதற்காகவும் விருமாண்டிக்கு தூக்கு தண்டனை தந்துவிடுகிறது. இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.</p>
<p>இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்ன லட்சுமி தூக்கு மாட்டித்தான் இறக்கிறாள். போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் அப்படித்தான் தெரிய வந்திருக்கும். கொன்றுவிட்டுத் தூக்கில் மாட்டியதாக வந்திருக்காது. ஆனால், கொலைப்பழியை விருமாண்டி மேல் சுமத்துவதற்காக அப்படி காட்டப்படுகிறது. விருமாண்டியின் விந்து அன்ன லட்சுமியின் உடலில் இருந்ததும் அன்னலட்சுமியின் நகக்கண்ணில் விருமாண்டியின் சதைத் துணுக்குகள் இருந்ததும் மட்டுமே போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் இருந்து தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதாக அல்ல. அதுவும் போக, விருமாண்டியும் அன்ன லட்சுமியும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். கற்பழித்ததாகச் சொல்வதில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த ஊர்க்கார்களும் விருமாண்டியின் நண்பர்களும் ஏன், நல்லம்ம நாயக்கரின் ஊரார்கூட அந்தக் காதலுக்கு சாட்சி சொல்ல முடியும்.</p>
<p>இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சென்னையில் தங்க இடம் கொடுத்த உறவுக்காரப் பெண்மணி விருமாண்டிக்கும் அன்ன லட்சுமிக்கும் திருமணம் நடந்துவிட்டதைச் சொல்லியிருந்தால் வழக்கு அப்போதே வலுவிழந்திருக்கும். இத்தனைக்கும் சிங்கப்பூரில் தன் மகன் செய்த ஒரு தப்புக்காக விருமாண்டிதான் பழியை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த வீடே அவனுடையதுதான் என்றும் அந்தப் பெண்மணி சொல்கிறாள். விருமாண்டியைத் தன் மகன் போலவே மதிக்கிறார். ஆனால், அவரை அந்த உண்மையைச் சொல்லாமல் ஊமையாக்குகிறார் வசனகர்த்தா. அது நியாயமே இல்லை.</p>
<p>இடையில் இடம்பெறும் ஒரு கமல் டச் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிப்போகும் காதல் ஜோடிகள் டி.வி.எஸ். மொபெட்டிலேயே சென்னைக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, போகும் வழியில் ஜலக்கிரீடை செய்கிறார்கள். ஊரை விட்டு ஓடும் பரபரப்பான நேரத்திலும் வேறு யாராவது பார்த்தால் பிரச்னை ஆகிவிடுமே என்ற பயமெல்லாம் இல்லாமல் ஜாலியாகப் புனலாடுகிறார்கள். விஷயம் என்னவென்றால், அடுத்த நாளே சென்னை வந்துவிடுகிறார்கள். சென்னையில் இதுபோல் புனலாட ஆறு, ஏரி எதுவும் கிடையாது. கிராமத்தில்தான் அது சாத்தியம். எனவே அந்த சம்பவம் அங்கு நடந்தேறுகிறது.</p>
<p>அப்படியானால், முன்பே கிராமத்தில் புனலாடியிருக்க வேண்டியதுதானே என்று கேள்வி உங்களுக்கு வரக்கூடும். ஆனால், தமிழ் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? தாலி கட்டிய பிறகுதானே முதலிரவு நடக்க முடியும். தாலி கட்டிய மறுநாளே சென்னைக்குப் போய்விடுகிறார்கள். புனலாட ஊரை விட்டு ஓடிப்போகும் அந்த இரவு மட்டுமேதான் அவகாசம் இருக்கிறது. எனவே, அந்தப் பரபரப்புக்கு இடையிலும் பேண்ட் சட்டை போட்ட விருமாண்டி வேட்டியைக் காய வைத்துவிட்டுப் புனலாடுகிறார்.</p>
<p>இறந்த அன்ன லட்சுமியின் உடலில் விருமாண்டியின் விந்து இருந்ததாக போஸ்ட்மார்டத்தில் தெரிய வந்து அதை வைத்துத்தான் கற்பழித்தாகப் பழி சுமத்தப்படுகிறது. அப்படியானால் முதலிரவு நடந்தே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது அல்லவா என்று கேட்பீர்கள். அது உண்மைதான் ஆனால், சென்னைக்குப் போன பிறகு ஏறு தழுவுவதாகக் காட்டப்படுகிறதே. அதுவே போதாதா என்ன? ஊரை விட்டு ஓடும்போதும் புனலாடத்தான் வேண்டுமா? அந்தக் காட்சியை நான் மிகவும் பயத்துடனேயேதான் பார்க்க வேண்டியிருந்தது. இரவு லைட்டிங்கில் வேறு எடுத்திருக்கிறார்கள். கேமரா எந்தப் பக்கம் திரும்பினாலும் கொத்தாளத் தேவனின் அருவாள் போலவே காட்சி அளித்தது. எந்த நிமிடமும் அது பாய்ந்து வந்து காதல் சிட்டுகளை வெட்டிவிடும் என்ற பயத்துடனேயே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கிளு கிளு காதல் காட்சியை இப்படிப் பார்க்க நேர்ந்தது எவ்வளவு பெரிய வேதனை என்பது அனுபவித்தால்தான் தெரியும். எதை மன்னித்தாலும் இதை மன்னிக்க முடியாது.</p>
