<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் பேப்பர்</title>
	<atom:link href="http://www.tamilpaper.net/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilpaper.net</link>
	<description>Tamil Paper.net</description>
	<lastBuildDate>Mon, 17 Jun 2013 05:03:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=</generator>
		<item>
		<title>மார்க்ஸ் &#8211; எங்கெல்ஸ் : அறிமுகம்</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7942</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7942#comments</comments>
		<pubDate>Mon, 17 Jun 2013 00:45:11 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[புரட்சி]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[எங்கெல்ஸ்]]></category>
		<category><![CDATA[கம்யூனிசம்]]></category>
		<category><![CDATA[கார்ல் மார்க்ஸ்]]></category>
		<category><![CDATA[நியூ யார்க்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7942</guid>
		<description><![CDATA[புரட்சி / அத்தியாயம் 8 கார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 அன்று மரணமடைந்தபோது வாஷிங்டன் டிசி, பால்டிமோர், டென்வர், சின்சினாட்டி, அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் வெளியான பத்திரிகைகள் அவரது மரணச்செய்தியை வெளியிடவில்லை. கார்ல் மார்க்ஸை அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்பதல்ல காரணம். அமெரிக்காவின் பிரபலமான நியூ யார்க் டிரிப்யூன் இதழின் அயல்நாட்டு நிருபராக 1851 தொடங்கி 1862 வரை மார்க்ஸ் பணியாற்றியிருக்கிறார். தனது பெயரிலும் ‘லண்டன் நிருபர்’ என்னும் பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் இரண்டு லட்சம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong>புரட்சி / அத்தியாயம் 8</strong></span></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/MarxEngels_4a.jpg" rel="lightbox[7942]"><img class="size-medium wp-image-7943 alignleft" alt="MarxEngels_4a" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/MarxEngels_4a-300x224.jpg" width="300" height="224" /></a>கார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 அன்று மரணமடைந்தபோது வாஷிங்டன் டிசி, பால்டிமோர், டென்வர், சின்சினாட்டி, அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் வெளியான பத்திரிகைகள் அவரது மரணச்செய்தியை வெளியிடவில்லை. கார்ல் மார்க்ஸை அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்பதல்ல காரணம். அமெரிக்காவின் பிரபலமான நியூ யார்க் டிரிப்யூன் இதழின் அயல்நாட்டு நிருபராக 1851 தொடங்கி 1862 வரை மார்க்ஸ் பணியாற்றியிருக்கிறார். தனது பெயரிலும் ‘லண்டன் நிருபர்’ என்னும் பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் இரண்டு லட்சம் அமெரிக்க வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. இவற்றில் பல கட்டுரைகள் தலையங்கமாகவும் வெளிவந்திருக்கின்றன. இருந்தும் கார்ல் மார்க்ஸ் பற்றி ஒரு தலையங்கம் அல்ல, ஓர் அஞ்சலிக் கட்டுரை அல்ல ஒற்றை வரிச்செய்தி வெளியிடுவதும்கூட அநாவசியமானது என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.</p>
<p>மார்க்ஸ் எழுதிய நியூ யார்க் டிரிப்யூன் அமெரிக்காவின் சக்திவாய்ந்த பத்திரிகையாக அறியப்பட்டிருந்த சமயம் அது. 1873ல் ஒயிட்லா ரீட் என்பவர் அதன் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அடிப்படையில் பழமைவாதியான அவர் தனது பத்திரிகையையும் அவ்வாறே வடிவமைக்க விருப்பம் கொண்டிருந்தார். டிசம்பர் 1878ல் வெளியான ஒரு தலையங்கம், ‘ஜெர்மானிய சோஷிலிச சக்திகளை இங்கிருந்து அகற்றியாகவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது. அதற்கு முன்பு, சார்லஸ் ஏ டானா என்பவரின் தலைமையில் டிரிப்யூன் இருந்தவரைதான் கார்ல் மார்க்ஸ் அதில் எழுதிக்கொண்டிருந்தார். மார்க்ஸை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகம் செய்ததில் டானாவின் பங்கு முக்கியமானது. ஆனால் இவரும்கூட பிற்காலத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பழமைவாதச் சிந்தனையோட்டத்துக்குத் தாவிவிட்டார். நியூ யார்க் சன் பத்திரிகையைக் கைப்பற்றியபிறகு டானாவுக்குத் தொழிலாளர் அமைப்புகள்மீதும் சோஷலிசத்தின்மீதும் போராட்டங்கள்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் மார்க்ஸைத் தனிப்பட்ட முறையில் நேசித்த காரணத்தால் தனது பத்திரிகையில் அவர் மார்க்ஸின் மரணச்செய்தியை இடம்பெறச் செய்தது தனிக்கதை.</p>
<p>கார்ல் மார்க்ஸின் மரணச் செய்தியை வெளியிடத்தான் வேண்டுமா, அப்படியே வெளியிடுவதானாலும் அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது, எப்படி மதிப்பிடுவது என்று குழம்பித் தவித்த சில அமெரிக்கப் பத்திரிகைகள் இறுதியில் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதாமல் அமைதியாக இருந்துவிட்டன. சார்லஸ் டானாவைப் போல் மார்க்ஸ்மீது சில பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுதாபம்கூட இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் விரும்பியிருந்தாலும்கூட அவர்கள் பணியாற்றும் பத்திரிகைத் தலைவர்களின் அரசியல் கண்ணோட்டத்துக்கு விரோதமாக எந்தச் செய்தியையும் வெளியிட்டிருக்கமுடியாது.</p>
<p>இறுதியில் நியூ யார்க் சன் இப்படி எழுதியது. ‘வியாழக்கிழமை நிகழ்ந்த காரல் மார்க்ஸின் மரணம் கிட்டத்தட்ட கவனிக்கப்படவில்லை. சமீபத்தில் மறைந்து ஜெனரல்கள், தலைவர்கள், ராஜதந்திரிகளைப் போல் அவரது மரணம் முறைப்படி பதிவுசெய்யப்படவில்லை. ஆனால் அவர்களைப் போலவே மார்க்ஸும் நீண்டகாலம் நினைகூறப்படுவார் என்றே தோன்றுகிறது. நம் காலத்தின் சோஷலிச இயக்கத்தை முன்னின்று நடத்திய தீர்க்கதரிசி என்று ஒருவரை அழைக்கவேண்டுமானால் அவர் கார்ல் மார்க்ஸ் மட்டும்தான்&#8230; கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கு தொழிலாளர் இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்&#8230; ஐரோப்பா முழுவதிலுமுள்ள உழைக்கும் பிரிவினரை ஒரு சீரான, வலுவான சமூகச் சக்தியாக மாற்றிக்காட்டியவர். அவர்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை. ‘பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. ஆனால் அவர்கள் வெல்வதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது. ‘ என்றார் மார்க்ஸ். எனவே அனைத்து நாடுகளைச் சேர்ந்த பாட்டாளிகளும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணையவேண்டும்.’</p>
<p>அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, பிரான்ஸ், ஹாலந்து, ரொமேனியா, ஸ்பெயின், இத்தாலி, ரஷ்யா என்று உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கார்ல் மார்க்ஸின் மரணத்தை தங்கள் வாழ்நாளில் ஏற்பட்ட ஒரு பெரும் இருளாகவே கண்டனர். மார்க்ஸ் மறைந்த மறுநாள் சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் நாளேடு (New Yorker Volkszeitung) இவ்வாறு எழுதியது. ‘கார்ல் மார்க்ஸ் இறந்துவிட்ட செய்தி பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு முக்கிய உலக நிகழ்வாகவே இருக்கும். இயந்திரங்களின் ஓயாத இறைச்சல்களிலும், இருள் படிந்திருக்கும் பணியிடங்களிலும், சுட்டெறிக்கும் சூளைகளிலும் ‘எஜமான நாடுகளிலும்’ வாழும் தொழிலாளர்களுக்கு இது ஒரு துக்க தினம். மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு மத்தியில் சிந்திக்க மறக்காமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு வளமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் போராடும் தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் துக்க தினம்.’</p>
<p>கலீலியோ, நியூட்டன், வால்டோர் ஆகியோரின் வரிசையில் ‘கார்ல் மார்க்ஸின் பெயரும் திடமான புகழுடன் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்’ என்றது வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள், நியூ யார்க். ஆம்ஸ்டர்டாமில் இருந்து எழுதிய ஒரு கட்டுரையாசிரியர், சார்லஸ் டார்வின் இயற்கை அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்போடு பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஆற்றிய பங்களிப்பை ஒப்பிட்டார். ‘இந்த இரு பெயர்களும் ஒரு சாரார் மத்தியில் ஆழ்ந்த வெறுப்பையும் இன்னொரு சாரார் மத்தியில் நன்றியுணர்வையும் ஏற்படுத்துகின்றன.’ மார்க்ஸைப் புரிந்துகொள்வதற்கான முதல் படி இது.</p>
<p>கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 &#8211; 14 மார்ச் 1883) மறைந்து 130 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்து, விட்டுச்சென்ற உலகம் இன்று வெகுவாக மாறிவிட்டது. இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மாபெரும் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன. மைக்ரோசிப் தொடங்கி அணு குண்டு வரை பல கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களிலும் கார்ல் மார்க்ஸின் 19ம் நூற்றாண்டுக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில், எதற்காக கார்ல் மார்க்ஸ் இன்று நமக்குத் தேவைப்படுகிறார்? அவரது வாழ்வையும் சிந்தனைகளையும் இன்று நாம் நினைவுகூரவேண்டிய அவசியம் என்ன?</p>
<p>இரண்டு காரணங்களைச் சொல்லமுடியும். முதலாவதாக, நாம் உலகைக் காணும் முறையை அடியோடு மாற்றியமைத்தவர் மார்க்ஸ். மார்க்ஸைத் தெரிந்துகொள்ளாமல் போவதன்மூலம் உலகின் ஒரு பரிமாணம் நமக்குக் கிடைக்காமல் போகிறது. மார்க்ஸ் ‘ஓர் எளிய உண்மையை’ முன்மொழிந்தவர் என்கிறார் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ். அந்த எளிய உண்மை இது. ‘அரசியல், அறிவியல், கலை, மதம் ஆகியவற்றை நாடிச்செல்வதற்கு முன்னால் ஒரு மனிதனுக்கு முதலில் உணவும், நீரும், உடையும் இருப்பிடமும் தேவைப்படுகிறது.’ இந்த அடிப்படைத் தேவைகளும்கூட மனிதனுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்னும் கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றது மார்க்சியம். இரண்டாவதாக, எங்கெல்ஸ் குறிப்பிட்டதுபோல், ‘எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சியாளர்.’ மார்க்ஸைப் பொருத்தவரை கோட்பாடு என்பது உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கோட்பாடு மட்டுமல்ல. உலகைச் சிறிதளவேனும் மாற்றுவதற்கான ஒரு கருவியும்கூட.</p>
<p>அதனால்தான் மார்க்சியம் ஒரு தத்துவமாக முன்மொழியப்பட்ட நாள் தொடங்கி அதற்கான மறுப்புகளும் எதிர்ப்புகளும் வலுக்கத் தொடங்கிவிட்டன. மார்க்சியத்தை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது என்பதை விளக்க முனையும் பல நூறு அறிவுஜீவிகள் பல்லாயிரம் சிறு, பெரு நூல்களை எழுதிக்குவித்துவிட்டார்கள். தாராளமயமும் உலகமயமாக்கலும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட விடாப்பிடியாக மார்க்சியத்தை பலர் அதே தீவிரத்துடன் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>‘இந்தப் படைப்புகள் (மார்க்சியத்துக்கு எதிரான விமரிசனங்கள்) ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. மார்க்ஸின் படைப்புகள் பல புத்தகங்களில் விரியக்கூடியவை என்றாலும் அவருடைய கருத்துகள் அளவில் சுருக்கமானதுதான். அதனால்தான் ஒருசில அசலான விமரிசனங்களைக் கடந்து புதிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மேல் புதிதாக மார்க்சியத்தை விமரிசிக்க எதுவும் இல்லை.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இருந்தும், மார்க்சிய எதிர்ப்பு தொடர்வதற்குக் காரணம் அறியாமை என்கிறார் ஹாப்ஸ்பாம். மார்க்சின் படைப்புகளுக்கு ஜெர்மானிய மொழியில் அப்போதே வெளிவந்த விமரிசனங்களைத்தான் இன்னமும் பலர் வெவ்வேறு விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது, அரசியல் காரணம். எதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால்தான் அது மக்களைப் பற்றிக்கொள்ளும் என்னும் விளம்பர உத்தியைத்தான் மார்க்சிய எதிர்ப்புக்கும் பலர் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் ஹாப்ஸ்பாம்.</p>
<p>ஒவ்வொரு தலைமுறையும் புதிது புதிதாக மார்க்ஸைக் கண்டறிந்து தாக்குதல் தொடுத்துக்கொண்டிருப்பதையும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மார்க்சியத்தை நிராகரிப்பதையும் வைத்துப் பார்க்கும்போது, எப்படியாவது மக்களிடம் இருந்து மார்க்ஸை அந்நியப்படுத்திவிடவேண்டும் என்னும் முனைப்பு ஒரு சாராரிடம் நீடிப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும் மார்க்சியம் தோல்வியடைந்துவிட்டது என்றும் இன்றைய சூழலுக்கு மார்க்ஸ் தேவைப்படமாட்டார் என்றும் மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய கட்டாயத்துக்கு பல அறிவுஜீவிகள் தள்ளப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.</p>
<p>அதே சமயம், முதலாளித்துவத்தை எதிர்த்த கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களுமேகூட ஒப்புக்கொள்ளும் ஓர் மார்க்சிய உண்மை இது. ஒரு முதலாளி அல்லது முதலீட்டாளரை இயக்கும் ஒரே விசை பணம் சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம்தான். இந்த விருப்பத்தால் உந்தப்பட்டு இயங்கும் உலகம்தான் இன்று நாம் காணக்கூடியது, நாம் வாழ்ந்துகொண்டிருப்பது. கடந்த இரு நூற்றாண்டுகளாக, அறிவுஜீவிகளும் சிந்தனையாளர்களும் இந்த வாழ்க்கைமுறைதான் சிறந்தது என்று சொல்லி வந்திருக்கிறார்கள். சிறந்ததுதான், ஆனால் யாருக்கு என்று கேள்வி எழுப்பினார் மார்க்ஸ்.</p>
<p>19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனும் ஓரளவு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பெருமளவிலான இயந்திரங்களை அறிமுகப்படுத்தி துரித தொழில்மயமாக்கலில் ஈடுபட்டுவந்தன. இதன் காரணமாக உற்பத்தி பெருமளவில் அதிகரித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் மனித இயந்திரங்களாக, கொடூரமான பணிச்சூழலில் நீண்ட நேரம் உழைக்கவேண்டி ய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். பிரிட்டன் தொழிற்சாலைகள் குழந்தைகளையும் தொழிலாளர்களாக மாற்றி, அடிமைகளைப் போல் நடத்தியதை சார்லஸ் டிக்கன்ஸ் தனது படைப்புகளில் உயிர்ப்புடன் கொண்டுவந்திருக்கிறார்.</p>
<p>முதலாளித்துவ தொழில்மயமாக்கல் என்பது தீர்வல்ல, நவீன உலகின் பிரச்னைகளுக்கான தோற்றுவாய் என்பதில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் தொடக்கத்திலேயே தெளிவாக இருந்தனர். முதலாளித்துவ அமைப்பின் தவறுகளையும் போதாமைகளையும் வெளிப்படுத்தும் பணியையும் அந்த அமைப்பை அடிப்படையில் மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை வகுக்கும் பொறுப்பையும் இந்த இருவரும் முன்வந்து தாமாகவே ஏற்றுக்கொண்டனர்.</p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/karl-marx2.jpg" rel="lightbox[7942]"><img class="alignright size-medium wp-image-7944" alt="karl-marx2" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/karl-marx2-218x300.jpg" width="218" height="300" /></a>‘தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்தரமான அறிவே’ என்று தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் தொடக்க காலத்தில் எழுதினார் கார்ல் மார்க்ஸ். தனது 26வது வயதில் கார்ல் மார்க்ஸ் தனது பாத்திரத்தைக் குறித்து இவ்வாறு எழுதிவைத்தார். ‘நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்த மிகத் தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அனைத்தையும் இரக்கமற்ற முறையில் முதலில் விமரிசிக்கவேண்டும்.’ இரக்கமற்ற முறை என்பது என்ன? ‘வந்தடையப்போகும் முடிவு எப்படியிருக்கப்போகிறது என்பதைப் பற்றி அஞ்சாத வகையில் எங்கள் விமரிசனங்கள் இருக்கவேண்டும். அதிகாரத்தோடு மோதுவது குறித்த அச்சம் இல்லாதபடியும் இருக்கவேண்டும். ’</p>
<p>‘கார்ல் மார்க்ஸும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸும் தம் காலத்தின் மிக அவசரமான பிரச்னைகளை ஆராய்ந்தனர். அவர்கள் முதலாளித்துவ சமூக, பொருளாதார அமைப்பின் சாராம்சத்தைப் பகுப்பாய்வு செய்தனர். சோஷலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கடைபிடிக்கவேண்டிய போர்த் தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் அடிப்படைகளை வரையறுத்தார்கள். எதிர்கால கம்யூனிச சமூகத்தின் முக்கியமான கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்கள்.’ என்கிறார் அந்திரரேயெவ் என்னும் ரஷ்ய வரலாற்றாசிரியர்.</p>
<p>மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் ஒரே பெயராக, ஒரே பதமாகப் பயன்படுத்தும் அளவுக்கு இருவரும் நீடித்த நண்பர்களாக, ஒவ்வொன்றையும் பற்றி ஒன்றுபோல் சிந்தித்தவர்களாக இருந்தனர். ஒருவருடைய படைப்பை இன்னொருவர் திருத்தி எழுதுவார். மார்க்ஸ் என்று கையெழுத்திடப்பட்ட கட்டுரையை எங்கெல்ஸும், எங்கெல்ஸ் பெயரில் வந்த கட்டுரையை மார்க்ஸும் எழுதியிருப்பார். மார்க்ஸின் மரணம் வரை நாற்பதாண்டுகாலம் நீடித்த நட்பு அது. கார்ல் மார்க்ஸின் எழுத்துகளில் இருந்து எங்கெல்ஸின் எழுத்துகளைப் பிரித்தெடுக்கமுடியாது. மட்டுமின்றி, மார்க்ஸ் என்னும் ஆளுமையையும்கூட எங்கெல்ஸைப் பிரித்தெடுத்துவிட்டு ஆராய்ந்துவிடமுடியாது. எனவே அவர்களை இருவராக அல்லாமல் ஒருவராகக் கருதி இந்தப் பகுதி தொடங்குகிறது.</p>
<p style="text-align: center;"><strong>(அடுத்த பகுதி : மார்க்ஸ் &#8211; எங்கெல்ஸ் : அடிப்படைகள்)</strong></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7942&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%3A%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_2">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7942</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரபஞ்சத்தின் கதைகள்</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7938</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7938#comments</comments>
		<pubDate>Mon, 17 Jun 2013 00:30:35 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[பண்டைய நாகரிகங்கள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[குர் ஆன்]]></category>
		<category><![CDATA[சிவபெருமான்]]></category>
		<category><![CDATA[பிரளயம்]]></category>
		<category><![CDATA[பைபிள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7938</guid>