<p>விருமாண்டிக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வைத்தியநாதய்யர் படு அம்மாஞ்சியாக இருக்கிறார். விருமாண்டி அன்னலட்சுமியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அன்னலட்சுமியின் உடல் கொத்தாளத் தேவனின் வீட்டு உத்தரத்தில்தான் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது. விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும். ஆனால், அந்த அம்பி ஐய்யரோ, திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு சாதுவாக போய் உட்கார்ந்துவிடுகிறார்.</p>
<p>இதைவிட இன்னொரு அசட்டுத்தனம் என்னவென்றால், அன்னலட்சுமி இறந்தது தெரிந்ததும் விருமாண்டி அதற்குக் காரணமான பலரை வெட்டிக் கொல்கிறான். காவல் துறை அவனைத் துரத்துகிறது. அடைக்கலம் தரும் நல்லம்ம நாயக்கர் விருமாண்டியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். அது தெரிய வந்ததும் விருமாண்டியை என்னிடம் ஒப்படைத்துவிடு என்று கொத்தாளத் தேவன் நல்லம்ம நாயக்கரிடம் கேட்கிறான். நல்லம்ம நாயக்கரும் அவனை மறைத்து வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கொத்தாளத் தேவனையும் அவனுடைய ஆட்களையும் கூட்டிச் செல்கிறார். தன்னுடைய பரம விரோதியான கொத்தாளத் தேவனிடம் அப்படி தனியாக போய் அவர் மாட்டிக் கொள்ளவேமாட்டார். ஆனால், இங்கோ கமல் சாரின் திரைக்கதை சாதுரியத்தினால் அப்படி அசட்டுச் செயலை நல்லம்ம நாயகர் செய்கிறார்.</p>
<p>அவர் அழைத்துச் சென்ற பாழடைந்த வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது. அதில் ஒரு பெரிய துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்து பட்டென்று நல்லம்ம நாயக்கர் சுடுகிறார். உண்மையில் உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எதிரி கையில் வெறும் அருவாள்தான் இருக்கிறது. உங்கள் துப்பாக்கியோ ஒவ்வொரு தோட்டாவாக போட்டுச் சுட வேண்டிய ஒன்று. அப்படியானால் என்ன செய்வீர்கள். பிரதான எதிரியைக் குறிவைத்து சுடப்போவதாக மிரட்டி மற்றவர்களை அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போட வைப்பீர்கள். இதுதானே புத்திசாலித்தனம். ஆனால், இங்கோ நல்லம்ம நாயக்கர் பட்டென்று யாரோ ஒருவரைப் பார்த்து சுடுகிறார். அடுத்த தோட்டாவை நிரப்புவதற்குள் கொத்தாளத் தேவன் அவரை அருவாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான். பாவம் கமலின் பலவீனமான திரைக்கதையால் நல்லம்ம நாயக்கர் கையில் துப்பாக்கி இருந்தும் இறந்துவிட்டார்.</p>
<p>இதாவது பரவாயில்லை. பதற்றத்தில் அப்படிச் செய்துவிட்டார் என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நல்லம்ம நாயக்கரைக் கொன்ற விஷயத்தை காவலர் பேய்க்காமனிடம் போய் கொத்தாளத் தேவன் சொன்னதும் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா&#8230; கொத்தாளா&#8230; மதுரை கோர்ட்ல சரண்டைஞ்சுடு. இப்படி யாராவது சொல்வார்களா? அந்தக் கொலையைப் பார்த்த சாட்சி என்று யாருமே கிடையாது. நல்லம்ம நாயகருக்கு வேறு பல எதிரிகள் இருக்கவும் கூடும். கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் கொன்றது கூட நல்லம்ம நாயக்கராக இருக்கக்கூடும் என்றுதான் இதற்கு முன் நீதிமன்றத்தில் வழக்காடவே செய்திருக்கிறார்கள். இப்போது கொண்ட ராசு நாயக்கரின் ஆட்கள்தான் நல்லம்ம நாயக்கரைக் கொன்றதாக பிளேட்டை எளிதில் மாற்றிவிட வழி உண்டு. இருந்தும் காவலர் பேய்க்காமன் கமல் சாரின் அசட்டு வசனத்தை அப்படியே பேசுகிறார்.</p>