		<description><![CDATA[பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 2 முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் &#8211; பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன. கிரேக்கம் கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong>பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 2</strong></span></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/noahs-ark-zoom.jpg" rel="lightbox[7938]"><img class="alignright size-medium wp-image-7939" alt="noahs-ark-zoom" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/noahs-ark-zoom-300x202.jpg" width="300" height="202" /></a>முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் &#8211; பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன.</p>
<p><span style="text-decoration: underline;">கிரேக்கம்</span></p>
<p>கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ஆசை மகளுக்காக ஓஷனஸ் பேரலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அவற்றின்மேல் ஏறி விளையாடினாள். அந்த ஆட்டத்தில் விண்ணுலகம், மண்ணுலகம், வானம், கடல், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்கள் ஆகியவை பிறந்தன.</p>
<p><span style="text-decoration: underline;">எகிப்து</span></p>
<p>எகிப்தியப் பழங்கதைகள் என்ன சொல்கின்றன? எங்கும் தண்ணீர். அங்கே ஆண் &#8211; பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுள்கள். இவர்கள் சேர்க்கை, முதலில் சூரியனையும் அடுத்து, பிற உயிரினங்களையும் படைக்கிறது.</p>
<p><span style="text-decoration: underline;">ரோம்</span></p>
<p>கேலஸ் (Caelus) ரோமர்களின் வானக் கடவுள். அவருக்கும், உலகத்தின் கடவுள் கெயாவுக்கும் (Gaia) நெருக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் இந்த ஜோடிகளின் வாரிசுகள்.</p>
<p><span style="text-decoration: underline;">இந்தியா</span></p>
<p>இனி, முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கதைகளைப் பார்ப்போமா? சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார்? என்றால், காக்கும் வேலை தொடங்கும் முன், ஒரு படைப்பு வேலையை சிவன் விஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு படைக்கவேண்டியது அந்தப் படைப்புக் கடவுளையே!</p>
<p>சிவபெருமானின் அடுத்த லீலை ஊழிப் பிரளயம். விஷ்ணு வெள்ளத்தில் மிதக்கிறார். ஆதிசேஷன் என்னும் பாம்பு அவருக்குப் படுக்கையாக விரிகிறது. பெருமாள் இப்போது வெள்ளத்தில், ஆதிசேஷன்மேல் ஆனந்தமான அனந்த சயனத்தில். அவர் நாபி திறக்கிறது, அதிலிருந்து ஆயிரம் இதழ்களோடு தெய்வீகத் தாமரை மலர் விரிகிறது. வெளியே வருகிறார் படைப்புக் கடவுள் பிரம்மா!</p>
<p>வெள்ளம் வடிகிறது. பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். தாமரை மலரில் மூன்று இதழ்களைப் பிய்க்கிறார். முதல் இதழை மேலே வீசுகிறார்: சொர்க்கலோகம் பிறக்கிறது. இரண்டாம் இதழை பிரம்மா வீசுகிறார். பரந்த நீலவானம் படர்கிறது. இப்போது மூன்றாம் இதழைக் கீழே நழுவவிடுகிறார். உலகம், நம் உலகம் பிறக்கிறது.</p>
<p><span style="text-decoration: underline;">நியூசிலாந்து </span></p>
<p>வெட்ட வெளியில், முழுமுதற் கடவுள் மட்டுமே இருக்கிறார். ரங்கினுயி (Ranginui) என்னும் வானக் கடவுள், பாப்பாட்டுவானுக்கு (Papatuanuku) என்னும் பூமித்தாய். இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வம்சாவளிப் பெருக்கம்தான் நம் பிரபஞ்சம்.</p>
<p><span style="text-decoration: underline;">பைபிள்</span></p>
<p>பைபிள்படி, நம் பிரபஞ்சம் முழுமுதற் கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிருஷ்டி செய்தார்.</p>
<p>முதல் நாள்: வெளிச்சம் படைத்தார். அதை இருட்டிலிருந்து பிரித்தார். வெளிச்சத்தை நாள் என்றும், இருட்டை இரவு என்றும் அழைத்தார். இரண்டாம் நாள்: வானத்தை உருவாக்கினார். மூன்றாம் நாள்: பூமி, கடல்கள், மரங்கள், செடி கொடிகள். நான்காம் நாள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். ஐந்தாம் நாள்: மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.</p>
<p>(கடவுளின் நாள் நம்முடைய இன்றைய 24 மணிநேர நாள் அல்ல. ஏனென்றால், இதிகாசங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி, கடவுள் நம்முடைய காலக் கணக்குகளைத்<br />
தாண்டியவர். உதாரணமாக, இந்து மத நம்பிக்கைகளின்படி, படைப்புக் கடவுள் பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி வருடங்கள். பைபிள் சொல்லும் நாள் கணக்கையும், இந்த அடிப்படையில்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.)</p>
<p>ஆறாம் நாள்: வகை வகையாய் மிருகங்கள். இதுவரை செய்த படைப்புகளின் உச்சமாயக ஆதாம், ஏவாள் முதல் ஆண், பெண்! ஏழாம் நாள்: தன் பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்த கடவுள் ஓய்வு எடுத்துக்கொண்டார்.</p>
<p>பைபிள் சொல்லும் இன்னொரு சிருஷ்டி ரகசியக் கதை நோவாவின் மரக்கலம்.</p>
<p>இந்துமத சிவபெருமானைப் போலவே, பைபிள் காட்டும் முழுமுதற் கடவுளின் வேலையும், அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும்தாம். பிரபஞ்சத்தில் அதர்மம் பெருகிவிட்டது. கெட்டனவற்றை அழித்து, நல்லன காக்க ஆண்டவன் முடிவெடுத்துவிட்டார். நோவா என்னும் தர்மத்தின் தலைவனை அழைக்கிறார். அவனை ஒரு மரக்கலம் தயரிக்கச் சொல்கிறார். நீளம், அகலம், உயரம், உள் வெளி அமைப்பு, பயன்படுத்தவேண்டிய மரம் என அவன் பின்பற்றவேண்டிய அத்தனை வடிவமைப்பு விவரங்களையும் தருகிறார். மரக்கலம் தயார்.</p>
<p>கடவுளின் அடுத்த கட்டளை &#8211; பிரபஞ்சத்தில் இருக்கும் எல்ல வகை ஜீவராசிகளிலும், ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு உயிரினங்களை கொண்டு வா. அவர்கள் எல்லோரையும் மரக்கலத்தில் பத்திரமாகத் தங்க வை.</p>
<p>சுமார் 45,000 வகை உயிரினங்கள் இப்போது மரக்கலத்தில் அடைக்கலம்.</p>
<p>அடுத்த கட்டளை &#8211; மரக்கலத்தில் இருக்கும் உயிரினங்களுக்குப் பல மாதங்கள் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா.</p>
<p>கடைசிக் கட்டளை &#8211; நீயும் மரக்கலத்தில் ஏறு. உள்ளே உட்கார்ந்துகொள். என்ன நடந்தாலும் பயப்படாதே. உங்கள் எல்லோரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன். நான் வெளியே வரச்சொல்லும்போது மட்டுமே, நீயும் உன்னோடு இருக்கும் ஜீவராசிகளும் வெளியே வரவேண்டும்.</p>
<p>நோவா மரக்கலத்தின் உள்ளே போனான். வெளியே, அண்டசராசரமே அதிரும் ஒலியோடு இடி. கண்பார்வையைப் பறித்திவிடும் பளிச் மின்னல். ஆனால், மரக்கலம் அமைதியின் உறைவிடமாக இருந்தது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியது. அடுத்த நூறு நாட்கள் ஊழி வெள்ளம். உலகம் மூழ்கியது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அழிந்தன.</p>
<p>வெள்ளத்தால் அடிக்கப்பட்ட மரக்கலம், அராரத் (Ararat) என்னும் மலையருகே ஒதுங்கியது. மழை நின்றது. ஒரு வருடத்துக்குப் பிறகு வெள்ளம் வடிந்தது. நோவாவையும், அவனோடு இருந்த அத்தனை உயிர்களையும் ஆண்டவன் வெளியே வரச் சொன்னார். தர்ம பூமியாக, நல்லவர்கள் வாழும் இடமாக, மறுபடியும் உலகம் தன்  சுழற்சியைத் தொடங்கியது.</p>
<p><span style="text-decoration: underline;">குர் ஆன் </span></p>
<p>தொடக்கத்தில் வானமும், பூமியும் சேர்ந்து ஒரே அமைப்பாக இருந்தன. அல்லா ஆணையின்படி, இவை இரண்டாகப்  பிரிந்தன: ஆனால், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ சம்மதித்தன. சொர்க்கம், உலகம், இவற்றுக்கு நடுவே இருப்பவை என அனைத்தையும் அல்லா படைத்தார். இந்தப் படைப்புக்கு அல்லா ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. இல்லை, உலகத்துக்கு இரண்டு நாட்கள், மலைகள், ஜீவராசிகள் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள், வனம், சொர்க்கம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்கள் என்று மொத்தம் எட்டு நாட்கள் என்கின்றன பிற சில குறிப்புகள்.</p>
<p>0</p>
<p>இந்தப் பழங்கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்று பலர் நினைக்கிறோம். இந்தக் கதைகள் , பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், ரோம், சீனா, நியூசிலாந்து, இந்தியா<br />
போன்ற நாடுகளில் உருவானவை. பல்வேறு காலகட்டங்களின் கர்ணபரம்பரைக் கதைகள். அறிவியலும், தகவல் தொடர்புகளும், விண்வெளி ஆராய்ச்சிகளும், இருந்திருக்கவே முடியாது என்று நாம் நம்புகிற காலங்களின் கதைகள். ஆனால், ஒரு ஆச்சரியம், இந்தக் கதைகளுக்குள் பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன:</p>
<ul>
<li>பிரபஞ்சத்தைப் படைத்த முழுமுதல் சக்தி நெருப்பாய்த் தகிக்கும் ஒரு சக்தி.</li>
<li>பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால், அற்புதமான ஒரு ஒலி (ஓம் ) எங்கும் நிறைந்திருந்தது.</li>
<li>சிருஷ்டியின் தொடக்கம் ஊழிப் பெருவெள்ளம்.</li>
<li>பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும், அந்த முழுமுதல் சக்தியிலிருந்து தோன்றியவை. ஆகவே, ஜடம், ஜீவன் ஆகிய எல்லாமே முழுமுதல் சக்தியின் பல்வேறு வடிவங்கள்தாம்.</li>
<li>புல் அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள், கடைசியாக ஆண், பெண் என்று ஜனனம் வரிசைக் கிரமத்தில் நடக்கிறது. அதாவது, படைப்பில் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது.</li>
</ul>
<p>மெய்ஞ்ஞானம் சொல்லும் பழங்காலப் பிரபஞ்சப் படைப்புத் தத்துவங்கள் இவை. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. விஞ்ஞானம், வானியல் போன்ற துறைகளில் நாம் அபார வளர்ச்சி அடைந்துவிட்டோம். இயற்கைக் கோள்களோடு மனிதர் படைக்கும் செயற்கைக் கோள்களும் போட்டிப் போட்டு, பிரபஞ்ச வெளியில் உலா வருகின்றன. இந்தப் புதிய அளவுகோல்களுக்குப் புராணக் கதைகள் ஒத்துவருமா?</p>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7938&amp;title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" id="wpa2a_4">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7938</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அ முதல் ஃ வரை</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7931</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7931#comments</comments>
		<pubDate>Sat, 15 Jun 2013 00:30:19 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அம்மா ஆடு இலக்கணம்]]></category>
		<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[இலக்கணம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7931</guid>
		<description><![CDATA[அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 2 மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா? தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்: உயிர் எழுத்துகள் : 12 மெய் எழுத்துகள் : 18 உயிர்மெய் எழுத்துகள் : 216 ஆய்த எழுத்து : 1 மொத்தம்: 247 இந்த மேலோட்டமான பாகுபாடு, ஓரளவுக்குதான் பயன் தரும். இலக்கணத்தை ஊன்றிக் கற்க [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/eye.jpg" rel="lightbox[7931]"><img class="alignleft size-medium wp-image-7933" alt="eye" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/eye-300x227.jpg" width="300" height="227" /></a>அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 2</strong></span></p>
<p>மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா?</p>
<p>தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்:</p>
<blockquote><p>உயிர் எழுத்துகள் : 12<br />
மெய் எழுத்துகள் : 18<br />
உயிர்மெய் எழுத்துகள் : 216<br />
ஆய்த எழுத்து : 1</p>
<p>மொத்தம்: 247</p></blockquote>
<p>இந்த மேலோட்டமான பாகுபாடு, ஓரளவுக்குதான் பயன் தரும். இலக்கணத்தை ஊன்றிக் கற்க விரும்புகிறவர்கள், இந்த எழுத்துகளுடன் இன்னும் நன்கு அறிமுகமாகவேண்டும், இவற்றை இன்னும் பலவிதமாகப் பகுத்துத் தெரிந்துகொள்ளவேண்டும், அதற்கு ஏற்பப் பயன்படுத்தப் பழகவேண்டும்.</p>
<p>தொல்காப்பியமும் சரி, நன்னூலும் சரி, தமிழ் எழுத்துகளை இரண்டு பெரும் வகைகளாகப் பிரிக்கின்றன: முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள்!</p>
<p>பெயரைக் கேட்டதும், இவற்றின் விளக்கம் புரிந்துவிடும், ‘முதல் எழுத்துகள்’ என்றால், மொழிக்கு அடிப்படையாக அமைகிற Basic Alphabets. இவற்றை வைத்துதான் மீதமிருக்கிற அனைத்து எழுத்துகளும் தோன்றும், அவற்றைச் ‘சார்பு எழுத்துகள்’ என்கிறோம்.</p>
<p>கொஞ்சம் வேறு துறை உதாரணம் வேண்டுமென்றால், சிவப்பு, பச்சை, நீலம் என்கிற மூன்று அடிப்படை வண்ணங்களைப் பலவிதமாகக் கலந்து நூற்றுக்கணக்கான மற்ற வண்ணங்களைத் தருவித்துக்கொள்கிறோம் அல்லவா? அதுபோல, தமிழில் இருக்கும் முதல் எழுத்துகளைக் கலந்து சார்பு எழுத்துகள் தோன்றுகின்றன.</p>
<p>அந்த முதல் எழுத்துகள், மொத்தம் முப்பது. அப்படியானால், சார்பு எழுத்துகள், 217.</p>
<p>முப்பது முதல் எழுத்துகளும் உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான். அ, ஆ, இ, ஈ என்று தொடங்கி, ஔ வரை செல்லும் பன்னிரண்டு உயிர் எழுத்துகள். க், ங், ச், ஞ் என்று தொடங்கி ன் வரை செல்லும் பதினெட்டு மெய் எழுத்துகள். இந்த முப்பதும்தான் தமிழ் மொழிக்கே அடிப்படையான எழுத்துகள். உயிர்மெய் எழுத்துகள் எனப்படும் 216 எழுத்துகளும் இவற்றிலிருந்து பிறப்பவை.</p>
<p>சார்பு எழுத்துகள் 217 என்று பார்த்தோமே, இங்கே 216தானே வருகிறது?</p>
<p>மீதமிருப்பது ஆய்த எழுத்து, அதாவது ‘ஃ’. மிக விசேஷமான இந்தச் சார்பு எழுத்தைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுவோம்.</p>
<p>இப்போதைக்கு, மீண்டும் முதல் எழுத்துகளின்மீது கவனத்தைத் திருப்புவோம். அந்த முப்பது எழுத்துகளுக்குள் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இலக்கண நுட்பங்கள் ஏராளமாக உள்ளன.</p>
<p>தமிழின் எழுத்து நுட்பத்தை விரிவாகப் பார்ப்பதற்குமுன்னால், நாம் ‘மாத்திரை’களைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.</p>
<p>முன்பெல்லாம் தமிழ் வகுப்பில் ‘மாத்திரை’ என்று போர்டில் எழுதி அடிக்கோடு போட்டதும், தமிழ் ஆசிரியர்கள் ஒரு மிகப் பழைய்ய்ய ஜோக்(?) அடிப்பார்கள், ‘மாத்திரைன்னா தலைவலி மாத்திரை இல்லை, இது வேற!’</p>
<p>அப்போ, மாத்திரைன்னா என்ன?</p>
<p>அது ஓர் நேர அளவு. விநாடி, நிமிடம், மணிபோல.</p>
<p>இப்படிக் குத்துமதிப்பாகச் சொன்னால் எப்படி? ஒரு நிமிடம் என்பது 60 விநாடி, ஒரு மணி என்பது 60 நிமிடம், அதுமாதிரி மாத்திரையையும் துல்லியமாக விளக்கமுடியுமா?</p>
<p>தொல்காப்பியத்தில் ஒரு மிக அழகான நூற்பா இதை விளக்குகிறது:</p>
<p>கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை</p>
<p>அதாவது, நாம் ஒருமுறை கண் இமைப்பதற்கு எவ்வளவு நேரமாகுமோ, ஒருமுறை கை விரல்களால் சொடக்குப் போடுவதற்கு எவ்வளவு நேரமாகுமோ, அதுதான் ஒரு மாத்திரைப் பொழுது.</p>
<p>சினிமாவில் வருவதுபோல் ஸ்லோ மோஷனில் கண் இமைக்கக்கூடாது, அல்லது அதே சினிமாவில் காதலனைக் கண்ட காதலியின் கண்கள் படபடப்பதுபோல் அதிவேகமாகக் கண் இமைக்கக்கூடாது. இயல்பாக, பொதுவாக, சராசரியாக ஒரு மனிதர் கண் இமைப்பதற்கோ, கை விரல்களைச் சொடக்குவதற்கோ எவ்வளவு நேரம் ஆகும் என்று கவனியுங்கள், அதுதான் ஒரு மாத்திரை.</p>
<p>இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் போவோமா, அதாவது, ஒரு மாத்திரைக்குக் கீழே, கால் மாத்திரை, அரை மாத்திரை, முக்கால் மாத்திரை போன்றவற்றுக்குக்கூட கணக்கு உண்டு!</p>
<p>இந்த நூற்பாவைக் கவனியுங்கள்:</p>
<p>‘உன்னல் காலே, ஊன்றல் அரையே,<br />
முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே!’</p>
<p>அதாவது, கையில் சொடக்குப்போடவேண்டும் என்று நினைக்கும் நேரம், கால் மாத்திரை, அதற்காக இரண்டு விரல்களை ஒன்று சேர்க்கும் நேரம், அரை மாத்திரை, விரல்களை முடுக்கும் நேரம், முக்கால் மாத்திரை, அவற்றை விடுவித்து ‘டப்’ என சொடக்குச் சத்தம் எழும் நேரம், ஒரு மாத்திரை.</p>
<p>நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? இத்துணை நுட்பமாகச் சிந்தித்திருக்கிறார்கள் நம் பழந்தமிழர்கள்!</p>
<p>அது சரி, இலக்கணப் பாடத்தில் நேரக் கணக்கு எதற்கு?</p>
<p>தமிழ் எழுத்துகள் எல்லாவற்றையும் எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதற்கு மாத்திரைக் கணக்கு உண்டு. எழுத்துகளுக்கு மாத்திரை உண்டு என்பதால், சொற்களுக்கும் உண்டு, வாக்கியங்களுக்கும் உண்டு, எல்லாவற்றுக்கும் உண்டு.</p>
<p>உதாரணமாக, ‘அ’ என்ற எழுத்தை உச்சரிக்க ஒரு மாத்திரை நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் ‘ஆ’ என்பதை உச்சரிக்க இரண்டு மாத்திரை நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.</p>
<p>சந்தேகமிருந்தால், ஒரு கையால் சொடக்குப் போட்டபடி ‘அ’ என்றோ ‘ஆ’ என்றோ உச்சரித்துப் பாருங்கள், கச்சிதமாக 1 மாத்திரை, 2 மாத்திரை நேரம்தான் எடுத்துக்கொள்வீர்கள்.</p>
<p>இப்படி உச்சரிக்கும் நேர அளவைப் பொறுத்து, உயிர் எழுத்துகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார்கள்:</p>
<p>* குறில் அல்லது குற்றெழுத்து<br />
* நெடில் அல்லது நெட்டெழுத்து</p>
<p>குறுகி ஒலிப்பது குறில், அதாவது இந்த எழுத்துகள் சட்டென்று ஒலித்து முடிந்துவிடும். நீண்டு ஒலிப்பது நெடில், அதாவது இவற்றை கொஞ்சம் நீட்டி முழக்கிச் சொல்லவேண்டியிருக்கும்.</p>
<p>பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்பவைமட்டும் குறில்கள், மீதமுள்ள ஏழும் நெடில்கள்.</p>
<p>இந்தக் குறில் எழுத்துகளை உச்சரிப்பதற்கு, ஒரு மாத்திரைப் பொழுது போதும், நெடில்களை உச்சரிப்பதற்கு இரண்டு மாத்திரை நேரம் தேவைப்படும்.</p>
<p>அப்படியானால், மெய் எழுத்துகள்?</p>
<p>மெய் எழுத்துகளில் குறில், நெடில் என்கிற பாகுபாடே கிடையாது. அவை எல்லாமே குறிலைவிடச் சிறியவை, அரை மாத்திரைப் பொழுதுக்குள் உச்சரிக்கப்பட்டுவிடும். ஆய்த எழுத்து(ஃ)ம் இதேமாதிரிதான்.</p>
<p>அப்படியானால், உயிர்மெய் எழுத்துகளுக்கு மாத்திரைக் கணக்கு உண்டா?</p>
<p>நிச்சயமாக உண்டு. அவற்றில் இருக்கும் உயிர் எழுத்து எது என்பதைப் பொறுத்து, உயிர்மெய் எழுத்துகளைக் குறில், நெடில் என்று பிரிக்கலாம்.</p>