<p>அதுவும் எப்படி? விருமாண்டி முதல்ல சாட்சி சொல்லிட்டா அவன் சொல்றதுதான் சரின்னு ஆயிடும். எனவே, நீ போய் நான் தான் கொன்னேன்னு சரண்டர் ஆகிடு என்கிறார். என்ன ஒரு முட்டாள்தனம். விருமாண்டி முதலில் சொல்வதற்குள் அவன்தான் கொலைகாரன் என்று வேண்டுமானால் கொத்தாளத் தேவன் சொல்லலாம். ஆனால், உண்மையில் இந்தக் கொலையில் இருந்து அவன் விலகி இருப்பதுதான் அவனுக்கு நல்லது. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவனைப் போய் சரண்டையச் சொல்கிறார் காவலர் பேய்க்காமன். கொத்தாளத் தேவனுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. விருமாண்டியுடன் கடைசி ஜெயில் சண்டைல கொத்தாளத்தேவனும் இருந்தாகணுமே. அதுக்கு இப்படி சரண்டர் ஆனாத்தான முடியும். எனவே, சாட்சியே இல்லாத கொலைக்கு சரண்டர் ஆகிறார் கொத்தாளத் தேவர்.</p>
<p>அதுமட்டுமல்லாமல் அவர் அப்ரூவராகவும் ஆகிறாராம். விருமாண்டியைவிடப் பெரிய சண்டியர் அந்தக் கொத்தாளத் தேவன். செல்வச் செழிப்பிலும் அரசியல் செல்வாக்கிலும் விருமாண்டியைவிடப் பல மடங்கு உயர்ந்தவர். அதோடு விருமாண்டியே கொத்தாளத் தேவனின் அடியாள்தான். என்னதான் உயிர் பயம் இருந்தாலும் விருமாண்டிதான் என் எஜமானர். அவர் சொன்னதைக் கேட்டுத்தான் கொலைகளை எல்லாம் செய்தேன் என்று கொத்தாளத் தேவன் ஒருபோதும் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அதன் பிறகு ஊருக்குள் அவனால் நடமாடவே முடியாது. தேவனுக்கு உயிரைவிட மானம்தான் பெரிசு. கமல் சார்தான் பசுபதிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது சரிதான். அதற்கான விசுவாசத்தை பசுபதியிடம் கமல் எதிர்பார்க்கலாம். ஆனால், கொத்தாளத் தேவனைப்போய் விருமாண்டிக்கு அடியாளாக ஆக்குவது தவறு..</p>
<p>அதோடு, குற்றம் சாட்டப்பட்ட விருமாண்டியையும் கொத்தாளத் தேவனையும் சென்னை மத்திய சிறையில் அடைக்கிறார்கள். தேனி எஸ்.ஐ.யாக இருந்த பேய்க்காமனும் ”கூடவே நானும் வரேனப்பு’ என்று சொல்லி அதே சிறையில் துணை ஜெயிலராகிவிடுகிறார். க்ளைமாக்ஸ் சண்டை களைகட்ட வேண்டுமல்லவா?</p>
<p>க்ளைமாக்ஸில் காவலர் பேய்க்காமன் கைதிகளிடம் ரகசியமாக தணிந்த குரலில் ஒரு சதித்திட்டம் பற்றிப் பேசுகிறான். விருமாண்டி மீது பொய் வழக்குகள் போட்டு தூக்கு தண்டனை வரை கொண்டுவந்தது பற்றியும் பேசுகிறான். அதை டாக்குமெண்டரி எடுக்க வந்த கேமராமேன் தூரத்தில் இருந்து படமெடுத்துவிடுகிறான். ஆனால், பேய்க்காமனுக்கு மிக அருகில் கீழே உட்கார்ந்திருக்கும் விருமாண்டிக்கு மட்டும் இது கேட்கவே இல்லையாம். அந்த கேமராவையும் பொண்ணையும் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்துவிடு என்று விருமாண்டியிடம் பேய்க்காமன் டீல் பேசும்போது என் அன்னலட்சுமியை எனக்குத் தருவியா&#8230; தூக்கு தண்டனையில இருந்து விடுதலை வாங்கித் தருவியா என்று டயலாக் அடிக்கிறார். பேய்க்காமன் சதித்திட்டம் பற்றிப் பேசியது விருமாண்டியின் காதில் விழுந்ததோ இல்லையோ, பேய்க்காமன் கெட்டவன் என்பது விருமாண்டிக்கு நன்கு தெரியும். எனவே, அந்த கேஸட்டையும் டாக்குமெண்டரி இயக்குநரையும் பேய்க்காமன் பிடித்துத் தரச் சொன்னால் அதற்கு எதிரானதைச் செய்வதுதான் விருமாண்டிக்கு நல்லது. ஆனால், அவனோ முதலில் அவர்களைப் பிடித்துக் கொடுக்கவே முயற்சி செய்கிறான். டாக்குமெண்டரி டைரக்டரை தலையில் அடித்து தூக்கிக் கொண்டு செல்கிறான். கொத்தாளத் தேவன் வந்து விருமாண்டியைக் கத்தியால் குத்தி அந்த கேமராவைப் பறிக்க முயற்சி செய்யும்பொதுதான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.</p>