<p>உதாரணமாக, ‘கி’ என்ற எழுத்தில் உள்ள உயிர் எழுத்து, ‘இ’, அது குறில், ஆகவே ‘கி’யும் குறில்தான். அதற்கும் ஒரு மாத்திரைதான் அளவு.</p>
<p>அதேசமயம், ‘கீ’ என்ற எழுத்தில் உள்ள உயிர் எழுத்து ‘ஈ’, அது நெடில், ஆகவே ‘கீ’ நெடில், அதற்கு இரண்டு மாத்திரை அளவு.</p>
<p>இப்படியே இருக்கும் எல்லா உயிர்மெய் எழுத்துகளையும் குறில், நெடில் என வரையறுத்து, ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளைக் கணக்கிடலாம்.</p>
<p>ஆக, தமிழில் மாத்திரைக் கணக்கு:</p>
<blockquote><p>உயிர் எழுத்துகள் : குறில் என்றால் 1 மாத்திரை, நெடில் என்றால் 2 மாத்திரை<br />
மெய் எழுத்துகள் : 1/2 மாத்திரை<br />
உயிர்மெய் எழுத்துகள் : குறில் என்றால் 1 மாத்திரை, நெடில் என்றால் 2 மாத்திரை<br />
ஆய்த எழுத்து : 1/2 மாத்திரை</p></blockquote>
<p>சுருக்கமாகச் சொன்னால், தமிழ் எழுத்துகள் எல்லாமே இரண்டு சொடக்குப் போடும் நேரத்துக்குள் உச்சரிக்கப்பட்டுவிடும். &#8216;மூன்று மாத்திரை எழுத்து’ என்று எதுவுமே தமிழில் கிடையாது.</p>
<p>சில இடங்களில், குறிப்பாகப் பாடல்களில் இந்த மாத்திரைக் கட்டுப்பாடு மீறப்படுவதுண்டு. அதைப்பற்றி அப்புறம் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.</p>
<p>இப்போது, மறுபடி உயிர் எழுத்துகளுக்குத் திரும்புவோம். அந்தப் பன்னிரண்டு எழுத்துகளைப்பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.</p>
<p>பள்ளியில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக, ஓர் எளிய சூத்திரம் சொல்வார்கள், ‘தலையில புள்ளி வெச்சது மெய் எழுத்து, புள்ளி வைக்காதது உயிர் எழுத்து.’</p>
<p>இந்தச் சூத்திரம், இன்றைக்குப் பொருந்தலாம். ஆனால் அன்றைக்கு (அதாவது, தொல்காப்பியம், நன்னூல் எழுதப்பட்ட நேரத்தில்) உயிர் எழுத்துகளிலும் இரண்டு எழுத்துகளுக்குத் தலையில் புள்ளி வைத்திருந்தார்கள். அவை: எ மற்றும் ஒ. பின்னர் ஏதோ காரணத்தால் இந்தப் பழக்கம் தவிர்க்கப்பட்டுவிட்டது. ஆதலால் இப்போது, புள்ளி வைத்த உயிர் எழுத்துகள் எவையும் இல்லை.</p>
<p>உயிர் எழுத்துகளில் மூன்றைமட்டும் ‘சுட்டெழுத்துகள்’ என்பார்கள். அதாவது, ‘சுட்டு எழுத்துகள்’, அவை ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுகிற எழுத்துகள்.</p>
<p>உதாரணமாக, ‘அப்பையன்’ என்று சொல்லும்போது, அதில் வரும் ‘அ’ என்ற எழுத்து, சம்பந்தப்பட்ட பையனைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா? அதனால் அது சுட்டெழுத்து.</p>
<p>தமிழில் உள்ள மூன்று சுட்டெழுத்துகள் : அ, இ மற்றும் உ.</p>
<p>இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? எப்போது எதைப் பயன்படுத்தவேண்டும்?</p>
<p>‘அ’ என்பது, சேய்மைச் சுட்டு, தமிழில் ‘சேய்மை’ என்றால் தொலைவு என்று பொருள், தூரத்தில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்கு ‘அ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தலாம்.</p>
<p>‘இ’ என்பது, அண்மைச் சுட்டு, அதாவது, அண்மையில், அருகில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்கு ‘இ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தலாம்.</p>
<p>‘உ’ என்பது இந்த இரண்டுக்கும் நடுவே, பக்கத்திலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத, நடுவில் உள்ள பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம்.</p>
<p>உதாரணமாக, நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன், எதிரே ஒரு மேஜை இருக்கிறது, சற்றுத் தொலைவில் செய்தித்தாள் தரையில் கிடக்கிறது. இதை எப்படிச் சுட்டுவது?</p>
<p>&#8216;இந்நாற்காலி’யில் உள்ள நான், ‘அச்செய்தித்தாளை’ எடுத்து, ‘உம்மேஜையில்’ வைக்கிறேன் : இந்தக் காட்சியை அப்படியே கற்பனை செய்து பார்த்தால், அ, இ, உ வித்தியாசம் தெளிவாகப் புரிந்துவிடும்.</p>
<p>அ, இ என்ற சுட்டெழுத்துகளைப் புரிந்துகொள்வது மிகவும் சுலபம். காரணம், நாம் தினசரி வாழ்க்கையில் இவற்றைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவருகிறோம்.</p>
<p>உதாரணமாக, என் நண்பர் ஒருவர் இதே அறையில் இருக்கிறார். அவரைப்பற்றி உங்களிடம் பேசினால், ‘இவன் இருக்கானே, பெரிய திறமைசாலி’ என்பேன். அதே நண்பர் டெல்லியில் இருந்தால்? ‘இவன்’ என்று சொல்லமாட்டேன், ‘என் ஃப்ரெண்டு&#8230; அவன் இருக்கானே, பெரிய திறமைசாலி’ என்பேன். இந்த இரண்டுக்கும் நடுவே, மூன்றாவது சுட்டெழுத்தைப் பயன்படுத்தி ‘உவன் பெரிய திறமைசாலி’ என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அது இப்போது புழக்கத்தில் இல்லை.</p>
<p>மூன்று சுட்டெழுத்துகளையும் பயன்படுத்தி நம்மாழ்வார் ஓர் அருமையான பாசுரம் எழுதியிருக்கிறார்:</p>
<p>நாம் அவன், இவன், உவன், அவள், இவள், உவள், எவள்,<br />
தாம் அவர், இவர், உவர், அது, இது, உது, எது,<br />
வீம் அவை, இவை, உவை, அவை நலம் தீங்கு அவை<br />
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே!</p>
<p>இதற்கு முழு விளக்கம் தருவதற்கு இது இடமல்ல, அதற்குப் பதிலாக, அவன், இவன், உவன், அவள், இவள், உவள், அவர், இவர், உவர், அது, இது, உது என நம்மாழ்வார் சுட்டெழுத்துகளின் பயன்பாடுகளை நன்கு காட்சிப்படுத்திருப்பதைமட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி நாம் சுட்டுகிற எல்லாம் அந்த இறைவனே என்பது பாடலின் மையக் கருத்து.</p>
<p>இருப்பவை மூன்றே சுட்டெழுத்துகள்தாம். ஆனால் அதற்குள் பல வகைபாடுகள் உண்டு, ஏற்கெனவே அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு பார்த்தோம், இன்னொரு வகைபாடு: அகச் சுட்டு, புறச் சுட்டு.</p>
<p>‘அகச் சுட்டு’ என்றால், அந்தச் சொல்லே ஒரு சுட்டாக இருக்கும், அதிலிருந்து சுட்டெழுத்தைப் பிரித்து எடுத்துவிட்டால், அர்த்தம் இருக்காது.</p>
<p>உதாரணமாக, ‘அவன்’ என்ற சொல், இதில் ‘அ’ என்பது சுட்டெழுத்து, அதைப் பிரித்துவிட்டால், ‘வன்’ என்று வரும், அதற்குப் பொருள் இல்லை. ஆகவே இது ‘அகச் சுட்டு’.</p>
<p>மாறாக, ‘அப்பையன்’ என்ற சொல், இதில் ‘அ’ என்ற சுற்றெழுத்தைப் பிரித்துவிட்டால்கூட, ‘பையன்’ என்ற சொல் மீதமிருக்கும். ஆகவே, அது ‘புறச் சுட்டு’.</p>
<p>ஆனால், நிஜ வாழ்க்கையில் நாம் ‘அப்பையன்’ என்று சொல்வதில்லையே, ‘அந்தப் பையன்’ என்றுதானே எழுதுகிறோம்? அது ஏன்?</p>
<p>‘அப்பையன்’ என்பதும் ‘அந்தப் பையன்’ என்பதும் ஒரே அர்த்தம்தான். ஆனால் இலக்கணப்படி ‘அப்பையன்’ மட்டுமே போதுமானது. ‘அ’ என்கிற சுட்டெழுத்தை நாம் ‘அந்த’ என்று திரித்துப் பயன்படுத்துகிறோம். இதேபோல், ‘இ’ என்ற சுட்டெழுத்து ‘இந்த’ என்று திரிகிறது, ‘உ’ என்ற சுட்டெழுத்து ‘உந்த’ என்று திரிகிறது. அந்த, இந்த, உந்த என்ற இந்த மூன்று சொற்களையும் ‘சுட்டுத் திரிபு’ என்பார்கள். அதாவது, அ, இ, உ என்கிற சுட்டெழுத்துகளின் திரிந்த வடிவம்.</p>
<p>அது, இது, உது என்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் எழுத்துகளைப்போலவே, ‘எது?’ என்று கேள்வி கேட்பதற்கும் சில எழுத்துகள் வேண்டுமல்லவா?</p>
<p>அவை ‘வினா எழுத்துகள்’. அடுத்த வாரம் அவற்றைப்பற்றி விரிவாகப் பேசலாம்.</p>
<p>அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.</p>
<blockquote><p>* எழுத்து<br />
* அதில் இரண்டு வகை : முதலெழுத்து (30), சார்பெழுத்து (217)<br />
* முதலெழுத்தில் இரண்டு வகை : உயிர் எழுத்து (12), மெய் எழுத்து (18)<br />
* மாத்திரை அளவு<br />
* குறில் (5), நெடில் (7)<br />
* மெய் எழுத்துகள், ஆய்த எழுத்துகளின் மாத்திரை அளவு<br />
* உயிர்மெய் எழுத்துகளின் மாத்திரை அளவு<br />
* புள்ளி வைத்த உயிர் எழுத்துகள்<br />
* சுட்டெழுத்துகள் (3)<br />
* சேய்மைச் சுட்டு, அண்மைச் சுட்டு<br />
* அகச்சுட்டு, புறச்சுட்டு<br />
* சுட்டுத் திரிபு</p></blockquote>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7931&amp;title=%E0%AE%85%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%83%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88" id="wpa2a_6">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7931</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>விசாரணை கமிஷன் / பகுதி 4</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7926</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7926#comments</comments>
		<pubDate>Thu, 13 Jun 2013 07:14:55 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[ஒரு கனவின் வரைபடம்]]></category>
		<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[திரைக்கதை]]></category>
		<category><![CDATA[விசாரணை கமிஷன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7926</guid>
		<description><![CDATA[ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 6 காட்சி : 18 இடம் : மனித உரிமை கமிஷன் நேரம் : காலை 9.00 மணி மனித உரிமை கமிஷன் தலைவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். எதிரில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி அமர்ந்திருக்கிறார். ம.உ.த. : என்ன சார்&#8230; திடீர்னு இப்படி சொல்றிங்க&#8230; நீங்க வருவீங்கன்னு எல்லாரும் காத்துக்கிட்டிருக்கோமே சார். நீங்க வந்து சாட்சி சொன்னாதான் வெயிட்டா இருக்கும் சார். எதிர்முனை : எனக்கு திடீர்னு உடம்பு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/images.jpg" rel="lightbox[7926]"><img class="alignright size-full wp-image-7927" alt="images" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/images.jpg" width="226" height="223" /></a>ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 6</strong></span></p>
<p style="text-align: center;"><span style="text-decoration: underline;">காட்சி : 18</span></p>
<p>இடம் : மனித உரிமை கமிஷன்</p>
<p>நேரம் : காலை 9.00 மணி</p>
<p>மனித உரிமை கமிஷன் தலைவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். எதிரில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி அமர்ந்திருக்கிறார்.</p>
<p>ம.உ.த. : என்ன சார்&#8230; திடீர்னு இப்படி சொல்றிங்க&#8230; நீங்க வருவீங்கன்னு எல்லாரும் காத்துக்கிட்டிருக்கோமே சார். நீங்க வந்து சாட்சி சொன்னாதான் வெயிட்டா இருக்கும் சார்.</p>
<p>எதிர்முனை : எனக்கு திடீர்னு உடம்பு சரியில்லை&#8230; இப்ப கூட ஆஸ்பத்திரிக்குத்தான் பொறப்பட்டுட்டு இருக்கேன்.</p>
<p>ம.உ.த. : ஒரு நிமிஷம் இருங்க&#8230; அருள் இருக்காரு. நீங்க அவர்கிட்டயே பேசிடுங்க&#8230;</p>
<p>எதிர்முனை (பதறியபடியே) : வேண்டாம் வேண்டாம். நீயே சொல்லிடு&#8230; அவனை நான் அப்பறம் பாத்து பேசிக்கறேன்.</p>
<p>அதற்குள் அருள் தொலைபேசியை வாங்கிக் கொண்டுவிடுகிறார்.</p>
<p>அருள் : தலைவரே&#8230; என்ன இது&#8230; இப்ப போய் இப்படிப் பண்ணறீங்க&#8230;</p>
<p>எதிர்முனை : அருள்&#8230; கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ&#8230; மீட்டிங்கை முடிச்சிட்டு உடனே இங்க வா&#8230; உங்கிட்ட நெறைய பேசணும்.</p>
<p>அருள்: வேண்டாம் தலைவரே&#8230; எதுவானாலும் இப்பவே பேசிடுவோம்&#8230; மக்கள்லாம் நீங்க வருவீங்கன்னு நம்பிக்கையோட காத்துட்டு இருக்காங்க. வந்து ஒரு பதில் சொல்லிட்டுப் போங்க.</p>
<p>எதிர்முனை : நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு&#8230; நீ இன்னிக்கு விசாரணைக் கமிஷனை சமாளிச்சு அனுப்பிடு&#8230; தேர்தல் வேற நெருங்குது. நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கு&#8230;</p>
<p>அருள் : சி.எம்.கிட்ட இருந்து போன் வந்துச்சா&#8230;</p>
<p>எதிர்முனை சட்டென்று தடுமாறி மவுனத்தில் ஆழ்கிறது.</p>
<p>அருள் : சி.எம்.கிட்ட இருந்து கால் வந்துச்சா..?</p>
<p>எதிர்முனை (தயங்கியபடியே) : ஆமாம்&#8230;</p>
<p>அருள் : அவரோட மிரட்டலுக்குப் பயந்துட்டீங்களா..?</p>
<p>எதிர்முனை : இல்லை&#8230;</p>
<p>அருள் : பின்ன&#8230; என்ன சொன்னாரு&#8230; தெரியாம பண்ணிடேன். மன்னிச்சுடுன்னாரா&#8230; இல்லைன்னா கட்சி நிதிக்கு காசு தர்றேன்னு சொன்னாரா&#8230; ஏன் கமிஷன் முன்னால சாட்சி சொல்ல வரமாட்டேங்கறீங்க&#8230;</p>
<p>எதிர்முனை  (நிதானமாக) : சி.எம். அலையன்ஸ் பத்தி பேசினாரு&#8230;</p>
<p>அருள் (அதிர்ந்து) : என்னது</p>
<p>எதிர்முனை (உறுதியாக) :  நீ மீட்டிங்கை முடிச்சுட்டு உடனே பொறப்பட்டு இங்க வா&#8230; நிறைய பேச வேண்டி இருக்கு.</p>
<p>அருள் :  என்ன தலைவரே&#8230; இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க&#8230;. மீட்டிங்குக்கு சாட்சி சொல்ல வராட்டாக் கூடப் பரவாயில்ல. நம்ம ஆளுங்க சொன்னாலே போதும். அலையன்ஸ்னு வாய் கூசாம சொல்றீங்களே தலைவரே&#8230; எந்த மொகத்தை வெச்சுக்கிட்டு நான் இனி ஊர்ல நடக்கறது. இவ்வளவு போராடினதும் ரத்தம் சிந்தினதும் கடசில இதுக்குத்தானா..?</p>
<p>எதிர்முனை : அந்த அம்மாகிட்ட இருந்து எந்த சிக்னலும் வர்ற மாதிரி தெரியலை. நாம தனியா நின்னா வோட்டைப் பிரிக்கறதைத் தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு வேற வழி தெரியலை&#8230;</p>
<p>அருள்: தலைவரே நமக்கு எம்.எல்.ஏ. ஸீட்டா தலைவரே முக்கியம்&#8230;</p>
<p>எதிர்முனை : அது முக்கியம் இல்லைதான். ஆனா நாம ஒரு நிலைக்கு வர்ற வரைக்கும் நம்ம சார்பா சட்ட சபைல பேச ரெண்டு பேர் இருக்கறது ரொம்ப அவசியம் அருள்&#8230;</p>
<p>அருள் : யாரை கேட்டு இந்த முடிவெடுத்தீங்க&#8230;</p>
<p>எதிர்முனை : நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன்&#8230; போன்ல இதை எல்லாம் பேச முடியாது. நீ பொறப்பட்டு வா&#8230;</p>
<p>அருள் : இல்லை தலைவரே&#8230; போன்லயே பேசி முடிச்சிடுவோம். இனிமே நாம சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நெனைக்கறேன்.</p>
<p>எதிர்முனை : அருள் ஆத்திரப்படாத&#8230; பொறுமையா யோசிச்சுப் பாரு&#8230;</p>
<p>அருள் : இதுல யோசிக்க என்ன தலைவரே இருக்கு. வீடு புகுந்து அடிச்சிருக்கான். பொம்பளைப் புள்ளைகளை கதறக் கதறக் கெடுத்திருக்கான். பச்சப் புள்ளையை தண்ணில தூக்கி எறிஞ்சு கொன்னிருக்கான். அவனுக்கு மாலை போட்டு அவன் கால்ல விழச் சொல்றீங்க&#8230; போதும் தலைவரே&#8230; இனி நடக்க வேண்டியதை நாங்களே பாத்துக்கறோம்.</p>
<p>போனை ஆவேசமாக வைக்கிறான் அருள்.</p>
<p style="text-align: center;"><span style="text-decoration: underline;"> காட்சி எண் : 19</span></p>
<p>இடம்: விசாரணை கமிஷன் நடக்கும் அரங்கம்</p>
<p>நேரம்: காலை 10 மணி</p>
<p>வாசலில் ஏராளமானோர் கூடி நிற்கின்றனர். நீதிபதிகள் குழுவில் இருக்கும் பெண்கள் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு கர்ச்சீப்பால் முகத்தில் துளிர்க்கும் வியர்வையை ஒற்றிக் கொண்டு இருக்கிறார்கள். சபாரி சூட்டில் இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி பக்கத்தில் இருக்கும் மக்கள் கண்காணிப்பு செயலாளருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். உடைக்கப்பட்ட மக்களது உடைமைகள் மிகவும் பரிதாபமான ஷெட்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் அருகே கவலை தோய்ந்த முகத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் காத்து நிற்கின்றனர். இதுவரை வெளியான பத்திரிகை செய்திகள் கண்காட்சி போல் போர்டுகளில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கார் அரங்கத்துக்குள் நுழைகிறது. மக்கள் ஆர்வத்துடன் அதை நோக்கிப் போகிறார்கள். மக்கள் தலைவரும், நீதிபதியும் இறங்குகிறார்கள். மக்கள் சோர்வாகத் தங்கள் இடங்களுக்குத் திரும்புகிறார்கள்.</p>
<p>மக்கள் கண்காணிப்புத் தலைவர் நீதிபதிக்குப் பிற நீதிபதிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். அனைவரும் எதிர்க் கட்சித் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.</p>
<p>சிறிது நேரத்தில் ஒரு கார் வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அதிலிருந்து இறங்குகிறார். மக்கள் அவரைச் சூழ்கிறார்கள். மக்கள் கண்காணிப்புத் தலைவர் நேராக அரசியல் தலைவரை மக்களின் உடைக்கப்பட்ட உடைமைகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். வெட்டப்பட்ட பீரோ, தெறித்துக் கிடக்கும் பாத்திரங்கள், உடைக்கப்பட்ட மேஜைகள் என ஒவ்வொன்றாக அழுதபடியே மக்கள் சொல்லிக் காட்டுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் இறுக்கமான முகத்துடன் எல்லாவற்றையும் பார்க்கிறார். ஒரு புகைப்பட நிருபர் அவர்களை நிற்க வைத்து ஒரு படம் எடுத்துக் கொள்கிறார். பல முகங்கள் போட்டோவில் விழ முண்டியடிக்கின்றன.</p>
<p>வயதான ஒருவர் கூட்டத்தை விலக்கியபடியே வந்து ஒரு மனுவைத் தருகிறார். என் மகனை ஜெயில்ல போட்டுட்டாங்கய்யா. எம் மருமகளைக் கெடுத்துட்டாங்கய்யா. எம் பேரனைக் கொன்னுப் போட்டாங்கய்யா. அதற்கு மேல் பேச முடியாமல் அவர் அழுகிறார். மக்கள் கண்காணிப்புத் தலைவர் தன் வாலிண்டியர்களை முறைத்துப் பார்க்கிறார். அவர்கள் உடனே விரைந்து பெரியவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கின்றனர்.</p>
<p>அனைவரும் அரங்குக்குள் நுழைகின்றனர். திருமணங்களுக்காக வாடகைக்கு விடப்படும் அரங்கம் அது. ஜிகினா பேப்பர்களும், ப்ளாஸ்டிக் பூ அலங்காரங்களும் மின் விசிறியின் சுழற்சியில் பளபளவென ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. நீதிபதிகள் மேடையில் இருக்கும் தங்கள் இருக்கைகளில் சென்று அமர்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரும் பிற அரசியல் பிரமுகர்களும் கீழே இருக்கும் இருக்கைகளில் அமர்கின்றனர். பத்திரிகையாளர்கள் பகுதி காலியாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நான்கு வரிசை கழித்து பயமும், வேதனையும், நம்பிக்கையும் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். ஏகதேசமாக அனைவரும் காயங்களுக்குப் போட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகிறது.</p>
<p>மக்கள் கண்காணிப்புத் தலைவர் பேச ஆரம்பிக்கிறார்.</p>
<p>தோழர்களே, பொது மக்களே, நீதிபதிகளே&#8230; கடந்த 15ம் தேதி அன்று செந்தமிழ் நகரில் காவலர்கள அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் அன்று நடந்தது என்ன என்பதைக் கண்டறியத்தான் இன்று இந்த விசாரணை கமிஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்களோடு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் காவல் துறை கமிஷனராகவே இருந்தாலும் &#8211; இங்கு வந்திருக்கும் காவல் துறையின் ரகசிய நிருபர்கள் இதைத் தவறாமல் குறிப்பெடுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>(எல்லோரும் திரும்பி யார் அந்த ரகசிய நிருபர் என்று பார்க்கிறார்கள். அவரும் திரும்பிப் பர்த்துச் சிரித்துக் கொள்கிறார்).</p>
<p>மக்கள் கண்காணிப்புத் தலைவர் தொடர்கிறார்.</p>
<p>கமிஷனராகவே இருந்தாலும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற வகையில் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. நமது நீதிபதிகள் (ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறார்) நடுநிலை தவறாமல் வழங்கப் போகும் தீர்ப்பானது சரித்திரத்தின் ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு எளிய வேண்டுகோள். எண்ணிக்கையில் நீங்கள் அதிகமாக இருப்பதால் மூன்று பிரிவுகளாக உங்களைப் பிரித்து விசாரணை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். ஒன்று முதல் 20 வரை எண் தரப்பட்டுள்ளவர்கள் இங்கேயே இருக்கவும். 21ல் இருந்து 40 வரை எண் தரப்பட்டுள்ளவர்கள் கீழ்த் தளத்துக்குச் செல்லவும். எஞ்சியோர் இந்த அரங்கிற்கு இடப் பக்கத்தில் இருக்கும் அறைக்குச் செல்லவும். நடந்த விஷயங்களைப் பயப்படாமல், தைரியமாக சுருக்கமாகச் சொல்லுங்கள். சரி என் பேச்சை இத்துடன் முடித்துக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன் நீதிபதி ஐயா அவர்களை சில வார்த்தைகள் பேச அழைக்கிறேன்.</p>
<p>தலைமை நீதிபதி       :        (ஆங்கிலத்தில்) எனக்குத் தமிழில் இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் தெரியும். ஒண்ணு வணக்கம். இன்னொன்னு போய்ட்டு வர்றேன் (கூட்டத்தினர் சிரிக்கின்றனர்).</p>
<p>முதலில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். இந்த  விசாரணை கமிஷனால் அரசு தரப்பில் அமைக்கப்பட இருக்கும் கமிஷனுக்கு சில பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியம். யாருக்கும் தண்டனை தரவோ,  நஷ்ட ஈடு தரவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது.</p>
<p>சரியாகச் சொன்னீர்கள் என்பது போல் மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவர் பின்னால் இருந்தபடி கையை அசைத்துப் பாராட்டுகிறார்.</p>
<p>சரி நானும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. முதல் சாட்சியை (குனிந்து பக்கத்திலே இருப்பவரைப் பார்க்கிறார். எதிர்க் கட்சித் தலைவர் என்று அவர்கள் சொல்லவே) எதிர்க் கட்சித் தலைவர் அவர்களை சாட்சி சொல்ல அழைக்கிறேன்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர்: அனைவருக்கும் வணக்கம். பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் முண்டாசுக் கவிஞன். இன்றைய ஆட்சியை மனதில் கொண்டுதான் அப்படிச் சொன்னான் போலிருக்கிறது. அண்ணா என்றால் மூன்றெழுத்து&#8230; அன்பு என்றால் மூன்றெழுத்து&#8230; தமிழ் என்றால் மூன்றெழுத்து&#8230; என்று ஊரை ஏமாற்றி உலையில் இட்டவன் இன்று என்ன நிலையை எட்டியிருக்கிறான் பாருங்கள். ஊழல் என்றாலும்தான் மூன்றெழுத்து&#8230; ரவுடி என்றாலும்தான் மூன்றெழுத்து.  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்&#8230; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்றான் என் தானைத் தலைவன். அவன் என்று அந்தக் கொள்ளையர் கூடாரத்தை விட்டு நீங்கினானோ அன்றே அது அழிந்துபோயிருக்க வேண்டும்.</p>
<p>மக்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் தண்டனைகளைப் பார்க்கும்போது, நெஞ்சம் கொதிக்கிறது. மக்கள் வரும் தேர்தலில் ஆணவக்காரர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.  இங்கு எழுப்பபடும் சாபங்கள் தமிழகத்தை ஆளும் நாசகாரக் கும்பலை அடியோடு சாம்பலாக்கவேண்டும். முகமூடிகள் கிழிக்கப்பட்டாகவேண்டும். எங்கள் கட்சியின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. தைரியமாக வந்து நடந்ததைச் சொல்லுங்கள். இந்த நீதி விசாரணைக் கூட்டம் வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.</p>
<p>(தொண்டர்கள் புடைசூழ புறப்பட்டுப் போகிறார். அரசியல் கட்சி பிரமுகர்களே தொடர்ந்து விசாரிக்கப்படுகிறார்கள். மேடையில் இருக்கும் ஒரு நீதிபதி தனக்கும் இங்கு நடப்பவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல விட்டேத்தியாக கையில் இருக்கும் துண்டுப் பிரசுரத்தை மீண்டும் மீண்டும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். மற்ற நீதிபதிகள் ஏதாவது கேள்விகள் கேட்கிறார்கள். குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். சிறிது நேரம் கழித்து பாதிக்கப்பட்டவர்கள் பேச அழைக்கப்படுகின்றனர். துண்டுப் பிரசுரம் படித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி பிரசுரத்தைக் கீழே வைத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதைக் கூர்ந்து கேட்க ஆரம்பிக்கிறார்.)</p>
<p>நீதிபதி : உன் பேர் என்னம்மா&#8230;</p>
<p>பெண் : ராச லச்சுமி</p>
<p>நீதிபதி : என்னம்மா நடந்துச்சு&#8230;</p>
<p>ராசலச்சுமி : வீடு புகுந்து அடிச்சாங்கய்யா&#8230;</p>
<p>நீதிபதி : அவங்க யாரையாவது பார்த்தா அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா&#8230;</p>
<p>ராசலச்சுமி : நிச்சயமா முடியும் அய்யா&#8230; அவன் முகத்தையும் அவன் கேட்ட கேடு கெட்ட வார்த்தையையும் இந்த ஜென்மத்துக்கும் மறக்க முடியாது அய்யா&#8230; என் புருஷன் செத்து 15 வருஷம் ஆச்சு அய்யா&#8230; என் புள்ளகளை நான் தான் காடு வெட்டி களை எடுத்து காப்பாத்திகிட்டு வர்றென்யா&#8230; இன்னிக்குவரை இன்னொரு ஆம்பளைகிட்ட ஜாடை காட்டினதோ நின்னு பேசினதோ கிடையாதுய்யா&#8230; வேலை உண்டு&#8230; வீடு உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டு வர்றேனுங்க அய்யா&#8230; என்னைப் பார்த்து தேவடியா முண்ட&#8230; டாக்டர் கூப்பிட்டாத்தான் போவியா&#8230; என் கூட வரமாட்டியான்னு கேட்டான்யா&#8230; என் மகன் வயசு இருக்கும்யா அவனுக்கு&#8230; உன் அம்மா மாதிரி இருக்கற என்னைப் பார்த்து இப்படிக் கேக்கறியேன்னு சொன்னேன்யா அதுக்கு அசிங்க அசிங்கமா கேட்டான்யா&#8230; அவன் கால்ல விழுந்து கெஞ்சினேன்யா&#8230; கேக்கலை அய்யா&#8230;</p>
<p>நீதிபதி : ஆள் மூஞ்சி ஞாபகம் இருக்குல்ல&#8230;</p>
<p>ராசலெச்சுமி : ஆயிரம் பேரு பத்தாயிரம் பேரு நடுவுல அவன் ஒளிஞ்சி இருந்தாலும் கண்டு பிடிச்சுப்புடுவேன்யா&#8230; எனக்கு எந்த போலீஸ் நாயைப் பார்த்தும் இனிமே பயம் கெடையாதுய்யா&#8230; அவன் மட்டும் என் கைல கெடச்சான்னா கண்டந்துண்டமா வெட்டிப் பொலி போட்டுடுவேன்யா&#8230;</p>
<p>நீதிபதி : அப்படி எல்லாம் பேசக்கூடாதும்மா&#8230; சட்டம், கோர்ட்டுன்னு நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். கவலைப்படாதீங்க&#8230; உங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வழி செய்யறோம். போங்கம்மா&#8230; போய் உட்காருங்க&#8230; அடுத்த சாட்சி வாங்க&#8230;</p>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7926&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%2F%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204" id="wpa2a_8">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7926</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொறுப்பு வேண்டும்</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7923</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7923#comments</comments>
		<pubDate>Wed, 12 Jun 2013 05:26:49 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[பேசு மனமே பேசு]]></category>
		<category><![CDATA[சுயமுன்னேற்றம்]]></category>
		<category><![CDATA[பொறுப்புணர்ச்சி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7923</guid>
		<description><![CDATA[பேசு மனமே பேசு / அத்தியாயம் 9 நம்மை பாதிக்கும் பதிவுகளை மாற்றுவதற்கு முதல் தேவை, அவ்வாறான எண்ணப் பதிவுகளுக்கு நாம் பொறுப்பேற்பது. ஆமாம், நமது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள், தானாகவே தோன்றுவதில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில், பல்வேறு காரணங்களால் இவை பதிவாகின்றன. அந்த சமயத்தில் அவற்றிற்கு வேலை இல்லாமல் போகலாம். ஆனால், அவை இரும்புக்காக காத்திருக்கும் காந்தத்தைப்போல, சரியான சமயத்தில் ‘தோன்றுவதற்குக்’ காத்திருக்கின்றன. முதலில் இவை இருப்பது பற்றி நமக்கு புரிதல் இருக்க வேண்டும். அவை நமக்குள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Google-Image-Result-for-http___4.bp_.blogspot.com_-A_PJfZtGKIQ_TekCUX5DW0I_AAAAAAAAAZU_H16mGv0vjSE_s1600_responsibility.jpg-1.jpg" rel="lightbox[7923]"><img class="alignright size-medium wp-image-7924" alt="Google-Image-Result-for-http___4.bp_.blogspot.com_-A_PJfZtGKIQ_TekCUX5DW0I_AAAAAAAAAZU_H16mGv0vjSE_s1600_responsibility.jpg-1" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Google-Image-Result-for-http___4.bp_.blogspot.com_-A_PJfZtGKIQ_TekCUX5DW0I_AAAAAAAAAZU_H16mGv0vjSE_s1600_responsibility.jpg-1-300x175.jpg" width="300" height="175" /></a>பேசு மனமே பேசு / அத்தியாயம் 9</strong></span></p>
<p>நம்மை பாதிக்கும் பதிவுகளை மாற்றுவதற்கு முதல் தேவை, அவ்வாறான எண்ணப் பதிவுகளுக்கு நாம் பொறுப்பேற்பது. ஆமாம், நமது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள், தானாகவே தோன்றுவதில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில், பல்வேறு காரணங்களால் இவை பதிவாகின்றன. அந்த சமயத்தில் அவற்றிற்கு வேலை இல்லாமல் போகலாம். ஆனால், அவை இரும்புக்காக காத்திருக்கும் காந்தத்தைப்போல, சரியான சமயத்தில் ‘தோன்றுவதற்குக்’ காத்திருக்கின்றன. முதலில் இவை இருப்பது பற்றி நமக்கு புரிதல் இருக்க வேண்டும். அவை நமக்குள் இருப்பதால், நம்முடையவை என்று ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் பொறுப்பு ஏற்பது.</p>
<p>அதாவது என்னிடமிருந்து தோன்றும் எண்ணங்கள் எவையாக இருந்தாலும், அவற்றுக்கு நானே பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றை, தேவையானால் மாற்ற வேண்டியதும் நமது பொறுப்பு என்பதை உணர்வோம். இவ்வாறு பொறுப்பேற்க மறுத்தால், நமது செய்கைகள் தவறாக இருந்தாலும் அவற்றிற்கும் பொறுப்பேற்க மாட்டோம்.</p>
<p>நமக்கு பிரச்னைகள் கொண்டு வரும் பழக்கங்கள், செய்கைகள் அல்லது இயல்புகள் என்று எதுவாக இருந்தாலும், அவை முடிவில் மனத்தில் எண்ணங்களாகவே உள்ளே வரும். இந்த உள் உரையாடலை நாம் எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டால், அதுதான் நமது ஆளுமையில் ஒரு பகுதியாக உருவெடுக்கும். அதன் விளைவுகளுக்கு யாரைப் பொறுப்பாக்குவது என்று தேடி, மேற்குறிப்பிட்டவற்றையோ அல்லது சூழ்நிலையையோ குறை கூறுவோம். பாதிப்புகள் மறைய வேண்டுமானால், நம் எண்ணங்களுக்கு முதலில் பொறுப்பு ஏற்க வேண்டும். இதைச் செய்தால் வெளிச் சூழ்நிலை குறித்து சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.</p>
<p>மேலை நாடுகளில், முக்கியமான தெருக்களில் உள்ள கடைகளின் முகப்பு பெரிய அளவிலான கண்ணாடிகளால் சுவர் போல பதிக்கப்பட்டு இருக்கும். இவற்றில்தான் கடைகளில் உள்ள பொருள்களில் முக்கியமானவற்றை அலங்காரமாக காட்சிக்கு வைத்திருப்பார்கள். இதை அலங்காரம் செய்வதற்கென்றே ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். குறிப்பிட்ட கடைக்காரர் ஒருவர் தினமும், மற்ற கடைக்காரர்களுடன் உணவருந்தும்போது, அவர்களின் கண்ணாடி அலங்காரத்தைப் பற்றி மிகவும் குறை கூறிப் பேசுவார். ‘என்ன அலங்காரம், செய்திருக்கிறீர்கள்? ஒரே மங்கலாக, பல கோடுகளுடன், பார்ப்பதற்கே சகிக்கவில்லை’ என்பதிலிருந்து பல்வேறு முறைகளில் பல்வேறு குறைகளை அடுக்குவார். அவரது இயல்பு அது என்று மற்றவர்களும் அவர் சொல்வதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.</p>
<p>குறிப்பிட்ட ஒரு நாளில் அவரது எதிர்க் கடையைப் பற்றிய கிண்டல் அளவுக்கு அதிகமாகிப் போனது. உடனே அந்தக் கடைக்காரர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ‘நீங்கள் ஏன் உங்களது கண்ணாடியை முதலில் கழுவி சுத்தம் செய்யக்கூடாது?’ என்று கேட்டார். தன்னையே ஒருவன் குறை கூறியதைக் கேட்டதும் இவருக்கு கோபம் வந்துவிட்டது. தனது கடைக்குத் திரும்பியதும், ஆட்களைக் கூப்பிட்டு கண்ணாடியை அன்று இரவுக்குள் மிக நன்றாக கழுவித் துடைத்து, அதன்பின் அலங்காரம் செய்ய வேண்டும் என்று கூறினார். மறுநாள் காலையில் அவரது கண்ணாடி வழியே வெளியே எதிர்க் கடைகளைப் பார்த்ததும், அவை மிகவும் தெளிவாக, புதிதாக, அழகாகத் தோன்றின. அப்போதுதான் அவருக்கு உண்மை உறைத்தது. தான் பிறரது கடைகளைப் பார்த்தது அழுக்கடைந்த, கீறல்கள் உள்ள தனது கடைக் கண்ணாடி வழியே என்பதால்தான், மற்ற கடைகள் அவ்வாறாகத் தெரிந்திருக்கின்றன. இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.</p>
<p>எவ்விதமான எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்துகொள்ள பழக வேண்டும். தியானம் செய்ய பல முறைகள் இருக்கின்றன. அதில் ஒரு முறை, ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து கடவுளை நினைப்பது, மந்திரங்களை உச்சாடனம் செய்வது என்பது. நாம் அது போன்ற எதையும் செய்யத் தேவையில்லை. எதுவும் செய்யாமல் அமர்ந்து உங்களது மனத்தில் ஓடும் எண்ணங்களை, திரைப்படத்தின் வசனங்களைக் கேட்பதுபோல, ஓடும் படத்தைப் பார்ப்பதுபோல கவனியுங்கள். ஒரே ஒரு வித்தியாசம் வேண்டும்.</p>
<p>திரையில் வரும் காட்சிகளுக்குத் தகுந்தாற்போல நமது உணர்ச்சிகள் மாற அனுமதிப்போம் இல்லையா? ஆனால், இந்த பயிற்சியின்போது, அவைகளைச் செய்யக்கூடாது. எந்த எதிர்வினையும் இல்லாமல் ஓடும் எண்ணங்களை கவனியுங்கள். ‘என்னிடமா இந்த அளவுக்குக் குரோதம், வெறுப்பு, அன்பு, தேவையில்லாத பதிவுகள் இருக்கின்றன? என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி உணர்ச்சியின் வசம் போய்விடாதீர்கள். பக்கத்து வீட்டில் நடப்பதை பாதி திறந்திருக்கும் ஜன்னலின் வழியாகப் பார்ப்பது போல கவனியுங்கள். உங்களுக்குத் தலையிட உரிமை இல்லை என்பது மட்டுமின்றி, நீங்கள் பார்ப்பதே கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பீர்கள் இல்லையா? அந்த மனநிலையியே உங்களது எண்ணங்களைக் கவனியுங்கள். அப்போது உங்களது நிலை பற்றி உங்களுக்கே பல புதிய தகவல்கள் தெரியவரும். இவற்றை வைத்துக்கொண்டு எவையெல்லாம் செய்ய முடியும் அல்லது முடியாது போன்றவற்றைத் தெரிந்துகொள்வீர்கள். உங்களிடம் இருக்கும் எண்ணங்கள் அல்லது உரையாடல் தொகுதிகள் துல்லியமாகத் தெரியவருவதால், அவற்றிற்கு நீங்களே பொறுப்பு என்பதும் புரியும். இந்த முறையிலான தியானப் பயிற்சி கடினமானதுதான். ஆனால் முயற்சி செய்தால், கண்டிப்பாக முடியும் என்பது மட்டுமின்றி இதனால் லாபங்கள் அதிகம்.</p>
<p>இதேபோல இன்னொரு பயிற்சியையும் செய்யலாம். தனியான ஓர் அறையில் நன்றாக, வசதியாக அமர்ந்துகொண்டோ, சாய்ந்துகொண்டோ, கண்களை மூடிக்கொள்ளுங்கள். மனத்தில் ஒரு வெள்ளைத் திரையை ஏற்படுத்துங்கள். அதாவது அது போன்ற திரை வேண்டும் என்று எண்ணுங்கள். அல்லது உரையாடுங்கள். திரை தோன்றும். அதில் நீங்கள் உலகத்துக்கு என்ன விதமாகத் தோறத்தைத் தந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை திரையில் உருவகப்படுத்துங்கள். அழகானவராக, தன்மையானவராக, நல்லவராக, அல்லது முரடராக, புத்திசாலியாக, முட்டாளாக என்று எதுவாக இருந்தாலும், அதை உருவகப்படுத்துங்கள். அவற்றுக்கான எண்ணப் பதிவுகளும் கூடவே தோன்றும்.</p>
<p>இந்த உருவகம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படியே பிடித்திருந்தாலும், அதுதான் உங்களது உருவமா? அல்லது வெளி உலகத்துக்காக ஏற்படுத்திய உருவமா? இவ்வாறு எத்தனை நாட்கள் அல்லது காலம் உங்களையும், மற்றவர்களையும் ஏமாற்றப் போகிறீர்கள்? இது போன்ற போலி வாழ்க்கையால் மனம் உறுத்துமே? என்பதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இவற்றை மாற்ற வேண்டும் என்றால், முதலில் அதன் இருப்பை உணர வேண்டும். அதை ஒப்புக் கொள்ள வேண்டும். சுருக்கமாகக் கூறினால் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் நமக்குப் பிடிக்காதவற்றை நம்மால் மாற்ற முடியும். வேண்டியவற்றைப் பெற முடியும். அதற்கான உரையாடலைத் தொடங்க முடியும். நம்முடையது என்றால்தான் அதன் மேல் ஒரு பிடிமானம் வரும். இந்தப் பிடிமானம்தான் வாழ்க்கையில் மாற்றத்துக்கு வழி வகுக்கும்.</p>
<p>உதாரணமாக ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது. கண்ணீருடன் மூக்கைச் சிந்தியவாறு கத்திக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை பக்கத்து வீட்டுக் குழந்தையாக இருந்து, அருகில் யாரும் இல்லையானால், என்ன செய்வோம்? ரொம்பவும் அருகில் செல்லாமல் சமாதானப்படுத்த, அழுகையை நிறுத்த முயற்சி செய்வோம். ஆனால் அழுவது நம் குழந்தை என்றால், உடனே அழுகையை நிறுத்துவது, முகத்தைத் துடைப்பது நமது பொறுப்பாகி விடும். குழந்தையை உடனடியாகத் தூக்கி முகத்தைத் துடைத்து, அழுகை மறையும்வரை, சமாதானப்படுத்துவோம். இந்தப் பொறுப்புணர்வுதான், நமக்கு நமது எண்ணங்களைப் பற்றி இருக்க வேண்டும். அப்போதுதான் தேவையில்லாத எண்ணங்கள் மாறும்வரை பல வகைகளில் முயற்சி செய்வோம்.</p>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7923&amp;title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_10">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7923</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>வரலாற்றில் நாகர்கள் &#8211; II</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7919</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7919#comments</comments>
		<pubDate>Tue, 11 Jun 2013 07:30:03 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[பறையர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழர்]]></category>
		<category><![CDATA[நாகர்]]></category>
		<category><![CDATA[நாகர்கள்]]></category>
		<category><![CDATA[பாணர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7919</guid>