<p>இப்படியாக கதையின் எந்தவொரு நகர்வை எடுத்தாலும் அதில் லாஜிக்கே கிடையாது. இதுபோன்ற தவறுகள் ஏன் நடக்கின்றன என்றால், கதை, திரைக்கதை வசனத்தை செப்பனிடுதல் என்ற சங்கதியே தமிழில் நடப்பதில்லை. ஒரு சாதாரண கட்டுரை, கதை எழுதுவதாக இருந்தாலும் அதை ஐந்தாறு தடவை அடித்துத் திருத்தி எழுதுவது உலக வழக்கம். இங்கோ கோடிகளைக் கொட்டி எடுக்கும் படத்தை எந்தவித முன் திட்டமிடலும் சரிபார்ப்பும் இல்லாமல் எடுத்துவருகிறார்கள். தப்பித்தவறி யாராவது இலக்கிய அல்லது எழுத்து ஊடகத்தில் பரிச்சயம் உள்ள ஒருவரை கதை திரைக்கதை வசனம் போன்றவற்றுக்கு உதவிக்காக வைத்துக்கொண்டால், அந்த பிரகஸ்பதிகளோ வாங்கற காசுக்கு மேல கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். நீ நின்றால் சிலை&#8230; நடந்தால் கலை&#8230; பேசினால் காவியம்&#8230; தும்மினால் ஓவியம் என்று ஆஸ்தான வித்வானாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்தான விதூஷகராகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மாறாதவரை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகத்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கும்.</p>
<p>இந்தப் படத்துக்கு கொரிய நாட்டில் விருது கிடைத்தது என்று வேறு சொன்னார்கள். வெள்ளைக்காரன் மேல் நமக்கு இருக்கும் அடிமை பக்தியினால் வெளிநாட்டுக்காரன் என்றாலே புத்திசாலி என்று ஒரு எண்ணம் நமக்கு. கேவலம் மனுஷ ஜென்மம் தானே நாம் எல்லோரும்.</p>
<p>இந்தப் படத்துக்கு மாற்று திரைக்கதை எழுதுவதென்றால், முதலில் மரண தண்டனை எபிசோடை எடுத்து தனியே வைத்துவிடுவேன். அது தனியாக எடுக்கப்படவேண்டிய வலுவான கதை. அதுபோல் க்ளைமாக்ஸ் சண்டையும் படத்துடன் பொருந்தாத ஒன்று. அப்படிப் பார்த்தால், உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு பெண்ணை காதலனே கற்பழித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுதல் என்ற விஷயம்தான் கதையாக மிஞ்சும். அதை வைத்து மிக அற்புதமான படம் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.</p>
<p>0</p>
<p><strong>B.R. மகாதேவன்</strong></p>
<p>&nbsp;</p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5812&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%3A%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88" id="wpa2a_16">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5812</wfw:commentRss>
		<slash:comments>29</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5806</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5806#comments</comments>
		<pubDate>Fri, 20 Apr 2012 02:20:10 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[சமூகவியல்]]></category>
		<category><![CDATA[விவாதம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தனியார் பள்ளிகள்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[பள்ளி]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[வணிகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5806</guid>
		<description><![CDATA[ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது. தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/education1.jpg" rel="lightbox[5806]"><img class="aligncenter size-full wp-image-5808" title="education" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/education1.jpg" alt="" width="600" height="400" /></a></p>
<p>ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.</p>
<p>தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்புக்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.</p>
<p>நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.</p>