		<description><![CDATA[பறையர்கள் / அத்தியாயம் 9 தமிழர் அன்று பெரும் பிரிவு. அவர்கள் அனைவரும் தமிழே பேசினர். ஆனால் அதனுள் ஒரு சிறு பிரிவு தமிழினம் எனப்பட்டது. தமிழ்ப்பண்பு முழுவதும் தழுவிய மரபினரே தமிழினத்தவர் எனப்பட்டனர். திரையர், குறும்பர், நாகர், கந்தருவர் முதலியோர் தமிழராக, தமிழ்மொழி பேசுபவராக இருந்தனர். ஆனால் அவர்கள் தமிழினத்தவராகக் கருதப்படவில்லை. தென்னகத்திலும் வெளியிலும், ஊர்ப்பெயர், குடிப்பெயர், தெய்வப்பெயர் ஆகியவற்றில் இன்றும் பெருவாரியாக ‘நாகர்’ என்ற சொல் காணப்படுகிறது. பழங்காலத்தில் இவ்வழக்கு இன்னும் மலிந்திருந்தது. பண்டைய [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/nagas.jpg" rel="lightbox[7919]"><img class="alignleft size-medium wp-image-7920" alt="nagas" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/nagas-225x300.jpg" width="225" height="300" /></a>பறையர்கள் / அத்தியாயம் 9</strong></span></p>
<p>தமிழர் அன்று பெரும் பிரிவு. அவர்கள் அனைவரும் தமிழே பேசினர். ஆனால் அதனுள் ஒரு சிறு பிரிவு தமிழினம் எனப்பட்டது. தமிழ்ப்பண்பு முழுவதும் தழுவிய மரபினரே தமிழினத்தவர் எனப்பட்டனர். திரையர், குறும்பர், நாகர், கந்தருவர் முதலியோர் தமிழராக, தமிழ்மொழி பேசுபவராக இருந்தனர். ஆனால் அவர்கள் தமிழினத்தவராகக் கருதப்படவில்லை.</p>
<p>தென்னகத்திலும் வெளியிலும், ஊர்ப்பெயர், குடிப்பெயர், தெய்வப்பெயர் ஆகியவற்றில் இன்றும் பெருவாரியாக ‘நாகர்’ என்ற சொல் காணப்படுகிறது. பழங்காலத்தில் இவ்வழக்கு இன்னும் மலிந்திருந்தது.</p>
<p>பண்டைய தமிழினத்தவராகிய தமிழருக்கும், தமிழே பேசிய நாகர் முதலியோருக்கும் தமிழ்மொழி பொதுவாக இருந்தது. இரு சாரார் நாகரிகத்திலும், பண்பாட்டிலும், பண்பிலும் பொதுக்கூறுகள் மிகப் பலவாயிருந்தன. ஆயினும் தமிழ்ப்பண்பு அவற்றில் ஓர் அடிப்படை வேறுபாடு கண்டது. தமிழர் இயல், கலைத் திறன்களைப் பயன்படுத்தினர். நாகர், திரையர், கந்தருவர் முதலியோர் நாகரிகத்தின் புறப்பண்பு அதாவது தனிமனித வாய்ப்பு, சமுதாய வாய்ப்பு ஆகியவற்றையே நாடினர்.</p>
<p>தமிழர் ஆடையணிகலன்களை அழகுக்காக மட்டுமின்றி இன்பத்துக்காக மட்டுமின்றி மானம் மறைக்கவும் பயன்படுத்தினர். நாகர் முதலியோர் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தினர். ஆடையில்லாமல் ஆடவும், பாடவும் அவர்கள் தயங்கவில்லை. சைவ, சமண சமயங்களில் இந்நாகரிகத்தின் தடயங்களைக் காணலாம். சென்னையை அடுத்த பெரிய நாயகியம்மன் கோயில் வழிபாட்டு முறையிலும், வங்கம், குஜராத் பகுதிகளிலும், தென்கிழக்காசியாவிலும் நடைபெறும் சமய மரபுகளிலும் இதன் பாதிப்பு உள்ளது.</p>
<p>இன்றைய தமிழகத்துக்கு வெளியில் உள்ள தமிழினத்தவராகிய நாகர்களே சில இடங்களில் ஆரியரை எதிர்த்துத் தனி வாழ்வு வாழ்ந்தும் சில இடங்களில் ஆரியரைத் தம் வயப்படுத்தித் தாமே ஆரியராகி அவர்களுக்குத் தலைமை தாங்கியும் இன்னும் சில இடங்களில் அடிமைப்பட்டும் தமக்குள் வேற்றுமைப்பட்டனர். தமிழரைப் போலவே அவர்களைப் பண்பாடு மூலம் ஒன்றுபடுத்த முயன்ற நாக இனப் பெரியோர்களே புத்தரும், மகாவீரரும் என்கிறார் கா.அப்பாத்துரை.தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால் தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர்.</p>
<p>சங்க காலத் தமிழகத்தில் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தனர். தமிழ்நாட்டு இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே. அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.</p>
<p>புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபு சார்ந்தது என்று அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்தநெறி வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா, சீனாவிலும் பரவியதற்கு இந்த இடங்களில் உள்ள மக்கள் பெரும்பகுதியினர் நாகமரபினராக இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.</p>
<p>நாகசுரம் என்னும் இசைக்கருவி மிகப் பிற்காலத்தில் தோன்றியது. இது மரத்தினாலும், வெண்கலம் முதலிய உலோகத்தினாலும் செய்யப்பட்ட துளைக் கருவி. கி.பி. 17ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரத சங்கிரம் என்னும் நூலில் இது கூறப்படுகிறது. ஆரியர் முதன் முதலாக வாய்ப்பாட்டும், நரப்புக் கருவியும் பயின்று தோற்கருவியும் பயின்றனர். ஆயினும் ‘நாகசுரம்’ என்னும் துளைக்கருவியும் ‘தவல்’ போன்ற தோற்கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படுவதால்.</p>
<p>ஆரியப் பிராமணர் இசைப்பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ம் அத்தியாயம், 15ம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது&#8230;. இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.</p>
<p>வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஊருக்கு வெளியே போய்க்குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.</p>
<p>தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் இருந்த நாகர் என்னும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களால் இக்கருவி உண்டாக்கப்பட்டது என்றும், அதனால் இதற்கு நாகசுரம் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகிறார்கள். இதற்கு பக்க வாத்தியமாக அமைவது தவுல் என்னும் தோற்கருவி. இதுவும் புதிதாக உண்டானதே.</p>
<p>சங்க காலத்தில் இசை வகுத்த பாணர், நாகர் குலத்தினரே. எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்ற பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவும்.</p>
<p>குஷானர்கள் வடமேற்கு இந்தியாவில் நிறுவிய பேரரசின் விளைவாக இரு ஷத்ரப அரசுகள் நிலைப்பெற்றன. இவற்றில் ஒன்று பூமகர் குலம் என்றும், மற்றொன்று மேலை ஷத்ரபர் (சஷ்டனர்) குலம் என்றும் பெயர். (சஷத்ரபவன் என்னும் பாரசீகச் சொல் ‘சஷத்ரபர்’ என்று வடமொழியில் மருவிற்று). தொடக்க கால சஷத்ரபர்களில் நாகபாணர், பூமகர் என்பவர்கள் புகழ் பெற்றவர்கள்.</p>
<p>நாகபாணரின் கல்வெட்டுக்கள் நாசிக், ஜுன்னார் முதலிய இடங்களில் காணப்பெறுகின்றன. நாசிக் நாகபாணரது தலைநகராக இருந்தது. அவரை மகாசஷ்த்ரபர் என்றும் குறிப்பர். நாகபாணர் கி.பி. 104வரை ஆண்டார். அஜ்மீரிலிருந்து புனா வரை பரவிய அவர் ஆட்சியில் கத்தியவாரும், மாளவமும் கூட அடங்கின.</p>
<p>சங்க காலத்தில் இசை வகுத்த பாணர், பண்டைக் காலத்தில் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாக இருந்த நாக குலத்தினரே.</p>
<p>தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டியில் நாகர்கோயில் அமைந்துள்ளது. திறந்த வெளியில் அமைந்துள்ள இக்கோயிலில் கற்சிலைகள் உள்ளன.</p>
<p>0</p>
<p>அடுத்து பாணர்களைப் பார்ப்போம். தமிழில் நாகர் என்னும் பிரிவினர் பண்டைக் காலத்தில் இருந்தார்கள். அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாயிருந்தனர். இசை வகுத்த பாணர் நாகர் குலத்தினரே. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழமையானதென்பது தொல்காப்பியத்தால் அறியப்படும்.<br />
பாண் என்பது பாட்டு. பண், பாண், பாடு, பா என்பவை ஓரினச் சொற்கள். சீவக சிந்தாமணியில் பாணியாழ் (1500), பாண் வலை (2040), பாணுவண்டு (2447), என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் (ப.349) பாண்-பாட்டு என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.</p>
<p>பாட்டுக்கு கூத்து துணைத் தொழில் என்பதால் பாணர் கூத்தும் ஆடி வந்தனர். வயிரியர், செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற் பெயரும் கூத்துப் பற்றியவை. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்கு உரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும் நுண்வினைக்கூத்து.</p>
<p>பாணர்க்கு உரியது பெரும்பாலும் இசைத்தொழில் என்பதால் பல்வகைப் பறைகளுக்கும் (அல்லது மேளங்களுக்கும்) தோல் கட்டுதல் அவன் தொழில்.</p>
<p>ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். பாணர்கள் மீன்களைப் பிடித்து விற்று வாழத் தொடங்கியபோது நிலையாக மருதநிலை ஊர்களில் தங்கிக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அப்போது அவர்களை ‘வலையர்’ என்று சங்க இலக்கியம் குறிப்பிட்டது. சங்க கால இலக்கியங்கள் மீன் பிடித்து வாழ்ந்தவர்களைப் பரதவர் என்றும், பாணர் என்றும், வலைஞர் என்றும் பிரித்துக் காட்டியுள்ளது.</p>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7919&amp;title=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E2%80%93%20II" id="wpa2a_12">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7919</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நான் மோடியை ஆதரிக்கிறேன் (கண்டிஷன்ஸ் அப்ளை)</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7916</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7916#comments</comments>
		<pubDate>Mon, 10 Jun 2013 09:55:41 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கலவரம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மதக் கலவரம்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7916</guid>
		<description><![CDATA[செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்! இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். மத்தியில் இனி கூட்டணி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Narendra-Modi.jpg" rel="lightbox[7916]"><img class="alignleft size-medium wp-image-7917" alt="Narendra-Modi" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Narendra-Modi-292x300.jpg" width="292" height="300" /></a>செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்!</p>
<p>இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். மத்தியில் இனி கூட்டணி அரசே சாத்தியம் என்று ஆகிவிட்ட நிலையில் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கப் பெரும் தடையாக இன்றும் இருந்துவருவது மோடிபற்றி ஊடகங்களும் அறிவுஜீவிவர்க்கமும் உருவாக்கியிருக்கும் அந்தப் பிழையான கோஷமே.</p>
<p>இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. பிஜேபி தரப்பில் மோடியே பிரதமராக நிறுத்தப்படப்போகிறார். மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.</p>
<p>1967க்குப் பிறகு 47 இடங்களில் 58 மிகப் பெரிய வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் 10, கிழக்குப் பகுதியில் 12, மேற்குப் பகுதியில் 16, வடக்கில் 20. 1964க்குப் பிறகு அகமதாபாத்தில் ஐந்து மிகப் பெரிய கவலரங்கள் வெடித்துள்ளன. ஹைதராபாத்தில் 4. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களிலே 1990களில்தான் மிக அதிக வன்முறைச் சம்பவங்கள் அதாவது 23 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 1970களில் ஏழு, 1980களில் 14, 2000 களில்13. இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 12,828 (தெற்கில் 597, மேற்கில் 3426, கிழக்கில் 3581, வடக்கில் 5224).</p>
<p>ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.</p>
<p>100க்கு அதிகமாவர்கள் இறந்த வன்முறைச் சம்பவங்களில் எந்தெந்த கட்சி ஆட்சியில் இருந்ததிருக்கிறது. யார் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்.</p>
<p><span style="text-decoration: underline;"><em>1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.</em></span></p>
<table border="1" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td width="43">எண்</td>
<td width="72">வருடம்</td>
<td width="120">இடம்</td>
<td width="73">உயிரிழப்பு</td>
<td width="146">ஆண்ட கட்சி</td>
<td width="123">முதலமைச்சர்</td>
</tr>
<tr>
<td width="43">1</td>
<td width="72">1967</td>
<td width="120">ஹாதியா ராஞ்சி</td>
<td width="73">183</td>
<td width="146">ஜன கிராந்தி தளம்</td>
<td width="123">எம்.பி.சின்ஹா</td>
</tr>
<tr>
<td width="43">2</td>
<td width="72">1969</td>
<td width="120">அகமதாபாத்</td>
<td width="73">512</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">ஹிதேந்திர கே தேசாய்</td>
</tr>
<tr>
<td width="43">3</td>
<td width="72">1970</td>
<td width="120">ஜல் காவ்</td>
<td width="73">100</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">வசந்தராவ் நாயக்</td>
</tr>
<tr>
<td width="43">4</td>
<td width="72">1979</td>
<td width="120">ஜம்ஷேட்பூர்</td>
<td width="73">120</td>
<td width="146">ஜனதா கட்சி</td>
<td width="123">கர்பூரி தாகூர்</td>
</tr>
<tr>
<td width="43">5</td>
<td width="72">1980</td>
<td width="120">மொராதாபாத்</td>
<td width="73">1500</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">வி.பி.சிங்.</td>
</tr>
<tr>
<td width="43">6</td>
<td width="72">1983</td>
<td width="120">நெலே, அஸ்ஸாம்</td>
<td width="73">1819</td>
<td width="146">ஜனாதிபதி ஆட்சி</td>
<td width="123">&nbsp;</td>
</tr>
<tr>
<td width="43">7</td>
<td width="72">1984</td>
<td width="120">பிவந்தி</td>
<td width="73">146</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">வசந்ததா பட்டில்</td>
</tr>
<tr>
<td width="43">8</td>
<td width="72">1984</td>
<td width="120">டில்லி</td>
<td width="73">2733</td>
<td width="146">காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்)</td>
<td width="123">-</td>
</tr>
<tr>
<td width="43">9</td>
<td width="72">1985</td>
<td width="120">அகமதாபாத்</td>
<td width="73">300</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">எம்.எஸ்.சோலன்கி</td>
</tr>
<tr>
<td width="43">10</td>
<td width="72">1989</td>
<td width="120">பகல்பூர்</td>
<td width="73">1161</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">எஸ்.என்.சிங்</td>
</tr>
<tr>
<td width="43">11</td>
<td width="72">1990</td>
<td width="120">டில்லி</td>
<td width="73">100</td>
<td width="146">யூனியன் பிரதேசம்</td>
<td width="123">&nbsp;</td>
</tr>
<tr>
<td width="43">12</td>
<td width="72">1990</td>
<td width="120">ஹைதராபாத்</td>
<td width="73">365</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">சென்னா ரெட்டி</td>
</tr>
<tr>
<td width="43">13</td>
<td width="72">1990</td>
<td width="120">அலிகர்</td>
<td width="73">150</td>
<td width="146">ஜனதாதளம்</td>
<td width="123">முலாயம் சிங்</td>
</tr>
<tr>
<td width="43">14</td>
<td width="72">1992</td>
<td width="120">சூரத்</td>
<td width="73">152</td>
<td width="146">காங் + ஜனதா தளம்</td>
<td width="123">சிமன்பாய் படேல்</td>
</tr>
<tr>
<td width="43">15</td>
<td width="72">1992</td>
<td width="120">கான்பூர்</td>
<td width="73">254</td>
<td width="146">ஜனாதிபதி ஆட்சி</td>
<td width="123">&nbsp;</td>
</tr>
<tr>
<td width="43">16</td>
<td width="72">1992</td>
<td width="120">போபால்</td>
<td width="73">143</td>
<td width="146">ஜனாதிபதி ஆட்சி</td>
<td width="123">&nbsp;</td>
</tr>
<tr>
<td width="43">17</td>
<td width="72">1993</td>
<td width="120">மும்பை</td>
<td width="73">872</td>
<td width="146">காங்கிரஸ்</td>
<td width="123">சுதாகர் ராவ் நாயக்</td>
</tr>
<tr>
<td width="43">18</td>
<td width="72">2002</td>
<td width="120">குஜராத்</td>
<td width="73">1267</td>
<td width="146">பி.ஜே.பி.</td>
<td width="123">நரேந்திர மோடி</td>
</tr>
</tbody>
</table>
<p>மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.</p>
<p>இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் நேரு குடும்பத்தின் ஆட்சி காலம் பற்றியது. 1950-1964-ல் நேரு இறப்பதுவரையிலான காலகட்டத்தில் சிறிதும் பெரிதுமாக 243 கலவரங்கள், 16 மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 15 மாநிலங்களில் 337 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.</p>
<p>ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் 16 மாநிலங்களில் 291 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் 1984-ல் தன் அம்மாவின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு இணையாக இந்தியாவில் நடந்த எந்தவொரு வன்முறையையும் சொல்ல முடியாது. ஏனென்றால் அது இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறை அல்ல. ஒரு கட்சியின் ரவுடிகள் ஒரு சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் அது.</p>
<p>1950லிருந்து 1995 வரை 1194 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 871 அதாவது 72.95 சதவிகிதம் காங்கிரஸின் காலத்தில் நடந்தவை.</p>
<p>இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த  வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.</p>
<p>இவையெல்லாம் மோடி செய்தது சரிதான் என்று சொல்வதற்காகப் பட்டியலிடப்பட்டவை அல்ல. உண்மையில் மோடியும் பி.ஜே.பி.யினரும் எந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்களோ அதைவிட பல மடங்கு கூடுதலாக காங்கிரஸும் அதன் தலைவர்களும் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால், ஊடகங்களையும் அறிவுஜீவிகளையும் பொறுத்தவரை மோடி மட்டுமே இந்தியாவின் ஒரே வில்லன்.</p>
<p>இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் சுதந்தரத்துக்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போதும் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முயற்சிகள் எடுத்த நேரம் அது. 1920-1940கள் வரையிலான காலகட்டத்தில் நடந்த கலவரங்கள் பற்றி அம்பேத்கர் தனது தாட்ஸ் ஆன் பாகிஸ்தான் நூலில் சில புள்ளிவிவரங்கள் சொல்லியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து ஒரு தேசமாக வாழ முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் என்னும் அளவுக்கு கலவரங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன.</p>
<p>இந்தியாவில் மதக் கலவரங்கள் ஏற்படுவது சகஜம்தான். இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கோணத்தில் இவற்றைச் சொல்லவில்லை. ஆனால், 2002க்கு முன்பாகவும் மத மோதல்கள் நடந்துள்ளன. அதன் பிறகும் நடந்துவருகின்றன என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ளத்தானேவேண்டும்.</p>
<p><em><span style="text-decoration: underline;">மதக் கலவரங்கள் எதனால், எப்படியெல்லாம் நடக்கின்றன?</span></em></p>
<p>இரு சமூகங்களுக்கு இடையே இருக்கும் அதிருப்தியும் கோபமும் மெள்ள மெள்ள வெடி குண்டு ஒன்றில் கெட்டிப்படுத்தப்படும் வெடி மருந்துபோல் இறுகிக்கொண்டே வரும். அரசாங்கம் உரிய தீர்வுகளைத் தராமல் இருக்கும்போது ஏதாவது அரசியல் கட்சி சிறு தீப்பொறியைப் பற்ற வைத்தால் போதும் வன்முறை வெடித்துக் கிளம்பும். பொதுவாக இரண்டு பக்கத்து அடிப்படைவாத சக்திகள்தான் இந்த கலவரத்தில் ஈடுபடும். இரு தரப்பிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் பெரும் அழிவுக்கு ஆளாகவும் செய்வார்கள்.</p>
<p>சமூகத் தளத்தில் : தனிமைபடுத்தப்பட்டது போன்ற உணர்வு. பொதுவாக, மைய நீரோட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினரிடம் இந்த தனிமைப்படுத்தல் நிகழும்.</p>
<p>பொருளாதாரம் : கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு. மோசமான கல்வி, வேலையின்மை போன்றவை பின்தங்க வைக்கும். நுகர்வுகலாசாரத்தின் கண்ணைக் கவரும் ஆடம்பரங்கள் பெரும் இழப்பின் வலியை ஏற்படுத்தும்.</p>
<p>அரசியல் : வோட்டு வங்கியைக் குறிவைத்துச் செயல்படும் அரசியல்வாதிகள் தமது சமூகம் பெரும் இழப்பை சந்தித்துவருவதாக தூண்டிவிடுவார்கள்.</p>
<p>நிர்வாகம் : காவல்துறை, குடிமை அரசு யந்திரம் போன்றவற்றால் குறிவைத்துத் தாக்கப்படுவதாக உணர்தல். தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கருதுதல்.</p>
<p>மதம் : &#8216;அபாயம்’ நிறைந்த பகுதியில் நடக்கும் சிறு ஊர்வலம், சத்தமாகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை, புனித இடங்கள் இழிவுபடுத்தப்படுதல் என சிறு நெருப்பு போதும்.</p>
<p>வர்த்தகம் : பாரம்பரியமாக ஒரு சமூகம் வெற்றிகரமாக இயங்கிவரும் துறையில் இன்னொரு சமூகம் நுழைவதால் ஏற்படும் போட்டி, பொறாமை.</p>
<p>ஆவேசப் பேச்சுகள் : எதிர் தரப்பைச் சீண்டும் வகையிலான பேச்சுகள், ஒரு பிரிவுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதாக தூண்டிவிடுதல்.</p>
<p>வகுப்பு மோதல்களைப் போன்றதுதான் வெடி குண்டு சம்பவங்களும். ஏதாவது ஒரு பிரிவின் அடிப்படைவாத சக்திகள் தமது ஆத்திரத்தை அப்பாவி மக்களைப் பொது இடங்களில் வெடிகுண்டு வைத்துக் கொல்வதன் மூலம் வெளிப்படுத்துவதுண்டு. இதில் குற்றம் இழைத்தவர்களை கலவரங்களில் ஈடுபடுபவர்களைப்போல் எளிதில் அடையாளம் காண முடியாது.  அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து வன்கொடுமையை நிகழ்த்திவிட்டுத் தப்பித்துப் போகிறவர்களாகவும் இருக்கக்கூடும். இதனால் எங்கு வெடி குண்டு வெடித்தாலும் பகை தேசத்தின் மீது பழியைப் போடுவது வாடிக்கை. ஆனால், எந்தவொரு வெடி குண்டு வெடிப்பும் உள்ளூர் ஆதரவு இல்லாமல் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.</p>
<p>1993 மும்பை வெடி குண்டு வெடிப்பில் இருந்து இந்தியாவில் வெடி குண்டு தாக்குதல்களின் அணிவரிசை ஆரம்பித்தன. 1993-ல் இருந்து 2013 மார்ச் மாதம் வரை நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 1446 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4333 பேர் காயமடைந்திருக்கிறார்கள். காஷ்மீரிலும் அஸாமிலும் நடந்துவரும் வெடிகுண்டு தாக்குதல்களை இதில் சேர்க்கவில்லை.</p>
<p><span style="text-decoration: underline;"><em>எங்கெங்கு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அப்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது?</em></span></p>
<p>எண்    வருடம்      இடம்                     உயிரிழப்பு      ஆண்ட கட்சி</p>
<p>1       1993          மும்பை                             257     காங்கிரஸ்</p>
<p>2       2003         மும்பை கேட்வே         52      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்</p>
<p>3       2006         மும்பை ரயில்             209    காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்</p>
<p>4       2008         26/11                                   186     காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்</p>
<p>5       2002         காந்தி நகர்                           25      பி.ஜே.பி.</p>
<p>6       2005         டெல்லி, பரன்ஜி               63      காங்கிரஸ்</p>
<p>7       2006         வாரணாசி                           28      சமாஜ்வாதி கட்சி</p>
<p>8       2006         மாலேகாவ்                          28      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்</p>
<p>9       2007         சம்ஜோதா எக்ஸ்பிரஸ்   66      காங்கிரஸ்</p>
<p>10      2007         பானிப்பட்                                66      காங்கிரஸ்</p>
<p>11      2007         ஹைதராபாத்                        42      காங்கிரஸ்</p>
<p>12      2008         ஜெய்பூர்                                     63      பி.ஜே.பி.</p>
<p>13      2008         அகமதாபாத்                           50      பி.ஜே.பி.</p>
<p>14      2008         குவஹாத்தி                            84      காங்கிரஸ்</p>
<p>மேலே கூறப்பட்டுள்ள 14 வெடி குண்டு தாக்குதல்களில் 10 காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்துள்ளன.</p>
<p>பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பி.ராமன் 2009-ல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும். 1981க்குப் பிறகு நான்கு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. நான்கிலுமே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். 1991க்குப் பிறகு அயல் நாட்டினர் மூன்று முறை குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு ஜம்மு காஷ்மீரில். ஒன்று மும்பையில். மூன்று சம்பவங்களின்போதும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான்.  1971க்குப் பிறகு ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின்பேரில் ஏழு விமானக் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆறு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது. ஒன்று பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது. ஏர் இந்திய விமானம் ஒரு முறை வானில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸே.</p>
<p>வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 1446 பேர்களில் 52% பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ தலைவர்களோ மும்பையை வெடி குண்டுதாக்குதல்களில் இருந்து காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதல்களுக்கு அவர்களைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டிருக்கிறார்கள்?</p>
<p>வன்முறைக் கலவரங்களைத் தடுக்கத்தான் முடியவில்லை. அது நடந்த பிறகாவது நீதித்துறையும் காவல்துறையும் சரியாக நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த விஷயத்திலும் காங்கிரஸின் ஆட்சிக் காலமே பிஜேபியைவிட பல மடங்கு படு மோசமாக இருந்துவருகிறது.</p>
<p>இடதுசாரி மற்றும் ”நடுநிலை’ அறிவுஜீவிகள் இந்த விஷயங்களை ஒருபோதும் கவனத்தில் கொண்டதே கிடையாது. பி.ஜே.பி. குறிப்பாக நரேந்திர மோடி மட்டுமே அவர்களுடைய செல்ல இலக்காக இருந்துவருகிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்து அடிப்படைவாத சக்திகள் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்ற அணுகுமுறையே அவர்களிடம் இருக்கிறது. மோடியைப் பார்க்கும்போது பூதக்கண்ணாடியை அணிந்துகொள்பவர்கள், காங்கிரஸைப் பார்க்கும்போது கண்களையே கழட்டிவைத்துவிடுகிறார்கள்.</p>
<p>இந்த உலகில் எல்லா நாடுகளிலும் மதக் கலவரங்களும் வெடிகுண்டு விபத்துகளும் நடந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உண்டு. உலகின் பிற பகுதிகளில் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த அடிப்படைவாத சக்திகளே அதிக தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கும். இந்தியாவில் மட்டுமே சிறுபான்மை மதம் அதிக தாக்குதல்களை நிகழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், பெரும்பான்மை மதத்தின் அடிப்படைவாத சக்திகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெரும்பான்மை மதமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கட்டம் கட்டப்பட்டுவருகிறது. இது இரட்டை அநியாயம்.</p>
<p>மேலே சொல்லப்பட்டிருப்பவை நவீன கால உதாரணங்கள் மட்டுமே. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால் இந்த சித்திரத்தின் முழு பரிணாமம் புரியவரும். ஆனால், ஊடகங்களும் அறீவுஜீவி வர்க்கமும் ஒருதலைப்பட்சமான நிலைபாட்டையே எடுத்துவருகின்றன.</p>
<p>பிரிவினை காலகட்டத்தில்கூட இந்தியாவும் (இந்து, சீக்கியர்களும்) பாகிஸ்தானுக்கு (முஸ்லீம்களுக்கு) இணையாக வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வதில்தான் அவர்களுக்கு மிகுந்த உற்சாகம். பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லீம்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பத்து சதவிகித இந்துக்கள் அனைவருமே தாக்கப்பட்டனர். இந்தியாவிலோ பஞ்சாபை ஒட்டிய எல்லைப் பகுதி நீங்கலாக பிற 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 85% இந்துக்களுக்கு மத்தியில் இருந்த பத்து சதவிகித முஸ்லீம்கள் மேல் ஒரு கீறல்கூட விழுந்திருக்கவில்லை. இந்த உண்மை ஒரு எளிய விஷயத்தை நம் முன் அழுத்தமாகச் சொல்கிறது: எல்லைப் பகுதியில் நடந்த எதிர் தாக்குதல்கூட மத துவேஷத்தால் நடந்திருக்கவில்லை. சொத்து சுகங்களையும் பூர்விக மண்ணையும் விட்டு அநாதையாகத் துரத்தப்பட்ட சோகமும் ஆத்திரமுமே இந்தியத் தரப்பு தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்து மத அடிப்படைவாதத்துக்கு இந்துப் பெரும்பான்மையின் ஆதரவு துளிகூடக் கிடையாது என்பதை உணர்த்தும் எளிய உண்மை இது. இதை நீங்கள் எந்த அறிவுஜீவியின் மயிர்பிளக்கும் வாதத்திலும் கேட்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் அஹிம்சை வழியிலான சுதந்தரப் போராட்டத்தை எள்ளி நகையாட இந்த பிரிவினைக் கால வன்முறையை முன்வைக்கும் அபத்தத்தைக்கூட நீங்கள் கேட்க முடியும்.</p>
<p>இந்த அரசியல் சரி (?) தன்மையின் இன்னொரு வடிவம்தான் மோடிமட்டுமே மத கலவரத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்படுவதும். இதையெல்லாம் எதற்காக அவர்கள் செய்கிறார்கள். ஒருவேளை உலக வரலாற்றில் மத ரீதியான வெறுப்பு மிக மிகக் குறைவாக இருந்துவந்திருக்கும் இந்தியாவில், அனைத்து மத அகதிகளுக்கும் அடைக்கலம் தந்த இந்தியாவில், உலகில் எந்த நாட்டையும் மத ரீதியாக வன்முறைமூலமோ ஆசை காட்டியோ அடக்கி ஒடுக்க ஒருபோதும் முன்வந்திருக்காத பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு மதம் சார்ந்த மாநில அரசு அமைந்தது குறித்த வேதனை அவர்களை ஆழ்மனத்தில் இருந்து வாட்டுகிறதா? அதனால்தான் வள்ளல் பரம்பரையில் பிறந்த கருமியைக் கரித்துக் கொட்டுவதுபோல் மோடியை சுற்றி வளைத்துத் தாக்குகிறார்களா?</p>
<p>கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் சரித்திரத்தின் பக்கங்களில் பெருக்கெடுத்தோடச் செய்திருக்கும் ரத்த ஆறுகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கும். அதனால்தான் அது குறித்து பெரிதும் எதுவும் சொல்வதில்லையா..? ஓநாய் 10 பேரைக் கடித்துக் கொன்றது என்று சொன்னால் அதில் எந்த அதிர்ச்சியும் ஒருவர் அடையப்போவதில்லை. பசு ஒருவரைத் தன் கொம்புகளால் தூக்கி எறிந்தது என்றால் அது அதிர்ச்சி தரும் விஷயம் மட்டுமல்ல. அபாயமானதும்தானே. அந்தவகையில் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். மோடி இப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. அதுவும் எந்த ஆன்மிகப் பாரம்பரியம் உலகுக்கு எல்லா நதிகளும் கடலை நோக்கியே என்ற பெரும் உண்மையை உரத்துச் சொன்னதோ அந்த வழியில் பிறந்த பிறகும் மத அடையாளத்தை மையமாக வைத்து வெறுப்பை வெளிப்படுத்தியது மிக மிகத் தவறான செயலே.</p>
<p>உயிரிழப்பு என்பது எப்போதுமே வேதனைக்குரிய விஷயமே. அது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும். எல்லா அடிப்படைவாத சக்திகளும் விமர்சிக்கப்படவேண்டியவையே. ஆனால், கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் தப்பித்துப் போகவிட்டுவிட்டு ஜேப்படி திருடனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பது என்பது நல்ல காவலனுக்கு அழகல்ல. உண்மையைப் பேசுவது பெரும்பான்மை அடிப்படைவாத சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற பயத்தினால் அறிவுஜீவிகள் இப்படியான விசித்திரமான நிலைப்பாடை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது, மிகவும் தவறான, வீணான பயமே.</p>
<p>அந்தவகையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறீவுஜீவி வர்க்கமும் குஜராத் பற்றியும் மோடி பற்றியும் பேசிவருவதை ஒருவர் பொருட்படுத்தத் தேவையே இல்லை. அதில் உண்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. சமூக அக்கறையும் இல்லை. இருப்பதெல்லாம் இந்துத்துவ துவேஷம் மட்டுமே.</p>
<p>ஆனால், இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னொருவர் செய்யும் தவறு நம் தவறை ஒருபோதும் நியாயப்படுத்திவிடமுடியாது. மோடி மட்டுமே தவறு செய்தார் என்று சொல்வது எப்படித் தவறாகுமோ அதுபோலவேதான் மோடி தவறே செய்யவில்லை என்று சொல்வதும். இரண்டு எதிர்நிலைகளுமே மிகவும் அபாயகரமானவையே.</p>
<p>குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரங்கள் நீண்டகாலமாகவே நடந்துவருவது உண்மைதான். என்றாலும் அந்த மண்ணுக்கு இன்னொரு மகத்துவமும் உண்டு. அது காந்தி பிறந்த மண். உலகுக்கு அஹிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் போதித்தவர் பிறந்த மண். பிரிவினைக்கால கலவரத்தில் தன் மகன் கொல்லப்பட்டதற்கு என்ன பதில் என்று ஆவேசத்துடன் கேட்ட இந்துவைப் பார்த்து, இதே போல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவா&#8230; அதுவும் அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீமாகவே வளர்த்து வா என்று சொன்னவர் பிறந்த மண். அங்கு இப்படியான வன்முறை நடந்தது என்பது ஜீரணிக்கவே முடியாத விஷயமே.</p>
<p>கோத்ராவில் கர சேவகர்களின் படுகொலை நடந்தபோது காந்தி இருந்திருந்தால் இப்படி நரகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்க முடியுமா? சில அடிப்படைவாத சக்திகள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தைப் பழிவாங்கும் வெறிச்செயலை எப்படி ஒரு உண்மையான இந்துவால் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்துத்துவவாதிகளுக்குப் புரியும் மொழியில் கேட்பதானால், மோடியின் அரசு முஸ்லீம்களையா கொன்றது? சக இந்தியர்களை அல்லவா கொன்று குவித்திருக்கிறது. இந்தியர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றியை உண்மையான இந்துவோ இந்தியனோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?</p>
<p>காங்கிரஸ் அரசு இந்தியாவின் அழிவுக்காக அயராது பாடுபடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தலைவி எவ்வழி&#8230; தொண்டர்கள் அவ்வழி. ஆனால், வலுவான பாரதத்தை உருவாக்குவதாகச் சொல்லும் ஒருவர் ஒரு சமூகத்தைத் தனிமைப்படுத்தித் தாக்குவது எந்தவகையிலும் தேச நலன் சார்ந்த செயலாக இருக்கமுடியாதே.</p>
<p>அமெரிக்காவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்க முடியும் என்றாலும் ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று போராடுவார்கள். அதில் எவ்வளவு ரத்த ஆறு பெருக்கெடுத்தாலும் பரவாயில்லை&#8230; ஆனால், தங்கள் பூமியில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதனால்தான் 9/11 தாக்குதலில் ஈடுபட்டது முஸ்லீம்கள்தான் என்பது தெரிந்த பிறகும் கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களை எல்லாம் வெட்டிக் குவிக்கவில்லை. தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் குறிவைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடனான நட்பை முறித்துக் கொள்ளவில்லை. தொலைதூர எதிரிகளைத் தங்கள் இலக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அம்பைத் தாக்கவில்லை. அம்பை எய்த கரங்களை வெட்டி எறிந்தார்கள்.</p>
<p>அவர்கள் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செய்துவரும் அராஜகத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஒரு அமெரிக்கராக இருந்து பார்த்தால் புஷ்ஷும் ஒபாமாவும் அவர்களுடைய ரட்சகரே. மோடியோ இந்துத்துவம் பேசி இந்தியர்களைக் கொல்லும் தவறை அல்லவா செய்துவிட்டிருக்கிறார். அமெரிக்க ரட்சகர் போல் வெண்ணிற அங்கிக்குள் குறுவாளை மறைத்து வைத்திருக்கும் தந்திரம் நமக்குத் தேவை இல்லை. ஆனால், சொந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்ற விஷயத்தை மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.</p>
<p>கோத்ராவில் கரசேவகர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் என்ன செய்திருக்கவேண்டும்? உண்மையில் இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்க விரும்பிய சதிகாரர்கள் செய்த நாசகாரச் செயல் அது. ஒரு திட்டமிட்ட பொறி. புத்தியுள்ள ஒருவர் அதில் விழாமல் தப்பிக்கத்தானே பார்த்திருக்கவேண்டும். இந்து முஸ்லீம் இடைவெளியை பெரிதாக்கச் செய்யப்பட்ட அந்த செயலைக் கொண்டே இந்து – முஸ்லீம் ஒற்றுமையை அல்லவா பலப்படுத்தி இருக்கவேண்டும். கொல்லப்பட்ட கரசேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று 56 சமஸ்தானங்களிலும் ஒரு பிரமாண்ட இராமர் கோவிலை இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவுடன் கட்டி எழுப்பி இருக்கவேண்டும். சில அடிப்படைவாத சக்திகள் நீங்கலாக, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இதற்கு நிச்சயம் கல்லெடுத்துக் கொடுத்திருக்கும். அப்துல்கலாம் போன்ற எத்தனையோ மத நல்லிணக்க சிந்தனைகொண்ட முஸ்லீம் தலைவர்களை முன்வைத்து அதை எளிதில் நிகழ்த்தியிருக்க முடியும்.</p>
<p>அப்படியாக பழி வாங்குதலின், வெறுப்பின் அடையாளமாக இன்று இருக்கும் கோத்ராவை தியாகத்தின் சின்னமாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கவேண்டும். மனதில் இருக்கவேண்டிய மத நல்லிணக்க தெய்வத்தை விரட்டி அடித்துவிட்டு வெளியில் கருங்கல்லால் ஆன கோவிலைக் கட்டிவைத்தால் அது கோவிலாக இருக்காது. மிகப் பெரிய சமாதியாகத்தான் இருக்கும்.</p>