<p>இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.</p>
<p>ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.</p>
<p>இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்.</p>
<p>தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p>நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.</p>
<p>இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).</p>
<p>இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.</p>
<p>சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.</p>
<p>ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.</p>
<p>இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாகா திரும்பியிருக்கிறது.</p>
<p>இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.</p>
<p>இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்த பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது? டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?</p>
<p>குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?</p>
<p>ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.</p>
<p>உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.</p>
<p>ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.</p>
<p>கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.</p>
<p>தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.</p>
<p>ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.</p>
<p>பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.</p>
<p>0</p>
<p><strong>வில்லவன்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5806&amp;title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%3A%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" id="wpa2a_18">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5806</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு</title>
		<link>http://www.tamilpaper.net/?p=5801</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=5801#comments</comments>
		<pubDate>Thu, 19 Apr 2012 05:29:54 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கலைஞர்]]></category>
		<category><![CDATA[கலைஞர் டிவி]]></category>
		<category><![CDATA[சுப. வீரபாண்டியன்]]></category>
		<category><![CDATA[சுபவீ]]></category>
		<category><![CDATA[திராவிட இயக்க வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=5801</guid>
		<description><![CDATA[திராவிட இயக்கம் தொடர்பாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான புரிதல்களை ஏற்படுத்தி வருபவர்களில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் முக்கியமானவர். அவருடைய பல புத்தகங்களைப் படித்திருந்தபோதும் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற புத்தகம் என்னைக் கவர்ந்த ஒன்று. இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுப.வீ அவர்களை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஒன்று, நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகங்களைக் கொடுப்பதற்காக. இரண்டு, கிழக்கு பதிப்பகத்தின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/subavee.jpg" rel="lightbox[5801]"><img class="alignright size-medium wp-image-5802" title="subavee" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/04/subavee-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>திராவிட இயக்கம் தொடர்பாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான புரிதல்களை ஏற்படுத்தி வருபவர்களில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் முக்கியமானவர். அவருடைய பல புத்தகங்களைப் படித்திருந்தபோதும் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற புத்தகம் என்னைக் கவர்ந்த ஒன்று.</p>