<p>இன்றைக்கு இஸ்லமியர்களைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துவதுபோல் அன்றே ஆத்மார்த்தமாக நட்பின் கரங்களை நீட்டிருக்கவேண்டும். அன்றும் மோடி ஒரு கரத்தை நீட்டினார். ஆனால் அந்தக் கரத்தில் ரத்தம் தோய்ந்த கொலை வாளல்லவா மின்னியது. காந்தியின் மண்ணில் பிறந்த அவரால் எப்படி அதைச் செய்ய முடிந்தது. காந்திய வழியில் நின்று மது விலக்கைப் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமல்படுத்திவந்திருக்கும் மோடி காந்தியிடமிருந்து மத நல்லிணக்கத்தையும் அல்லவா கற்றுக் கொண்டிருக்கவேண்டும்.</p>
<p>இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை. மோடிக்கு இந்தியாவை வழி நடத்தும் தலைமைப் பதவி வரவிருக்கிறது. பதவி உயர்வுகளுடன் சில பொறுப்புகளும் சேர்ந்து வரும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வளர்ச்சியே தன்னுடைய இலக்கு என்பதை மோடி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கோத்ரா கலவரங்கள் தன் ஆட்சியின் முதல் கலவரம் மட்டுமல்ல&#8230; அதுவே கடைசி கலவரமும்கூட என்ற வாக்குறுதியைத் தரவேண்டும். நடந்த துர்நிகழ்வுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.</p>
<p>அறிவிஜீவிகளுக்கும் ஊடகங்களுக்கும் பிஜேபியும் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஓர் எளிய இந்தியனுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். வேறென்ன&#8230; அவர்களின் அனுமதியைக் கேட்டுத்தானே வீதி வீதியாக வலம் வரப்போகிறார்கள்.</p>
<p><em>(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான, &#8216;மோடி மட்டும்தான் வில்லனா?&#8217; கட்டுரையின் முழுமையான வடிவம்).</em></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7916&amp;title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%29" id="wpa2a_14">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7916</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>கைகள் போதும்</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7913</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7913#comments</comments>
		<pubDate>Mon, 10 Jun 2013 08:50:04 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[ஜெயிப்பது நிஜம்]]></category>
		<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[சுயமுன்னேற்றம்]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7913</guid>
		<description><![CDATA[ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 9 சேமிப்பு என்பது எனது சிறு வயது முதல் ரத்தத்தில் ஊறிய ஒன்று. பள்ளிக்கூட நாள்களில் இருந்தே வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை முறைப்படி பராமரித்து வருகிறேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு வளர்ந்து ஆளாகும் நேரம் எனக்கு காசோலைப் புத்தகமும் ஏ.டி.எம். கார்டும் தேவைப்பட்டது. அதற்காக வங்கியை அணுகியபோது, அப்ளிகேஷன் எழுதிக்கொடுங்கள். ஒரு நான்கைந்து நாள்களில் கிடைத்துவிடும் என்று கூறினார்கள். நானும் அப்ளிகேஷன் எழுதிக்கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்&#8230; காத்திருந்தேன்&#8230; காத்திருந்தேன்&#8230; பலநாள்கள் காத்திருந்தும் வங்கியிடம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Whose-Hands.jpg" rel="lightbox[7913]"><img class="alignleft size-medium wp-image-7914" alt="Hands up" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/Whose-Hands-300x202.jpg" width="300" height="202" /></a>ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 9</strong></span></p>
<p>சேமிப்பு என்பது எனது சிறு வயது முதல் ரத்தத்தில் ஊறிய ஒன்று. பள்ளிக்கூட நாள்களில் இருந்தே வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை முறைப்படி பராமரித்து வருகிறேன்.</p>
<p>ஒரு கட்டத்துக்குப் பிறகு வளர்ந்து ஆளாகும் நேரம் எனக்கு காசோலைப் புத்தகமும் ஏ.டி.எம். கார்டும் தேவைப்பட்டது. அதற்காக வங்கியை அணுகியபோது, அப்ளிகேஷன் எழுதிக்கொடுங்கள். ஒரு நான்கைந்து நாள்களில் கிடைத்துவிடும் என்று கூறினார்கள்.<br />
நானும் அப்ளிகேஷன் எழுதிக்கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்&#8230; காத்திருந்தேன்&#8230; காத்திருந்தேன்&#8230; பலநாள்கள் காத்திருந்தும் வங்கியிடம் இருந்து பதிலேதும் இல்லை.</p>
<p>பின்னர் அது தொடர்பாக ஃபாலோ அப் செய்யும்போது எனக்குக் கிடைத்த பதில், அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.</p>
<p>‘சாரி&#8230;ஸார் உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சு&#8230;’ என்றார்கள்.</p>
<p>எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன், எதற்காக ரிஜக்ட் செய்தார்கள்? எனது வங்கிக் கணக்கில் செக் பவுன்சிங் கூட இதுவரை நான் செய்ததில்லையே&#8230; தவிர வங்கிக் கணக்கையும் அதற்குரிய முறைப்படிதானே மெயிண்டெயின் செய்கிறேன். பின் எதற்காக? ஒரே குழப்பமாக இருந்தது.</p>
<p>வங்கிக்குச் சென்று, ‘ஏன்&#8230; என்ன காரணத்துக்காக ரிஜெக்ட் செய்தீர்கள்?’ என்று விசாரித்தேன்.<br />
‘சார், நீங்க செக் புக்கையோ, ஏ.டி.எம் கார்டையோ உபயோகிக்கணும்னா மத்தவங்க உதவியைச் சார்ந்துதானே இருக்கணும். யாரோட உதவியும் இல்லாம யாரையும் சாராம உங்களால அதை ஹாண்டில் பண்ண முடியாது இல்லையா? அதனாலதான்&#8230;’ என்று இழுத்தார்கள்.</p>
<p>நான் சொன்னேன்&#8230; ‘நீங்கள் சொல்வது மற்ற யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எனக்குப் பொருந்தாது. ஏன் என்றால்&#8230; எனது ஒவ்வொரு செயலையும் வேலைகளையும் சகல விஷயங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் நானேதான் மானேஜ் செய்துகொண்டு மற்றவர்களுக்கும் ஓர் ஆப்பர்சூனிட்டி கொடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். சரி, ஒருவேளை அப்படியே ஏதாவது தவறு நடந்தது என்றாலும் அதற்கு நான் தானே பொறுப்பு? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் அதை நான் தானே எதிர்கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு ஏதும் பாதிப்பில்லையே. அப்படியே ஏதாவது தப்பு நடந்ததென்றாலும் பணத்தை நீங்கள் திருப்பி கொடுத்து விடுவீர்களா அல்லது அந்தப் பொறுப்பைத்தான் எடுத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன்.</p>
<p>அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p>
<p>பிறகு நான் உறுதியாகச் சொல்லி விட்டேன். ‘என்னுடைய செக் புக், ஏ.டி.எம். கார்டுகளுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். போதுமா?’</p>
<p>‘சார், இங்கே நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. எதற்கும் நீங்கள் எங்களுடைய ஹெட் ஆபீஸ் போய் கேளுங்கள்.’</p>
<p>அவர்கள் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.</p>
<p>ஆனால் நான் உறுதியா இருந்தேன். எனக்கு உரிமையான ஒன்றைப் பெற நான் எதற்காக அவுட் ஆஃப் தி வே முயற்சி செய்யவேண்டும்? முடியவே முடியாது. நீங்கள் எனக்கு கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்று உறுதியாக நின்றேன்.</p>
<p>அப்போது அந்த வங்கியில வேலை பார்க்கும் ஒரு நல்ல மனதுப் பெண் &#8211; என்னை அவங்களுக்கு நன்றாகத் தெரியும் &#8211; என் உதவிக்கு வந்தார்.</p>
<p>‘சார், நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்க அக்கவுண்ட் ஹிஸ்டரி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றியும் தெரியும். மற்றவர்களைவிட நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள்வீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்னதும்தான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது.</p>
<p>ஒரு பெரிய மலையைத் தாண்டியாகிவிட்டது. ஏ.டி.எம். கார்டு கிடைத்துவிட்டது.</p>
<p>அடுத்து செக் புக்.</p>
<p>செக் புக்கை எனக்கு தரமுடியாது என்பதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?<br />
பார்வையற்ற ஒருவர் செக் புத்தகத்தில் எப்படி கையெழுத்து போடுவார் &#8211; என்பதுதான்.<br />
பார்வையே இல்லாமல் ஓவியம் வரைபவர்கள்கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்கிறபோது நான் கையெழுத்துப் போடுவது என்ன பெரிய விஷயம்? இதை அவர்களுக்குச் சொல்லி புரிய வைப்பதற்குள் நான் பட்ட பாடு அப்பப்பா&#8230; அதைச் சொல்லி மாளாது&#8230;.</p>
<p>‘ஒருவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுவதற்கு அவருடைய கை நன்றாக இருந்தால் போதும். எனது கை நன்றாக இருக்கிறது. பத்து விரல்களும் நன்றாக இயங்குகின்றன. இது போதாதா&#8230; நான் எனது கையெழுத்தைப் போடுவதற்கு? அதற்கும் பார்வை குறைபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? கண்டிப்பாக எனக்கு செக் புக் வேண்டும்‘ என்று சொல்லி அடமாக நின்றேன்.</p>
<p>‘கையெழுத்துப் போடுவீர்கள் என்பது சரிதான்&#8230; அதை சரியாக சரியான இடத்தில் எப்படிப் போடுவீர்கள்?’ என்று வங்கியில் கேட்டார்கள்.</p>
<p>‘செக்கில் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடலாமா? போடக்கூடாது இல்லையா&#8230; ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது பாட்டம் ரைட் சைடில் தானே போட வேண்டும்? அது எனக்கு நன்றாகவே தெரியும்&#8230; மிகச் சரியாக அந்த இடத்தில் ‘என்’ கையெழுத்தைப் போடுவேன். போதுமா? உங்களுக்கு வேறென்ன பிரச்னை?’ என்று திருப்பிக் கேட்டேன்&#8230;.</p>
<p>அப்போதும் வங்கியில் சமாதானமாகவில்லை&#8230; கடைசியில்&#8230;. பார்வையே இல்லாமல் படம் வரைகிறவர்கள் முதல் மிக நன்றாக கார் ஓட்டுகிறவர்கள் வரைக்கும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறி ஒருவழியாக கன்வின்ஸ் செய்தேன்.</p>
<p>ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தன்னுடைய அடிப்படை உரிமைகளைக்கூட போராடித்தான் பெறவேண்டியுள்ளது என்ற நிலையில் நம் நாடு இருப்பதை நினைத்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.</p>
<p>கல்வியறிவு நிரம்பப் பெற்ற எனக்கே இப்படி ஒரு அனுபவம் என்றால் அதிகம் படித்திராத ஆனால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாதிக்கத் துடிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை எண்ணிப் பார்க்கிறேன்.</p>
<p>மேலும் உங்களுக்கு சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் சௌகரியங்களை உரிமைகளைப் பெற சிலர் எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்.</p>
<p>நீங்கள் அனுபவித்து வரும் சௌகரியங்களின் அருமையை உணர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் தரும் ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.</p>
<blockquote><p>உரிமைகளை கேட்டு மட்டுமல்ல போராடியும் பெற ஒருவர் தயாராக இருக்கவேண்டும்!</p></blockquote>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7913&amp;title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_16">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7913</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி?</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7909</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7909#comments</comments>
		<pubDate>Mon, 10 Jun 2013 03:06:22 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[பண்டைய நாகரிகங்கள்]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பண்டைய நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பிரபஞ்சம்]]></category>
		<category><![CDATA[புராணம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7909</guid>
		<description><![CDATA[பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1 நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள்.  இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய்  வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong>பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1</strong></span></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/nuwa_comp.jpg" rel="lightbox[7909]"><img class="size-medium wp-image-7911 alignleft" alt="nuwa_comp" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/nuwa_comp-300x193.jpg" width="300" height="193" /></a>நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள்.  இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.</p>
<p>மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய்  வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி.     உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன?</p>
<p>கி.மு. 1700 &#8211; 1100  காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா?</p>
<p>படைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்?<br />
கடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்?<br />
சிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்?<br />
யாரால் நிச்சயமாகச் சொல்லமுடியும்?<br />
கடவுள் இதைச் செய்தாரா, செய்யவில்லையா?<br />
வானில் இருக்கும் அவருக்கு இதற்கு ஒருவேளை விடை தெரியலாம்,<br />
அல்லது  அவருக்கும் விடை தெரியாமலிருக்கலாம்.</p>
<p>( को अद्धा वेद क इह प्र वोचत् कुत आजाता कुत इयंविसृष्टिः<br />
अर्वाग् देवा अस्य विसर्जनेनाथा को वेद यतआबभूव<br />
इयं विसृष्टिर्यत आबभूव यदि वा दधे यदि वा न<br />
यो अस्याध्यक्षः परमे व्योमन् सो अङ्ग वेद यदि वा नवेद )</p>
<p>இப்படிப் புதிர்போடும் ரிக்வேதம், இன்னொரு  ஸ்லோகத்தில் தன் பதிலைச் சூசகமாகச் சொல்கிறது.</p>
<p>तम आसीत् तमसा गूळमग्रेऽप्रकेतं सलिलं सर्वमाइदम्<br />
तुच्येनाभ्वपिहितं यदासीत् तपसस्तन्महिनाजायतैकम्</p>
<p>ஆரம்பத்தில், எங்கும் காரிருள்.  இன்று நம் கண்ணுக்குத் தெரியும் எல்லாமே, யாருக்கும் தெரியாத நிலை. தெரியாத இந்த உலகத்தை, எல்லாம் வல்ல அவன் சக்தி மட்டுமே நிறைத்திருந்தது. அந்த  சக்தியின் வெப்பத்தில் உலகம் பிறந்தது.</p>
<p>ரிக்வேதம் அறிவுஜீவிகளின் ஊடகம். வேதங்கள் சொல்லும் கருத்தைப் புராணக் கதைகள்  ஜனரஞ்சகமாகச் சொல்கின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும்,  எப்போது, எங்கே, எப்படிப் பிரபஞ்சம் பிறந்தது?  என்னும் சிருஷ்டியின் ரகசியம் தேடும் கேள்விக்குப் பதில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளின் அணுகுமுறைகள் மூன்றுவகை:</p>
<p>1.    பிரபஞ்சம் ஒரு பெரிய முட்டையிலிருந்து வந்தது.<br />
2.    சில ஆண் &#8211; பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிறந்தது.<br />
3.    முழுமுதற்கடவுள் தன் கைப்பட உருவாக்கியது.</p>
<p>முதலில், முட்டைக்குள்ளிருந்து  பிரபஞ்சம் வந்ததாகச் சொல்லும் கதைகளைப் பார்ப்போம்.  இந்துமத இதிகாசங்களில் தொடங்குவோம். சிவபெருமான் முழுமுதற் கடவுள். அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும் அவர் தொழில். மரம், பறவை, மிருகம், மனிதர் என்று எந்தவொரு ஜீவராசிக்கும் தன் இனத்தைப் பெருக்க இரு பாலினங்கள் தேவைப்படும். இதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக  இருக்கிறார். வலப்பக்கம் சிவன், இடப் பக்கம் பெண்மையின் பிரதிநிதித்துவமாக  சக்தி!</p>
<p>சிவன் தவிர யாருமே இல்லை, ஒன்றுமே இல்லை. வானம் இல்லை, கடல்கள் இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை, மீன்கள் இல்லை, பறவைகள் இல்லை, மிருகங்கள் இல்லை. மனிதர்கள் இல்லை, எந்த உயிரினமும் இல்லை.  தகிக்கும் நெருப்பாய் அவர் மட்டுமே இருக்கிறார்.</p>
<p>சிவன் தன் உடுக்கையை அசைக்கிறார். மெல்லத் தொடங்கும்  &#8217;ஓம்&#8217;  என்னும் ஒலி ஆரோஹணமாகி வெட்டவெளியை ரீங்காரமிட்டு நிறைக்கிறது. பிரணவ ஒலி &#8211; ஆதிபகவன் உருவாக்கும் முதல் சப்தம்.</p>
<p>சிவபெருமானின் லீலாவிநோதம், சிருஷ்டி தொடங்குகிறது. தன் சடாமுடிக் கங்கையைக் கவிழ்த்ததும், ஓடையாகத் தொடங்கும் வெள்ளம், ஊழிப் பிரளயமாகிறது.  சிவபெருமான் ஒரு பெரிய தங்க முட்டையைத் தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அந்த முட்டை இரண்டாக வெடிக்கிறது. அதற்குள்ளிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா வெளியே வருகிறார்.</p>
<p>பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். சொர்க்கலோகம், வானம், சூரியர், சந்திரர், நட்சத்திரங்கள் படைக்கிறார். அடுத்ததாகப் பூவுலகம், நம் உலகம் பிறக்கிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், ஏரிகள்! ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது? மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே? பிறகு உயிர்த் துடிப்பு எப்படி இருக்கமுடியும்?</p>
<p>உயிர்த் துடிப்பு கொண்டுவரும் அனிமேஷன் வேலையில் பிரம்மா இறங்குகிறார்.  தன் உடலை, ஆண், பெண் என்று இரு பாகங்களாகப் பிரித்துக்கொள்கிறார். தலை, வாய், வயிறு, கால், கை என்று தன் உடலின் ஒவ்வொரு அவயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்குகிறார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன.  கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண். இவர்கள் அனைவருக்கும், பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், நடமாடும் சக்திகள் தருகிறார்.</p>
<p>உலகம் பிறந்துவிட்டது! விண்ணைத் தொடும் மலைகள், ஓங்கார ஒலியோடு பாயும் நீர்வீழ்ச்சிகள், அமைதியாக ஓடும் நதிகள், சலசலக்கும்  நீரோடைகள், காற்றோடு கைகோத்து விளையாடும் கடல், ஆழ்கடலுக்குள் மறைந்துகிடக்கும்  முத்து, பவளங்களை நாளும் தேடும் மீன்கள், திமிங்கிலங்கள்,  ராஜநடை சிங்கங்கள், சீறும் சிறுத்தைகள், மருள்விழி மான்கள், நம் சகோதரக் குரங்குகள், தோகை விரித்தாடும் மயில்கள், இன்னிசைக் குயில்கள்,   வண்ணக் கிளிகள் &#8211; பார்க்கும் இடமெல்லாம் அழகு.</p>
<p>0</p>
<p>ஃபின்லாந்து நாட்டின் காப்பியச் செய்யுள் கலேவாலா  (Kalevala) சொல்லும் கதை இது.</p>