<p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுப.வீ அவர்களை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஒன்று, நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகங்களைக் கொடுப்பதற்காக. இரண்டு, கிழக்கு பதிப்பகத்தின் புதிய மாத இதழான ஆழம் இதழைக் கொடுத்து, கருத்து கேட்டு வருவதற்காக. மொபைலில் பேசியபோதே என்னுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றி விசாரித்தார்.</p>
<p>வீட்டுக்குள் நுழைந்தபோது சுப.வீ கட்டிலில் படுத்திருந்தார். முழங்காலில் கட்டு. மாடிப் படிக்கட்டுகளில் வழுக்கிவிழுந்ததன் காரணமாகக் காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார். எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுப்பது சவாலாக இருக்கிறது என்றார் சிரித்தபடியே. தினமும் பிசியோதெரபி செய்துவருவதால் விரைவில் குணமாகி, வெளியே புறப்படத் தொடங்கிவிடுவேன் என்றார்.</p>
<p>என்னுடைய புத்தகங்களைக் கொடுத்தேன். ஆர்வத்துடன் வாங்கியவர் நிதானமாகப் புரட்டத் தொடங்கினார். எந்த அடிப்படையில் பாகங்கள் பிரித்திருக்கிறீர்கள், எங்கிருந்து வரலாறு தொடங்குகிறது என்பன போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்டார். திராவிட இயக்கத்தின் தொடக்கமாக நான் குறிப்பிட்டிருப்பது 1912 அல்ல; பிராமணர் அல்லாதார் சங்கம் உருவான 1909 ஆம் ஆண்டைத்தான் குறிப்பிட்டுள்ளேன் என்றேன். ஆம். திராவிட இயக்க சித்தாந்தத்தின் விதை விழுந்த ஆண்டு அது என்றார் சுப.வீ. நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் சூழலில் இப்படியான பதிவுகள் வருவது ஆரோக்யமானது என்றார்.</p>
<p>பிறகு ஆழம் இதழைக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர், ‘ஓ, இது உங்களுடைய இதழ்தானா? இந்த இதழை நான் ஏற்கெனவே படித்து விட்டேனே.. அஞ்சல் மூலமாக எனக்கு வந்தது. இதழ் நன்றாக இருக்கிறது’ என்றார். நன்றி கூறிவிட்டு, ஆழம் இதழில் என்னென்ன மாதிரியான செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது என்பது பற்றிச் சொன்னேன். உங்களுடைய பங்களிப்பும் அவ்வப்போது இருக்கவேண்டும் என்றேன். சிரித்துக் கொண்டே தலையசைத்தார்.</p>
<p>பிறகு கிழக்கு பதிப்பகம் பற்றிப் பேச்சு வந்தது. கிழக்கு பதிப்பகத்தின் மீதும் கிழக்கு வெளியிடும் புத்தகங்கள் மீதும் அவருக்குள்ள விமரிசனங்களை என்னிடம் கூறினார். விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஆங் சான் சூ கி உள்ளிட்ட சில புத்தகங்களைப் படித்திருப்பதாகச் சொன்னார். அவர் வைத்த விமரிசனங்களுக்கான விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். சிலவற்றைக் ஏற்றுக்கொண்டார். சிலவற்றைக் கேட்டுக்கொண்டார். கிழக்கு வெளியிட்டுள்ள முக்கியப் புத்தகங்கள் பற்றியும் அவை உருவான விதம் பற்றியும் பேசினேன். குறிப்பாக, இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகம் பற்றி. ‘முதல் பாகம் படித்துவிட்டேன்; இரண்டாவது பாகம் வாங்கவேண்டும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு முக்கியமான புத்தகங்களில் சிலவற்றைத் தருகிறேன். அவசியம் நீங்கள் படிக்கவேண்டும் என்றேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.</p>
<p>அவர் அமர்ந்திருந்த கட்டிலில் நிறைய புத்தகங்கள், எழுதப்பட்ட காகிதங்கள். என்னவென்று விசாரித்தேன். தனக்கு அறுபது வயது நிறைவடைவதை ஒட்டி வாழ்க்கைக்குறிப்புப் புத்தகம் ஒன்றை எழுதிவருவதாகச் சொன்னார். பால்ய காலத்தில் இருந்தே நாட்குறிப்பு எழுதிவரும் அவர், அவற்றில் இருக்கும் தகவல்களைக் கொண்டு புத்தககம் எழுதிவருவதாகச் சொன்னார். புத்தகத்துக்கு அவர் வைத்த தலைப்பு: வந்ததும் போவதும்.</p>
<p>அந்தத் தலைப்பை கலைஞரிடம் கூறியிருக்கிறார் சுப.வீ. அந்தத் தலைப்பை, ‘வந்ததும் வாழ்வதும்’ என்று திருத்திக் கொடுத்திருக்கிறார் கலைஞர். அந்தத் தலைப்பிலேயே தற்போது புத்தகம் வெளிவரவிருக்கிறது என்றார் சுப.வீ. புத்தகத்தை வெளியிடுபவர் கலைஞர். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து சுப.வீ எழுதிய திராவிடத்தால் எழுந்தோம் (32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) வேறு சில புத்தகங்களையும் கலைஞர் வெளியிட இருப்பதாகச் சொன்னார். விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். அப்போது என்னுடைய கவனத்தை ஈர்த்தது அங்கிருந்த புத்தம் புதிய புத்தகம் ஒன்று. பெரியார் என் நண்பர் என்று தலைப்பு. டாக்டர். பி. வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு. அதைப்பற்றிக் கேட்பதற்குள் பிசியோதெரபிஸ்ட் வந்துவிட்டதால் விடைபெற்றுக் கொண்டேன்.</p>
<p>சந்திப்பு முடிந்த சில தினங்களில் சுப.வீ அவர்களிடம் இருந்து அழைப்பு. திராவிட இயக்க வரலாறு புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்துமுடித்துவிட்டேன். சிறப்பான பணியைச் செய்திருக்கிறீர்கள். ஏராளமான செய்திகளைத் தகுந்த ஆதாரங்களோடு பதிவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் என்றார். நன்றி தெரிவித்தேன். இரண்டாவது பாகத்தை விரைவில் படித்துமுடித்துவேன். முடித்ததும் அழைக்கிறேன் என்றார்.</p>
<p>பிறகு இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலை ஒன்பது மணிக்கு “ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற நிகழ்ச்சியில் நான் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். வரும் புதன் கிழமை காலை உங்களுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைப் பற்றிப் பேசவிருக்கிறேன். குறிப்பாக, டி.எம். நாயர் என்ற அத்தியாயம் பற்றி என்றார்.</p>
<p>புதன் கிழமையன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் பேசினார் சுப.வீ. &#8216;திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில் அதைப் பற்றி வந்திருக்கும் புதிய புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு.. இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது. அண்ணாவின் காலம் வரைக்குமானது முதல் பாகம், அண்ணாவுக்குப் பிறகான வரலாறு இரண்டாம் பாகம்.. கிழக்கு பதிப்பக வெளியீடு’ என்று அறிமுகம் செய்துவிட்டு, டி.எம். நாயர் பற்றிப் பேசினார்.</p>
<p>மாண்டேகு &#8211; செம்ஸ்போர்டு குழுவினருடன் பேசுவதற்கு டி.எம். நாயர் மேற்கொண்ட முயற்சிகள், அளித்த சாட்சியங்கள், லண்டன் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை, லண்டனில் அரசியல் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடை, அவற்றை நாயர் முறியடித்த விதம், எதிர்பாராத சமயத்தில் நடந்த நாயரின் மரணம் என்று டி.எம். நாயர் என்ற அத்தியாயத்தில் இடம்பெற்ற செய்திகளைப் பற்றிப் பேசினார் சுப.வீ. என்னுடைய புத்தகத்துக்குக் கிடைத்த முக்கியமான மதிப்புரையாக சுப.வீயின் பேச்சு அமைந்தது. நன்றிகள் பல!</p>
<p>0</p>
<p><strong>ஆர். முத்துக்குமார்</strong></p>
<div style='clear:both'></div><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D5801&amp;title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" id="wpa2a_20">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=5801</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
	</channel>
</rss>