<p>பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், வெட்ட வெளியும், காற்றும் மட்டுமே இருந்தன. நம் ஊரில்  காற்றின் தெய்வம் வாயு பகவான். இதேபோல், ஃபின்லாந்தில், காற்றின் தெய்வம்  இல்மட்டார் (Ilmatar) என்னும் கன்னிப் பெண் தேவதை. நீண்ட கூந்தல் கொண்ட அந்த அழகுக் கடவுள் தன் நேரத்தை எப்படிச் செலவிடுவாள் தெரியுமா? வர்ணஜாலம் செய்யும் வானவில்களை எண்ணுவாள், அல்லது, தன் நீண்ட கூந்தலைத் தவழ்ந்து வரும் காற்று தழுவவிட்டு ரசிப்பாள்.</p>
<p>ஒரு நாள், கிழக்குக் காற்று இல்மட்டாரின் கூந்தலைத் தொட்டு விளையாடியது. அவள் காதில் , கொஞ்சுமொழி பேசியது. இல்மட்டார் உடலெல்லாம் இதுவரை அனுபவித்தேயிராத புளகாங்கிதச் சிலிர்சிலிர்ப்பு. அவள் சலனம் கிழக்குக் காற்றுக்குப் புரிந்தது. சில்மிஷங்கள் தொடங்கினான்.  உடல்கள் தழுவின. உணர்ச்சிகள் எகிறின.  வாயுவின் வாரிசு  இல்மட்டார் வயிற்றில் வளரத் தொடங்கியது.</p>
<p>கருவை உருவாக்கிய காற்று காணாமல் போனான். எல்லாத் தாய்களையும்போல், வயிறு நிறையச் சுமையும், நெஞ்சு நிறைய ஆசைகளுமாக இல்மட்டார் காத்திருந்தாள். எழுநூறு ஆண்டுகள் ஓடின. இல்மட்டாரின் தலைக்கு மேலாக ஒரு தெய்வீகக் கழுகு பறந்தது. அவள் தலையைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கழுகும் அவளைப் போலவே ஒரு கர்ப்பிணி. தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஆறு முட்டைகளை எங்கே பத்திரமாக இறக்கிவைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது. இல்மட்டாரைப் பார்த்தவுடன், தன் குஞ்சுகளை அவள் தாயாகப் பாதுகாப்பாள் என்னும் நம்பிக்கை கழுகுக்கு வந்தது. ஆறு முட்டைகளையும் இல்மட்டார் காலடியில் போட்டுவிட்டு, எங்கோ பறந்து மறைந்தது.</p>
<p>நிறைகர்ப்பிணி இல்மட்டார் மெள்ள எழுந்தாள். ஏழு முட்டைகளும் அவள் காலடியிலிருந்து நழுவி, பத்திரமாய்க் கடலுக்குள் விழுந்தன. கழுகு ஆறு முட்டைகள்தானே போட்டது என்று கேட்கிறீர்களா? ஏழாவது முட்டை, அவள் வயிற்றில் இருந்த குழந்தை!</p>
<p>இல்மட்டார் குனிந்து பார்த்தாள். தான் பார்க்கும் காட்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. கடலில் விழுந்த ஏழு முட்டைகளும் வெடித்தன. சொர்க்கலோகம், பூவுலகம் என ஏழு வகை உலகங்கள்* பிறந்தன.   முட்டைகளின்  வெள்ளைக் கரு சூரியனாகவும், மஞ்சள் கரு சந்திரனாகவும், முட்டைத் தோடுகள் நட்சத்திரங்களாகவும்  உருவெடுத்தன. ஆமாம், பிரபஞ்சம் இப்படித்தான் பிறந்தது.</p>
<p>(*ஆச்சரியமாக, இந்துப் புராணங்களும், ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்கின்றன. அவை &#8211; பிரம்மா வாழும் சத்யலோகம், கடவுள்களின் தபாலோகம், பிரம்மாவின் வாரிசுகள் தங்கும் ஜனலோகம்,  ரிஷிகள் உறையும் மகர்லோகம், தேவர்களின் சுவர்க்கலோகம், பூமிக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட புவர்லோகம். மனிதர், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்களின் பூலோகம்).</p>
<p>0</p>
<p>சீனப் புராணம் என்ன சொல்கிறது? ஆரம்பத்தில் வெற்றிடம் தவிர ஒன்றுமே இல்லை. யின் (yin), யாங் (yang) என்னும் மாறுபட்ட  இரண்டு சக்திகள் எங்கிருந்தோ வந்தன.  இவற்றை ஆண், பெண் சக்திகள் என்று வைத்துக்கொள்ளலாம். 18,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த இரண்டு சக்திகளும், ஒரு தெய்வீக முட்டையில் ஐக்கியமாயின. அந்த முட்டை வெடித்தது. அதற்குள்ளிருந்து பாங்கு (Phan Ku) என்னும் பிறவி வந்தான். பிரம்மாண்ட உருவம், உடல் முழுக்க முடி, தலையில் கொம்பு. அவன் கையில் கோடரி.</p>
<p>பாங்கு தன் கோடரியால் முட்டையை வெட்டினான். யின், யாங் ஆகிய இருவரும் தனித்தனியே எழுந்தார்கள். மந்திரக் கோல்போல், தன் கோடரியைக் காற்றில் வீசினான். உலகம் பிறந்தது.  இன்னொரு வீச்சு &#8211; வானம் வந்தது. தன் கைகளால் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தினான்.</p>
<p>இன்னொரு 18,000 ஆண்டுகள் ஓடின. பாங்கு மரணமடைந்தான். அவன் மூச்சு காற்றும், மேகங்களுமாக மாறியது. அவன் குரல் இடியாக வடிவெடுத்தது. அவன் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், உடல் மயிர் நட்சத்திரங்கள். அவன் தலை மலைகள். ரத்தம் நதிகள்.  பாங்குவின் வியர்வை மழையானது. அவன் உடையில் ஒட்டியிருந்த  தெள்ளுப் பூச்சிகள் (fleas) மீன், மிருகம், பறவை எனப் பல வடிவெடுத்தன. ஆண், பெண் என்னும் மனிதப் பிறவிகளை மட்டும் பாங்கு படைக்கவில்லை. இந்தப் படைப்பைச் செய்த கடவுள் தன் உடலில் பாதியைப் பெண்ணாகவும், மீதியைப் பாம்பாகவும் கொண்ட, நூவா (Nuwa) என்னும் தேவதை.        -</p>
<p>பிரபஞ்சத்தின் ரிஷிமூலம் முட்டை என்று சொல்லும் இந்துமத மற்றும்  ஃபின்லாந்து, சீன நாடுகளின் புராணக் கதைகளைப் பார்த்தோம். யுனிவர்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் பொருள் அண்டம்  என்று அகராதி சொல்கிறது. தமிழ் அகராதியைப் புரட்டுங்கள். அண்டம் என்றால் இரண்டு அர்த்தங்கள் &#8211; பிரபஞ்சம், முட்டை. இந்த இரட்டை அர்த்தம் நிச்சயமாகத் தற்செயல் இணைவாக இருக்கமுடியாது. அறிவியல் மேதைகளைவிட தமிழ் அறிஞர்களுக்குப் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்குமோ?</p>
<p>0</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7909&amp;title=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%3A%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F" id="wpa2a_18">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7909</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தர் : ஒரு போராளியின் கதை</title>
		<link>http://www.tamilpaper.net/?p=7906</link>
		<comments>http://www.tamilpaper.net/?p=7906#comments</comments>
		<pubDate>Sun, 09 Jun 2013 04:51:50 +0000</pubDate>
		<dc:creator>Tamilpaper Editorial</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[புரட்சி]]></category>
		<category><![CDATA[அம்பேத்கர்]]></category>
		<category><![CDATA[இந்தியத் தத்துவம்]]></category>
		<category><![CDATA[கார்ல் மார்க்ஸ்]]></category>
		<category><![CDATA[சிந்தனையாளர்]]></category>
		<category><![CDATA[தம்மம்]]></category>
		<category><![CDATA[புத்தர்]]></category>
		<category><![CDATA[மார்க்சியம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilpaper.net/?p=7906</guid>
		<description><![CDATA[புரட்சி / அத்தியாயம் 7 சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் சமூகக் கட்டுமானம் இறுக்கமான வடிவத்தில் இருந்தது. இந்த வடிவத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமும் வழங்கப்பட்டிருந்தது. நெருப்பு என்றால் எரியவேண்டும். பாறை என்றால் கடினமாக இருக்கவேண்டும். மாடு என்றால் பால் கொடுக்கவேண்டும். உயிரற்ற பொருள்களுக்கு மாத்திரமல்ல உயிருள்ள பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய உலகப் பார்வையாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு மனிதன் என்ன தொழில் செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும், அவனது கடமைகள் என்னென்ன போன்றவை முன்கூட்டியே [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="text-decoration: underline;"><strong>புரட்சி / அத்தியாயம் 7</strong></span></p>
<p><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/buddha1.jpg" rel="lightbox[7906]"><img class="alignright size-medium wp-image-7907" alt="buddha" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/06/buddha1-297x300.jpg" width="297" height="300" /></a>சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் சமூகக் கட்டுமானம் இறுக்கமான வடிவத்தில் இருந்தது. இந்த வடிவத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமும் வழங்கப்பட்டிருந்தது. நெருப்பு என்றால் எரியவேண்டும். பாறை என்றால் கடினமாக இருக்கவேண்டும். மாடு என்றால் பால் கொடுக்கவேண்டும். உயிரற்ற பொருள்களுக்கு மாத்திரமல்ல உயிருள்ள பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய உலகப் பார்வையாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு மனிதன் என்ன தொழில் செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும், அவனது கடமைகள் என்னென்ன போன்றவை முன்கூட்டியே வரையறுக்கப்பட்டிருந்தன. இந்தப் பார்வை பிற்காலத்தில் மேலும் இறுக்கமடைந்து வர்ணங்களும் சாதிகளும் தோன்றுவதற்குத் தோதான சூழலை உருவாக்கிக்கொடுத்தது. யார் நாட்டை ஆளவேண்டும், யார் சேவகம் புரியவேண்டும், யார் போர் புரியவேண்டும், யார் எப்படி வாழவேண்டும் போன்றவை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.</p>
<p>இந்தப் பின்னணியில்தான் புத்தர் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியிருந்தார். அவருடைய போதனைகள் இந்தச் சூழலில் இருந்தும், இந்தச் சூழலை எதிர்த்தும் உருவானவை. தன் காலத்தில் நிலவிய வாழ்வியல் சித்தாந்தமும் அறவியல் தத்துவமும் பிழையானவை என்பதை புத்தர் முதலில் தெரிந்துகொண்டார். அதற்கான மாற்றை முன்வைக்கவேண்டியது அவசியம் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.</p>
<p>எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டன, குறிப்பிட்ட வட்டத்துக்குள் பிறந்த ஒருவன் குறிப்பிட்ட வகையில்தான் நடந்துகொள்வான் போன்ற கருத்தாக்கங்களை புத்தர் நேரடியாகத் தாக்கினார். ‘ஒருவன் தன் பிறப்பால் பிராமணனாகவோ விலக்கப்பட்டவனாகவோ மாறுவதில்லை. அவனது செய்கைகளே அவனது குணத்தைத் தீர்மானிக்கின்றன.’ ஆணா, பெண்ணா என்பது முக்கியமல்ல. ஏழையா, பணக்காரனா என்பது பொருட்டல்ல. செய்கை மட்டுமே முக்கியம்; செய்கையைக் கொண்டே மதிப்பீடுகள் உருவாக்கப்படவேண்டும் என்றார் புத்தர்.  புத்தரின் போதனைகள் அவர் காலத்து வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்தன. ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தன்மூலம் ஒரு தெளிவான மாற்றுப் பாதையை வகுத்துக்கொடுத்தன்மூலம் புத்தர் ஒரு சமூகப் போராளியாக எழுச்சி பெற்றார்.</p>
<p>இந்திய வரலாறு என்பது பிராமணியத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான யுத்தங்களின் வரலாறே ஆகும் என்று பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்னும் மார்க்சியப் பார்வையை நினைவுபடுத்தும் வாசகம் இது.  ‘பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையில் அல்ல; ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதாருக்கும் இடையில் அல்ல; வேதங்களுக்கும் பிற இந்திய கலாசாரங்களுக்கும் இடையில் அல்ல. பௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலேயே முக்கிய மோதல்கள் நடைபெற்றன’ என்றார் அம்பேத்கர்.</p>
<p>நவீன உலகுக்கு ஏற்ற ஒரே மதம் பௌத்தம் என்பது அம்பேத்கரின் முடிவு. அறிவியல் உணர்வால் உந்தப்பட்டவர்களுக்கு இது மட்டுமே மார்க்கம் என்றார் அவர். அதே சமயம் பௌத்தம் மெல்ல மெல்லவே பரவிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதற்குக் காரணம் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்பது போல் பௌத்தர்களுக்கு என்று தனியொரு நூல் கிடையாது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் புத்தரும் அவர்தம் தம்மமும் என்னும் நூலை அம்பேத்கர் எழுதினார். அம்பேத்கருக்கு முன்பே பால் காரஸ், எட்வின் அர்னால்ட் ஆகியோர் பௌத்தம் குறித்து எழுதியுள்ளனர் என்றாலும் புத்தரை ஒரு போராளியாக அடையாளப்படுத்தி நவீன அரசியல் களத்துக்கு அவரை மறு அறிமுகம் செய்து வைத்ததில் அம்பேத்கரின் பங்களிப்பு முதன்மையானது.</p>
<p>2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் யாரை எதிர்த்துப் போரிட்டாரோ அவர்களையே அம்பேத்கரும் தன் காலத்தில் எதிர்க்கவேண்டிவந்தது. புத்தரின் போதனைகளை மீறி சாதியக் கட்டுமானம் மேலும் இறுக்கமடைந்து தீண்டாமைக் கொடுமைகள் வளர்ந்து நிற்பதை அம்பேத்கர் கண்டார். இவற்றையெல்லாம்விட, மேலாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்ட புத்தரையே மதவாதிகள் கடவுளின் அவதாரமாகவும் கடவுளாகவும் உருமாற்றியிருந்தனர்.</p>
<p>எனவே, அம்பேத்கர் முதலில் புத்தரை மதவாதக் குப்பைகளில் இருந்து மீட்டெடுத்தார். நோய், மூப்பு, சாவு ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்து புத்தர் தன் வீட்டைவிட்டு வெளியேறவில்லை; சாக்கியர்களுக்கும்  கோலியர்களுக்கும் இடையிலான நதி நீர்ப் பங்கிட்டுப் பிரச்னையை அமைதி வழியில் தீர்ப்பதற்காகவே அவர் வெளியேறினார் என்று தெளிவுபடுத்தினார். அடுத்து, ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான போராட்டத்தில் புத்தரை ஒரு வலுவான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினார்.</p>
<p>இந்து மதத்தில் இருந்து தீண்டாமையைப் பிரித்தெடுக்கமுடியாது என்பதால் அந்த மதத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் வெளியேறவேண்டும் என்றார் அம்பேத்கர். 1936ம் ஆண்டு மே 30, 31 இரு தினங்களில் பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கர் தீண்டத்தகாதவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?</p>
<p>‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்துக்கு ஏற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’</p>
<p>அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதற்கும் அதையே ஒரு தீர்வாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்வைத்தற்கும் என்ன காரணம்?</p>
<ul>
<li>இன்றைய தீண்டப்படாதவர்கள் ஒரு காலத்தில் புத்த மதத்தினராக இருந்தனர் என்பது அம்பேத்கரின் முடிவு.</li>
<li>புத்த மதம் ஓர் இந்திய மதம் என்பதால் அன்னியத் தன்மைகள் இருக்காது.</li>
<li>புத்த மதம் மிக மிகக் கடுமையான அறிவியல் சோதனைகளைக் கூடத் தாக்குப்பிடிக்கக் கூடியது. நவீன உலகின் தலைவிதிகளை நெறிப்படுத்துவதற்கான திறனையும் ஆற்றலையும் அது பெற்றிருந்தது.</li>
<li>தீண்டப்படாதவர்கள் உலக புத்த சமூகத்தோடு சேர்ந்து உலக சகோதரத்துவத்துக்கான வழியை வகுப்பார்கள்.</li>
</ul>
<p>புத்த மதத் தத்துவத்தின் நல்லியல்புகளை அம்பேத்கர் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட டபிள்யூ.என். குபேர் பட்டியலிடுகிறார்.</p>
<ul>
<li>புத்த மதம், இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது.</li>
<li>புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்துமுதல்வாதத்தன்மை அதில் இல்லை.</li>
<li>சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.</li>
<li>இயங்கியல்தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது.</li>
<li>புத்த மதத்தில் மனிதனை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியும் தேர்வும் உள்ளன. மனிதனைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.</li>
</ul>
<p>பௌத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகளை முன்வைத்து விவாதிக்கிறார் விக்டர் குணசேகரா. புத்தர், மார்க்ஸ் இருவருமே உலகம் தொடர்ந்து மாற்றமடைந்துவருகிறது என்பதை ஏற்கிறார்கள். புத்தர் இதனை நிலையின்மை என்றார். மார்க்ஸ் இயங்கியல் என்றார். வலியும் துயரங்களும் நிஜமானவை; மனரீதியிலும் உடல்ரீதியிலும் வலி நீடிக்கிறது என்றார் புத்தர். பெரும்பாலான மக்கள் துயரங்களிலும் வலிகளிலும் சிக்கிக்கிடக்கிறார்கள் என்றார் மார்க்ஸ். நவீன முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் அந்நியப்படுத்தப்படுவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். புத்தர், மார்க்ஸ் இருவருமே தத்துவத்தோடு நின்றுவிடாமல் உலகை மாற்றுவதற்கான அவசியம் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார்கள். இருவருமே கருத்துமுதல்வாதத்தையும் கடவுளையும் எதிர்த்தனர். ஒரு பிரிவினரால் இன்னொரு பிரிவினர் ஆதிக்கம் செலுத்தப்படுவதை எதிர்த்தனர்.</p>
<p>தத்துவம், செயல்பாடு என்னும் இரு பிரிவுகளிலும் புத்தர் செயலாற்றினார். இந்தியத் தத்துவத் துறையில் புத்தரின் பங்களிப்பு கிரேக்கத் தத்துவ மரபில் ஹெராகிளிடஸின் பங்களிப்போடு ஒப்பிடப்படுகிறது.  இந்தியத் தத்துவ உலகில் முதன் முதலாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையை புத்தரிடமே காண்கிறோம் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.</p>
<p>இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முதன்மையானது மதவெறி என்றால் இன்றைய நம் தேவைகளில் முதன்மையானது பௌத்தம். முதலாளித்துவச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்க்சியம் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு சாதிய மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தர் தேவை.  அதற்கு முதலில் எது பௌத்தம் என்பதைவிட எதெல்லாம் பௌத்தம் அல்ல என்னும் புரிதல் அவசியமாகிறது. புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் புத்தர். புத்தரின் போதனைகளில் ரகசியம் என்று எதுவும் இல்லை. பூடகம் என்று எதுவும் இல்லை. இன்றைய லாமாக்களுக்கும் புத்தருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.  பௌத்தத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. பௌத்தம் என்பது சைவ உணவு முறை அல்ல. (புத்தர் இறைச்சி உண்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன. அசைவம் உண்பது அசுத்தமானது என்று புத்தர் கருதவில்லை). புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை. பௌத்தம் நிச்சயமாக, இந்து மதத்தின் ஒரு பிரிவு இல்லை.</p>
<p>எனில், எது பௌத்தம்? மக்கள் வேதனைப்படுகிறார்கள்; அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். புத்தர் இதைத்தான் செய்தார்.</p>
<p>மார்க்ஸைக் கடந்தும் முதலாளித்துவம் உயிர்ப்புடன் இருப்பது போல் புத்தரைக் கடந்தும் சாதிய ஒடுக்குமுறையும் மேலாதிக்கமும் உயிர்ப்புடன் நீடிக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு புத்தரிடமே நாம் மீண்டும் திரும்பிச் சென்றாகவேண்டும். புத்தரை ஓர் ஆயுதமாக மாற்றியாகவேண்டும். ஒற்றை வார்த்தையில் புத்தர் சொன்னார். &#8216;செயல்படு!&#8217;.</p>
<p style="text-align: center;"><strong>(அடுத்த பகுதி : ஆசான்கள் இருவர்)</strong></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Fp%3D7906&amp;title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%3A%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88" id="wpa2a_20">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilpaper.net/?feed=rss2&#038;p=7906</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
	</channel>
</rss>
